Jan 19, 2020

திருச்சி தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைச்சர்கள் பங்கேற்பு

திருச்சி தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைச்சர்கள் பங்கேற்பு

திருச்சிராப்பள்ளி உலக சுகாதார நிறுவனம் மற்றும் மாநில அரசின் உதவியுடன் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்க உள்ளது கடந்த பதிமூன்று 1 2011 முதல் இன்று வரை இந்தியாவில் போலியோ நோயின் தாக்கம் இல்லை இதைத் தொடர்ந்து நிலையான நிலையை தக்கவைத்துக் கொள்வதற்கும் போலியோ நோயை அறவே ஒழிப்பதற்கு இந்த முறையை மிகவும் சிரத்தையோடு பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட உள்ளது

திருச்சி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 1279 மையங்களிலும் திருச்சி மாநகராட்சியில் 244 மையங்களிலும் துறையூர் நகராட்சியில் 20 மையங்களிலும் மணப்பாறை நகராட்சி 23 மையங்களிலும் மொத்தம் ஆயிரத்து 563 மையங்களில் சொட்டு மருந்து முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் துணை சுகாதார மையங்கள் அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து நகரங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது ஸ்ரீரங்கம் குணசீலம் சமயபுரம் வயலூர் ஆகிய கோயில்கள் மசூதிகள் ஆலயங்கள் மற்றும் அனைத்து பேருந்து நிலையங்கள் ரயில் நிலையங்கள் விமான நிலையம் முக்கொம்பு போன்ற சுற்றுலாத் தலங்க ஆகிய அனைத்து இடங்களிலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க 55 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வர இயலாத இடங்களில் 69 நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்ய உள்ளது செய்துள்ளது ரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து திருச்சியில் இன்று செல்லும் மற்றும் திருச்சி வழியாக செல்லும் அனைத்து ரயில்களிலும் பயணம் செய்யும் ஐந்து வயதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

கிராமப்புறங்களில் 16 74 69 குழந்தைகளுக்கும் நகர்புறங்களில் 97 47 4 குழந்தைகளுக்கும் இடம்பெயர்ந்து குடியிருப்போர் மற்றும் நாடோடிகளின் குழந்தைகள் 527 பெயர்களுக்கும் ஆக மொத்தம் 265470  குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட திட்டமிட்டுள்ளது இம்முகாமில் 6650 பணியாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்

Jan 6, 2020

திருச்சி பூலோக வைகுண்டத்தில் சொர்க்கவாசல் திறப்பு

திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

 பூலோக வைகுண்டம் என்னும் சிறப்புக்குரிய இக்கோயிலில் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்திப்பெற்றது. இதில் கலந்துகொள்ள தமிழ்நாடு, வெளிமாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைதருவார்கள்

வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கியது. அதன்பின் பகல் பத்து உற்சவம் கடந்த 27ஆம் தேதியும், பகல் பத்து உற்சவத்தின் 10ஆம் நாளான ஜனவரி 5ஆம் தேதி நாச்சியார் திருக்கோலத்தில் ரங்கநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ராஜ அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட ரங்கநாதர் அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதனைக் கடந்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'ரங்கா ரங்கா' என்று கோஷமிட்டு ரங்கநாதரை வழிபட்டனர். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு நான்காயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

சொர்க்கவாசல் நிகழ்ச்சியின் முதல்நாளான இன்று சொர்க்கவாசல் இரவு 10 மணிவரை திறக்கப்பட்டிருக்கும். நாளை முதல் 8 நாள்களுக்கு மதியம் 1 மணிமுதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும். மேலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Jan 5, 2020

திருச்சி பிரம்மாண்டமாக அரசு பொருட்காட்சி துவக்கம்

திருச்சி தென்னூர் பட்டாபிராமன் பிள்ளை தெருவில் அரசு பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நடைபெற்றது.


இதில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு பொருட்காட்சியை திறந்துவைத்தார்.


அப்போது அவர் பேசுகையில், "பாஜக ஆளும் மாநிலங்களுக்குகூட மத்திய அரசு முதலிட விருது வழங்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டிற்கு இத்தகைய விருது கிடைத்திருப்பது தமிழ்நாடு மக்களுக்கு பெருமை சேர்க்க கூடியது. அந்த அளவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.
அரசின் நலத் திட்டங்களை மக்களுக்கு கொண்டுசெல்லும் பணியை செய்தி மற்றும் விளம்பரத் துறை மேற்கொள்கிறது, ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இந்த ஆட்சி நான்கு ஆண்டுகளை வரும் பிப்ரவரி மாதத்தில் பூர்த்தி செய்கிறது.


இந்த ஆட்சி நான்கு நாள்கள் தாங்குமா, 40 நாள்கள் தாங்குமா, நான்கு மாதம் தாங்குமா? என்று கூறியவர்கள் மத்தியில் இந்த ஆட்சியை நான்கு ஆண்டுகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிலைநிறுத்திக் காட்டியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் மாறுபட்ட முடிவை அளித்தார்கள்.
ஆனால் இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களில் ஒன்பது தொகுதிகளில் மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

திருச்சியில் இந்தப் பொருட்காட்சி 45 நாள்கள் வரை நடைபெறுகிறது. இது முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாகும்" என்றார்.
இந்த விழாவிற்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமை வகித்தார். அமைச்சர் வளர்மதி, ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நடைபெற்ற பொருட்காட்சியில் சுற்றுலாத் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை, வனத் துறை, அறநிலையத் துறை, பள்ளிக் கல்வித் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.