Oct 5, 2017

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே தீராம் பாளையத்தில்ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் விதைப்பந்து தயாரித்தல் பணி

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே  தீராம் பாளையத்தில் உள்ள காந்திய நடுநிலைப் பள்ளியில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கரூர் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவில் 2லட்சம் மரக்கன்றுகள் வழங்கினார் அதனை ஊக்குவிக்கும் விதமாக ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் தீராம் பாளையம் காந்திய நடுநிலைப் பள்ளியை தத்தெடுத்து விதைப்பந்து தயாரித்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர், 


(விதைப்பந்து என்பது மர செடி விதைகளை செம்மண் உருண்டை செய்து அதன் நடுவில் வைத்து அதைபந்து போல் உருட்டி வைத்து அதனை நம் நினைக்கும் இடத்தில் வீசி விட்டால் மழை காலத்திலோ அல்லது அதன் மீது தண்ணீர் பட்டாலோ அந்த விதை முலைத்து விடும்) அதே போன்று பிளக்ஸ் பேனர்கள் வைத்து மாணவ மாணவியர்க்கு பேனா பென்சில் வைக்க பர்ஸ் வடிவமைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் திருமலைராஜ், முன்னால் துணை ஒன்றிய தலைவர் ராமசாமி, பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் கோபி கிருஷ்ணன் கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் தங்கரமேஷ் ,முனைவர் அருண் பிரகாஷ் கலந்து  கொண்டனர்.                 


பேட்டி ... முனைவர் அருண் பிரகாஷ்
பேட்டி ... மாணவி யோக லெட்சுமி

Sep 4, 2017

திருச்சிபூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு கண்காட்சியை திருச்சி மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி துவக்கி வைத்தார்.

திருச்சி                                                                                      

தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் திருச்சி சிங்கார தோப்பில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில்
கொலு கண்காட்சியை திருச்சி மாவட்ட  ஆட்சியர் கு.ராசா மணி துவக்கி வைத்தார்.
மேலாளர் கங்காதேவி உடன் இருந்தனர் -


நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு துவக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு கொலு
கண்காட்சியானது  இன்று முதல் வரும் 7ம் தேதி வரை  நடைபெறுகிறது
இக்கண்காட்சியில் சிறப்பு அம்சமாக கொலு செட்டுகள் கொண்ட பள்ளி பொம்மைகள், மரப்பாச்சி பொம்மைகள், காகித கூழ் பொம்மைகள், மண் மற்றும் பளிங்கு, மாக்கல், நவரத்தின கற்கலால் ஆன பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் தசாவதார, அஷ்டலட்சுமி செட், கார்த்திகை பெண்கள் செட், விநாயகர், மகாலட்சுமி மற்றும் முருகர், கீதா உபதேச செட்டுகள் விற்பனைக்கு உள்ளது.
மேலும் கல்கத்தா, மணிப்பூர் ராஜஸ்தான், ஒரிசா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தருவிக்கப்பட்ட பொம்மைகளும் விற்பனைக்கு உள்ளது. இக்கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு தங்கள் வீடுகளில் கொலு வைப்பதற்கு வாங்கிச் சென்றனர்.
நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மைகளுக்கு 10 சதவீத சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது



பேட்டி  : இராசாமணி - மாவட்ட ஆட்சித் தலைவர்

Aug 31, 2017

திருச்சி 31.8.17 பாஜாகவின் காலடியில் அரசையும்அஇஅதிமுகாவை அடகு வைத்து விட்டனர்முன்னாள் கொறாடா மனோகரன் பேச்சு


திருச்சி 31.8.17
பாஜாகவின் காலடியில் அரசையும்அஇஅதிமுகாவை  அடகு வைத்து விட்டனர்முன்னாள் கொறாடா மனோகரன் பேச்சு 

திருச்சி அஇஅதிமுகாவி;ல்புதிதாக  டிடிவி.தினகரானால் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் திருச்சி நீதி மன்றம் அருகே உள்ள  எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
அதில் பேசிய முன்னாள் தலைமைகொறாடாவும் தற்போது  மாவட்ட செயலாளருமான மனோகரன் கூறிய போது தற்போதைய ;முதல்வர் அமைச்சர்எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் பாஜாகவின் காலடியில் அரசையும் அஇஅதிமுகாவை அடகு வைத்து விட்டனர் என்றார்.
தியாகசின்னம்மா அறிவுறுத்தலின் பேரில் துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் எங்களை அறிவித்தார் அதன் படி நாங்கள் முதல் முறையாக எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க வரவுள்ளோம் எ ன்பதை அறிந்த உள்ளுர் அமைச்சர்கள் ஆர்டிஓ மற்றும் காவல்துறை அதிகாரிகளை ஏவி எங்களை மிரட்டி தடுக்க முயற்சி செய்ய பார்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 
டிடிவி. தினகரன் தலைமையில் திருச்சி என்றும் அவர் பின்னால் இருந்து வெற்றியை பெற்று தருவோம் என்பதை நாங்கள் கூறுகிறோம் என்றார்.
இந்நிகழ்ச்சியில் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜசேகர் கழகஅமைப்பு செயலாளர் சாருபால தொண்டைமான்கிழக்கு மாவட்ட செயலாளர் மனோகரன் மேற்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் பகுதி வட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்
பேட்டி மனோகரன்

Aug 27, 2017

கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி திருச்சி பிரஸ் கிளப்பில் பேட்டி. தமிழக சட்டமன்ற முன்னாள் கொறடா மனோகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகர் உடன் உள்ளனர்.

கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி திருச்சி பிரஸ் கிளப்பில் பேட்டி. தமிழக சட்டமன்ற முன்னாள் கொறடா மனோகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகர் உடன் உள்ளனர்.

தினகரன், சசிகலா ஆகியோர் செல்லாக்காசுகள் என்று எம்பி குமார் கொடுத்த பேட்டிக்கு கண்டனம். நாங்கள் இதுவரை பல கட்ட போராட்டங்களை சந்தித்துள்ளோம்.  பொறியாளர் கலியப்பெருமால் வீட்டிற்கு உதவியாளராக வந்தவர் குமார். கட்சிக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம். யார் யாரெல்லாம் கட்சிக்கு குந்தகம் விளைவிக்கிறார்களோ அவர்களை நீக்குவதில் டிடிவி தயக்கம் காட்டவில்லை

ஊழல் ஆட்சி நஞைபெறுகிறது என மக்கள் உணர்கிறார்கள். கூடிய விரைவில் ஆட்சியை தூக்கி எறிவார்கள்.
அம்மாவிற்கு இருந்த பாதுகாவலர்கள் எடப்பாடி க்கும் பணிபுரிகிறார்கள். அம்மா-வை போலவே நடித்துக்கொண்டிருக்கிறார் எடப்பாடி. எம்பி குமார் சின்ன பையன். கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.
22 எம்எல்ஏக்கள் உங்கள் ஆட்சி வேண்டாம் என்று சொல்கின்றனர். பதவியை ராஜினாமா செய்யுங்கள். முக்கியமான துறைகளை கையில் வைத்துக்கொண்டு யாருக்கும் தராமல் தாந்தோன்றி தனமாக செயல்படுகிறார் முதல்வர். வெல்லமண்டி நடராஜன் எங்கள் கோஷ்டியில் இருந்தால் பதவி போகும் என்ற பயத்தில் பேசிக்கொண்டுள்ளார்.
தினகரனின் உருவபொம்மையை எரிக்க காவல்துறை அனுமதி கொடுக்கிறது. தவறான பாதையில் காவல்துறை செற்றுக்கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியை நம்பி யாரும் இறங்காதீர்கள்.
இந்த அரசு நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கிறது. காப்பாற்றிக்கொள்ள முதல்வர் பதவி விலக வேண்டும்.
இக்கட்சியை டில்லியில் இருந்து ஒரு முதலாளி இயக்க முயற்சிக்கிறார். விலைபோய்விட்டார்கள். 11 துரோகிகளை கூடே இணைத்து கொண்டு அழகு பார்க்கிறார்கள். சசிகலா இதுவரை யாரையும் தவறாக பேசவில்லை. சிறையில் இருக்கும் போது கூட எடப்பாடி குறித்து நலம் விசாரித்து வருகிறார். - புகழேந்தி
 கமல்ஹாசனுக்கு பயந்து அமைச்சர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரியை மூடுகின்றனர். கவர்னர் பதில் அளித்துவிட்டால் இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும். ஓபிஎஸ் அணியில் உள்ள 11 எம்எல்ஏக்கள் அதிமுகவில் இலீலை என்பதை நிரூபிக்க நீதிமன்றம் செல்லவுள்ளோம்.
 சசிகலா உதவி இல்லையென்றால் இன்று எம்பி குமார் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க முடியாது. 2006 க்கு பிறகு தான் குமார் கட்சிக்கு வந்தார். தினகரனையும் சசிகலாவையும் செல்லாத நோட்டுகள் என்று கூறியவர் கள்ளநோட்டு. - முன்னாள் கொறடா மனோகரன் பேட்டி
  ஆட்சியில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் சுரண்டியவர்கள் எல்லாம் சூட்கேசுடன் ஓடிவிடுவார்கள்.கட்சியை டிடிவி தான் காப்பாற்றுவார்-புகழேந்தி

Aug 15, 2017

திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.யு.அருண் இ.கா.ப. அவர்களுக்குஇந்திய குடியரசு தலைவரின் மெச்சத்தகுந்த பணிக்கான பதக்கத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் வழங்கினார்.

தமிழக காவல்துறையில் கடந்த 2016-ஆம் ஆண்டில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.யு.அருண் இ.கா.ப. அவர்களுக்கு இந்திய குடியரசு தலைவரின் மெச்சத்தகுந்த பணிக்கான பதக்கத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இன்று 15.08.17-ம் தேதி காலை சென்னை கலைவானர் அரங்கத்தில் சுதந்திர தின விழாவில்
வழங்கினார்.

மேலும்திருச்சி மாநகர குற்றப்பிரிவு உதவி ஆணையர் திரு.மு.அருள் அமரன் மற்றும் ஸ்ரீரங்கம் சட்டம் ஒழுங்கு சரக உதவி ஆணையராக பணிபுரிந்து ஒய்வு பெற்ற திரு.மு.அங்குசாமி ஆகியோர்களுக்கும் குடியரசு தலைவர் பதக்கம் வழங்கப்பட்டது. 
காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த திருச்சி மாநகர காவல் அதிகாரி மற்றும் ஆளினர்களுக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

திருச்சி மாநகர காவல்துறையில் கடந்த 2014-ம் ஆண்டு சிறப்பாக பணிபுரிந்தமைக்காக அமர்வு நீதிமன்ற காவல் நிலைய தலைமைக் காவலர் 2517 திரு.N.கோவிந்தராஜ் மற்றும் மாநகர ஆயுதப்படை தலைமைக் காவலர் 2810 திரு.வு.அருள் முருகானந்தம் ஆகியோர்களுக்கும் முதலமைச்சரால் அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.
காவல்துறையில் கடந்த 2016-ஆம் ஆண்டில் மெச்சத்தகுந்த வகையில் பணிபுரிந்தமைக்காக திருச்சி கைவிரல்ரேகை பதிவுக்கூடத்தில் காவல் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஒய்வு பெற்ற திரு.ளு.ராதாகிரு~;ணன்கண்டோன்மெண்ட் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.கு.இருதயராஜ் ஸ்ரீரங்கம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு தலைமைக் காவலர் 2872 திரு.ளு.சேகர் மாநகர குற்றப்பிரிவு பெண் முதல்நிலைக் காவலர் 936 திருமதி.ஆ.வள்ளி மற்றும் மாநகர ஆயுதப்படையை சேர்ந்த தலைமைக் காவலர் 2793 திரு.மு.வெங்கடே~;பாபு முதல்நிலைக் காவலர் 2113 திரு.ளு.சுந்தரமூர்த்தி ஆகியோர்களுக்கு முதலமைச்சரால் அண்ணா பதக்கம் சென்னையில் இன்று 15.08.2017-ம் நடைபெற்ற சுதந்திர விழாவில் வழங்கப்பட்டது.

Aug 10, 2017

திருச்சி விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களின் கண்காட்சி

திருச்சி விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களின் கண்காட்சி



திருச்சியில் கதர்ஆடையை பிரபலப்படுத்தும்வகையில் விசைத்தறி கண்காட்சி – மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார், ஏராளமானோர் வாங்கிச்சென்றனர்.

கதர் ஆடைகளை அனைவரும் வாங்கி அணியவேண்டும் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கவேண்டும் என்று அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்திவருகிறது, இதனடிப்படையில் திருச்சியில் மத்திய அரசு ஜவுளித்துறை சார்பில் விசைத்தறி ஜவுளி விற்போர் வாங்குவோர் சந்திப்பு மற்றும் விசைத்தறி ஆடைகள் கண்காட்சி இன்று தொடங்கியது.
இதனை மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி பங்கேற்று தொடங்கிவைத்து, கதர்ஆடைகளின் பல்வேறு ரகங்களை பார்வையிட்டார். இதில் 15அரங்குகள் அமைக்கப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தயாராகும் கதர்ஆடை நெசவாளர்களின்; ஆயத்த ஆடை மற்றும் பல்வேறு ரகத்தினாலான உடைகள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பயனுறும்வகையில் உற்பத்தி விலைக்கே நேரடி விற்பனை செய்யப்படுவதால், இன்று தொடங்கி 3நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் ஏராமான பொதுமக்கள் பார்வையிட்டு தங்களுக்கு விருப்பமான ஆடை ரகங்களை தேர்வுசெய்துவருகின்றனர்.

திருச்சி விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களின் கண்காட்சி

திருச்சி விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களின் கண்காட்சி
மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் நேரடி சந்திப்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஆட்சித் தலைவர் ராஜாமணி துவங்கி வைத்தார்

Aug 3, 2017

திருச்சி 02.08.17ஜங்ஷன் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் அதிமுக TTV தினகரன் ஆதரவாளர்கள் மனு

திருச்சி             02.08.17  

திருச்சி ஜங்ஷன் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் அதிமுக TTV தினகரன் ஆதரவாளர்கள் மனு .



திருச்சி ரயில்வே ஜங்சன்  நடைமேடை (பிளாட் பார்ம்) டிக்கெட் ரூபாய் 10 லிருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டதை கண்டித்தும் இந்த விலை உயர்வை ரத்து செய்ய  வலியுறுத்தியும் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் அதிமுக பிரமுகர் (TTV தினகரன் ஆதரவாளர் ) ராஜராஜன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் மனு .தமிழகத்தில் மிக முக்கியமான நகரம் இது பாரம்பரியமான இரயில்வே ஸ்டேஷன். இங்கு அதிகபடியாக மிடில் கிளாஸ் மக்கள் அதிகமாக வருகின்ற இடம் வயதானவரை விடுவதற்குக்கும் மற்றும் பள்ளிக்கு குழந்தை மற்றும் கல்லூரிகளுக்கு மாணவ மாணவி கலைவிடுவதற்கும் அவர்களது தாய்மார்கள் வந்து பிளாட்பாரத்தில் விடுவதன் அவசியம் உள்ளதாலும் இதனை மனதில் கொன்று பிளாட்பார்ம் விலையினை குறைக்க வேண்டும்



திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக எம்பிக்கள் ப.குமார், ரத்தினவேல் மற்றும் திமுக எம்பி சிவா ஆகியோர் இப்பிரச்சனையை கண்டு கொள்ளவில்லை என  குற்றச்சாட்டு தெரிவித்தார்.

திருச்சி மாநில பொதுக்குழு கூட்டம் 30-07-17 ஞாயிறு அன்று திருச்சி ஓட்டல் அருண் கூட்ட அரங்கில் நடைபெற்ற

மாண்புமிகு. புரட்சித் தலைவர் டாக்டர்.எம் ஜி ஆர் அவர்களின் பொற்கரங்களால் தொடங்கிவைக்கப்பட்டு மாண்புமிகு டாக்டர். புரட்சித்தலைவி அம்மா  அவர்களால் அரசு அங்கீகாரம் வழங்கப்பட்டு இன்றுவரை விசுவாசத்துடன் ஆசிரியர் நலன்களை குறிக்கோளாக கொண்டு செயலாற்றி வரும் அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின்(அரசு அங்கீகார எண் : 149/96 )  மாநில பொதுக்குழு கூட்டம் 30-07-17 ஞாயிறு அன்று   திருச்சி   ஓட்டல் அருண் கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாண்புமிகு. புரட்சித்தலைவி அம்மா வழியில் திறம்பட செயலாற்றிவரும் தமிழக அரசு ஆசிரியர்களின் உண்மையான கோரிக்கைகளை கனிவோடு பரிசீலனை செய்து நிறைவேற்றும் என்ற முழு நம்பிக்கையுடன் அரசுக்கு எதிரான போராட்டத்தை தவிர்த்து ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கை தீர்மானங்களை பொதுக்குழுவில் நிறைவேற்றி மாண்புமிகு. தமிழக  முதலமைச்சர் அவர்களையும் மாண்புமிகு. பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களையும், கல்வித்துறை உயர் அலுவலர்களையும் நேரில் சந்தித்து கோரிக்கைகளை உடனடியாக  நிறைவேற்றி தர  வலியுறுத்தி கேட்டுக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது



தீர்மானங்கள்
————————
1.புதிய ஓய்வூதிய(c p s)திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய பென்சன் திட்டத்ததை தொடர உத்தரவிட வேண்டும்.



2.ஆசிரியர்களுக்கான எட்டாவது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமுல்படுத்தவேண்டும்  

3.இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரி செய்து அதன்அடிப்படையில்ஊதியமாற்றம் செய்யப்படவேண்டும்



4.இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனியான முன்னுரிமை பட்டியல் தயார் செய்து பதவிஉயர்வு மற்றும் ஊதியஉயர்வு பெற அரசாணை பிறப்பிக்க வேண்டும்




5.ஊதிய மாற்றம் அமுல்படுத்தப்படும் வரை  20 சதவீத ஊதியம் இடைக்கால நிவாரணமாக வழங்கப்படவேண்டும் என  கல்வித்துறை உயர் அலுவலர்களையும் நேரில் சந்தித்து கோரிக்கைகளை உடனடியாக  நிறைவேற்றி தர  வலியுறுத்தி கேட்டுக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது

Jul 31, 2017

திருச்சி 30.7.17 திருச்சி மணிகண்டம் ஒன்றிய சார்பாக அஇஅதிமுக கழகம்(புரட்சித்தலைவி அம்மா) சார்பில் மாநகர் மாவட்டத்தின் சார்பாக ஒபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டம்

திருச்சி 30.7.17

திருச்சி மணிகண்டம் ஒன்றிய சார்பாக அஇஅதிமுக கழகம்(புரட்சித்தலைவி அம்மா) சார்பில் மாநகர் மாவட்டத்தின் சார்பாக ஒபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டம் சோமரசம் பேட்டையில் நடைபெற்றது
அதில் பேசிய முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி அம்மாவழியில் நடக்கும் நம் தலைவரும் கூடிய விரைவில் முதலவர் நாற்காளியில் அமரப்போகும் ;அண்ணன்ஒபிஎஸ் அவர்கள் தலைவர் எம்ஜிஆர் மீது அவளவற்ற பற்று கொண்டவர் என்பதன் உதராணம் ஒன்று கூறுகிறேன் தலைவர்100 ஆண்டு விழாவை வழியுறுத்தும் வகையில் அவரின் உருவப்படம் பதித்த நாணயம் வெளியிட வழியுறுத்தி பாரத பிரமரிடம் கோரிக்கை வைத்துள்ளார் அண்ணன் ஒபிஎஸ் என்றும் மீண்டும்ஒரு உதாரணம் அண்ணன் ஒபிஎஸ் விரைவில் முதல்ஆகிறார்என்பதற்;கு முன்னாள் குடியசுத்தலைவர் அப்துல்களாம் அவர்களின் நினைவிடத்திற்கு வந்த பாரதபிரதமர் மதுரை விமான நிலையத்தில் அண்ணன் ஒபிஎஸ் அவர்களை சந்தித்து 15 நிமிடம் பேசியுள்ளார் அதன் எதிரொலி அண்ணன் ஒபிஎஸ் விரைவில் தமிழக முதல்வர் ஆகப்போகிறார் என்பது கூடிய விரைவில் n தரியும் என்றார்
அதனை தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் பூனாட்சி அம்மா வழியில் ஒபிஎ ஸ் அண்ணன் அவர்களுக்கு வழுசேர்க்கும் அளவிற்கு கட்சியின் தொண்டர்களை அணிதிரட்டி வழுசேர்க்க நாம் பாடுபட வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சி மணிகண்டம் ஒன்றிய செயலாளர் பரமசிவம்மற்றும் பொருப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது அதில் முன்னாள்அமைச்சர்கள் பரஞ்சோதி பூனாட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினாகள் மற்றும் மகளிர் அணி சார்பில் முன்னாள் மறைந்தஅமைச்சர் மரியம் பிச்சை மனைவி கஸ்தூரி மரியம் பிச்சை ஸ்ரீரங்கம் பகுதி பிரேம் ஆனந்த்ääசெல்வம்ஆகியோர் கலந்து கொண்டனர்.

Jul 26, 2017

திருச்சி – 25.07.17 ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு வஸ்திர மரியாதை இன்று புறப்பட்டது

திருச்சி – 25.07.17

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு வஸ்திர மரியாதை இன்று புறப்பட்டது.

ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் எனப்படும் ரெங்கநாதரை நித்தமும் நினைத்து திருப்பாவை அருளிய ஆண்டாள், ஸ்ரீவில்லிபுத்தூரில் நாச்சியார் திருநட்சத்திரமான ஆடிமாதம் பூர நட்சரத்திரத்தின்போது அவதரித்தவர். பெருமாளுக்கான மாலையைத் தான் அணிவித்த பிறகே கொடுத்ததால் சூடிக்கொடுத்த சுடர்கொடி என்று பக்தர்களால் போற்றப்படும் ஆண்டாள் ஸ்ரீரங்கத்திற்கு வந்து ரங்கநாதரின் திருவடிகளில் ஐக்கியமானார். இதனையடுத்து சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கநாதரின் சார்பில் வஸ்திர மரியாதை வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில் 108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாதும், பூலோகவைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திலிருந்து - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலுக்கு ஆண்டு தோறும் வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடைபெறும்.
அதன்படி இன்று மாலை ஆண்டாளுக்கு சமர்ப்பிப்பதற்கான பட்டுபுடவைகள், வஸ்திரங்கள், மங்களப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள், பழங்கள் யாவும் ஸ்ரீவில்லிபுத்தூருக்குப் புறப்பட்டுச் சென்றது. இந்த வஸ்திரங்கள் யாவும் நாளை மதியம் ஆண்டாள் கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டு, நாளை மறுதினம் ஆடிப்பூரத்தின்;போது ஸ்ரீரங்கம் வஸ்திரமரியாதை கொண்டு அலங்கரிக்கப்பட்டு ஆண்டாள் காட்சியளிப்பார். வஸ்திரமரியாதை யாவும் ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் ஜெயராமன் தலைமையில் கோவில் நிர்வாகிகள் அனைவரும் இதனை எடுத்துச் சென்றனர். இந்த வைபவத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


பேட்டி : திரு.சுந்தர்பட்டர் - ஸ்ரீரங்கம்கோவில்

Jul 23, 2017

திருச்சி ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

திருச்சி ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா 22.07.2017(சனிக்கிழமை) அன்று நடைபெற்றது. கல்லூரித் தலைவர் பேராசிரியர் க. பொன்னுச்சாமி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் சு. சத்தியமூர்த்தி அறிக்கை வாசித்தார்.  விழாவில் அண்ணா பல்கலைக்கழக மாணவர் விவகாரங்கள் துறை இயக்குநர் முனைவர்   எ. இளையபெருமாள் பல்கலைக்கழக தரவரிசையில் தேர்ச்சி பெற்ற 13 மாணவ மாணவியருக்கு பட்டம் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் இவ்விழாவில்; 962 மாணவ மாணவியர் இளங்கலை மற்றும் முதுகலையில் பட்டங்களைப் பெற்றனர்.
மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பு விருந்தினர் பேசியதாவது:  இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புறங்;களைச் சார்ந்தவர்களாகவே உள்ளனர். அவர்களில் 60மூ பேர் மட்டுமே தேர்வுளை எதிர்கொண்டு அதில் வெற்றி பெறுகின்றனர். மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து தங்கள் வாழ்க்கை விதத்தையும் வேலை வாய்ப்புகளையும் மற்றும் சமுதாய சிந்தனையும் கொண்டு வாழ வேண்டும் என வலியுத்தினார். தேர்வுகளை எதிர்கொள்ளும் 60மூ மாணவர்களை மூன்று பிரிவுகளாக பிரித்தார். அதில் முதல் 20மூ பேரை தமிழிலும் ஆங்கிலத்திலும் எவ்வாறு எழுதுவது என்று கூட தெரியாதவர்கள் அதனால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை. அடுத்;த 20மூ பேர்; படிப்பு சார்ந்த அறிவு சிறிதுமின்றி தங்கள் துறைக்கு சம்மந்தம் இல்லாத வேலைக்கு செல்கின்றனர். கடைசி 20மூ பேர் நல்ல அறிவுத்திறன்இ தொழில்நுட்பத்திறன் மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றைக் கொண்டு மிகச் சிறந்த வேலையை பெறுகின்றனர். ஆசிரியர்களாகிய எங்கள் ஒவ்வொருவருடைய ஆசையும் எண்ணமும் என்னவெனில் எங்கள் மாணவர்கள் ஒவ்வொருவரும் அதிகார மிடுக்கோடும் ஆளுமைதிறனோடும் வாழவேண்டும் என்பதே ஆகும். மேலும் தன்னுடைய உரையில் அறிவும் திறமையும் பெற்றிருந்தால் இந்த உலகமே உங்களுடையது என்றார்.  
சிறப்பு விருந்தினர் தன்னுடைய வாழ்;க்கையே உதாரணமாக மாணவர்களிடையே கூறி சாதனையாளர்கள் அனைவருமே வசதியான குடும்பத்தில் இருந்து வருபவர்கள் அல்லர். பெரும்பான்மையான சாதனையாளர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்திலிருந்து வந்தவர்கள் ஆவர். வெற்றி பெறுவதற்கு தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் மற்றும் நல் அறிவும் போதுமானவை ஆகும். 
இன்றைய மாணவர்கள் அனைவரும் தங்கள் பெற்றோர்களுக்கும் தங்களை உருவாக்கிய கல்வி நிறுவனங்களுக்கும் என்றென்றும் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். உங்கள் பெற்றோர்களையும்  நீங்கள் கல்வி பயின்ற கல்வி கூடங்களையும் மறந்தால் அதுதான் உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய பாவச்செயல் என்றார். தன்னுடைய உரையை இறுதியாக ஒரு தமிழ் கவிதையுடன் அழகாக முடித்தார். 
அக்கவிதை “அரிது அரிது மானிடராதல் அரிது… எனக்கூறி அப்பேர்பட்ட மானிடப்பிறப்பை பெற்ற நாம் அதன் கடமையை செவ்வேனே செய்வோம் என மாணவர்களை வாழ்த்தி தன் சிறப்பு உரையை இனிதாக முடித்தார். பட்;டம் பெற்ற மாணவர்கள் அனைவரும் கல்லூரி முதல்வரின் தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் பின்னர் தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.

Jul 22, 2017

திருச்சி ருத்ர சாந்தி யோ காலயம் சார்பில் மாணவி சாதனை

 திருச்சி           22.7.17

சூரிய நமஸ்கார பயிற்சியில் திருச்சி மாணவி உலக சாதனை. ருத்ர சாந்தி யோகாலயம் சார்பில் 2.3 அடி ஆழ நீச்சல் குளத்தில் 120 சூரிய நமஸ்காரம் யோகப் பயிற்சினை 40நிமிடங்களில் 1440 நிலைகளை செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி திருச்சி கண்டோன்மென்ட் அருகே  நடைபெற்றது.

திருச்சி ராஜாஜி வித்யாலயா பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ராஷ்மி நீச்சல் குளத்தில் 120 சூரிய நமஸ்கார யோகப் பயிற்சினை செய்து உலக சாதனை செய்தார். இச்சாதனையை பதஞ்சலி புக் ஆப் வேல்டு ரெக்கார்டு புத்தகம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது.

ருத்ர சாந்தி யோகாலய நிறுவனர் யோகரத்னா கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். பதஞ்சலி புக் ஆப் வேல்டு ரெக்கார்டு முதன்மை நடுவராக முனைவர் அசோகன் மதிப்பீடு செய்தார். பாரதிய ஜனதா கட்சி மாநில செயலர் பொன் பாலகணபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விஐபி ஏஜென்சி நிர்வாக இயக்குநர் மனோகரன் , ஸ்ரீ காவேரி கலை பண்பாட்டு மைய தலைவர் ஜெயநந்தினி , அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் விஜயகுமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மதிப்பீடு செய்தார். பாரதிய ஜனதா கட்சி மாநில செயலர் பொன் பாலகணபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விஐபி ஏஜென்சி நிர்வாக இயக்குநர் மனோகரன் , ஸ்ரீ காவேரி கலை பண்பாட்டு மைய தலைவர் ஜெயநந்தினி , அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் விஜயகுமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

Jul 19, 2017

திருச்சி சமூக நலத்துறை

திருச்சி 19.7.17
திருச்சி சமூக நலத்துறை சார்பில் பெண்களின் பிரச்சனை மற்றும் பெண்களுக்கு என்ன சட்ட என்பதை விளக்க விழிப்புணர்வு முகாம்மத்திய பேருந்து நிலையம்அருகே உள்ள தனியாhபள்ளி; அரங்கில்நடைபெற்றது
அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருச்சி ஆகிய 12 மாவட்டங்களிலிருந்து பெண்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்அதில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து எப்படி பாதுகாப்பது என்ற குறித்த விளக்க உரைகள் பங்கு பெற்ற பெண்கள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது இந்த முகாம் தமிpழகத்தில் 5 மாவட்டகளில் ஒரு மாவட்டமாக திருச்சியில் ஒரு பகுதி நடைபெற்றது 
இந்நிகழ்ச்சியை சட்டக்ஆலோசனை மையத்தின் செயலர் கீதா துவங்கி வைத்தார். அரசு சட்டக்கல்லூரி விரிவுரையாளர் கௌரி விளக்கமளித்தாh.;இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் அனைத்தும் சமூக நலத்துறை அதிகாரி உஷா ராணி அவர்களால் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது


Jul 14, 2017

திருச்சி ஓ பி எஸ் வழியில் நடப்போம் அம்மாவின் ஆட்சியை மக்களுக்கு கொடுப்போம், திருச்சியில் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி பேச்சு



திருச்சி ஓ பி எஸ் வழியில் நடப்போம் அம்மாவின் ஆட்சியை மக்களுக்கு கொடுப்போம், திருச்சியில் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி பேச்சு
தமிழகத்தில் அம்மா இறந்தவுடன்   சதிகாரர்களின் பிடியில் இருந்தது தற்ப்போது தான் விடிவு பிறந்துள்ளது நாம் ஒன்று சேர்ந்து அம்மாவின் ஆட்சியை அம்மா வழியில் நடக்கும் ஓ பிஎஸ் அவர்களை ஆதரித்து ஓ பிஎஸ் அவர்களை முதல் ஆக்குவோம் எல்லாம் ஒன்று சேருவோம் என்று முன்னால் அமைச்சர் பூனாட்சி கூறினார்   இந்நிநிகழ்ச்சியி ல் முன்னாள் அமைச்சர் பூனாட்சி பரஞ்சோதி முன்னாள் கோட்ட தலைவர் மனோகர் முன்னாள் அமைச்சர் மரியம் பிச்சை மனைவி கஸ்தூரி ஆகியோர் மற்றும் வி என் ஆர் செல்வம் , பிரேம் ஆனந்த் மற்றும்பல நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்   

Jul 12, 2017

திருச்சி உறையூர் நாச்சியார் கோவிலில் நடைபெறும் கடைசி நாள் உற்சவம் திருமங்கை ஆழ்வார் மங்கள சாசனம்

திருச்சி உறையூர் நாச்சியார் கோவிலில் நடைபெறும் கடைசி நாள் உற்சவம்
திருமங்கை ஆழ்வார் மங்கள சாசனம் செய்யப்பட்டதும் திருப்பால் ஆழ்வாரின் அவதார ஸ்தலமாக உறையூர் நாச்சியார் கோவில் கொண்டாடப்படுகிறது. இங்கு பிரதானமாக மகாலெட்சுமி பரிபூர்ண அனுகிரஹம் பெற்ற இத்திருக்கோயிலில்  பலப்பல என்று10 நாள் உற்சவம் என இன்று கடைசி நாள் உற்சவம் நடைப்பெற்றது.
இந்த மகாலெட்சுமி கர்ப்ப கிரகத்தில் புறப்பட்டு இந்த மண்டபத்தில் எழுந்தருளிருந்தும், இந்த உற்சவத்தில் சேவை செய்யும் அனைவருக்கும் மன்னும் நம்மை நாடி வரும் அடியார்க்கு எல்லாம் நலன்களும் கிடைக்க பெற்று தாயார் திருவடிகளை பிராத்திக்கிறேன் என்றார்.
பேட்டி: சுந்தர். பட்டர் (கோவில் அர்ச்சகர்

Jul 10, 2017

Trichy New superindent Police for Trichy rural


திருச்சி அஇஅதிமுக (அம்மா) எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் மாநில செயலாளர் சிவபதி தலைமையில்

அதிமுக (அம்மா) எம்.ஜி.ஆர்
இளைஞரணி சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா முன்னிட்டு அகில இந்திய கபடி போட்டி திருச்சி சிவானி கல்லூரியில் கடந்த 4 நாட்களாக நடந்தது. இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஹரியனா அணியும், பெண்கள் பிரிவில் ஹிமாசல பிரதேச அணியும் வெற்றிப் பெற்றன. இந்த அணிகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோப்பை வழங்கினார்.

இப்போட்டியில் 29 மாநிலங்களிலிருந்து பெண்கள் பிரிவில் 21 அணிகளும், ஆண்கள் பிரிவில் 28 அணிகளும் கலந்து கொண்டனர். இன்று நடந்த இறுதிப் போட்டியில் பெண்கள் பிரிவில் ஹிமாச்சல பிரதேச அணி ஹரியானாவை 33-12 என்ற கணக்கில் வென்றது. அதுப்போல ஆண்கள் பிரிவில் ஹரியனா அணி பஞ்சாப் அணியை 20 - 14 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் கோப்பையை வென்றது. இரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற அணிக்கு ரொக்க பரிசாக 3 இலட்சம் 2 இலட்சம் 1 இலட்சம் மற்றும் கோப்பையும் வழங்கினர்.

போட்டியின் போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்,
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றானது கபடி இந்த விளையாட்டு தெற்காசிய அளவில் அதிகமாக விளையாடப்படுகிறது. 2004-ம் ஆண்டு முதல் நடந்து வரும் கபடி உலகப் கோப்பை போட்டியில் இந்தியாவை தவிர மற்ற நாடுகள் வென்றதில்லை. சென்னையில் உலக கோப்பை கபடி போட்டி நடத்த 1 கோடி ரூபாய் ஒதுக்கியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்றார்.

இந்நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில செயலாளர் சிவபதி தலைமை வகித்தனர். மேலும் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, காமராஜ், விஜயபாஸ்கர் துரைக்கண்ணு,M.P.க்கள் ரெத்தினவேல், விஜிலா MLA க்கள் முருகுமாறன், செல்வராஜ், சந்திரசேகர், பரமேஸ்வரி மற்றும் சிவானி கல்வி குழும தலைவர் செல்வராஜ் என பலர் கலந்து கொண்டனர்.

Jun 27, 2017

அதிமுகவை ஜெயலலிதா ஆன்மா வழிநடத்தி செல்கிறது அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் திருச்சியில் பேட்டி

திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறு கோவில்களில் முறையான பூஜை செய்திட ஏதுவாக பித்தளை தாம்பளம்,அமைசர் தூபக்கால், மணி, கார்த்திகை விளக்கு மற்றும் தொங்கு விளக்கு உள்ளிட்ட சுமார் 2 .50 கோடி செலவிலான பூஜை பொருட்களை இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட 370 கோவில் பூசாரிகளிடம் அமைச்சர்கள் வெல்ல மண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் வழங்கினர்.

அதிமுகவை ஜெயலலிதா ஆன்மா வழிநடத்தி செல்கிறது.

அறிஞர் அண்ணா காலத்தில் தலைமை, தலைவர் என்ற பதவி இல்லை.
அதனை உருவாக்கியவர் கலைஞர் தான். அமைச்சர்
வெல்ல மண்டி நடராஜன் திருச்சியில் பேட்டி -
தற்போதைய அதிமுக தலைவர் யார் என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுப்பு

Jun 4, 2017

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் 141 வது புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக திரு.மு.ராஜாமணிஇ.ஆ.ப.. அவர்கள் இன்று காலை (04.06.2017) பொறுப்பேற்றுக் கொண்டார்.



திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் 141 வது புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக திரு.மு.ராஜாமணி இ.ஆ.ப.. அவர்கள் இன்று காலை (04.06.2017) பொறுப்பேற்றுக் கொண்டார்.

பொறுப்பேற்ற பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

   
 திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக இன்று நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். எனது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆகும். நான் இங்கு வருவதற்கு முன்பு தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக கடந்த எட்டு மாதங்களாக பணியாற்றியுள்ளேன். தமிழக அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் வளர்ச்சித் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்திட்டங்கள் அனைத்தும் தகுதியுள்ள அனைவருக்கும் விரைவாகவும்முறையாகவும்எ ந்தவித சிரமமும் இன்றி கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும்.

    தமிழகத்தில் தற்போது வறட்சியான சூழ்நிலை நிலவுகிறது. வறட்சி பாதித்த பகுதிகளுக்கு போதிய அளவு தமிழக அரசு நிதி வழங்கி இருக்கிறது. குடிநீர் பிரச்சனை இருக்கும் இடங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் சார்பில் குடிநீர் பிரச்சனைக்கு போதிய அளவு நிதி வழங்கி இருக்கிறது. கூடுதலாக ஊரக நகர்புற வளர்ச்சி நிதியிலிருந்தும் குடிநீர் பிரச்சனை தீர்க்க நிதி வழங்கப்படுகிறது. நிதி ஒரு பிரச்சனையாக இருக்காது. குடிநீர் பிரச்சனைக்கு முற்றிலுமாக தீர்வு காணப்படும். 

மாவட்டத்தில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள்ää திட்டங்கள் துறை வாரியாக அலுவலர்களுடன் கலந்தாலோசித்து ஒவ்வொன்றாக முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும். புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்க்கொள்ளப்படும். மேலும் மக்கள் நலக் கோரிக்கைகள் ஏதேனும் இருந்தால் எனது கவனத்திற்கு உடனடியாக கொண்டு வந்தால் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.ராஜாமணிஇ.ஆ.ப.. அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.தர்ப்பகராஜ்மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.மலர்விழி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி.அபிராமி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்