Apr 4, 2020

திருச்சியில் 17 நபர்களுக்கு கொரோனா நோய் உறுதி மாவட்ட ஆட்சியர் பேட்டி

திருச்சி ஏப் 04

திருச்சியில் 17 நபர்களுக்கு கொரனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

திருச்சியில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

தற்போது மருத்துவக்
கல்லூரி
மருத்துவமனையில்
125 நபர்கள்
சேர்க்கப்பட்டுள்ளனர்
இவர்களில் 5நபர்கள் வெளி மாவட்டத்தினை சார்ந்தவர்கள்
(ஈரோடு -1 , கரூர்
திருச்சி மாவட்டத்தினை சார்ந்தவர்கள் 120 நபர்களும், தஞ்சாவூர் - 1 நபரும்)
மேற்குறிப்பிட்ட 120 நபர்களின் இருப்பிடங்களை சுற்றியுள்ள 50 பகுதிகளில்
இதுவரை 25,586 குடியிருப்புகளில் 469 மருத்துவக்குழுவினர் வீடு வீடாக ஆய்வு செய்து
நபர்களை பரிசோதனை செய்துள்ளனர்.
எந்த ஒரு நபருக்கும் கொரோனா
வைரஸ் நோய் அறிகுறி எதுவுமில்லை
ஏற்கனவே கொரோனா வைரஸ் நோய் தாக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 1 நபருக்கும்,
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 நபர்களுக்கும்
உறுதி செய்யப்பட்டு மேற்கண்ட 3
நபர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல் நிலை சீராக நல்ல
நிலையில் உள்ளது.
இதுவரை 221
நபர்களுக்கு பரிசோதனை
செய்யப்பட்டதில் (மேற்கண்ட
3.
நபர்களை தவிர) இதர 217நபர்களுக்கு  இரத்த மாதிரி பரிசோதனையில் 
கொரோனா வைரஸ் நோய் இல்லை என
தெரியவந்துள்ளது.
தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள 120 நபர்களுக்கு இரத்த மாதிரி பரிசோதனை
முடிவு வரவேண்டும். இவர்களில் 
53நபர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் இரத்த
மாதிரி பரிசோதனை அறிக்கை முடிவு இன்று பெறப்பட்டு 
17நபர்களுக்கு கொரோனா
வைரஸ் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதர 36 நபர்களுக்கு கொரோனா
வைரஸ் நோய் தொற்று இல்லையென அறிக்கை
வரப்பெற்றுள்ளது.
இருப்பினும்
இவர்கள்
அனைவரும் மேலும் 14நாட்கள்
மருத்துவமனையில்
சிகிச்சைப்பெற்று
இறுதியாக பரிசோதனை செய்த
பின்னர்
மருத்துவமனையில்
இருந்து
விடுவிக்கப்படுவார்கள்.
மேற்கண்ட 53
நபர்களை தவிர மீதமுள்ள 67
நபர்களின் பரிசோதனை 
நடவடிக்கையில் (Under Processing) உள்ளது என்றார்.
மேலும் தடுப்பு முன்னெச்சரிக்கையாக வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் 
இருந்த வந்த 3,045 பேர் விடுகளில் தனிமைபடுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் நல்ல நிலையில் உள்ளனர் என தெரிவித்தார்

திருச்சி அதிமுக நிர்வாகி RC கோபி தலைமையில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு தொற்று பரவுதலை தடுக்க கபசுரக் குடிநீர்

திருச்சி ஏப் 04

அதிமுக  நிர்வாகி RC கோபி தலைமையில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொற்று பரவாமல் இருக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறார் அதன் அடிப்படையில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிகமாக காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது

 மக்கள் அதிகமாகக் கூடும் இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களுக்கு தொற்று பரவாமல் இருக்கவும் அதிமுக  சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

 உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்நோய் பரவாமல் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக தமிழ்நாட்டிலும் நடைமுறை பின்பற்றி வருகிறது. கொரோனா வைரஸை பரவாமல் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி  ஸ்ரீரங்கம் பகுதி அதிமுக  சார்பில் நிர்வாகி R.C. கோபி தலைமையில் பிரியாசிவகுமார், ராமசாமி திருவேங்கடம்  சசிரேக ஜெயந்தி வெங்கடேஷன் ராஜு,ஆகியோர்  ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும்  காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் வகையில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.