Sep 30, 2014

NEWS 30.09.14


ஜெயலலிதா அவசர மனு: கர்நாடக ஐகோர்ட் தலைமை பதிவாளருடன் நீதிபதி குன்ஹா திடீர் சந்திப்பு!

Jayalalithaa-gets-relief-in-disproportionate-assets-case




























சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை நாளையே விசாரிக்க கோரி ஜெயலலிதா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை பதிவாளரை, நீதிபதி மைக்கேல் டி குன்ஹா சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா கடந்த 27ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தார்.
இதனிடையே, தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுத் தாக்கல் செய்திருந்தார். மேலும் ஜாமீன் கேட்டும் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
ஜாமீன் மனுவை இன்று விசாரித்த விடுமுறைகால நீதிபதி ரத்னகலா, மனு மீதான விசாரணையை அக்டோபர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். ஆனால், மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், மேல்முறையீட்டு மனுவை நாளையே விசாரிக்க கோரி ஜெயலலிதா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் தேசாயிடம், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் இந்த மனுவை அளித்துள்ளார்.
இதனிடையே, ஜெயலலிதா தரப்பில் அவசர மனு அளிக்கப்பட்ட நிலையில் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பட்டேலை, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹா இன்று திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நடந்தது.
ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை பதிவாளரை நீதிபதி மைக்கேல் டி குன்ஹா சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

- See more at: http://newsalai.com/?p=28469#sthash.b7WHQPOZ.dpuf

அ.தி.மு.க. தொண்டர்கள் 3–வது நாளாக உண்ணாவிரதம்



சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை பெங்களூர் கோர்ட்டு வழங்கியதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. தொண்டர்கள் தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜெயலலிதா மீதான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து தென்சென்னை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் வி.என். ரவி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கோயம்பேட்டில் நேற்று உண்ணா விரதம் மேற்கொண்டுள்ளனர்.
அந்த வகையில் தென்சென்னை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் விருகை. வி.என். ரவி தலைமையில் கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த உண்ணாவிரதத்திற்கு மைத்திரேயன் எம்பி, அமைப்பு செயலாளர் பொன்னையன், ஓட்டுநர் அணி மாநில செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த உண்ணாவிரதத்தில் எம்எல்ஏக்கள் ஜி. செந்தமிழன், எம். கே. அசோக், மயிலை ராஜலெட்சுமி, முன்னாள் எம்எல்ஏ பி.எஸ். அண்ணாமலை, சென்னை மாநகராட்சி சுகாதார நிலைக்குழு தலைவர் ஆ. பழனி, கவுன்சிலர்கள் எம்.எம். பாபு, நூர்ஜகான், என்.எஸ். மோகன், முன்னாள் கவுன்சிலர்கள் சொ. கடும்பாடி, ராஜேந்திர பாபு, பாசறை மாவட்ட செயலாளர் விஜயகுமார், நிர்வாகிகள் சைதை சாரதி, தி.நகர் ஆறுமுகம், எம்.ஜி.ஆர் நகர் அன்பு, மயிலை ராஜேஷ்கண்ணா உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
சென்னையில் நேற்று 3–வது நாளாக தொண்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். வடசென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பாலகங்கா ஏற்பாட்டில் 4 தொகுதிகளில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
எழும்பூர் பகுதி செயலாளர் மகிழன்பன் தலைமையில் பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டிலும், துறைமுகம் பகுதி செயலாளர் இருசப்பன் தலைமையில் மின்ட் அரசு அச்சகம் அருகிலும் உண்ணாவிரதம் நடந்தது.
திரு.வி.க.நகர் பகுதி செயலாளர் சுகுமார் தலைமையில் மகாலட்சுமி தியேட்டர் அருகிலும், ராயபுரம் பகுதி செயலாளர் ராமஜெயம் தலைமையில் ஜி.ஏ.ரோட்டிலும் உண்ணாவிரதம் நடந்தது. இதில் கவுன்சிலர்கள் இம்தியாஸ், சந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திரு.வி.க.நகர் பஸ் நிலையம் அருகில் சென்னை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தலைமை கழக பேச்சாளர் தரங்கை கண்ணன், கவுன்சிலர் உஷா பெருமாள், பெருமாள், ஆர்.கே.சந்திரன், அசோக், யுவராஜ், செல்வி, கோமதி, குமார், கோபி, ரவி, ஆனந்த், பாஸ்கர், முருகேஷ், பிரகாஷ், ஜெயின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பூர் பகுதி செயலாளர் லட்சுமி நாராயணன் தலைமையில் மூலக்கடை சந்திப்பில் உண்ணாவிரதம் நடந்தது.இதில் அவைத்தலைவர் மதுசூதனன், மாவட்ட செயலாளர் வெங்கடேஷ்பாபு, வட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தென்சென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கோயம்பேடு பஸ் நிலையம் எதிரில் மாவட்ட செயலாளர் வி.என்.ரவி தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது.
இதில் மேயர் சைதை துரைசாமி, முன்னாள் அமைச்சர் பொன்னையன், மைத்ரேயன் எம்.பி., எம்.எல்.ஏக்கள் செந்தமிழன், அசோக், ராஜலட்சுமி, டாக்டர் அழகு தமிழ்செல்வி, வே.சோலை, கவுன்சிலர் மலைராஜன், வி.என்.சேகர், தனசேகர், அரி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற் றனர்.
மாதவரம் மூலக்கடையில் பெரம்பூர் பகுதி செயலாளர் லட்சுமி நாராயணன் தலைமையில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
இதில் 150 பெண்கள் உள்பட 600–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மூலக்கடை சக்தி, முன்னாள் கவுன்சிலர் எறும்புலி வடிவேல் ஆகியோரும் பங்கேற்றனர்.

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் வலுக்கிறது



சென்னை, அக்.1 - ஜெயலலிதா மீதான வழக்கில் வழங்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை நந்தனம் கல்லூரி மாணவர்கள் நேற்று கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள நகர் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஜோனாஷா டி சன்னா (வயது 19) சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை தொலைக்காட்சி மூலம் பார்த்து மிகுந்த வேதனை அடைந்து, தனது வீட்டு சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்போல, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள வங்கி நாராயணபுரத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி நாகலட்சுமி (17) தனது உடலில் தானே மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
சென்னை நந்தனத்தில் உள்ள கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று ஜெயலலிதா மீதான தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் ஜெயலலிதாவை விடுதலை செய் என்று கோஷம் எழுப்பியதுடன், மத்திய அரசு மற்றும் நீதித்துறைக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல மாநிலக்கல்லூரி மணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு போலீஸ்பாதுகாப்புபோடப்பட்டது
உலக தமிழாராய்ச்சி நிறுவன மாணவர்கள் உண்ணாவிரதம்:
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வு மையத்தின் மாணவர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை முதலே வகுப்புகளுக்கு செல்லாமல் மாணவ-மாணவிகள் ஆய்வு மையத்தின் வெளியே அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ‘‘எங்களது ஆராய்ச்சி மையத்தின் தரத்தை உயர்த்தியதில் முதல்-அமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. மேலும், மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியும் ஊக்கப்படுத்தி வருகிறார். அவர் கைது செய்யப்பட்டது மாணவ-மாணவிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை கண்டிக்கும் வகையில் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகிறோம்’’, என்றனர். இந்த போராட்டத்தில் 80-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பினர்.

அவசரகால ஜாமின் மனு நாளை விசாரணைக்கு வருகிறது

ஜெயலலிதா, சொத்துக்குவிப்பு வழக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம், மேல்முறையீடு
மேல்முறையீட்டு மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என விடுமுறை கால நீதிபதிக்கு கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் பி.ஏ.பட்டேல் உத்தரவிட்டுள்ளார்.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை மற்றும் ரூ.100 கோடி அபாராதம் அளித்தும் உத்தரவிட்டது.
 
இதையடுத்து, நேற்று(29.09.14) ஜெயலலிதா சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரியும், தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும் மேல்முறையீட்டு மனு அளிக்கப்பட்டது.
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங், தனக்கு அரசு அறிவிப்பாணை கிடைக்கவில்லை என்றும், வழக்கை விசாரிக்க கால அவகாசம் வேண்டும் என்றும் கூறியதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
 
இந்நிலையில், ஜாமின் மனுவை அவசர கால மனுவாக ஏற்றுக்கொண்டு விசாரிக்க வேண்டும் என்று ஜெயலலிதா சார்பில் உயர்நீதிமன்ற பதிவாளரிடம் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இதையடுத்து, விடுமுறை கால நீதிமன்ற நீதிபதி ரத்னகலா இந்த மனுவை நாளை விசாரிப்பார் என்று கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் பி.ஏ.பட்டேல் உத்தரவிட்டார். இதையடுத்து, ஜெயலலிதா ஜாமின் மனு மீதான விசாரணை நாளை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

முதல் "அசைன்மென்ட்"டாக இதை எடுத்துக் கொள்ளுங்கள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்- கொ.ஜ.க. கோரிக்கை!

முதல்


அதிமுகவினர் இன்னும் ஜெயலலிதா ஷாக்கிலிருந்து விடுபடவில்லை. ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான புதிய அரசும் அழுத கண்ணும், புலம்பிய மனமுமாக பதவியேற்று முடித்துள்ளது. சட்டசபை கூடுமா என்பதும் கூட தெரியவில்லை. இந்த நிலையில் சட்டசபையின் முதல் கூட்டத்தில் இதை முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றுங்கள் என்று கூறி ஒரு திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளது கொங்குநாடு ஜனநாயக கட்சி. இதுகுறித்து ஓ.பன்னீர் செல்வத்துக்கு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.நாகராஜ் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தின் விவரம்: புதிதாக பொறுப்பேற்ற மாண்புமிகு முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கும் கொங்குநாடு ஜனநாயக கட்சி மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சரவை முதல் தீர்மானமாக அத்திக்கடவு- அவினாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கி திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுத்து மத்திய அரசுக்கு அனுப்பி கொங்குமண்டல மக்களின் வாழ்வாதாரம் காக்க வேண்டும். கொங்குநாடு ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழக முதல்வருக்கு 28.07.2014 அன்று அத்திக்கடவு- அவினாசி திட்டம் தொடர்பாக கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத்தலைவர் நாகராஜ் அவர்கள் கடிதம் அனுப்பியிருந்தார். அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் 500 குளம், குட்டைகளை ஒரு டி.எம்.சி. தண்ணீரால் நிரப்பினால் 30 இலட்சம் மக்களும்,50,000 கால்நடைகளும் வாழ்வாதாரம் பெறும்.1,000 மெகாவாட் மின்சாரம் சிக்கனமாகும் என தமிழக முதல்வருக்கு கொங்குநாடு ஜனநாயக கட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதற்கு தமிழக அரசின் சிறப்புச்செயலாளர் அனுப்பிய பதில் கடிதத்தில் 03.06.2014 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் மாண்புமிகு பாரதப்பிரதமரை நேரில் சந்தித்து அத்திக்கடவு- அவினாசி திட்டம் உள்பட நேரில் கோரிக்கை மனு அளித்துள்ளதாக தெரிவித்தார். மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி அத்திக்கடவு- அவினாசி திட்டம் நிறைவேற தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி திட்டச்செலவில் 25% தமிழக அரசு நிதி ஒதிக்கினால் மட்டுமே திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 50 ஆண்டு காலமாக 310 கோடியில் காமராஜர் அவர்களால் துவங்கப்பட்ட இத்திட்டம் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டுள்ளது. 1956 முதல் 2006-ம் ஆண்டு வரை மட்டும் 50 ஆண்டுகளில் 40 ஆண்டுகள் மட்டுமே பவானிசாகர் அணையின் தேவை போக மீதமுள்ள உபரிநீர் வீணாக கடலில் சென்றுள்ளது. ஜூலை முதல் நவம்பர் மாதம் வரை 5 முறை அணை நிரம்பி 25 டி.எம்.சி. உபரிநீர் வீணாக கடலில் கலந்துள்ளது. ஒரு டி.எம்.சி. தண்ணீர் இருந்தால் 3 ஆண்டு காலம் 3 மாவட்டங்களில் 500 குளம்,குட்டைகள் நிரப்பப்படுவதால் விவாசயம் செழிக்கும். கொங்குநாடு ஜனநாயக கட்சி தொடர்ச்சியாக பலமுறை முதல்வருக்கு கடிதம் அனுப்பியும் அரசு சிறப்புச்செயலாளர்களை நேரில் சந்தித்தும் இதுவரை திட்டம் முன்னேறுவதற்கான எவ்வித முகாந்தரமும் இருப்பதாக தெரிவதில்லை. தமிழக முதல்வர் இதுவரை இத்திட்டம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. தமிழக அமைச்சர்கள் திட்டம் நிறைவேற்றப்படும் என்று பொதுக்கூட்டங்களில் பேசுவதோடு சரி சட்டசபையில் அவர்கள் இதுபற்றி பேசுவதில்லை. 50 ஆண்டு காலமாக வழித்தடத்தை நிறைவேற்ற ஆய்வுகள் நடைபெறுவதாக சொல்லுவதால் இதை "நீண்டகாலமாக நடைபெறும் ஆய்வு"என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறச் செய்யலாம். கடந்த ஆண்டு 835 கோடியை வறட்சி நிவாரணமாக விவசாயிகளுக்கு வழங்கிய தமிழக அரசு இத்திட்டம் நிறைவேற ஆரம்பகட்ட நிதியாக 200 கோடி நிதியை ஒதுக்கி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றுமாறு கொங்குநாடு ஜனநாயக கட்சி கேட்டுக்கொள்கிறது. பாரதப்பிரதமரிடம் மனுகொடுப்பதால் மட்டும் இத்திட்டத்தை நிறைவற்ற முடியாது. வரும் நவம்பர் 18-ல் கொங்குநாடு ஜனநாயக கட்சி சார்பில் நடைபெறும் பட்டினிப்போராட்டத்திற்குள் இத்திட்டத்திற்கு செயல்வடிவம் கிடைக்கப் பெறவில்லை என்றால் கொங்குநாடு ஜனநாயக கட்சி கிராமம், கிராமமாக சென்று இத்திட்டத்திற்கு மக்களை ஓரணியில் திரட்டி அரசுக்கெதிரான போராட்டத்தை வலுப்படுத்தும் என கொங்குநாடு ஜனநாயக கட்சி சார்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.,க. சார்பில், துணை மேயர் சு.குணசேகரன் தலைமையில், பழைய பஸ் ஸ்டாண்டு முன் மறியலில் ஈடுபட்டனர் 500க்கும் மேற்பட்டோர் .கைதாகினர்.







Displaying IMG_9710.JPG



Displaying IMG_9702.JPG




திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.,க.  சார்பில், துணை மேயர் சு.குணசேகரன் தலைமையில், பழைய பஸ் ஸ்டாண்டு முன் மறியலில்  ஈடுபட்டனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் .கைதாகினர்.
நிகழ்ச்சியில்  மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம்,  ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், எஸ்.ஆர்.ஜெயக்குமார், கருவம்பாளையம் மணி, கருணாகரன்,  தம்பி மனோகரன்,நிலைக்குழு தலைவர்கள்  அன்பகம் திருப்பதி, பட்டுலிங்கம், பூளுவபட்டி பாலு, ஒன்றிய தலைவர்  சாமிநாதன்,  கவுன்சிலர்கள்   கீதா, சபரி, கணேஷ், சத்யா, சுப்பிரமணி, ரங்கசாமி, சண்முகசுந்தரம், விஜயகுமார், பிரியா சக்திவேல், பாலசுப்பிரமணியம், சின்னசாமி, ஈஸ்வரன், கனகராஜ, அமுதா வேலுமணி,   கட்சி நிர்வாகிகள் மார்க்கெட் சக்திவேல், தேவராஜ், அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், ராஜேஷ் கண்ணா, கண்ணபிரான், சடையப்பன்,  ராஜ்குமார்,அன்பரசன், ஹரிஹரசுதன், வேலுமணி,  நீதிராஜன், மதுரபாரதி,  பாஸ் என்கிற பாஸ்கரன், வே.சரவணன், ருக்குமணி, கோமதி,  ஈஸ்வரமூர்த்தி, ரத்தினகுமார், பி.லோகநாதன்,சுந்தராம்பாள், பரமராஜன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்











திருப்பூர் மறியல், கைவிரல் அறுப்பு, கடையடைப்பு

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.,க.  சார்பில், துணை மேயர் சு.குணசேகரன் தலைமையில், பழைய பஸ் ஸ்டாண்டு முன் மறியலில்  ஈடுபட்டனர்.அன்பகம் திருப்பதி, கருவம்பாளையம் மணி, கண்ணப்பன், ஸ்டீபன்ராஜ், உள்ளிட்டோர் பங்க்ஹெற்றனர்.





தீர்ப்பையடுத்து தனது கைவிரலை அறுத்து  தொண்டர்.




Displaying IMG_9681.JPG





Displaying IMG_9663.JPG

Displaying IMG_9648.JPG

ஜெயலலிதாவை ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்திக்கிறார்


தமிழக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பெங்களூர் வந்தார். அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள ஜெயலலிதாவை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து பேசுகிறார்.

அனுமதி மறுப்பு 

சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் சசிகலா, இளவரசியும் சிறையில் உள்ளனர்.

ஜெயலலிதாவை பார்ப்பதற்காக அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மேயர்கள் மற்றும் பல்வேறு பதவிகளில் உள்ளவர்கள், நிர்வாகிகள் வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்து வருகிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் வருகை 

இந்த நிலையில் தமிழக முதல்–அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் நேற்று பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து அவர் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்தார். அவருடன் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட சில அமைச்சர்களும் வந்தனர். அவர்கள் ஜெயலலிதாவை சந்திக்க முயற்சி செய்தனர். ஆனால் மாலை 6 மணிக்கு மேல் ஜெயிலில் உள்ள கைதிகளை சந்திக்க அனுமதி இல்லை.

இதனால் அவர்கள் நேற்று இரவு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கினர். பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள ஜெயலலிதாவை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து பேசுகிறார்கள். அப்போது தனது தலைமையில் புதிய அரசு அமைந்து உள்ளது குறித்து விளக்கி கூறுகிறார். தமிழக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகையையொட்டி பெங்களூர் நகர போலீசார் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

நூறு கோடி அபராதம் செலுத்த இயலாத நிபந்தனை: ஜெயலலிதா!

நூறு கோடி அபராதம் செலுத்த இயலாத நிபந்தனை: ஜெயலலிதா!நூறு கோடி அபராதம் செலுத்த இயலாத நிபந்தனை என்று ஜெயலலிதா பெங்களூர் நீதிமன்றத்தில் அளித்துள்ள ஜாமீன் மனுவில் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றுள்ள ஜெயலலிதா ஜாமீன் கேட்டு பெங்களூர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். அதில், "’தனக்கு 66வயது ஆகிறது. சர்க்கரை வியாதி, ரத்தக்கொதிப்பு நோய் உள்ளதால் தொடர்ந்து சிகிச்சை எடுத்டுக்கொள்ள வேண்டும். பெங்களூர் சிறைச்சாலையில் போதிய பாதுகாப்பு இல்லை என்பதால் அச்சுறுத்தல் உள்ளது. மேலும் , 100 கோடி அபராதம் என்பது நிறைவேற்ற முடியாத நிபந்தனை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர, தான் ஒரு சாதாரண நபர் அல்ல மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக இருக்கிறேன் என்றும், தமிழ்நாட்டில் ஒரு கோடி அதிமுக தொண்டர்கள் உள்ளனர். அவர்களிடத்தில் தனக்கு நல்ல பெயர் இருக்கிறது என்றும், ஜாமீனில் சென்றால் எங்கும் தப்பி ஓடமாட்டேன். வெளியே சென்றால் சாட்சிகளை கலைக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வரும், தங்களது வழக்கறிஞர்கள் மூலமாக தனித்தனியாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சார்பில் 4 மனுக்கள் தாக்கல்


ஜெயலலிதா தரப்பில் மொத்தம்  4 மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று அப்பீல் மனுவாகும். அந்த அப்பீல் மனுவில், சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்கா மிகவும் தவறான தீர்ப்பை வழங்கியுள்ளார். நெறி தவறிய அந்த  தண்டனையை குறைக்க  வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது.
மற்றொரு அப்பீல் மனுவில் ’சிறப்பு கோர்ட்டு அளித்த ரூ.100 கோடி அபராதம், 4 ஆண்டுகள் தண்டனை ஏற்புடையதல்ல. எனவே இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மூன்றாவது மனு ஜாமீன் மனுவாகும்.அந்த ஜாமீன் மனுவில்,  நான் அரசியல் கட்சியின் தலைவர். எனக்கு 66வயது ஆகிறது. சர்க்கரை வியாதி, ரத்தக்கொதிப்பு நோய் உள்ளதால் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். எங்கும் தப்பி ஓட மாட்டேன், சாட்சிகளையும் கலைக்க மாட்டேன்.. ஜாமீன் மனுவில் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார். பெங்களூர் சிறைச்சாலையில் போதிய பாதுகாப்பு இல்லை என்பதால் அச்சுறுத்தல் உள்ளது. மேலும் , 100 கோடி அபராதம் என்பது நிறைவேற்ற முடியாத நிபந்தனை. நான் ஒரு சாதாரண நபர் அல்ல. மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக இருக்கிறேன். தமிழ்நாட்டில் ஒரு கோடி அதிமுக தொண்டர்கள் உள்ளனர். அவர்களிடத்தில் எனக்கு நல்ல பெயர் இருக்கிறது. ஜாமீனில் சென்றால் எங்கும் தப்பி ஓடமாட்டேன். வெளியே சென்றால் சாட்சிகளை கலைக்க மாட்டேன் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

நான்காவது மனுவில் தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை கர்நாடகா ஐகோர்ட்டு மீண்டும் நடத்தி மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தனது ஜாமீன் மனு மீதான விசா ரணையை நாளை செவ் வாய்க்கிழமையே எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாகையில் மீனவர்கள் உண்ணாவிரதம் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்




சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதை கண்டித்து, நாகையில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதம்

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதை கண்டித்து நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள், மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று நாகை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நாகை நம்பியார் நகர் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் தலைமையில் சுமார் 200 பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாகை நகரசபை தலைவர் மஞ்சுளா சந்திரமோகன், நாகை நகர அ.தி.மு.க. செயலாளர் சந்திரமோகன், தமிழ்நாடு தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் இயக்குனர் கண்ணன், சங்கர், சுரேஷ், சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வெள்ளப்பள்ளம்

அதே போல வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளம், வானவன் மகாதேவி ஆகிய மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 450 பேர் வெள்ளப்பள்ளம் தார் ரோடு அருகே பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் அமைதியான முறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். மேலும் இந்த உண்ணாவிரதத்தில் அ.தி.மு.க.வினர் 50 பேர் கலந்து கொண்டனர்.

சாலை மறியல்

அதேபோல், நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கல்லூரி வகுப்பை புறக்கணித்துவிட்டு நாகை காடம்பாடி அருகே நாகை - நாகூர் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், செங்கமலகண்ணன் மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து பேரணியாக புறப்பட்டனர். அப்போது ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த பேரணி காடம்பாடி வழியாக சென்று உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாகை புதிய பஸ் நிலையம் வரை சென்றனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நாகையில் மீனவர்கள் உண்ணாவிரதம் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்




சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதை கண்டித்து, நாகையில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதம்

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதை கண்டித்து நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள், மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று நாகை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நாகை நம்பியார் நகர் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் தலைமையில் சுமார் 200 பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாகை நகரசபை தலைவர் மஞ்சுளா சந்திரமோகன், நாகை நகர அ.தி.மு.க. செயலாளர் சந்திரமோகன், தமிழ்நாடு தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் இயக்குனர் கண்ணன், சங்கர், சுரேஷ், சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வெள்ளப்பள்ளம்

அதே போல வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளம், வானவன் மகாதேவி ஆகிய மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 450 பேர் வெள்ளப்பள்ளம் தார் ரோடு அருகே பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் அமைதியான முறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். மேலும் இந்த உண்ணாவிரதத்தில் அ.தி.மு.க.வினர் 50 பேர் கலந்து கொண்டனர்.

சாலை மறியல்

அதேபோல், நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கல்லூரி வகுப்பை புறக்கணித்துவிட்டு நாகை காடம்பாடி அருகே நாகை - நாகூர் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், செங்கமலகண்ணன் மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து பேரணியாக புறப்பட்டனர். அப்போது ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த பேரணி காடம்பாடி வழியாக சென்று உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாகை புதிய பஸ் நிலையம் வரை சென்றனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Sep 29, 2014

இந்த போட்டாவையும் இணைத்து அனுப்ப வேண்டுகிறேன்.நன்றி!







திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.,க.சார்பில்  அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை  கர்நாடகா நீதிமன்றம் தவறான தீர்ப்பு வழங்கப்பட்டதாக கூறி அதனை கண்டித்து, ரெயில் நிலையம் முன்பு உள்ள குமரன் சிலை அருகில் மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான மேயர் சு.குணசேகரன் தலைமையில், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், அம்மா பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன்,முன்னாள் எம்.எல்.ஏ.பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டம் குறித்து மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் கூறியதாவது:-
அண்ணா தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு வழங்கபட்ட தீர்ப்பு துரோகமான தீர்ப்பாகும்.காவிரி நீர் பிரச்சனைக்காக கர்நாடக அரசு மற்றும் கர்நாடக நீதிமன்றம் பழி வாங்கியுள்ளது.அவருக்கு வழங்கிய அபராத தொகை உலகில் எந்த வழக்கிற்கும் இதுவரை வழங்கப்படவில்லை.சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் ராம்ஜெத்மாலனி கூட அரசியல் பிழை செய்துள்ளதாக விமர்சித்துள்ளார். ஒட்டு மொத்த தமிழக மக்களின் வளர்ச்சிக்காக 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டு இருக்கும் ஜெயலிதாவிற்கு வழங்கப்பட்ட இந்த தீர்ப்பினை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். ஜெயலலிதா எபோதும் சட்டத்தை மதிப்பவர்.எனவே, இந்த தீர்ப்பிற்கு பின்னால் தி.மு.க.,காங்கிரஸ், பி.ஜே.பி.,போன்ற கட்சிகளின் பழிவாங்கும் போக்காவே இந்த தீர்ப்பு உள்ளது. எத்தனை கட்சிகள் பழிவாங்க நினைத்தாலும் ஜெயலலிதாவை  யாராலும் அசைக்க முடியாது. சட்டப்படி ஜெயலலிதா வெளியே வருவார். தமிழகத்தில் தொடர்ந்து நல்லாட்சி புரிவார்.
அதுவரை அறவழியில் அண்ணா தி.மு.க.வின் போராட்டம் தொடரும். இவ்வாறு துணை மேயர் சு.குணசேகரன் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட எம்..ஜி.ஆர்.மன்ற செயலாளர்  கருவம்பாளையம் மணி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன் எம்.சி.,தெற்கு தொகுதி செயலாளர்  தம்பி மனோகரன்,இணை செயலாளர் வசந்தாமணி, மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஸ்டீபன்ராஜ், வழக்கறிஞர் அணி செயலாளர் சுப்பிரமணியம், பாசறை செயலாளர் சதீஷ், மாநகராட்சி 4வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம்,அட்லஸ் லோகநாதன், உஷா  ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிசாமி, வளர்மதி சாகுல்ஹமீது, தாமோதரன், வேலம்பாளையம் நகர செயலாளர் வி.கே.பி.மணி, அய்யாசாமி, கண்ணப்பன், பொதுக்குழு உறுப்பினர்கள் வளர்மதி கருணாகரன், கோமதி சம்பத்,அன்னாபூரணி, மாவட்ட பிரதிநிதி ரஞ்சித் ரத்தினம், டி.பார்த்திபன், ஹரிஹரசுதன், சடையப்பன், ஈஸ்வரமூர்த்தி, கவுன்சிலர்கள் முருகசாமி, கணேஷ், பட்டுலிங்கம்,பூளுவபட்டி பாலு, பிரியாசக்திவேல், கலைமகள் கோபால்சாமி, சண்முகசுந்தரம், பேபி தர்மலிங்கம் ஆனந்தன் ஆகியோர்களும், கண்ணபிரான், ஏ.எஸ்.கண்ணன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உடுமலை கிருஷ்ணன், ராஜசேகரன், பொன்னுசாமி, கண்ணபிரான், ராஜேந்திரன், சரவணன்,  ரவிகுமார்,சிவகுமார், கணேஷ், முருகன், முன்னாள் செயலாளர் பழனிசாமி, உள்ளிட்டவர்களும், ரத்தினகுமார், அசோக்குமார், லோகநாதன், யுவராஜ் சரவணன், நீதிராஜன், தேவராஜ், கேபிள் பாலு, பங்க்.என்.ரமேஷ், வளர்மதி கூட்டுறவு கரு.ராமச்சந்திரதேவர், பாஸ் என்கிற பாஸ்கரன், வே,சரவணன்,  ஆண்டவர் பழனிசாமி, அகமது பைசல்,ஜாகிர் அகமது, மகளிர் அணியினர் முன்னாள் கவுன்சிலர்கள் சு.கேசவன், தேவராஜ், ருக்குமணி, செல்வம் தங்கவேல், மகளிர் அணி நிர்வாகிகள் சுந்தரம்பாள்,சரஸ்வதி, முத்துலட்சுமி, மல்லிகா, மும்தாஜ், தலைமை கழக பேச்சாளர்கள் முகவை கண்ணன், டி.ஏ.பாலகிருஷ்ணன், எம்.ஜி.குணசேகர் தீக்கனல் விஜயகுமார், பரதிதிபிரியன், பலகுரல் வெள்ளியங்கிரி, வேங்கை விஜயகுமார் உள்ளிட்டவர்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களும், தோழமை கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு உண்ணாவிரதம் 

எம்.ஜி.ஆர். சமாதியில் அதிமுகவினர் உண்ணாவிரதம்.. வளர்மதி தலைமையில்

எம்.ஜி.ஆர். சமாதியில் அதிமுகவினர் உண்ணாவிரதம்.. வளர்மதி தலைமையில் 2வது நாளாக தொடர்கிறது

சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில், உள்ள எம்.ஜி.ஆர். சமாதியில் அதிமுகவினர் இன்று 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்தும், ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தியும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று அதிமுகவினர் தொடங்கினர். முதல் நாளில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இன்று 2வது நாளாக போராட்டம் தொடர்கிறது. இன்றைய போராட்டத்திற்கு அமைச்சர் பா. வளர்மதி தலைமை தாங்கியுள்ளார். அவரது தலைமையில் தென் சென்னை மாவட்ட அதிமுக செயலாளர் வி.பி.கலைராஜன் எம்.எல்.ஏ உள்பட ஏராளமானோர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். ஜெயலலிதா விடுதலையாகும் வரை தொடர் உண்ணாவிரதமாக இது நடைபெறும் என அதிமுகவினர் கூறியுள்ளனர்.

கர்நாடக அரசு பேருந்துகள் இயக்கம்

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதால் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களால் கடந்த 2 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த சென்னை - பெங்களூரு இடையேயான கர்நாடக அரசுப் பேருந்துகள் சேவை இன்று வழக்கம் போல துவங்கியது.
கர்நாடகா செல்லும் தமிழக பேருந்துகள் ஓசூர் எல்லையிலும், கர்நாடக அரசுப் பேருந்துகள் அம்மாநில எல்லையிலும் நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில், பொதுமக்களின் வசதிக்காக, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜின் நடவடிக்கை காரணமாக கர்நாடக அரசுப் பேருந்துகள் தமிழகத்துக்குள் வருவதற்கு வசதியாக, ஒவ்வொரு மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு பாதுகாப்பு கோரப்பட்டது.
இதையடுத்து, கர்நாடக அரசுப் பேருந்து ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வரும் போது, அந்தந்த மாவட்ட காவல்துறையினர் பேருந்துக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து கர்நாடக பேருந்துகள் வழக்கம் போல இயங்கின.

தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உண்ணாவிரதம்: 3வது நாளாக போராட்டம்


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper



சென்னை: அதிமுக பொதுச் செய லாளர் ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பெங்களூர் தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து, அதிமுகவினர் தீர்ப்பு வழங்கப்பட்ட சனிக்கிழமை பிற்பகல் முதல் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். மாநிலம் முழுவதும் பஸ்கள் மீது கல் வீசப்பட்டன. காஞ்சிபுரம் உள்ளிட்ட சில இடங்களில் மொத்தம் 3 பஸ்கள் கொளுத்தப்பட்டன. கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. சாலை மறியல்களும் நடந்தன. 2வது நாளான நேற்றும் மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்தது. பல இடங்களில் கடைகளை அடைக்கச் சொல்லி அதிமுகவினர் மிரட்டல் விடுத்தனர். இதனால் 2வது நாளாக நேற்றும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் எம்ஜிஆர் சமாதியில் தி.நகர் எம்எல்ஏ கலைராஜன் தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரதப் பேராட்டத்தை தொடங்கினர். அதேபோல், கோவையில் காந்திபுரம் பஸ்நிலையம் அருகே அதிமுகவினர் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர். வேலூரிலும் மாநராட்சி முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.

மதுரையில் மேலமாசி, வடக்கு மாசி வீதி சந்திப்பில் அதிமுகவினர் உண்ணாவிரதப் பேராட்டத்தை தொடங்கினர். அதில் மேயர் ராஜன் செல்லப்பா, மதுரை ஆதீனம், நடிகை சரஸ்வதி உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். திருச்சி ஸ்ரீரங்கத்திலும் அதிமுகவினர் 300 பேர் உண்ணாவிரதத்தை தொடங்கினர். தூத்துக்குடியில் நகரச் செயலாளர் ஏசாதுரை தலைமையில் 500 பேர் உண்ணாவிரதம் இருந்தனர்.மாவட்ட தலைநகர்களிலும், முக்கிய நகரங்களிலும் அதிமுகவினர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மேலும், சில ஊர்களில் அதிமுகவினரின் போராட்டம் காரணமாக ஆங்காங்கே கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை: மாலை பெங்களூர் பயணம்



தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை: மாலை பெங்களூர் பயணம்
முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். 

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூடி சட்டமன்றக் கட்சி தலைவாக ஓ.பன்னீர்செல்வத்தை தேர்வு செய்தனர். இதையடுத்து அவரது தலைமையில் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றது. 

பதவியேற்றதும் நேராக தலைமைச் செயலகம் சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், தலைமை செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் மற்றும் அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்றனர்.

ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் இன்று மாலை பெங்களூர் செல்லும் முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலிதாவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொண்டர் தீக்குளித்து தற்கொலை



ஆழ்வார் திருநகர், கைகான்குப்பத்தை சேர்ந்தவர், வெங்கடேசன், 65; அ.தி.மு.க., தொண்டர். அவர், நேற்று முன்தினம், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை அறிவிப்பை கேட்டவுடன், மனமுடைந்து தீக்குளித்தார். பலத்த காயங்களுடன், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

வத்தலக்குண்டுவில் அதிர்ச்சியில் பெண் சாவு

ஜெயலலிதா தீர்ப்பு எதிரொலி: வத்தலக்குண்டுவில் அதிர்ச்சியில் பெண் சாவு
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள சேவுகம்பட்டி பேரூராட்சி முத்துலாபுரத்தை சேர்ந்தவர் கதிரவன். அவரது மனைவி பாலம்மாள். இவர் கணவரை இழந்தவர். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தார்.
இச்சம்பவத்தை அறிந்த வத்தலக்குண்டு ஒன்றிய குழுதலைவர் மோகன், சேவுகம்பட்டி பேரூராட்சி துணைத்தலைவர் சதீஸ்குமார் ஆகியோர் நேரில் சென்று பாலம்மாளின் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினர்.
சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு அளித்த தீர்ப்பை அடுத்து வத்தலக்குண்டுவில் அ.தி.மு.க தொண்டர் சோலைராஜ்(40) என்பவர் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றார்.
தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் நிலைய அதிகாரி குணசேகரன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கோபுரத்தில் ஏறி சோலைராஜை பத்திரமாக மீட்டனர்.

மதுரை பிளஸ் 2 மாணவி நாகலட்சுமி, 17, தீக்குளித்து



 











எழுமலை:அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையால் அதிர்ச்சியுற்ற, மதுரை பிளஸ் 2 மாணவி நாகலட்சுமி, 17, தீக்குளித்து, உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

நல திட்டங்கள்:மதுரை, எழுமலை முருகன் மகள் நாகலட்சுமி, 17. அரசு மேல்நிலைப் பள்ளி, பிளஸ் 2 மாணவி. சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு நான்காண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால், மனமுடைந்த நாகலட்சுமி, நேற்று காலை, 9:45 மணிக்கு, மண்ணெண்ணெய் கேனுடன் வீட்டின் முன் வந்தார்.அங்கு, 'லேப் - டாப், சைக்கிள், நோட்டு புத்தகம் கொடுத்த அம்மாவை, சிறையில் அடைச்சுட்டாங்களே...' எனக் கூறியபடி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

அவரை, ஆபத்தான நிலையில், உசிலம்பட்டி அரசு மருத்து
வமனையில் சேர்த்தனர். டி.எஸ்.பி., சரவணக்குமார் விசாரித்தார். நாகலட்சுமி கூறுகையில், ''பள்ளி மாணவர்களுக்கு நலத் திட்டங்களை வழங்கிய முதல்வரை சிறையில் அடைத்ததை, தாங்கிக் கொள்ள முடியாததால் தீக்குளித்தேன்,'' என்றார்.

எஸ்.பி., விஜயேந்திர பிதரி விசாரித்தார். பின் மேல் சிகிச்சைக்காக நாகலட்சுமி, மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மூதாட்டி சாவு:விழுப்புரம், சித்தேரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர், தங்கவேலு மனைவி அம்மணியம்மாள், 70; அ.தி.மு.க., உறுப்பினர். இவர், நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, தன் வீட்டில், 'டிவி' பார்த்துக் கொண்டிருந்த போது, ஜெ., குற்றவாளி என அறிவிக்கப்பட்ட செய்தியை பார்த்ததும், அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.

தொண்டர் தீக்குளிப்பு: கடலுார் அடுத்த பாதிரிக்குப்பம், காலனி வாட்டர் டேங்க் தெருவைச் சேர்ந்தவர், பாலகிருஷ்ணன், 52; தீவிர அ.தி.மு.க., விசுவாசியான இவரது மனைவி லட்சுமி, அப்பகுதி, ஜெ., பேரவை கிளை பொருளாளராக உள்ளார்.நேற்று முன்தினம், ஜெயலலிதா குறித்த செய்தியை அறிந்த பாலகிருஷ்ணன், மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். நேற்று மதியம், 2:30 மணிக்கு, பாலகிருஷ்ணன் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு: கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை மேலும் ஒரு மாணவி தீக்குளித்தார்

ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை வழங்கியதால் அதிர்ச்சியடைந்த லால்குடி கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4 ஆண்டு சிறை சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு கர்நாடக நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
மேலும் ஆங்காங்கே அ.தி.மு.க. தொண்டர்கள் தற்கொலை செய்தும், தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.
கல்லூரி மாணவி திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நகர் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். அ.தி.மு.க. உறுப்பினர். இவருடைய மகள் ஜோனாஷா டி சன்னா (வயது 19), லால்குடி பரமசிவபுரத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் படித்து வந்தார்.
சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை தொலைக்காட்சி மூலம் பார்த்துக் கொண்டிருந்த ஜோனாஷா டி சன்னா, ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வெளியானதை பார்த்ததும் மிகுந்த வேதனை அடைந்தார்.
அ.தி.மு.க.வினர் அஞ்சலி இதனால் மனமுடைந்த அவர், தனது வீட்டு சமையலறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்ததால், வேதனை தாங்காமல் ஜோனாஷா இந்த துயர முடிவை தேடிக் கொண்டதாக தெரிகிறது.
இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மாணவியின் உடலுக்கு திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் எம்.பி. உள்பட அ.தி.முக. நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
மிகுந்த வேதனை இதைப்போல மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா எழுமலையை அடுத்த வங்கிநாராயணபுரத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகள் நாகலட்சுமி (வயது 17). இவர் எழுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார்.
ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட செய்தியை அறிந்தது முதல் நாகலட்சுமி மிகுந்த வேதனையுடன் இருந்து வந்தார். நேற்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, நாகலட்சுமி தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
தீவிர சிகிச்சை இதனால் வேதனை தாங்கமுடியாமல் அலறியபடியே தெருவில் ஓடிய அவரை, அந்த பகுதியினர் மீட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து எழுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Sep 28, 2014

TUJ தலைவர் கூறிய தகவல்

யார் இந்த குன்ஹா?? இதோ சில விவரங்கள் (1) சுமார் 11 ஆண்டுகலுக்கு முன்னர் அப்போதைய மத்திய பிரதேச முதல்வர் செல்வி உமாபாரதி அவர்கள் கர்நாடக மாநிலம் பெல்காம் வந்து ஆர் எஸ் எஸ் கொடியை ஏற்றி வைத்தார் உடனே கர்நாடக கத்தை ஆண்ட காங்கிரஸ் அரசு அவர் மீது எப்ஐஆர் போட்டது இதை ரத்து செய்ய பெல்காம் நீதிமன்றத்தில் கர்நாடகா பிஜேபி யினால் வழக்கு தொடரப்பட்டது ஆனால் அதை ரத்து செய்ய மறுத்து உமாபாரதி முதல்வர் பதவி இழந்து சிறை செல்ல காரணமாக இருந்த்து இதே குண்ஷா தான் அப்போதே இவருடைய இந்து எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் ஆதரவு பெரிதும் விவாதிக்கப்பட்டது (2) ஜெயலலிதா மீது அரசாங்க வக்கீல் கூறிய 18 வகையான சொத்துக்கள் குறித்த குற்றச்சாட்டுகள் களுக்கு ஒவ்வொன்றுக்கும் ஆதாரத்துடன் புள்ளி விவரத்தோடு முதல்வரின் வக்கீல் குமார் counter செய்த பிறகும் இதை பற்றி எல்லாம் சட்டை செய்யாமல் தீர்ப்பு கொடுத்தது சட்டம் படித்த அனைவருக்கும் ஐயத்தை ஏற்படுத்தி உள்ளது. (3) தீர்ப்பின் முழு தண்டனை முடிவை மாலை ஆறு மணி வரை வழங்காமல் இழுத்தடித்து பெங்களூர் உயர்நீதிமன்றத்துக்கு ஜாமீன் கேட்டு செல்லமுடியாமல் செய்த காரணம் என்ன? (4) முன் கூட்டியே பரப்பன அக்ராகார நீதி மன்றத்தில் பெண்கள் சிறையினை தயார் நிலையில் வைத்த காரணம் என்ன?? (5) 950 கோடி ஊழல் செய்த லல்லுக்கு 25 லட்சம் அபராதம் 5 ஆண்டு சிறைத்தண்டனை ஆனால் 66 கோடிக்கும் உன்டான கணக்கை நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் தாக்கல் செய்தும் அதைப்பற்றி எல்லாம் பரீசிலனை செய்யாமல் 130 கோடி அபராதமும் 4 ஆண்டு சிறைத்தண்டனை யும் கொடுத்த்து ஏன் ?? (6) இது ஏற்கனவே குற்றம்சாட்ட பட்டவர்களின் வாதங்கள் தொடங்குவதற்கு முன்னரே விலைபேச பட்ட மற்றவர்களாள் எழுதி கொடுக்கபட்ட தீர்ப்பா?? (7) சுமார் 8 மாதங்களுக்கு முன்னரே முதல்வர் மற்றும் 3 பேர்களை " குற்றவாளிகள் " என்று குண்ஹா கூறியது ஏன் ?? குற்றம்சாட்ட பட்டவர்கள் என்றுதானே கூறவேண்டும் இரு தரப்பு வாதங்களை கேட்டு தீர்ப்பு வழங்கும் நாள் ( அதாவது இன்று ) தான் குற்றவாளிகள் என்று கூறி இருக்க வேண்டும்!! 8 மாதங்களுக்கு முன்னரே கூறிய மர்மம் என்ன?? தீர்பை முன்னரே முடிவு செய்து சும்மா கடனுக்காக நடத்த பட்ட விசாரணை நாடகமா இது?? (9) கர்நாடக த்திற்கு எதிராக காவிரி நடுவன் மன்ற ஆனையை தமிழகதிற்கு பெற்றதுக்கு முதலமைச்சர் க்கு கர்நாடக காங்கிரஸ் சால் கொடுக்க பட்ட பரிசா?? சிந்தித்து பாருங்கள் இந்த சதிகார கும்பலை இனம் கண்டு கொள்ளுங்கள். இதிலிருந்து மாண்புமிகு அம்மா அவர்கள் மீண்டு வருவார். சோதனைகள் அவருகென்ன புசுசா??

Sep 26, 2014

கால்நடைத் துறையில் புதிதாக ஆய்வாளர் பணி நியமனம்: உத்தரவுகளை அளித்தார் முதல்வர் ஜெயலலிதா..


கால்நடைப் பராமரிப்புத் துறையில் ஆய்வாளர் பணிக்கு புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு உத்தரவுகளை வழங்கிய முதல்வர் ஜெயலலிதா. உடன் (இடமிருந்து)கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா, துறையின் செயலாளர் விஜயகுமார்.


கால்நடைப் பராமரிப்புத் துறையில் ஆய்வாளர் பணிக்கு புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு உத்தரவுகளை வழங்கிய முதல்வர் ஜெயலலிதா. உடன் (இடமிருந்து)கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா, துறையின் செயலாளர் விஜயகுமார்.



கால்நடைத் துறையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆய்வாளர்களுக்கான பணி நியமன உத்தரவுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்திலுள்ள அனைத்து கால்நடைகளுக்கும் மருத்துவச் சிகிச்சை, மேம்பட்ட பராமரிப்பு முறைகள் ஆகிய சேவைகள் கால்நடை மருந்தகங்கள், கால்நடை மருத்துவமனைகள் மூலம் கட்டணம் இல்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், கால்நடைக் கிளை நிலையங்களில் செயற்கைக் கருவூட்டல், முதலுதவி சேவைகள் கால்நடை ஆய்வாளர்கள் மூலம் கால்நடைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தொலை தூரக் கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயனடையும் வகையில் கால்நடை ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கடந்த 2011-12-ஆம் நிதியாண்டில்
சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அந்த நிதியாண்டில் 289 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2012-13-ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட கால்நடை ஆய்வாளர்களில் பயிற்சி முடித்த 307 பேருக்கு கால்நடை ஆய்வாளர் நிலை-2-க்கான பணி நியமன உத்தரவுகளை முதல்வர் ஜெயலலிதா அண்மையில் வழங்கினார்.
இதன் மூலம், தொலைதூர குக்கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்குச் செயற்கை முறைக் கருவூட்டல், முதலுதவிச் சேவைகள் ஆகியன அவற்றின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பணி நியமன உத்தரவு வழங்கும் நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Sep 25, 2014

அ.தி.மு.,க. வேட்பாளர்எம்.கண்ணப்பனுக்கு திருப்பூர் மாநகராட்சியில்நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.









திருப்பூர் மாநகராட்சி 45- வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு  போட்டியிட்ட  அ.தி.மு.,க. வேட்பாளர்எம்.கண்ணப்பனுக்கு  திருப்பூர் மாநகராட்சியில்நேற்று  நடந்த பதவியேற்பு விழாவில் திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் வனத்துறை ,அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்,சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். 
நிகழ்ச்சியில் துணை மேயர் சு.குணசேகரன்,   மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம்   ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், எஸ்.ஆர்.ஜெயக்குமார், கருவம்பாளையம் மணி, கருணாகரன்,  நிலைக்குழு தலைவர்கள்  அன்பகம் திருப்பதி, பட்டுலிங்கம், பூளுவபட்டி பாலு, ராஜேஷ் கண்ணா, கண்ணபிரான், சடையப்பன்,  ராஜ்குமார்,அன்பரசன், ஹரிஹரசுதன், வேலுமணி,  நீதிராஜன,   ரத்தினகுமார், பி.லோகநாதன் பரமராஜன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

22- வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.,க. வேட்பாளர் கலைமகள் .கோபால்சாமி க்கு திருப்பூர் மாநகராட்சியில்நேற்று நடந்த பதவியேற்பு விழா








திருப்பூர் மாநகராட்சி 22- வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு  போட்டியிட்ட  அ.தி.மு.,க. வேட்பாளர் கலைமகள் .கோபால்சாமி க்கு திருப்பூர் மாநகராட்சியில்நேற்று  நடந்த பதவியேற்பு விழாவில் திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் வனத்துறை ,அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்,சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். 
நிகழ்ச்சியில் துணை மேயர் சு.குணசேகரன்,   மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம்   ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், எஸ்.ஆர்.ஜெயக்குமார், கருவம்பாளையம் மணி, கருணாகரன்,  நிலைக்குழு தலைவர்கள்  அன்பகம் திருப்பதி, பட்டுலிங்கம், பூளுவபட்டி பாலு, ராஜேஷ் கண்ணா, கண்ணபிரான், சடையப்பன்,  ராஜ்குமார்,அன்பரசன், ஹரிஹரசுதன், வேலுமணி,  நீதிராஜன,  பாஸ் என்கிற பாஸ்கரன், வே.சரவணன், ருக்குமணி, கோமதி, சுந்தரி,, ரைகானா , ஈஸ்வரமூர்த்தி, ரத்தினகுமார், பி.லோகநாதன்,சுந்தராம்பாள், பரமராஜன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இணையதள சேவை கிராமங்களை சென்றடைய கேபிள் மூலம் சேவை அளிக்கும் திட்டத்தை அறிவித்தார் முதல்வர் வனத்துறை .எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச்சு










திருப்பூர், செப். 25-
திருப்பூர்   மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மற்றும் இரயில்டெல் நிறுவனம் மூலம் அதிவேக அகண்ட அலைவரிசை  சேவைகள் மற்றும் பிற இணையதள சேவைகள் வழங்குவது குறித்து  கேபிள் டி.வி.ஆப்பரேட்டர்கள் உடனான  விளக்க கூட்டம் மாவட்ட கலெக்டர்   கு.கோவிந்தராஜ்   தலைமையில் நடந்தது.
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தலைவர் உடுமலை .கே.ராதாகிருஷ்ணன்   முன்னிலை வகித்தார்..  இக்கூட்டத்தில்  வனத்துறை அமைச்சர்   எம்.எஸ்.எம்.ஆனந்தன்  சிறப்புரையாற்றினார்.
 வனத்துறை அமைச்சர்   எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர் களின் சிறப்பு திட்டமான தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனமானது   அனைத்து மக்களும் குறைந்த செலவில் கேபிள் சேவையை பெறும் திட்டமான அகண்ட அலைவரிசை திட்டத்தை (பிராட்பேன்ட்) துவக்குகிறது.    கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில்  விதி எண்.110-ன் கீழ் அறிவித்த அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள் மற்றும் பிற இணையதள சேவைகள், ஆகியவற்றை இரயில்டெல் நிறுவனத்துடன் இணைந்து குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.  அதன்படி இந்தச் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்குபெற வந்துள்ள ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சார்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பயன்பெற்று மக்களுக்கு இச்சேவையினை சென்றடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் கேபிள் டி.வி. ஆபரேட்டர் களின் சேவை அனைவருக்கும் தேவை என்பதை உணர்ந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் இணையதள சேவைகளை தங்கள் வாயிலாக அனைத்து குக்கிராம மக்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காக கேபிள் டி.வி. மூலமாக செயல்படுத்தி உள்ளார்கள்.  இதன் மூலமாக கேபிள் டி.வி. ஆபரேட்டா;கள் தங்கள் வாழ்க்கைத்தரமும், வாழ்வாதாரமும் உயரும்.  எனவே இச்சேவைகளை திறம்பட செய்ய வேண்டும்.  மேலும் இத்தகைய கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு இன்னும் பல சலுகைகளை வழங்க உள்ளார்கள்.  விரைவில் அதற்கான அறிவிப்பையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா; அம்மா அவா;கள் அறிவிக்க உள்ளாலீ;கள்.  இவ்வாறு மாண்புமிகு வனத்துறை அமைச்சர்  எம்.எஸ்.எம்.ஆனந்தன்   பேசினார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தலைவா;  உடுமலை .கே.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா; அம்மா  கடந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை, நிறுவி திறம்படி செயல்படுத்தி வருகிறார்கள்.  இதனால்  கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதுடன் பொதுமக்களும் குறைந்த செலவில் கேபிள் சேவையினை பெற முடிகிறது.  3 ஆண்டுகள் கேபிள் டி.வி. நிறுவனம் ரூ.12 கோடி இலாபத்தினை அடைந்துள்ளது.  மேலும் தமிழ்நாட்டில் 27000 கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள் உள்ளனர் 
முன்னதாக, இரயில்டெல் நிறுவனம் மூலமாக தயாரி க்கப்பட்ட இணையதள தொழில்நுட்பம் குறித்து விளக்க குறுந்தகடுகள் (சி.டி.)   வனத்துறை அமைச்சர்  எம்.எஸ்.எம்.ஆனந்தன் ,  தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தலைவர்   உடுமலை  கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர்   கு.கோவிந்தராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.நிறுவன தலைமை தொழில்நுட்ப அலுவலர்   .பி.முரளி, முதுநிலை மேலாளர் ; (தொழில் நுட்பம்)  .பழனிவேலன், மேலாளர்  (வர் த்தகம்) இரயில்டெல் கிருபானந்தன்,  கிளை மேலாளர் தனிவட்டாட்சியர்  எம்.விஜயகுமார், மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், கேபிள் பாலு மற்றும் திருப்பூர்  ஈரோடு மாவட்டங்களைச் சார்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டாகள் உட்பட பலா கலந்து கொண்டனா;.

அ.தி.மு.க., சார்பில், திருப்பூர் அம்மாபாளையத்தில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 106 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது.







திருப்பூர் திருமுருகன் பூண்டி பேரூராட்சி அ.தி.மு.க., சார்பில், திருப்பூர் அம்மாபாளையத்தில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 106  வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. பேரூராட்சி கழக செயலாளர் பூண்டி விஸ்வநாதன் தலைமை தாங்கினார். தமிழக வனத்துறை அமைச்சர் .எம்.எஸ்.எம்.ஆனந்தன், முன்னாள் அமைச்சர் ராமசாமி, தலைமை கழக பேச்சாளர் ,செல்வராஜ், அவினாசி எம்.எல்.ஏ., கருப்பசாமி, துணை மேயர் சு.குணசேகரன், ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் அவினாசி ஒன்றிய செயலாளர் மு.சுப்பிரமணியம், தொகுதி கழக செயலாளர் வேலுசாமி, பேரூராட்சி தலைவர் பழனிசாமி, பூண்டி லதா, மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் ஆனந்தகுமார், கருவம்பாளையம் மணி, ராஜேஷ் கண்ணா, ராமசாமி, ஷாஜகான், ரத்தினகுமார், லோகனாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 106 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் , அங்கேரிபாளையத்தில் நடந்தது.














திருப்பூர் மாநகர் மாவட்ட  அ.தி.மு.க., சார்பில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 106  வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் ,  அங்கேரிபாளையத்தில் நடந்தது. 
பேரூராட்சி ஒன்றிய செயலாளர் கே..விஜயகுமார்,  தலைமை தாங்கினார். தமிழக வனத்துறை அமைச்சர் .எம்.எஸ் .எம்.ஆனந்தன், திருப்பூர் எம்.பி. சத்தியபாமா, திரைப்பட நடிகர் குண்டு கல்யாணம், தலைமை கழக பேச்சாளர் பாண்டியன், துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், ஆகியோர் சிறப்புரையாற்றினர். 
வேலம்பாளையம் நகர செயலாளர் வி.கே.பி.மணி, ஒன்றிய தலைவர் சாமிநாதன் ஆகியோர்  வரவேற்றனர். எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, ச்டீபனராஜ், பூளுவபட்டி பாலு, பட்டுலிங்கம், எஸ்.எம்.பழனிசாமி, மார்க்கேட்சக்திவேல், எஸ்.ஆர். ஜெயக்குமார்,தம்பி மனோகரன், பாசறை செயலாளர் தங்கராஜ், சடையப்பன்,கருனாகறன, கவுன்சிலர்கள்  சத்யா, கல்பனா, சுப்பிரமணி, பாலசுப்பிரமணியம்,நீதிராஜன், ராஜேஷ் கண்ணா, ராமசாமி, ஷாஜகான், ரத்தினகுமார், லோகனாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

உள்ளாட்சி இடைத்தேர்தல் அ.இ .அ .தி .மு க .வெற்றி .







குடிமங்கலம் ஒன்றியம் மூங்கில் தொழுவு ஊராட்சியில் அ.இ .அ .தி .மு க வேட்பாளர்  திரு .c மாசிலாமணி  வெற்றி பெற்றார் .வேட்பாளரை வாழ்த்தி  பொள்ளாச்சி .வ .ஜெயராமன் சட்ட மன்ற  துணை சபாநாயகர் பொள்ளாச்சி பாராளுமன்ற c மகேந்திரன் எம் .பி . சண்முகவேலு எம் .எல் .ஏ .அரசு கேபிள் டிவி  வாரியத்தலைவர் உடுமலை   ராதகிருஷ்ணன் மாவட்ட கவுன்சிலர் திரு தமயந்தி மாசிலாமணி உடன் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் சுந்தரசாமி மற்றும் அ.இ .அ .தி .மு க.நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்