Mar 29, 2019

திருச்சி ஸ்ரீரங்கத்தில் சாருபாலா தொண்டைமான் பிரச்சாரம்

ஸ்ரீரங்கத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பிரச்சாரம்



பூலோக வைகுண்டம் என்று போற்றக்கூடிய 108 திவ்ய தேசங்களில் முதன்மையான அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில்
ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா கோபுரத்தின் முன்பிருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் பிரச்சாரத்தை துவங்கி பேசுகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று பக்த கோடிகளுக்கு அன்னதானம் யாத்ரிநிவாஸ் சட்டக்கல்லூரி வண்ணத்து பூச்சி பூங்கா மாணவர்களுக்கு கல்லூரி என இத்தொகுதிக்கு அவர் நல்ல பல திட்டங்களை வழங்கி உள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் எனக்கு பரிசுப் பெட்டி சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். தெற்கு உத்திர வீதி மேற்கு உத்தர வீதி வடக்கு உத்திர வீதி கிழக்கு உத்திர வீதி தெற்கு சித்திரை வீதி மேற்கு சித்திர வீதி வடக்குச் சித்திரை வீதியில் கிழக்குச் சித்திரை வீதி அடையவளஞ்சான் உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்தார்கள்
 அமைப்பு செயலாளர் மனோகரன் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் அவைத் தலைவர் ராமலிங்கம் பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி ஸ்ரீரங்கம் பகுதி செயலர் இளையராஜா உறையூர் பகுதி செயலாளர் சதீஷ் பொன்மலை பகுதி செயலாளர் சங்கர் ஒன்றிய செயலாளர் வாசு எம்ஜிஆர் மன்ற தலைவர் நடேசன் வர்த்தக அணி செயலாளர் நாகராஜன் மகளிரணி செயலர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் உட்பட மாநகர் பகுதி ஒன்றிய பேரூராட்சி வட்டக் கழக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்கள்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பரிசு பெட்டி

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி

பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது

தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின்  39 வேட்பாளர்கள் நாடாளுமன்ற தேர்தலிலும் , 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலிலும் போட்டியிடுகிறது. பொது சின்னமாக டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தை கேட்டார். இதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து தினகரன்  உச்சநீதிமன்றத்தை நாடினார். அங்கு அமமுக தரப்புக்கு  நீதிபதிகள் பொது சின்னம் ஒன்றை ஒதுக்க உத்தரவிட்டனர்.
இந்நிலையில், அமமுக வேட்பாளர்கள் அனைவருக்கும் பொதுச்சின்னமாக பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.