Nov 7, 2014

திருப்பூர் வடக்கு ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சி பள்ளிபாளையத்தில் 67 பயனாளிகளுக்கு

ரூ.8.57 லட்சம் மதிப்பிலான விலையில்லா ஆடுகளை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார். அருகில் மாவட்ட  கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், உதவி கலெக்டர் செந்தில்ராஜன்,  ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.சாமிநாதன்,  வடக்கு ஒன்றிய செயலாளர், கே.என்.விஜயகுமார், ஊராட்சி தலைவர் மூர்த்தி, கூட்டுறவி சங்க தலைவர் சுலோச்சனா வடிவேல், நிர்வாகிகள்  ஏ.டி.பி.சுப்பிரமணியம், வேலுசாமி மற்றும் கால்நடைத்துறை மருத்துவர்கள், அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்..

திருப்பூர் வடக்கு தொகுதி ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி வீதிக்காடு எஸ்.எஸ்.நகரில் சட்டமன்ற உறுப்பினர்

வளர்ச்சி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமிபூஜையை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்தார். அருகில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ்,உதவி செந்தில்ராஜன், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.சாமிநாதன், வடக்கு ஒன்றிய செயலாளர், கே.என்.விஜயகுமார், மண்டலத்தலைவர் வி.ராதாகிருஷ்ணன்,ஊராட்சி தலைவர் செல்வகுமார் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் வடக்கு ஒன்றியம், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி கருக்கன்பாளையம் புதூரில்

ரூ.14.95 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டும் பணிகளுக்கான பூமிபூஜையை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், திருப்பூர் உதவி கலெக்டர் செந்தில்ராஜன், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.சாமிநாதன், வடக்கு ஒன்றிய செயலாளர், கே.என்.விஜயகுமார், மண்டலத்தலைவர் வி.ராதாகிருஷ்ணன், ஊராட்சி தலைவர்கள் செல்வகுமார் பொன்னுலிங்கம் மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகி வி.எம்.கோகுல், ஏ.எஸ்.கண்ணன், மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் ஊராட்சி செயலாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.