Feb 28, 2015

செக்கானூரணியில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ரத்ததானம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ரயில்வே பட்ஜெட்டை பொதுவாக வரவேற்கிறேன்!- இது ஜெயலலிதா!
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ரத்ததானம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 67–வது பிறந்த நாளையொட்டி செக்கானூ ரணியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார்.
பாசறை மாவட்ட செயலாளர், ஆலங்குளம் செல்வம், பேரவை முன்னாள் மாவட்டச் செயலாளர் மனோகரன், திருப்பரங்குன்றம் ஓன்றிய அவைத்தலைவர் சந்தனத் தேவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜெயலலிதாவின் 67–வது பிறந்தநாளை குறிக்கும் வகையில், மாவட்ட கவுன்சிலர் அய்யப்பன் உள்பட 67 பேர் ரத்ததானம் செய்தனர்.
இதனையடுத்து செக்கானூரணி பஸ்நிலையத்தில் மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணி 5 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது. முன்னாள் அமைப்புச் செயலாளர் ராஜேந்திரன், நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
முன்னாள் மாவட்டச்செயலாளர் ஜெயராமன், விவசாயபிரிவு மாவட்டச் செயலாளர் வேலுச்சாமி, உசிலம்பட்டி நகர்மன்ற தலைவி பஞ்சவர்ணம், மீனவர் அணி மாவட்டச் செயலாளர் போத்திராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி அ.இ.அ.தி.மு.க மக்களின் முதல்வர் அம்மா அவர்களின் 67 பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு மருத்துவ முகாம்

 ஸ்ரீரங்கத்தில் ராமச்சந்திர மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவமுகாம் நடை பெறுகிறது.
ஸ்ரீரங்கதில் நெல்சன் ரோட்டில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இன்றும் துவங்கிய இந்த முகாம் நாளையும்  நடைபெறுகிறது. இந்த 2 நாள் முகாமில் மருத்துவ கல்லூரி தலைவர் டாக்டர் ஆனந்தன்,முடங்கியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் துறை குமார், துணை மருத்துவ தலைவர்கள் டாக்டர் சுகாஸ் பிரபாகர், டாக்டர் மோகன் சௌத்ரி உள்ளிட்ட    மருத்துவர்களும், துணை மருத்துவர்களும், பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நலம், சரும நோய், காது மூக்கு, தொண்டை, இதய நோய், முடக்கியல், கண், நரம்பியல், சிறுநீரகம், பல் நல துறை உள்ளிட பல மருத்துவ துறைகளில் இலவச பரிசோதனைகளும் சிகிச்சைகளும் அளிக்க படுகிறது.
முகாமில் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின்படி அறுவை சிகிச்சை செய்ய ஆவன செய்ப்படுகிறது.
ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே, இசிஜி, 2 டி எக்கோ அல்ட்ரா சவுண்டு போன்ற பரி சோதனைகள் அவசியத்தின் பேரில் இலவசமாக செய்யபடுகிறது. சில மாத்திரைகள் 7 நாட்களுக்கு இலவசமாக வழங்கபடுகிறது.