Oct 12, 2014

ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை



ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் மேயர், துணை மேயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்கள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 15 நாட்களாக கர்நாடகா சிறையில் அடைப்பட்டுள்ளார்.அவரை விடுதலை செய்ய வேண்டி தமிழ்நாடு முழுவதும் அண்ணா தி.மு.க.நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்தும் ,யாகம் நடத்தியும், தலைமுடி காணிக்கை செலுத்தியும், கருப்புசட்டைகள் அணிந்தும், மனித சங்கிலி நடத்தியும், அமைதியான முறையில் அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி திருப்பூர் பல்லடம் ரோடு, அருண் சில்க்ஸ் அருகில் உள்ள ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜையும், வழிபாடும் நடந்தது  இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம் தலைமை தாங்கினார். மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி,  மாவட்ட இளைஞர் அணி செயலாளர், துணை மேயர் சு.குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலளார் வி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டியும், நல்ல உடல்நல ஆரோக்யத்துடன் இருக்க வேண்டியும் 1 மணி நேரம் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
இதனை தொடர்ந்து 4-வது மண்டலம் சார்பில் காலை 5 மணி முதல், மாலை வரை அபிஷேக, அலங்கார பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்து. மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் 4வது மண்டலம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், நகர மற்றும் கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், தலைமை கழக பேச்சாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

ஜெயலலிதா விடுதலையாக வேண்டி அண்ணா தி.மு.க.எம்.எல்.ஏ. தலைமையில் பாதயாத்திரை





ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி பரமசிவம் எம்.எல்.ஏ.வுடன் அண்ணா தி.மு.க.வினர் பாதயாத்திரையாக சென்று, கோவிலில் 108 தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
மக்கள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 15 நாட்களாக கர்நாடகா சிறையில் உள்ளார். அவர் விரைவில் விடுதலையாகி  வரவேண்டி தமிழகம் முழுவதும் அண்ணா தி.மு.க.வினர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டியும், நீண்ட ஆரோக்யத்துடன் வாழ வேண்டியும் திருப்பூர் தெற்கு ஒன்றிய அண்ணா தி.மு.க.மற்றும் மங்கலம் ஊராட்சி கழகம் சார்பில் மங்கலம் பெருமாள் கோவிலில் இருந்து மலைக்கோவில் குழந்தை வேலாயுதசுவாமி கோலிவில்வரை அண்ணா தி.மு.க.வினர் பாதயாத்திரை சென்றனர். இந்த பாதயாத்திரையில் பல்லடம் எம்.எல்.ஏ. பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், தெற்கு ஒன்றிய செயலாளர் சில்வர் வெங்கடாசலம், ஊராட்சி கழக செயலாளர் சுப்பிரமணியம் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் நடந்து சென்றனர்.
இதை தொடர்ந்து மலைக்கோவில் குழந்தை வேலாயுதசுவாமி கோவில் வாசலில் மங்கலம் ஊராட்சி தலைவர் பாலாமணி சுப்பிரமணியம் தலைமையில் அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் 108 தேங்காய் உடைத்து வேண்டுதல் செய்தனர். பின்னர் கோவிலில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் மக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்காக 1 மணி நேரம் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கரைபுதூர் நடராஜன், மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜன், திருப்பூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சிராஜøதீன், கொடுவாய் லோகநாதன், மாநகராட்சி கணக்குகுழுத் தலைவர் வசந்தாமணி, கவுன்சிலர்கள் கேபிள் சிவா, லட்சுமி, வேலுசாமி, திருப்பூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சிராஜøதீன், இடுவாய் ஊராட்சி கழக செயலாளர் சென்னியப்பன், தெற்கு ஒன்றிய இளைஞரணி துணைதலைவர் வெங்கடாசலம், இடுவாய் ஊராட்சி தலைவர் லட்சுமி செல்வராஜ், மங்கலம் ஊராட்சி மன்ற மன்ற துணை தலைவர் அஸ்கர்அலி, மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பூரில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் மனைவியுடன் யாகம் நடத்தினார்



 திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் .கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுதலையாக் வேண்டி  மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் பார்க் ரோட்டில் உள்ள ராகவேந்திரா கோவிலில்  கணபதி ஹோமம்,சுதர்சன ஹோமம், நவக்கிரஹ ஹோமம், நரசிம்ம ஹோமம் ஆகியவை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், மற்றும் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஆனந்தன் துணைவியார் லட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அண்ணா தி.மு.க.வினர் அமைதியாக உள்ளனர்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். என  முஸ்லிம் லீக்கின் மாநிலத் தலைவர் கே.எம்.காதர் மைதீன் சனிக்கிழமை கூறினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருப்பூர் மாவட்டங்களின் ஒருங்கிணைந்த பொதுக்குழுக் கூட்டம் குமரன் ரோட்டில் உள்ள அரோமா ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ் மாநிலத் தலைவர் கே.எம்.காதர் மைதீன் தலைமை தங்கினார். 
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேச ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் பாடுபடும் கட்சியாகும். அனைத்து சமுதாய மக்களும் நல்லிணக்கத்தோடு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம். சிறுபான்மை சமுதாயத்தினர் தங்களுக்கான அடையாளங்களை இழந்துவிடாமல் இருக்க முஸ்லிம் லீக் பாடுபட்டு வருகிறது.பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் என எதற்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உடன்படுவதில்லை. அப்படி ஈடுபடுபவர்களை ஆதரிப்பதும் இல்லை. சில திசைமாறிய குழப்பத்தில் உள்ள முஸ்லிம் இளைஞர்களை அது போன்ற செயல்களில் ஈடுபடாமல் தடுத்து நிறுத்தும் பணியை இக்கட்சி மேற்கொண்டு வருகிறது. காஷ்மீர் வெள்ள நிவாரண நிதியாக கட்சி சார்பில் ரூ. 25 லட்சத்தை விரைவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வழங்க இருக்கிறோம்.தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். 
தமிழகத்தில் திமுகவுடன் தற்போது கூட்டணி வைத்திருக்கிறோம். எதிர்காலத்தில் அது தொடரும் என சொல்ல முடியாது. அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை 18 ஆண்டுகளாக இழுத்தடித்தார் என ஒருதரப்பினர் கூறினாலும், நீதித்துறை இது குறித்து மாற்றாக சிந்தித்திருக்க வேண்டும். சிறையில் அடைத்ததால் ஜெயலலிதாவிற்கு மக்கள் மத்தியில் அனுதாப அலை பெருகி உள்ளது. அவரை விமர்சித்தவர்கள் கூட அனுதாபம் தெரிவிக்கின்றனர். அண்ணா தி.மு.க.ஆட்சிக்கு என்பதை விட ஜெயலலிதா மீது மக்களிடம் ஆதரவு அலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு இறுதி தீர்ப்பு அல்ல. நல்லது நடக்கும் என அண்ணா தி.மு.க.வினர்களும், மக்களும்  எதிர் பார்கின்றனர். எனவே அண்ணா திமுகவினருக்கு மிகவும் பொறுப்பு உள்ளது. அமைச்சர்கள் தங்கள் பணியில் ஈடுபடத் தொடங்கி உள்ளனர். கடந்த சில நாள்களாக தமிழகத்தில் அமைதி நிலவுகிறது.அவர்கள் அவர்களின் கட்சிக்கும், தலைமைக்கும் கட்டுப்பட்டுள்ளனர்.
அதிக பெரும்பான்மையுடன் அண்ணா திமுக கட்சி உள்ளது.அந்த கட்சியில் குழப்பம் இல்லை. எனவே, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்தல் வரக்கூடும் என ஒரு சில கட்சிகள் எதிர்பார்த்தாலும் கூட அது யூகமே தவிர அதற்கான வாய்ப்பு இல்லை.
இவ்வாறு கதர் மைதீன் கூறினார். பேட்டியின்போது புறநகர் மாவட்ட செயலாளர் சையத் முஸ்தபா,மாவட்ட தலைவர் ஹம்சா, மாநகர் மாவட்ட தலைவர் சிஹாபுதீன், ஜவஹர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் மடத்துக்குளம் ஒன்றியக் கழகம் சார்பில் மண்சோறு சாப்பிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றது.

அண்ணா தி.மு.கழக பொதுச் செயலாளரும், மக்கள் முதலவருமான புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கில் இருந்து விடுதலையைக வேண்டியும், அவர் பூர்ண நலம் பெற்று மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்கவும் சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயரான், சண்முகவேலு எம்.எல்.ஏ.ஆகியோர் பழனி கோவிலில் தங்க தேர் இழுத்தனர். 
அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளரும், மக்கள் முதல்வருமான புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது சுமத்தபட்ட பொய் வழக்குகளிலிருந்து விடுதலையாக வேண்டி தமிழகத்திலுள்ள அனைத்து பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் அண்ணா தி.மு.க.வினர் சிறப்புப் பிரார்த்தனைகளும், பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடத்தி வருகின்றனர்.இதனை முன்னிட்டு, பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் மடத்துக்குளம் ஒன்றியக் கழகம் சார்பில் திருப்பூர் புறநகர் மாவட்டச்செயலாளரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.சண்முகவேலு ஆகியோர் தலைமையில் ஒன்றியசெயலாளர் அண்ணாத்துரை, அரசு வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், எஸ்.ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் அருள்மிகு பாலதண்டாயுதபாணிக்கு தங்கத் தேர் வடம் பிடித்தும், பாலபிசேகம், சந்தனக்காப்பு செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மேலும் மடத்துக்குளம் ஒன்றிய ஜெயலலிதா பேரவைச்செயலாளர் எஸ்.பி.சிவலிங்கம், குமரலிங்கம் பேரூராட்சித்தலைவர் சிவக்குமார், பேரூர்கழகச் செயலாளர் கே.ஏ.வரதராஜ் ஆகியோர் முன்னிலையிலும் மண்சோறு சாப்பிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றது. 
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணைச்செயலாளர் எம்.ஏ.சுப்பிரமணியம், மடத்துக்குளம் பேரூராட்சித் தலைவர் எஸ்.பழனிச்சாமி, துணைத் தலைவர் ஜி.கே.தண்டபாணி, வீராச்சாமி, கொழுமம் ஊராட்சி மன்றத்தலைவர் இந்திராணி, நீலம்பூர் செல்வராஜ், கவுன்சிலர் குணா, கே.கே.ரவி, கணியூர் பேரூராட்சி துணைத்தலைவர் கணியூர் காஜாமைதீன் மற்றும் அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.