Oct 8, 2014

அவினாசி கோவிலில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அங்கப்பிரதட்சணம்

 




திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க., சார்பில் , மக்கள் முதல்வர் அம்மா மீண்டு வர  வேண்டி அவினாசியில் உள்ள கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் அ.தி.மு.க., வினர் நூற்றுக்கணக்கானோர் அங்கப்பிரதட்சணம் செய்தனர். இதில் கருப்பசாமி எம்.எல்.ஏ., திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள்  ஜான்,ராதாகிருஷ்ணன், கருவம்பாளையம் மணி,  கண்ணப்பன்,அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், தம்பி மனோகரன், வக்கீல் சுப்பிரமணியம், பாசறை சதீஷ், பேரூராட்சி தலைவர்கள் ஜெகதாம்பாள், பழனிசாமி, துணை தலைவர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் மு.சுப்பிரமணி, ஜெகதீசன், நகர செயலாளர் ராமசாமி, நகர இளைஞர் அணி செயலாளர் ஜெயபால், சேவூர் வேலுசாமி,  திருப்பூர் கவுன்சிலர்கள் கணேஷ், கீதா, கருணாகரன், கனகராஜ், தங்கமுத்து, நீதிராஜன், ஈஸ்வரமூர்த்தி,ரத்தினகுமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குண்டடம் பகுதி செய்திகள்


திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றிய அண்ணா தி.மு.க.சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா விடுதலயாக வேண்டி ஒன்றிய செயலளார் செந்தில்குமார் தலைமையில் 200 பெண்கள் உள்பட 500 க்கும் மேற்பட்டவர்கள் கோவை,மதுரை ரோட்டில் கோஷங்கள் எழுப்பி அறவழியில் போராட்டம் நடத்தினர்  நிகழ்ச்சியில் ஒன்றியி  செயலாளர் கார்த்திகேயன், ஒன்றியக்குழு தலைவர் பக்த்வாச்சலம்,  நிலவள வங்கி தலைவர் சிவபாலகிருஷ்ணன், பேரூர் கழக செயலாளர் தமிழரசு,பேரவை செயலாளர் தியாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பல்லடம் பகுதி செய்திகள்





திருப்பூர் புறநகர் மாவட்டம் அண்ணா தி.மு.க.மகளிர் சார்பில் அதன் மாவட்ட செயலளார் சித்ராதேவி தலைமையில் மகளிர் அணியை சேர்ந்தவர்கள் பொய் வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையாக வேண்டி பலளிடம் எம்.எல்.ஏ. பரமசிவம் முன்னிலையில் பால்குடம் எடுத்து வேண்டுதல் செய்தனர்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர்  சண்முகம், நகராட்சி துணை தலைவர் வைஸ் பழனிசாமி, ம்மாவ்த்ட கவுன்சிலர் ப.நடராஜன், கூட்டுறவு சங்க தலைவர்கள் சித்துராஜ், ராமமூர்த்தி,எஸ்.எஸ்.மணியன், நிர்வாகிகள் சூ.தர்மராஜன்,பாரதி செல்வராஜ்உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மடத்துகுளம் பகுதி செய்திகள்



மடத்துக்குளம் பேரூராட்சி கழுகரையில் மக்களின் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான பொய் வழக்கிலிருந்து விரைவில் மீண்டு வந்து தமிழக ஆட்சிப் பொறுப்பேற்கவும் பேரூராட்சித் தலைவர் எஸ்.பழனிச்சாமி தலைமையில்,ஒன்றிய செயலாளர் நா.அண்ணாத்துரை, திருப்பூர் மாவட்ட அரசு வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், அமராவதி பாசன சபைத் தலைவர் ராஜ்குமார், பேரூராட்சித் துணைத் தலைவர் தண்டபாணி, ஆகியோர் முன்னிலையில் கழுகரை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி ஆயிரம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உடுமலை நகரமன்றத் தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா,பேரவை செயலாளர் சிவலிங்கம், வீட்டு வசதி கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் யேசுதுரை, நீலம்பூர் செல்வராஜ், கழுகரை பாபு, கவுன்சிலர்கள் பாலு, குணா,தண்டபாணி, சுப்பிரமணி, கணியூர் காஜா மைதீன், தேவி, உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உடுமலை செய்திகள்