Mar 16, 2018

Trichy Central minister program

பாதுகாப்புத்துறைக்கான உபகரணங்கள் உள்நாட்டில் தயாரிக்க முன்வர வேண்டும்–அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்


திருச்சியில் தொழில்துறையினர் நடத்தும் கருத்தரங்கில் தமிழக அமைச்சர்கள், துப்பாக்கி  தொழிற்சாலையின் உயர்அதிகாரிகள் இந்தக்  கருத்தரங்கில் கலந்து கொண்டு தொழில்  வளர்ச்சிக்கான கருத்துக்களைப் பரிமாறி  கொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மத்திய  பாதுகாப்பு துறை  அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்  பேசுகையில்  :

இந்தியஅளவில் உள்ள  தொழில்களில் மத்திய  அரசின்கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில்தனியார் மயமாக்குதல்  என்பது எந்தவகையில் வளர்ச்சி பாதையை நோக்கிப்  பயணிக்கும்என்பது குறித்த  விளக்கங்களைத்தெரிவித்தார்

பொது நிறுவனங்கள்  தற்போது சிறு தனியார் நிறுவனங்களை நம்பி தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே பொதுத்துறையில்தனியார்  தலையீடு இருந்தால்  வேலைவாய்ப்புஅதிகரிக்கும்,  பொருட்களின் உற்பத்தி, பொருட்களின் தரத்தில் கூடுதல் கவனம்,  என்றும், பல வளர்ச்சிகள்  உள்ளதாக கூறினார்.

திருச்சியைப் பொறுத்தவரை பாரத மிகுமின்நிலையம்,  துப்பாக்கி தொழிற்சாலை,  உள்ளிட்டவற்றிலும் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என்று  அறிவிக்கப்பட்டது. அதற்கான  பணிகள் நடைபெற்று வருகிறது.  பாரதமிகு மின் நிலையத்தைச்சுற்றி உள்ளசிறு, குறு தொழில்  முனைவோர்கள்தங்களுடைய  திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கும்  ஒரு வாய்ப்புஇந்தத் தனியார் மயமாக்குதல் மூலம் நடக்கும்என்று கூறினார்.

ராணுவ தளவாடங்களை தமிழகத்தில் உற்பத்தி செய்யவும், தேஜஸ் விமானங்களை போர் விமானங்களாக தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். பாதுகாப்புத்துறைக்கான உபகரணங்கள் உள்நாட்டில் தயாரிக்க முன்வர வேண்டும்

தனியார் தலையீடு இல்லாமல்பொதுத்துறைநிறுவனங்கள் செயல்பட முடியாது.  பலதிறமையானவர்களை  தனியார் மயாக்குதல் மூலம் பயன்படுத்தி கொள்ள முடியும், குறிப்பாக  இந்திய இராணுவத்திற்கும்,  தமிழககாவல்துறைக்குமான  தேவையை தற்போதுஉள்ள இந்தபொதுத்துறை நிறுவனத்தால்கொடுக்க முடியவில்லை. ஆனால் தனியாரின்தலையீடு இருந்தால் அதை நாம் ஈடுசெய்யமுடியும். நாங்கள் எதையும் விற்கவில்லைஅனைத்தையும் உயிர்ப்பிக்க முயற்சிசெய்கிறோம். என்று தெரிவித்தார். நம்முடைய நாட்டில் பாதுகாப்பு துறையை தனியார் மூலம் வலிமையான நிறுவனங்களாக மாற்ற முடியும் என்பது தான் மத்திய அரசின் கொள்கை எனவே அதனை செயல்படுத்த தான் இதுபோன்ற கருத்தரங்குகள் மூலம் மக்களிடம் தனியார் மயமாக்குதலை பற்றி எடுத்துக்கூறி வருகிறோம் என்று கூறினார்.

தொழிற் வளர்ச்சிக்கான சர்வதேச மாநாடுநடைபெற உள்ளது அதில் 60 நாடுகள் மற்றும்75 நிறுவங்கள் கலந்து  கொள்வதாகவும் இதில்50%  மானியத்துடன் வழங்கப்படும் என்றும்தெரிவித்தார். மேலும் அரசு  மற்றும் தனியார்நிறுவனங்கள் நன்று வளர்ந்து Make in indiaதிட்டத்தின் கிழ் கொண்டு வந்து நாட்டைமுன்னேற்ற பாதையில் கொண்டு போவதே எங்கள் நோக்கம் எனவும்  தெரிவித்தார்.இந்தியா  ஏற்றுமதியில் சிறந்து விளங்கஓத்துழைக்குமாறும் வலியுறுத்தினார்..