Dec 24, 2019

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக  மாவட்டச் செயலாளரும்  முன்னாள் தலைமை கொறடா மனோகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு சண்முகா நகர்  மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வாக்கு சேகரித்தார் 


திருச்சி மணிகண்டம் ஒன்றியம் நாலாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்வே ட்பாளர் அப்துல் ரஹ்மான்  பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் கூறுகையில் நான் தென்னை மரச் சின்னத்தில் போட்டியிடுகின்றேன் மக்கள் என்னை  வெற்றிபெறச் செய்தால் தரமான தார் சாலைகள் குடிநீர் வசதி தெருவிளக்கு கருப்பையை அகற்றுவது வடிகால் வசதி ரேஷன் கடை நூலகம் சிறுவர் விளையாட்டுத்திடல் போன்றவைகள் நான் மக்களுக்கு ஏற்படுத்தி தருவேன் சிறந்த முறையில் மக்கள் தொண்டனாக பணியாற்றுவேன் என்று கூறினார்

இந்நிகழ்வின் போது ஏராளமான அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சிப் பிரமுகர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் உடன் இருந்தனர்


Dec 23, 2019

திருச்சி மணிகண்டம் ஒன்றிய குழு உறுப்பினர் பதவி அதிமுக வேட்பாளர் கார்த்தி வாக்கு சேகரித்தார்




திருச்சி மணிகண்டம் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு வார்டு எண் 6 இல் போட்டியிடும் கார்த்திக்  அதிமுக வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்

அவர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும்போது ஏராளமான கழக தொண்டர்கள் மகளிர் அணி கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் அப்துல் ரஹ்மான் பிரச்சாரம்

திருச்சி மணிகண்டம் ஒன்றியம் நாலாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்வே ட்பாளர் அப்துல் ரஹ்மான்  பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் கூறுகையில்


நான் தென்னை மரச் சின்னத்தில் போட்டியிடுகின்றேன் மக்கள் என்னை  வெற்றிபெறச் செய்தால் தரமான தார் சாலைகள் குடிநீர் வசதி தெருவிளக்கு கருப்பையை அகற்றுவது வடிகால் வசதி ரேஷன் கடை நூலகம் சிறுவர் விளையாட்டுத்திடல் போன்றவைகள் நான் மக்களுக்கு ஏற்படுத்தி தருவேன் சிறந்த முறையில் மக்கள் தொண்டனாக பணியாற்றுவேன் என்று கூறினார்



Dec 22, 2019

திருச்சி புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அதிமுக வேட்பாளர் ஜார்ஜ் தீவிரப் பிரச்சாரம்

திருச்சி புங்கனூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு  அதிமுக சார்பில் ஜார்ஜ் என்பவர் போட்டியிடுகிறார் அவருக்கு பூட்டு சாவி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது இன்று பகுதிகளான சுற்றுவட்டார பகுதிகளில் ஜார்ஜ் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்



அப்போது அவர் கூறுகையில் மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்கவே அம்மா ஆட்சியில் நான் இப்போது போட்டியிடுகிறேன் நான் ஜெயிப்பேன் ஏராளமான நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு செய்திடுவேன் என்றும் நான் மக்கள் தொண்டனாக பணியாற்றுவேன் என்று தெரிவித்தார்

Dec 21, 2019

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் அதிமுக பிரச்சாரம்

திருச்சி



திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் ஒன்றியத்தில் அமைச்சர் வளர்மதி தலைமையில் அதிமுகவினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.



மக்களுக்கு எந்த நல்ல திட்டங்களும் கிடைக்கவிடாமல் செய்ய எதெற்கெடுத்தாலும் நீதிமன்றத்தை நாடும் இயக்கம் திமுக - அமைச்சர் வளர்மதி வாக்கு சேகரிப்பில் பேச்சு ...


திருச்சி மாவட்டத்தில் ஊரக பகுதியில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

இதில் 4077 பதவிகளில் 626 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, மீதமுள்ள 3451 பதவிகளுக்கு 11,870 பேர் போட்டியிடுகின்றனர்.

அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் குமார், அமைப்பு செயலாளர் பரஞ்சோதி, அதிமுக நிர்வாகிகள், தோழமை கட்சிகளான தேமுதிக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் 18 வது வார்டு தாமரை சிவசக்திவேல் 1 முதல் 6 வது வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களையும் ஆதரித்து, அதவத்தூர், அல்லித்துறை, சோமரசன்பேட்டை, இனியானூர், நாச்சிக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வாக்கு சேகரிப்பின் போது பேசிய அமைச்சர் வளர்மதி ...

மக்களுக்கு எந்த நல்ல திட்டங்களும் கிடைக்கவிடாமல் செய்ய எதெற்கெடுத்தாலும் நீதிமன்றத்தை நாடும் இயக்கம் திமுக -

அதிமுக தலைமையிலான தமிழக அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் வந்தடைய உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்

தமிழகம் மின் மிகை மாநிலம் போல திருச்சியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து தண்ணீர் மிகை மாவட்டமாக திருச்சி உள்ளது என அமைச்சர் வளர்மதி வாக்கு சேகரிப்பின் போது பேசினார்.

அதிமுக கழக ஆட்சியின் சாதனைகளை விளக்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக வேட்பாளர்கள், அமைச்சர் வளர்மதிக்கு அப்பகுதி மக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.


இந்நிகழ்ச்சியின் போது அதிமுக மாவட்டச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார், ஜவஹர் சகாதேவன்பாண்டி ,முத்துக்கருப்பன், மற்றும் கழக நிர்வாகிகள் பிரமுகர்கள் முன்னாள் அமைச்சர்கள் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சி மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்


Dec 17, 2019

திருச்சி உள்ளாட்சி தேர்தல் மனு தாக்கல்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 6 ஊராட்சி ஒன்றியத்திற்கு முதல் கட்டமாக 27ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 30 ஆம் தேதி 8 ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.


மணச்சநல்லூர் ஒன்றியத்தில் அதிமுக சார்பாக மணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி கணவர் முருகன் மற்றும் ஏராளமான அதிமுகவினர் பல்வேறு பதவிகளுக்கு மனு தாக்கல் செய்தனர் மேலும் அதிமுக கூட்டணி கட்சியினர் பாட்டாளி மக்கள் கட்சி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்


இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கியது.    வேட்புமனு தாக்கல் கடைசி நாளான நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய அரசியல் கட்சியினரும் சுயேட்சைகளும் குவிந்தனர்.
24 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 149 பேரும், 241 ஊராட்சி யூனியன் வார்டு கவுன்சிலருக்கு 1,443 பேரும்,404 கிராம ஊராட்சித் தலைவருக்கு 2,212 பேரும், 3408 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 9 ஆயிரத்து 582 பேரும் என நேற்று வரை 13 ஆயிரத்து 386 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Jul 19, 2019

திருச்சி டாஸ்மார்க் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம்


                    
திருச்சி டாஸ்மார்க் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது



                      

அப்போது முன்னாள் டாஸ்மார்க் தொழிற் சங்க மாநில செயலாளர் சிவக்குமார் கூறுகையில்அ அம்மாவின் ஆட்சியில் அம்மாவினால் 33 ஆயிரம் டாஸ்மாக் தொழிலாளர்கள் மறுவாழ்வு பெற்றார்கள்ம்மா  தற்போது அண்ணன் எடப்பாடி யார் ஆட்சியில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2000 ஊதிய உயர்வு  பெற்றுள்ளது இதுபோன்ற தொடர்ச்சியாக டாஸ்மாக் பணியாளர்களுக்கு அதிமுக ஆட்சியில் நலத்திட்டங்களை வாரி வழங்கி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும்  ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் 





Jun 22, 2019

ஹோண்டா மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் திருச்சி மாநகர காவல்துறை உடன் இணைந்து இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்தின் 14வது போக்குவரத்து பூங்கா




திருச்சி ஹோண்டா டூ வீலர் இந்தியா திருச்சியில் புதிதாக குழந்தைகள் போக்குவரத்து பூங்காவை திருச்சிராப்பள்ளி மாநகர காவல் துறையுடன் இணைந்து இந்நகரின் முதல் போக்குவரத்து பூங்காவை தொடங்கி இருக்கிறது



சாலைகளை பயன்படுத்துவர்களுக்கு குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு போட்டுப் அவர்களிடையே விபத்தில்லாமல் வாகனத்தை ஓட்டுவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் ஹோண்டா மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் திருச்சி மாநகர காவல்துறை உடன் இணைந்து இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்தின் 14வது போக்குவரத்து பூங்காவை தொடங்கியுள்ளது

ஹோண்டாவின் 14வது போக்குவரத்து பயிற்சி பூங்கா தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திருப்பத்தூர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு திருச்சிராப்பள்ளி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் மற்றும் ஹோண்டா மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் கம்யூனிகேஷன் பிரிவின் துணைத் தலைவர் பிரபு நாகராஜ் ஆகியோர் முன்னிலையில் அரசு அதிகாரிகள் மற்றும் ஹோண்டா டூவீலர் இந்தியா நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டு துவக்கி வைக்கப்பட்டது

Jun 10, 2019

Jun 1, 2019

திருச்சி தனியார் பேருந்துகள் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு

திருச்சி - 31.05.2019

திருச்சியில் உள்ள தனியார் பள்ளி பேருந்துகளின் பாதுகாப்பு குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வுசெய்தனர்.




கோடைவிடுமுறை முடிந்து வருகிற திங்கள் கிழமை  பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி வாகனங்களின் தகுதி குறித்த ஆய்வு திருச்சியில் நடைபெற்றது. இதில் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு வசதிகள், வேகக் கட்டுப்பாட்டு கருவி, தீயணைப்பு கருவி மற்றும் அவசரகால வழி  போன்றவை பற்றி ஆய்வு செய்யப்பட்டது.


ஆகஸ்போர்டு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வு முகாமில் டாக்டர் அகர்வால்  கண் மருத்துவமனை சார்பில், பள்ளி வாகனங்களின் ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் முகாமில் மாவட்ட துணை ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பேசும்போது பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை குறிப்பிட்ட வேகத்திலேயே இயக்கவேண்டும், பேருந்தில் இருக்கும் தீயணைப்பு கருவிகள் செயல்படுவது குறித்து அறிந்து கொள்ளவேண்டும்.  பேருந்தில் பழுது ஏதும் ஏற்பட்டால் உடனடியாக தங்களின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அதை சரிசெய்ய வேண்டும். பேருந்தில் பயணிக்கும் குழந்தைகள் அனைவரையும் பாதுகாப்பாக அழைத்து செல்வது ஒவ்வொரு ஓட்டுநரின் கடமை என கூறினார்.

இதில் பள்ளிபேருந்து ஓட்டுநர்களுக்கு பேருந்தில் தீவிபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு அணைப்பது என்பது குறித்து தீயணைப்பு துறையினரால்  செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

Apr 20, 2019

குணசீலம் தெப்ப உற்சவம்

 குணசீலம் தெப்ப உற்சவம்  நடைபெற்றது
  


வைகுண்ட வாசுதேவன் குணசீல மகரிஷி யின் தவத்திற்காக ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசன் ஆக காட்சியளித்த திருத்தலம் குணசீலம் இந்த க்ஷேத்திரத்தில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் சங்கு சக்கரதாரியாக கையில் சங்கு சக்கரத்துடன் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார் முக்கியமாக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் 48 நாட்கள் பூஜித்து வந்தால் அவருடைய பிரச்சனைகள் தீரும் என்பது அதிகம் அதேபோன்று திருப்பதிக்கு சென்று பிரார்த்தனை செலுத்த இயலாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செலுத்துவதால் தென் திருப்பதி  என்று அழைக்கிறார்கள் இந்த இடத்திலே பிரதி வருடம் சித்ரா பௌர்ணமி அன்று எம்பெருமானுக்கு மிக விசேஷமாக நடைபெறுகிறது

எம்பெருமானுடைய அந்த புராண அந்த வரலாறு நிறைவு பெறும் வழியாக ஆதிமூலமே என்று அழைத்து அந்த கஜேந்திர மோட்சம் அளித்தார் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியே இந்த குணசீல  பெருமானுக்கு எப்போதும் சித்ரா பௌர்ணமியன்று பிரதி வருட  நடைபெற்று வருகிறது வருகிறது அவ்வாறு வருடமும் இந்த வருடமும் நடைபெற்றது

ஆதிமூலமே என்று அழைத்த கஜேந்திரனுக்கு மோட்சம் பாடி அருளிய ஸ்ரீமன் நாராயணனை போற்றும் வகையிலே இந்த திருக்கோவிலில் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்திலே எம்பெருமானுடைய சன்னதிக்கு முன் புறமாக உள்ள பாபவிநாச தீர்த்தம் தொடக்கத்திலே தற்போது மிகவும் விசேஷமாக நடைபெற்று வருகிறது அவ்விதமே இந்த வருடமும் இந்த சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தில் அன்று எம்பெருமானுக்கு தற்போது விசேஷமாக நடைபெற்றுள்ளது எம்பெருமான் ஸ்ரீமூர்த்தி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஆலயத்தில் எழுந்தருளி சகஸ்கர தீப அலங்கார சேவை கண்டருளி அதன்பின் எம்பெருமான் தெப்பத்தில் எழுந்தருளி சேவை சாதித்தார் அதன்பின் இங்கே மைய மண்டபத்தில் அபிஷேக ஆராதனையும் அதன் பின்பாக விசேஷமான ஆராதனைகளும் நடைபெற்று எம்பெருமான் மண்டபத்தில் எழுந்தருளிய தீபாராதனை நடைபெற்றது அதன் பின்பு கண்ணாடி அறை சேவை நிறைவுபெற்று எம்பெருமான் எழுந்தருளினார் விசேஷமான வருடா வருடம் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்திலே சிறப்பா நடைபெற்றது

Apr 18, 2019

திருச்சி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பரபரப்பு பேட்டி








திருச்சி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வாக்களித்த பின்னர் பேட்டி அளித்தார்



திருச்சி வேட்பாளர் இளங்கோவன் அவர்களுக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கு என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் வாக்காளர் பெருமக்கள் காலையிலிருந்து எழுச்சியோடு வாக்களித்து கொண்டிருக்கிறார்கள் இன்று மேலான தகவலை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு 37 நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றது என்பது வரலாறு இந்த முறை 10 கட்சிகளோடு கூட்டணியில் உள்ளோம் ஒரு லட்சத்தி 55 ஆயிரம் வாக்குகள் சென்றமுறை அதிகமாக பெற்று வெற்றி வாய்ப்பை பெற்றோம் இந்த முறை 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பேட்டி அளித்தார் மேலும் வாக்கு இயந்திரங்கள் பழுதடைந்தால் உடனடிய ஆக  சரி சரிசெய்யப்பட்டு வாக்குு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார் 

திருச்சி அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் வேட்பாளர்கள் வாக்களித்தனர்

திருச்சி,

 நாடாளுமன்ற திருச்சி தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 15 லட்சத்து 8 ஆயிரத்து 379 .

இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை  7 லட்சத்து 39 ஆயிரத்து 241,  பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 68 ஆயிரத்து 940, திருநங்கைகள் 148 பேர் வாக்கு செலுத்தவுள்ளனர்.

 914 மையங்களில், ஆயிரத்து 660 வாக்குச் சாவடிகள்  அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. முன்னதாக காலை 6 மணிக்கு வாக்கு பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்க, மாதிரி வாக்கு பதிவு நடத்தப்படுகிறது.

தேர்தல் மண்டல அலுவலர்கள்,  மேற்பார்வையாளர்கள்,  பறக்கும்படையினர்,  நிலை குழுவினர்,  வீடியோ கண்காணிப்புக் குழுவினர்,  துணை ராணுவப் படையினர்,  காவல்துறையினர் உள்ளிட்ட சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர்,  இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
திருச்சி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் நேரு திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் வாக்களித்தார் திருச்சி சிவா திமுக மற்றும் திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தார் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் சிறுபான்மை துறை அமைச்சர் வளர்மதி உறையூர் sms பள்ளியில் வாக்களித்தார் திருச்சி சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பாலக்கரை பகுதியில் உள்ள பள்ளியில் வாக்களித்தார்

Apr 16, 2019

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் திருத்தல வரலாறு

சமயபுரம் மாரியம்மன் கோவில் திருத்தல வரலாறு


கண்ணனூர், கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றெல்லாம் அழைக்கப்படும் சமயபுரம் ஸ்ரீமாரியம்மனுக்கு 17/04/2018. சித்திரை  திருத்தேர் விழா.  அம்மனுக்கு மிகமிக விசேஷமானது.
சக்தி வழிபாட்டிற்குரிய ஸ்தலங்கள் பலவற்றில் தமிழகத்திலே 'சாய்ஞ்சா கண்ணபுரம், சாதிச்சா சமயபுரம்' எனும் வாக்கிற்கிணங்க பிரத்யட்ச தெய்வமாக தன் கண்ணசைவினாலேயே லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்த்தவண்ணம் காவிரி நதி பாயும் சோழ நாட்டிலே திருச்சியிலிருந்து வடக்கே 6 கி.மீ. தொலைவிலுள்ள கண்ணபுரம் எனப்படும் சமயபுரத்திலே அமர்ந்த நிலையிலுள்ள எழிற்கோலத்திலே அழகுறக் காட்சி தருகிறாள் சமயபுரம் ஸ்ரீமாரியம்மன்.

'சாதிச்சா சமயபுரம்' எனும் பெருவாக்கிற்கிணங்க, சமயபுரத்திலே தனக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஸ்ரீமாரியம்மனின் லீலா வினோதத்தைச் சற்றே காண்போமா!

விஜயநகர அரசுக்குத் தளர்ச்சி நேர்ந்தபோது விஜயநகர மன்னர்களால் வழிபாடு செய்யப்பெற்றுவந்த ஸ்ரீமாரியம்மன் உற்சவர் சிலையைத் தங்கப் பல்லக்கில் தூக்கிக்கொண்டு ஊர்வலமாக வந்தனராம். அவ்விதம் ஊர்வலமாக வந்தவர்கள் உணவு உட்கொள்ள வேண்டி சமயபுரத்தில் ஸ்ரீமாரியம்மனை இருத்தினர். உணவு உட்கொண்ட பின்னர் மாரியம்மனைத் தூக்க முயன்று முடியாமற்போகவே வருந்தினராம். தனக்குரிய இடம் இதுவே என்று அன்னையே சமயபுரத்தில் நிலைத்த பின்னர் விஜயரெங்க சொக்கநாத நாயக்கர் (கி.பி.1706-1732) அவரது காலத்தில்தான் அன்னைக்குத் தனிக்கோயில் அமைத்துப் பிரதிஷ்டை செய்தாரென்றும் சொல்லப்படுகிறது.
இந்த விஜயரெங்க சொக்கநாத நாயக்கரிடம்தான் மௌனகுருவை குருவாகக் கொண்டு வாழ்ந்த தாயுமான சுவாமிகள் கணக்கராக இருந்தார். பின்னர் துறவு பூண்டார்.

விஜயரெங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில்தான் விறலிவிடு தூது, கூளப்ப நாயக்கன் காதலை இயற்றிய சுப்ரதீபக் கவிராயர் வாழ்ந்தார். சுப்ரதீபக் கவிராயரிடம்தான் வீரமா முனிவர் தமிழ் பயின்றார்.

தமிழ்ப் புலவர்களை ஆதரிக்காது தெலுங்கு மொழிக்கே ஆதரவு தந்து வந்த நாயக்க மன்னர்கள் வாழ்ந்த அந்த காலகட்டத்தில் தமிழ்மொழியை நிலைநாட்ட தாயுமான சுவாமிகள் போன்றோரை தோற்றுவித்தும், சமயத்தை நிலைநாட்ட இதுதான் சமயம் என்று(ம்) சமயபுரத்திலே அமர்ந்திட்ட மாரியம்மனின் லீலா விநோதத்தை என்னவென்று சொல்வது?

கண்ணனூர், கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றெல்லாம் அழைக்கப்படும் சமயபுரம் ஸ்ரீமாரியம்மனுக்கு ஆடிமாதம், தைமாதம், நவராத்திரி இவைகளெல்லாம் விசேஷமெனில் மாசி மாதம் வரும் பூச்சொரிதல் விழாவோ மிகமிக விசேஷமானது. இப்பூச்சொரிதல் விழாவின்போது லட்சக்கணக்கான மக்கள் திரளாக வந்திருந்து ஸ்ரீமாரியம்மனின் மேல் பூவைச் சொரிந்து அம்மனை வழிபடுவர்.

மாசி மாதம் கடைசி ஞாயிறன்று பூச்சொரிதல் உற்சவம் நடைபெறுகிறது. பூச்சொரிதல் நாள் முதல் பங்குனி மாதம் வரை ஒவ்வொரு ஞாயிறன்றும் பூச்சொரிதல் விழா நடைபெறும். பூச்சொரிதல் நாள் முதல் 4 வாரங்களுக்கு ஸ்ரீமாரியம்மனுக்குப் பச்சைப் பட்டினி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறதாம்.

பூச்சொரிதல் விழாவின் தாத்பர்யம்: ஊரெங்கும் 'மாரி' போடும் சமயங்களிலே உடம்பில் ஏற்படும் முத்துக்களைத் தானே ஏற்று அந்தப் பூ முத்துக்களை  பூப்போல ஸ்ரீமாரியம்மன் உதிர்த்து விடுதலால் உள்ளத்தில் எழும் அந்த நன்றியுணர்வை பக்தர்கள் அந்த மாரியம்மனுக்கு வௌதக்காட்டும் செயலின் வௌதப்பாடே பூச்சொரிதல் விழா.

பூச்சொரிதல் விழாவில் முதல் பூ திருவரங்கம் ஸ்ரீஅரங்கநாதரிடமிருந்து வந்து சொரியப்பட்ட பின்னரே எல்லா ஊர்களிலிருந்தும் வரும் பூக்கள் அம்மனுக்கு பூச்சொரியப்படுகிறது. பூச்சொரிதலுக்கு உதிரிப் பூக்களே பயன்படுத்தப்படுகிறது. சென்னை சிம்சனிலிருந்தும் சமயபுரம் ஸ்ரீமாரியம்மனுக்கு லாரியில் பூக்கள் பூச்சொரிதலுக்கு அனுப்பப்படுகிறதாம். பூச்சொரிதல் உற்சவம் காலைமுதல் இரவு வரை நடைபெறுமாம்.
பூச்சொரிதலில் சொரியப்படும் பூவானது ஸ்ரீமாரியம்மனின் சிரசிலிருந்து போடப்படும். இவ்விழாவில் ஸ்ரீமாரியம்மனின் திருமுகத்தை மட்டுமே காண்பிக்கும் அளவுக்கு அம்மன் பூக்குவியலில் மூழ்கித் திளைப்பாள்.

பூச்சொரிதல் விழாவில் சமயபுரம் ஸ்ரீமாரியம்மனுடன் உடன்பிறந்த சகோதரிகள் அறுவரில் முதல் பூ சமயபுரம் ஸ்ரீமாரியம்மனுக்கே. ஏனெனில் பெரியம்மை போடும் மூத்தவளுக்கு அதை எடுக்கத் தெரியாதாம். சமயபுரம் ஸ்ரீமாரியம்மனே அந்த முத்துக்களை உதிர்த்தலால் முதல் மரியாதை இந்த மாரியம்மனுக்கு என்று சொல்லப்படுகிறது. அடுத்து இரண்டாவது பூ அன்பிலூர் மாரியம்மனுக்கும், மூன்றாவது பூ நார்த்தாமலை மாரியம்மனுக்கும்
கடைசி பூ பெரியம்மை போடும் பெரியவளான பாலக்காடு மாரியம்மனுக்கு என்று சொல்லப்படுகிறது.

இப்பூச்சொரிதல் விழா ஆரம்பமான பின்னர்தான் ஊரெங்கிலுமுள்ள வேம்பு மரங்களிலே வேப்பம்பூவானது அரும்பு கட்ட ஆரம்பிக்குமாம்.


பூச்சொரிதல் விழாவின் முடிவில் சமயபுரம் ஸ்ரீ மாரியம்மனுக்கு சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமையில் தேரோட்டமும், அதற்கடுத்து வரும் வெள்ளிக்கிழமையில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.  சித்திரை மாதக் கடைசியில் வசந்த விழாவும், வைகாசி மாதம் முதல் தேதியில் பஞ்சபிரகார உற்சவமும் நடைபெறுகிறது.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம்

*திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம்*


பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலமான இக்கோயிலில் கடந்த மாதம்   பூச்சொரிதல் விழா தொடங்கிய நாளில் உலக நன்மைக்காக அம்மனும்,  அவரின் பக்தர்களும்  28 நாட்கள் கடைப்பிடித்த  பச்சைப் பட்டினி விரத நிறைவு, பூச்சொரிதல் விழா நிறைவு, சித்திரை தேர் திருவிழா தொடக்கம் ஆகியவை கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றன.


அன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,   கொடி மரத்துக்கு அபிஷேகம் நடைபெற்று,  அம்பாள் முன்னிலையில் மேஷ லக்னத்தில் கொடியேற்றப்பட்டது.  திருவிழாவின் அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்ற நிலையில்,   ஞாயிற்றுக்கிழமை இரவு குதிரை வாகனத்திலும்,   திங்கள்கிழமை இரவு வெள்ளி குதிரை வாகனத்திலும்  திருவீதி உலா நடைபெற்றது.  செவ்வாய்க்கிழமை காலை தேரோட்டம் நடைபெற்றது. அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் தேர் வடம் பிடிக்கப்பட்டது நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது இவர்களுக்கு பாதுகாப்பாக காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

திருச்சி தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில்  99.8 கிராம்  தங்கச் சங்கிலி பறிமுதல்.

 சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது திருவாரூரை சேர்ந்த வெள்ளையம்மாள் என்பவர் மறைத்து எடுத்து வந்த ரூபாய் 3,15,767 மதிப்புள்ள 99.8  கிராம் எடையுள்ள தங்க சங்கிலியை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Apr 8, 2019

ராஜகோபுரத்தின் முன்னிருந்து ராஜ வம்சத்தினருக்கு வாக்கு சேகரித்தார்சரஸ்வதி

ராஜகோபுரத்தின் முன்னிருந்து ராஜ வம்சத்தினருக்கு வாக்கு கேட்கிறேன்



அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து டி ஆர் சரஸ்வதி ஸ்ரீரங்கத்தில் வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டு பேசுகையில், திமுக அதிமுகவிற்கு இல்லாத  தில் டிடிவி தினகரனுக்கு உண்டு. கழகத் துணை பொதுச்செயலாளர் வீடு உறவினர்கள் வீட்டில் எல்லாம் வருமானவரித் துறையினர் சோதனையிட்டனர். பல்வேறு நெருக்கடிக்கு ஆளானார்.அப்பொழுது என்னை 20 வருடம் சிறையில் அடைத்தாலும் 21 வது வருடம் எதிர்த்து நிற்பேன் என்று கூறினார். பதவிக்காக கூனிக்குறுகி காலில் விழும் துரோகிகள் முட்டிப் போட்டு முதலமைச்சர் ஆனவர்கள் எல்லாம் இன்று பேசுகின்றார்கள். இத்தேர்தல் துரோகத்திற்கும் தர்மத்திற்கும் நடைபெறும் தேர்தலாகும். திருச்சியில் இரண்டு அமைச்சர்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளார்கள். இவர்கள் தொகுதி மக்களுக்கு என்ன செய்தார்கள். நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் இவர்கள். நாங்கள் பதவிக்கு அலையல பணத்துக்கு அலையல அதனால நாங்க அண்ணன் டிடிவி பக்கம் இருக்கின்றோம் ராஜகோபுரம் முன்பிருந்து ராஜவம்சத்தில் உள்ள சாருபாலா தொண்டைமானுக்காக பரிசு பெட்டகத்தில் வாக்கு சேகரித்து பேசுகின்றேன். ஆண்டவன் முன்பிருந்து பேசுகிறேன் .சிந்தித்துப் பாருங்கள் அம்மாவை சட்டசபையில் நாக்கு துருத்தி பேசியவர்கள் அம்மாவின் சமாதிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மானம் இருக்கா வெட்கம் இருக்கா தூன்னு துப்பல என்று கூறியவர்கள் கூட எல்லாம் கூட்டணி வைத்து விட்டு இப்பொழுது வாக்கு சேகரிக்க வருகின்றார்கள் .இது துரோகம் இல்லையா ஆண்டவனும் அம்மாவும் எங்க பக்கம் இருக்கிறார்கள். சிந்தித்துப் பாருங்கள் என்று ராஜகோபுரம் முன்பிருந்து ராஜ வம்ச சாருபாலா தொண்டைமானுக்கு சரஸ்வதி பரப்புரை மேற்கொண்டார் பகுதி செயலாளர் இளையராஜா மகளிரணி செயலாளர் சித்ரா விஜயகுமார் ஒன்றிய செயலாளர் வாசு உட்பட பகுதி வட்டக் கழக நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்

திருச்சி சாருபாலா தொண்டைமான் மேற்கு சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம்

திருச்சி பாராளுமன்ற அமமுக வேட்பாளர் அம்மா சாருபாலா தொண்டைமான் திருச்சி மேற்க்கு தொகுதிக்குவுட்பட்டபகுதிகளில் சூராவளி பிரச்சாரம் மேற்க்கொண்டு வருகிறார்


திருச்சி பாராளுமன்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்

திருமதி சாருபாலா R தொண்டைமான் அவர்கள்

திருச்சி மேற்கு தொகுதி, ஜங்ஷன் பகுதிக்குட்பட்ட கருமண்டபம் , ராம்ஜி நகர்,பிராட்டியூர் ,கொத்தமங்கலம  பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்,



திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு J. சீனிவாசன்,

திருச்சி மாநகர் மாவட்ட அவைத்தலைவர் M.S. ராமலிங்கம்,,ஜங்ஷன் பகுதி கழக செயலாளர் R.R.தன்சிங் ,மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Apr 6, 2019

திருச்சி மக்கள் வெள்ளத்தில் டிடிவி தினகரன் பிரச்சாரம்

பட்டி தொட்டி எல்லாம் பரிசுப் பெட்டகம் தான் ட்ரெண்டிங்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டார் காந்தி சந்தையில் மகளிர் அணியினர் செண்டை மேளம் முழங்க பூரண கும்பம் வரவேற்பு அளித்தனர். கலைக்குழுவினர் கலை நிகழ்ச்சி நடத்தினார்கள் காந்தி சந்தையில் பிரச்சாரம் முடித்து உறையூரில்


 திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமானை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு பரிசுப்பெட்டகம் சின்னத்திற்கு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து பேசுகையில்,
சோழ மன்னர்களின் தலைநகராம் உறையூர். திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் இரண்டு முறை மேயராக இருந்தவர். நிதி ஆதாரத்தை 40 கோடியாக உயர்த்தியவர் , பாதாள சாக்கடை திட்டம், நடைபாதை, சாலையோர பூங்கா உள்ளிட்டவற்றை நடைமுறைப் படுத்தியவர். இவரை நாடாளுமன்ற வேட்பாளராக தேர்ந்தெடுத்தால் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், விமான நிலையம் விரிவாக்கம், நவல்பட்டு தொழில்நுட்ப பூங்கா, கொள்ளிடத்தில் தடுப்பணை உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த செயல் திட்டங்களை செயல்படுத்துவார். மோடி அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறதுஅவர்களுக்கு நமது துரோகிகள் துணை போகிறார்கள். வருகின்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் எட்டு சட்டமன்ற தொகுதியில் வெற்றி இல்லை என்றால் ஆட்சி கவிழ்ந்து விடும். தேசிய கட்சியை நம்பி எந்த பயனும் இல்லை. அம்மா காவிரி மேலாண்மையை கூட நீதிமன்றத்தில் போராடி உரிமையை பெற்றவர். நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டத்தில் பூமிக்கடியில் உள்ள இயற்கை செல்வங்களை எடுக்கின்றார். அனைத்து இயற்கைச் செல்வங்களையும் எடுத்தால் விளைநிலங்கள் எல்லாம் பொட்டல் காடாக மாறி சோமாலியா நாடாக முயற்சிக்கின்றார்கள். மோடி அரசு ஆண்டுக்கு இரண்டு கோடி நபர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதாக கூறினார்கள் .ஆனால் ஒரு கோடி பேருக்கு கூட கொடுக்கவில்லை. மேலும் கருப்பு பணத்தை ஒழித்து 15 லட்சம் வங்கி கணக்கில் செலுத்துவதாக கூறினார். ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களிலும் மக்களை வஞ்சித்து விட்டார் .இதனால் தொழில் புரிபவர்கள் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. 6 லட்சம் குடும்பத்தினர் நடுத்தெருவில் உள்ளார்கள். இன்று அனைத்து துறையிலும் பின்தங்கி உள்ளோம். அடிமை அரசின் கையாலாகாத் தனத்தால் நாம் பாதிக்கப்படுகிறோம். நமக்கு சின்னம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பொது சின்னம் வழங்க உத்தரவிட்டது. 36 சின்னங்களை கொடுத்தார்கள். அதில் ஸ்க்ரூ ட்ரைவர், டூத் பேஸ்ட் ,செருப்பு என்று பல்வேறு சின்னங்கள் இருந்தன. ஆனால் தெரியாமல் பரிசுப்பெட்டகம் சின்னமும் அதில் இருந்தது. உடனே அம்மா தாய் சேய் திட்டத்திற்கு வழங்கிய பரிசு திட்டம் நினைவுக்கு வந்தது. உடனே பரிசு பெட்டக சின்னத்தை பெற்றோம். இன்று பட்டி ,தொட்டி எல்லாம் பரிசு பெட்டகம் தான் ட்ரெண்டிங். நமக்கு யாரும் அங்கீகாரம் வழங்க தேவையில்லை மக்கள் தான் அங்கீகாரம் தர வேண்டும் .இங்கே தினம் ஒரு கட்சியில் இருந்து தற்போது காங்கிரஸில் போட்டியிடுகிறார் . வாக்கு சேகரிப்பு கூட்டத்திலும் தூங்கி விடுகின்றார். இவர் திகழ்கிறார் வில் சேர்ந்து விடலாம். வாக்காளப் பெருமக்கள் திருச்சியின் வெற்றி வேட்பாளர் சாருபாலா தொண்டைமானுக்கு பரிசு பெட்டகம் சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றி பெறச் செய்யுமாறு கூறினார்.

மாநகர செயலாளர் சீனிவாசன் இணைச்செயலர் சேட், லதா, sdpi மாநகர செயலாளர் ஹஸன், அமமுக திருச்சி அவைத் தலைவர் ராமலிங்கம் பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி ,ராஜா, உறையூர் பகுதி செயலாளர் சதீஷ் ஜங்சன் பகுதி செயலாளர் தன்சிங் பாலக்கரை பகுதி செயலாளர் கண்ணன் ஏர்போர்ட் பகுதி செயலாளர் ரமேஷ் ஒரு மலைப்பகுதி செயலர் சங்கர் தில்லை நகர் பகுதி செயலாளர் இப்ராஹிம் பிச்சை வழக்கறிஞர் மணிவண்ணன் மகளிரணி செயலர் சித்ரா விஜயகுமார் உட்பட மாநில மாநகர பகுதி வட்டக் கழக சார்பில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றார்கள்.

Mar 31, 2019

திருச்சி உறையூர் முஸ்லிம் தெருவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பிரச்சாரம்

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயில் தரிசித்துவிட்டு திருச்சி பாராளுமன்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சார்பான தொண்டைமான் பிரச்சாரம்



இஸ்லாமியர்களின் பாதுகாவலராய் உள்ள அமமுக விற்கு பரிசு பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச்  செய்யுங்கள்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமானை ஆதரித்து உறையூர் முஸ்லிம் தெருவில்
sdpi கட்சி செயலர் ஹசன் பேசுகையில், இஸ்லாமியர்களுக்கு 5 விழுக்காடு இட ஒதுக்கீடு நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக பாசிச ஆட்சி கொண்டு வந்த முத்தலாக் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படும் சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகளுக்கு மத்திய அரசுகள் இன்றும் அமல்படுத்தவில்லை அதனால் சிறப்புக்குழு அமைத்து சட்ட அங்கீகாரம் அளித்து இஸ்லாமியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள  முஸ்லிம் சிறைவாசிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் வக்பு சொத்துகள் மீட்கப்படும் ஏழை இஸ்லாமியர்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தப்படும் இமாம்கள் துணை இமாம்கள் மாத வருமானம் ரூபாய் 40,000 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இஸ்லாமியர்களின் நலன் மற்றும் முன்னேற்றம் குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்கள். மாறி மாறி ஆண்டவர்கள் இஸ்லாமிய நலன் காக்கும் வகையில் செயல்படவில்லை இஸ்லாமியரின் பாதுகாவலராக இருக்கக் கூடிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பெருவாரியான வாக்குகளை பரிசு பெட்டியில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என்றார்.
 அமைப்பு செயலாளர் மனோகரன் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் அவைத் தலைவர் ராமலிங்கம் பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி ஸ்ரீரங்கம் பகுதி செயலர் இளையராஜா உறையூர் பகுதி செயலாளர் சதீஷ் பொன்மலை பகுதி செயலாளர் சங்கர் ஒன்றிய செயலாளர் வாசு எம்ஜிஆர் மன்ற தலைவர் நடேசன் வர்த்தக அணி செயலாளர் நாகராஜன் மகளிரணி செயலர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் உட்பட மாநகர் பகுதி ஒன்றிய பேரூராட்சி வட்டக் கழக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்கள்.

Mar 29, 2019

திருச்சி ஸ்ரீரங்கத்தில் சாருபாலா தொண்டைமான் பிரச்சாரம்

ஸ்ரீரங்கத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பிரச்சாரம்



பூலோக வைகுண்டம் என்று போற்றக்கூடிய 108 திவ்ய தேசங்களில் முதன்மையான அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில்
ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா கோபுரத்தின் முன்பிருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் பிரச்சாரத்தை துவங்கி பேசுகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று பக்த கோடிகளுக்கு அன்னதானம் யாத்ரிநிவாஸ் சட்டக்கல்லூரி வண்ணத்து பூச்சி பூங்கா மாணவர்களுக்கு கல்லூரி என இத்தொகுதிக்கு அவர் நல்ல பல திட்டங்களை வழங்கி உள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் எனக்கு பரிசுப் பெட்டி சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். தெற்கு உத்திர வீதி மேற்கு உத்தர வீதி வடக்கு உத்திர வீதி கிழக்கு உத்திர வீதி தெற்கு சித்திரை வீதி மேற்கு சித்திர வீதி வடக்குச் சித்திரை வீதியில் கிழக்குச் சித்திரை வீதி அடையவளஞ்சான் உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்தார்கள்
 அமைப்பு செயலாளர் மனோகரன் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் அவைத் தலைவர் ராமலிங்கம் பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி ஸ்ரீரங்கம் பகுதி செயலர் இளையராஜா உறையூர் பகுதி செயலாளர் சதீஷ் பொன்மலை பகுதி செயலாளர் சங்கர் ஒன்றிய செயலாளர் வாசு எம்ஜிஆர் மன்ற தலைவர் நடேசன் வர்த்தக அணி செயலாளர் நாகராஜன் மகளிரணி செயலர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் உட்பட மாநகர் பகுதி ஒன்றிய பேரூராட்சி வட்டக் கழக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்கள்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பரிசு பெட்டி

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி

பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது

தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின்  39 வேட்பாளர்கள் நாடாளுமன்ற தேர்தலிலும் , 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலிலும் போட்டியிடுகிறது. பொது சின்னமாக டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தை கேட்டார். இதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து தினகரன்  உச்சநீதிமன்றத்தை நாடினார். அங்கு அமமுக தரப்புக்கு  நீதிபதிகள் பொது சின்னம் ஒன்றை ஒதுக்க உத்தரவிட்டனர்.
இந்நிலையில், அமமுக வேட்பாளர்கள் அனைவருக்கும் பொதுச்சின்னமாக பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

Mar 28, 2019

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தர்காவில் வழிபாடு

நத்தஹர்வலி தர்காவில் வழிபட்ட அமமுக வேட்பாளர்

திருச்சி ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்தஹர் வலி தர்காவில் நத்தர் அவர்களின் கலீபா அப்துர் ரகுமான் சித்தீகி அவர்களும், வளர்ப்பு மகள்  ஹலீமா என்ற மாமா ஜிக்னியும், நத்ஹர் அவர்களின் கால்மாட்டிலும், ஷம்ஸ் கோயான் அமைச்சர் கீழ்புறத்தில் மற்றொரு அமைச்சரான ஷம்ஸ்பீரான் அடக்கம் பெற்றுள்ள இடத்தில் வழிபாடு செய்தார்கள்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் அடங்கப் பெற்று உள்ள இடத்திற்கு வெளியே நின்று வழிபட்டு மயிலிறகால் மதிக்கப்பட்டது



மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் பச்சை நிற போர்வையை போற்றி மலர்கள் தூவி வழிபட்டார்.



அவைத் தலைவர் ராமலிங்கம் இணைச் செயலர் சிறுபான்மை பிரிவு செயலர் நத்தர்ஷா பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி பாலக்கரை பகுதி செயலாளர் கண்ணன் ஏர்போர்ட் பகுதி செயலாளர் ரமேஷ் பொன்மலை பகுதி செயலாளர் சங்கர் உறையூர் பகுதி செயலாளர் சதீஷ் மகளிரணி செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் உட்பட மாநகர பகுதி வட்டக் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ஆண்டவர் jeeyar இடம் ஆசிர்வாதம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளருக்கு ஆண்டவர் jeeyar ஆசீர்வாதம்அ ம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்



 ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் 12-வது ஜீயர் ஸ்ரீவராஹ மகாதேசிகன் சுவாமிகளை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கினார்கள் கழக அமைப்புச் செயலாளர் மனோகரன்  உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்

அதிமுக நிர்வாகி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஐக்கியம்

அதிமுக நிர்வாகி அமமுகவில் ஐக்கியம்

அஇஅதிமுக திருச்சி மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர் ஜான்கென்னடி அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் இணைந்தார். திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் முன்னிலையில் அவைத்தலைவர் ராமலிங்கம் துணைச் செயலர் சேட் எம்ஜிஆர் மன்ற செயலாளர் மோகன் தாஸ் பாலக்கரை பகுதி செயலாளர் கண்ணன் மகளிர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் உட்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

சாருபாலா தொண்டைமானுக்கு முக்குலத்தோர் தேவர் நல அறக்கட்டளை ஆதரவு

அமமுகவிற்கு திருச்சி மாவட்ட முக்குலத்தோர் தேவர் நல அறக்கட்டளை ஆதரவு

அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமானுக்கு மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் திருச்சி மாவட்ட முக்குலத்தோர் தேவர் நல அறக்கட்டளை தலைவர் சுப்பு தேவர் கண்ணன் உட்பட நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தனர் அவைத்தலைவர் அவைத் தலைவர் ராமலிங்கம் இணைச்செயலர் சேட் மகளிர் அணிச் செயலாளர் சித்ரா விஜயகுமார் உட்பட மாநகர பகுதி வட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கூட்டத்தில்

பத்தாண்டுகளாக நாடாளுமன்றம் சென்றவர்கள் என்ன செய்தார்கள் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்

தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் ஸ்ரீரங்கம், திருச்சி (மேற்கு), திருச்சி (கிழக்கு), திருவெறும்பூர்,  கந்தர்வகோட்டை (தனி), புதுக்கோட்டை ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது திருச்சி மக்களவைத் தொகுதி. இந்தத் தொகுதியின் வெற்றி வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸுக்கு அதிக பக்கங்கள் இருக்கின்றன. காங்கிரஸ் வேட்பாளராக அடைக்கலராஜ் 4 முறை வெற்றி பெற்றார். 2009-க்குப் பின்னர் இத்தொகுதி அதிமுக வசம் உள்ளது. திமுக ஒரே ஒரு முறை மட்டுமே திருச்சியில் வெற்றி பெற்றது. அது 1980-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல்.

இத்தகைய சூழலில் திருச்சியை அதிமுக, கூட்டணிக் கட்சியான தேமுதிகவுக்கும், திமுக, அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கும் விட்டுக் கொடுத்துள்ளன.

இந்தத் தேர்தலில் கவனம் ஈர்த்துள்ள அமமுக சார்பில் சாருபாலா தொண்டைமான் போட்டியிடுகிறார். புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவரான இவர், இரண்டு முறை திருச்சி மேயராக இருந்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர், இப்போது அமமுக சார்பில் போட்டியிடுகிறார்.

இந்தத் தேர்தலில் அமமுகவுக்கு குக்கர் சின்னம் இல்லாவிட்டாலும்கூட, டிடிவி என்ற அடையாளத்தை வைத்தே தமிழகம் முழுவதும் வெற்றிகள் குவிக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் உள்ளார்.

 வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாகவே பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார் செல்லும் இடமெல்லாம் நல்ல வரவேற்பு இருக்கிறது. திருச்சியில் ஏற்கெனவே இரண்டு முறை மேயராக இருந்துள்ளார். அதனால்,  மக்களிடம் நன்கு அறிமுகமாகியுள்ளார். இது  கூடுதல் பலமாக இருக்கிறது.

தேர்தல் வரலாற்றின்படி திருச்சி காங்கிரஸின் கோட்டையாக இருந்துள்ளது.
அப்போது இருந்த காங்கிரஸ், இப்போது இல்லை. அதனால், திருநாவுக்கரசரைப் போட்டியாகப் பார்க்கவில்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் அதன்பின்னர் அதிமுகவில் சேர்ந்ததற்கு காரணமே காங்கிரஸின் பலவீனம்தான். மேயராக இருந்தபோதே 'அம்மா'  அதிமுகவில் சேருமாறு அழைத்தார். அவர் மீதுள்ள ஈர்ப்பால்தான் அதிமுகவில் இணைந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் மறைந்துவிட்டார். அதன்பின்னர் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. அந்தப் பிளவு, டிடிவி தினகரன்தான் உண்மையான தலைவர் என்று அடையாளம் காட்டியது. அதனால், டிடிவி தினகரன் பக்கம் நின்றார்

இரண்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்த ப.குமார் தொகுதிக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எதுவும் செய்யவில்லை. ஏனென்றால் ஏர்போர்ட் ரன்வே விரிவாக்கம், தஞ்சை நெடுஞ்சாலை, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் போன்ற கோரிக்கைகள் இன்னும் பேப்பரில் மட்டுமே இருக்கின்றன. 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராக 10 ஆண்டுகளாக டெல்லி சென்றவர் மக்களுக்காக செய்யாதவற்றை செய்து முடிப்பதே எனது இலக்கு என தொகுதி மக்களிடம் ஆதரவு கோரி வருகிறார்

 மேயராக இருந்தபோது ரயில்வே நிலத்தை கேட்டுப்பெற்று, மாநகராட்சி நிதியில் பேருந்து நிலையங்களை அமைத்தார் ஆனால், நாடாளுமன்றம் வரை சென்றவரால் இன்னும் திருச்சிக்கு எதுவும் செய்ய இயலவில்லை.

தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர், புதுக்கோட்டை தனி மக்களவைத் தொகுதி என்ற அந்தஸ்தை இழந்திருக்கிறது.

எங்கள் சின்னமே டிடிவி.தான். அவரை அடையாளப்படுத்திதான் நாங்கள் வாக்கு சேகரிக்கிறோம்.  கடைசி நேரத்தில் வழங்கப்பட்ட சின்னத்துடன்தானே ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். அவரைப் போலவே எந்த சூழலிலும் நிதானமாக, அச்சமின்றி நின்று, வெற்றி பெறுவோம்.
சின்னம் தொடர்பான நீதிமன்ற உத்தரவு வந்தது முதல், அமமுக ஒரு விவாதப் பொருளாகியுள்ளது. இதுவே கட்சிக்கு 3% வாக்குகளை உறுதியாக்கிவிட்டது
மேலும், இங்கு களத்தில் உதய சூரியன் சின்னமும் இல்லை, இரட்டை இலை சின்னமும் இல்லை. கூட்டணிக் கட்சிகளுக்காக தொண்டர்கள் ஆற்றும் பணி வேறு, சொந்தக் கட்சிக்காக செய்யும் வேலை வேறு.
அமமுகவில் இருக்கும் தொண்டர்களில் 95% பேர் அதிமுகவினர்தான். அவர்கள் களத்தில் உற்சாகமாக தினகரனுக்காக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். இதன் பலன், தேர்தல் முடிவின்போது தமிழகம் முழுவதும் தெரியும்.
அமமுகவைப் பொறுத்தவரை நாங்கள் பெரும் ஓட்டுகள் அனைத்துமே டிடிவி என்ற அடையாளத்துக்குத்தான். பெண் என்பதைவிட, டிடிவி கட்சியைச் சேர்ந்தவர் என்பதே எனக்கு மக்கள் ஆதரவை பெற்றுத்தரும் என்பேன். டிடிவி தினகரனுக்கு இளைஞர்களும் பெண்களும் ஆதரவாக உள்ளனர் என வெற்றி நடை போட்டு வருகிறார் அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்

Mar 26, 2019

திருச்சி விமான நிலையத்தில் 50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்


செம்பட்டு:  இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து இன்று காலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி வந்தது அதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர் அப்போது 4 பேர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அவர்கள் கொண்டு வந்த பொருட்களை சோதனை செய்தனர் அப்போது அவர்கள் ஆசனவாயில் மறைத்து இலங்கையில் இருந்து கடத்தி வந்த ரூபாய் 49.5 இலட்சம் மதிப்புள்ள தங்கத்தை உருக்கி பேஸ்ட் வடிவில் செய்து மறைத்து எடுத்து வந்ததை கண்டு பிடித்த நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பைசல், அலி கான், காஜா, மற்றும் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

அவர்களிடமிருந்து ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள 1.9 கிலோ மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தது திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி டி டிவி தான் எங்கள் வெற்றிச் சின்னம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் பேட்டி

திருச்சி மார்ச் 26

தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  மக்களவை மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.

தமிழகத்தில் ஏப்ரல் 18-இல் மக்களவைக்கும், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. அதேபோன்று புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, வேட்புமனு தாக்கல் கடந்த 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. தற்போது  நிலவரப்படி மக்களவைத் தேர்தலில் போட்டியிட 721-க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், 626 ஆண்களும், 93 பெண்களும் அடங்குவர். 2 பேர் மூன்றாம் பாலித்தனவர் ஆவர். குறிப்பாக திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை  காங்கிரஸ், தேமுதிக, மநிம கட்சி உட்பட 20 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து இருக்கின்றனர். இதில் இரண்டு நபர்ள் பெண்கள் என்பது குறிப்பிடதக்கது.

சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் போட்டியிட 257 வேட்புமனுக்கள் தாக்கல் ஆகியுள்ளன. 212 ஆண்களும், 45 பெண்களும் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற வரும் 29-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை 3 மணியளவில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அந்தந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அலுவலகங்களில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வரும் மே 23ஆம் தேதி எண்ணப்பட உள்ளன

திருச்சியில் அமமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19ம் தேதி துவங்கியது கடைசி நாளான இன்று தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சாருபால தொண்டைமான் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான  சிவராசுவிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவருடன் தெற்கு மாவட்ட செயலாளர் மனோகரன்,மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பரணி கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர்

அமமுக திருச்சி தொகுதி வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் பேட்டியில் கூறுகையில்


டிடிவி தினகரன் தான் எங்களது வெற்றி சின்னம்

அம்மா அவர்களின் ஆசி பெற்ற வேட்பாளர் நான். திருச்சி தொகுதியில் ஏற்கனவே இரண்டு முறை போட்டியிட்டுள்ளேன். திருச்சி புதிதல்ல. மூன்றாவது முறையாக போட்டியிடுகிறேன். பெரிய அளவில் வெற்றி பெறுவேன். சின்னம் குறித்த வழக்கின் தீர்ப்பை தமிழகம் முழுவதும் இன்று ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். எங்களது வெற்றி சின்னமே டிடிவி தினகரன் தான். எங்களது வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெறுவார்கள் என்றார்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தொழிலதிபர் கண்ணையன் அவர்களிடம் ஆதரவு கோரினார்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்  திருச்சி தொழிலதிபர் பொன்மலைப்பட்டி கண்ணையனிடம் ஆதரவு கோரினார்.திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன்  அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் பொருளாளர் திரிசங்கு, இணைச்செயலர் சேட் ஜோதிவானன், உறையூர் பகுதி செயலாளர் சதீஷ் ஜங்சன் பகுதி செயலர் தன்சிங் பாலக்கரை பகுதி செயலாளர் கண்ணன் பொன்மலை பகுதி செயலாளர் சங்கர்  ஏர்போர்ட் பகுதி செயலாளர் ரமேஷ்   அம்மா பேரவை செயலாளர் சரவணன் செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் , உட்பட பல நிர்வாகிகள உடனிருந்தனர்.

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் விஜய் ரசிகர் மன்ற இளைஞர் அணி தலைவரிடம் ஆதரவு கோரினார்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்  திருச்சி விஜய் ரசிகர் மன்ற மாவட்ட இளைஞரணி தலைவர் குடமுருட்டி கரிகாலனிடம் ஆதரவு கோரினார்.திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன்  அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் பொருளாளர் திரிசங்கு, இணைச்செயலர் சேட் ஜோதிவானன், உறையூர் பகுதி செயலாளர் சதீஷ் ஜங்சன் பகுதி செயலர் தன்சிங் பாலக்கரை பகுதி செயலாளர் கண்ணன் பொன்மலை பகுதி செயலாளர் சங்கர்  ஏர்போர்ட் பகுதி செயலாளர் ரமேஷ்   அம்மா பேரவை செயலாளர் சரவணன் செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் , உட்பட பல நிர்வாகிகள உடனிருந்தனர்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் லிங்கம் நகர் பொது நல சங்க தலைவரிடம் ஆதரவு கோரினார்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்  திருச்சி உறையூர் லிங்கம் நகர் பொது நல சங்க தலைவர் சிவக்குமாரிடம் ஆதரவு கோரினார்.திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன்  அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் பொருளாளர் திரிசங்கு, ஜோதிவானன், உறையூர் பகுதி செயலாளர் சதீஷ் ஜங்சன் பகுதி செயலர் தன்சிங் பாலக்கரை பகுதி செயலாளர் கண்ணன் பொன்மலை பகுதி செயலாளர் சங்கர்  ஏர்போர்ட் பகுதி செயலாளர் ரமேஷ்   அம்மா பேரவை செயலாளர் சரவணன் செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார்  உட்பட பல நிர்வாகிகள உடனிருந்தனர்.

Mar 25, 2019

திருச்சி மறைமாவட்டம் தூய மரியன்னை பேராலயம் முன்பு சாருபாலா தொண்டைமான் வாக்கு சேகரித்தார்




அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்  திருச்சி மறைமாவட்டம் தூய மரியன்னை பேராலயம் முன்பு கிருத்துவ சகோதர சகோதரிகளிடம் ஆதரவு கோரினார்.திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன்  அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் பொருளாளர் திரிசங்கு, ஜோதிவானன், ஜங்சன் பகுதி செயலர் தன்சிங் பாலக்கரை பகுதி செயலாளர் கண்ணன் பொன்மலை பகுதி செயலாளர் சங்கர்  ஏர்போர்ட் பகுதி செயலாளர் ரமேஷ்   அம்மா பேரவை செயலாளர் சரவணன் செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார்  உட்பட பல நிர்வாகிகள உடனிருந்தனர்.

Mar 24, 2019

தேமுதிக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது


திருச்சி-24.03.19

தேமுதிக திருச்சி பாராளுமன்ற தேர்தல் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது

அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக வின் திருச்சி பாராளுமன்ற தேர்தல் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ள அலுவலகத்தை தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அதிமுக அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் பாமக, பாஜக, உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம்

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது

திருச்சி பாராளுமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்  வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர் வீராங்கனை கூட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி வயலூரில் உள்ள மணிமுத்து மண்டபத்தில் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில்,
திருச்சி பாராளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ராஜசேகரன் கழக அமைப்புச் செயலாளரும் திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான மனோகரன் திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் சீனிவாசன் கூட்டணி கட்சியான SDPI திருச்சி மாவட்ட தலைவர்  ஹஸ்ஸான் கழக விவசாய அணி இணைச்செயலாளர்
செல்வகுமார் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் கேசவன் அவர்கஅந்தநல்லூர் ஒன்றியக் கழகச் செயலாளர் வாசு அவர்கள் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



Mar 23, 2019

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் விஜய் ரசிகர் மன்ற தலைவரிடம் ஆதரவு கூறினார்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்


 திருச்சி மாவட்டம் விஜய் ரசிகர் மன்றத் தலைவர் ராஜா மற்றும் நிர்வாகிகளிடம் ஆதரவு கோரினார்.திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்புச் செயலாளர் மனோகரன் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன்  அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் அரியமங்கலம் பகுதி செயலாளர் சரவணன் ஜங்சன் பகுதி செயலர் தன்சிங் பாலக்கரை பகுதி செயலாளர் கண்ணன் பொன்மலை பகுதி செயலாளர் சங்கர்  ஏர்போர்ட் பகுதி செயலாளர் ரமேஷ்  உறையூர் பகுதி செயலாளர் சதீஷ் அம்மா பேரவை செயலாளர் சரவணன் செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி இணைச் செயலர் சேட் லதா  மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார்  உட்பட பல நிர்வாகிகள உடனிருந்தனர்.

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் வெங்காய தரகு மண்டி வியாபார சங்க தலைவரிடம் ஆதரவு கோரினார்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்  திருச்சி மாவட்டம் வெங்காய தரகு மண்டி வியாபார சங்க தலைவர் வெள்ளையப்பனிடம் ஆதரவு கோரினார்.

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்புச் செயலாளர் மனோகரன் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன்  அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் அரியமங்கலம் பகுதி செயலாளர் சரவணன் ஜங்சன் பகுதி செயலர் தன்சிங் பாலக்கரை பகுதி செயலாளர் கண்ணன் பொன்மலை பகுதி செயலாளர் சங்கர்  ஏர்போர்ட் பகுதி செயலாளர் ரமேஷ்  உறையூர் பகுதி செயலாளர் சதீஷ் அம்மா பேரவை செயலாளர் சரவணன் செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி இணைச் செயலர் சேட் லதா  மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார்  உட்பட பல நிர்வாகிகள உடனிருந்தனர்.