Oct 16, 2015

விருதுநகர் மாவட்ட செயலாளராக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பொறுப்பு ஏற்றார் ‘அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபடுவோம்’


விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இரண்டாவது முறையாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபடுவோம்’ என்றார்.

பொறுப்பு ஏற்றார்

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை அறிவித்தார். இவர் மாவட்ட செயலாளர் ஆவது இது 2வது முறையாகும். மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நேற்று அவர் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். சிவகாசி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் எம்.பி. ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் அருப்புக்கோட்டை வைகைசெல்வன், விருதுநகர் மாபா பாண்டியராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

சாதாரண தொண்டன்

சமானிய குடும்பத்தில் பிறந்து எளிய தொண்டனாக அ.தி.மு.க.வில் என்னை இணைத்துக் கொண்டேன். திருத்தங்கல் பேரூராட்சி செயலாளர், நகர செயலாளர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர், சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ. ஆக பணியாற்றினேன். அதனை தொடர்ந்து மாவட்ட செயலாளராகவும் கட்சி பணியாற்றிய என்னை அமைச்சராகவும் நியமனம் செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா அழகு பார்த்தார். உண்மையாகவும், விசுவாசமாகவும் கட்சி பணியாற்றி மக்கள் நலனில் அக்கறை கொண்டு சேவை செய்தால் அதற்குரிய இடத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்குவார் என்பதற்கு இதுவே உதாரணம்.

7 தொகுதிகளிலும் வெற்றி உறுதி

என்னை இரண்டாவது முறையாக மாவட்ட செயலாளராக தேர்வு செய்து கட்சி பணியாற்ற முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா வாய்ப்பு தந்துள்ளார். அவர் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு பாத்திரமாக திறம்பட கட்சி பணியாற்றுவேன். விரைவில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இப்போதே பம்பரம் போல் சுழன்று பணியாற்றிட வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிக் கொடி நாட்ட அனைவரும் அயராது பாடுபட வேண்டும். உங்கள் ஒத்துழைப்போடும், மக்களின் ஆதரவோடும் சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மாநில மகளிரணி நிர்வாகி சக்தி கோதண்டம், மாவட்ட பொருளாளர் ராஜவர்மன், மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார், துணைச்செயலாளர் வசந்திமான்ராஜ், இணை செயலாளர் ரமாதேவி குருசாமி, மகளிர் அணி செயலாளர் கவுரி நாகராஜன், விருதுநகர் ஒன்றியக்குழு தலைவர் கலாநிதி, ஒன்றிய செயலாளர் மூக்கையா, நகர்மன்ற துணைத்தலைவர் மாரியப்பன், நகர செயலாளர் முகம்மது நயினார், சிவகாசி நகர்மன்ற தலைவர் டாக்டர் கதிரவன், நகர செயலாளர் அசன்பதுருதீன், திருத்தங்கல் நகர செயலாளர் பொன் சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் சண்முகக்கனி (சாத்தூர் கிழக்கு), தேவதுரை (மேற்கு), மயில்சாமி (ஸ்ரீவில்லிபுத்தூர்), சங்கரலிங்கம் (அருப்புக்கோட்டை), ராமமூர்த்தி ராஜ் (காரியாபட்டி), குருசாமி (ராஜபாளையம் மேற்கு), பூமிநாதன் (நரிக்குடி), முத்துராமலிங்கம் (திருச்சுழி), அருப்புக்கோட்டை தொகுதி செயலாளர் முத்துராஜா, நகர செயலாளர் கண்ணன், நகர மாணவரணி செயலாளர் வீரகணேஷா, நகர செயலாளர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சிவகாசியில் உள்ள தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருத்தங்கல் சென்று அங்குள்ள தலைவர்கள் சிலைகளுக்கும் மாலை அணிவித்தார்.

சிறு கோவில்களுக்கு ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பூஜை உபகரணங்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினர்

http://img.dailythanthi.com/Images/Article/201510120150036304_57-Million-worth-of-Rs-prayer-arpiutayakumar-small_SECVPF.gifவிருதுநகர் மாவட்டத்தில் சிறு கோவில்களுக்கு ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பூஜை உபகரணங்களை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் வழங்கினர்.

பூஜை உபகரணங்கள்

விருதுநகர் மாவட்டத்தில் சிறு கோவில்களுக்கு ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பூஜை உபகரணங்கள் வழங்கும் விழா விருதுநகர் வேலாயுதத்தேவர் பிள்ளையார் கோவில் திருமண மண்டபத்தில் கலெக்டர் ராஜாராமன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் 380 சிறு கோவில்களுக்கு கோவில் பூசாரிகளிடம் அமைச்சர்கள் ஆர்.பி.உதய குமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் பூஜை உபகரணங்களை வழங்கினர். விழாவில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் பேசும் போது தெரிவித்ததாவது:-

தமிழக முதலமைச்சர் சாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில் 380 சிறு கோவில்களுக்கு வழங்கப்படவுள்ள தூபக்கால், மணி, அகல்விளக்கு மற்றும் தொங்கு விளக்கு அடங்கிய பூஜை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அன்னதான திட்டம்

முதலமைச்சரால் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் கோவில் அன்னதானத் திட்டம் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவில்களில் குடமுழுக்கு, கோவில் பராமரிப்பு, தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்தல், போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர். மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கோவில்களுக்கும், கிராமப்புறங்களில் உள்ள 132 கோவில்களுக்கும் திருப்பணி வேலைகள் செய்திட தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 17 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. அறிவித்த திட்டங்கள் மட்டும் அல்லாமல் அனைத்து திட்டங்களையும் முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார்கள். இத்தகைய தாயுள்ளம் கொண்ட முதலமைச்சருக்கு நாம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பணி நிரந்தரம்

விழாவில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும் போது தெரிவித்ததாவது:-

முதலமைச்சர் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் வருமானம் இல்லாத 10 ஆயிரம் சிறு கோவில்களுக்கு முறையாக பூஜை செய்திட ஏதுவாக ரூ.2.50 கோடி மதிப்பில் பூஜை உபகரணங்கள் வழங்கப்படும் என அறிவித்து தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் ரூ.5.7 லட்சம் மதிப்பில் சிறு கோவில்களுக்கு பூஜை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. கோவில்களில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த தினக்கூலி பணியாளர்களை நிரந்தரப் பணியாளராக காலமுறை ஊதியத்தில் வரன்முறை செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் கோவில்களில் பணியாற்றி வந்த 15 பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். நலிவடைந்த கோவில்களில் ஒருகால பூஜையாவது நடைபெற வேண்டும் என்ற உயர்ந்த திட்டத்தின் கீழ் 187 திருக்கோவில்களில் பூஜை நடைபெற்று வருகிறது.

மாத உதவித்தொகை

விருதுநகர் மாவட்டத்தில் பூசாரிகள் நல வாரியத்தில் 2328 கிராமக்கோவில் பூசாரிகள் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர். கிராமப்புற பூசாரிகள் ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற 57 பூசாரிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 வழங்கப்படுகிறது. ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்ட முதல்வருக்கு நாம் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

எம்.பி., எம்.எல்.ஏ.

இந்த விழாவில் விருதுநகர் எம்.பி. ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் வைகைச்செல்வன், பாண்டியராஜன், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சுப்பிரமணியன், விருதுநகர் நகர்மன்றத் தலைவர் சாந்திமாரியப்பன், துணைத்தலைவர் மாரியப்பன், யூனியன் தலைவர்கள் கலாநிதி (விருதுநகர்), வேலாயுதம் (சாத்தூர்), ரேவதிகாசிதுரைபாண்டியன் (வெம்பக்கோட்டை), துணைத்தலைவர் மூக்கையா, நகர்மன்ற உறுப்பினர் முகமது நயினார், உதவிஆணையர் ஹரிஹரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சிறு கோவில் பூசாரிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்: அமைச்சர்

2016இல் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என செய்தி விளம்பரம் மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
 அதிமுக பொதுசெயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா, விருதுநகர் மாவட்டச் செயலராக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை அறிவித்தார். இதனையடுத்து அவர் மீண்டும் விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாராக பதவியேற்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது, அதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியது: உண்மையாகவும், விசுவாசமாகவும் கட்சிப்பணியாற்றினால் அதற்கு உரிய இடத்தை முதல்வர் அளிப்பார். அந்த வகையில் என்னை இரண்டாம் முறையாக மாவட்ட செயலராக அறிவித்துக் கட்சிப்பணியாற்றும் வாய்பை முதல்வர் கொடுத்துள்ளார். 2016 இல் தமிழகத்தில் சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதில் அதிமுக அமோகமாக வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலலிதா முதல்வராக பதவியேற்பார் என்றார்.
  நிகழ்ச்சியில் விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் பாண்டியராஜன், வைகைச்செல்வன், மாவட்ட அவைத்தவர்  விஜயகுமார், பொருளாளர் ராஜவர்மன், ஒன்றியச் செயாலர் கருப்பசாமி, திருத்தங்கல் நகரச் செயலர் பொன்சக்திவேல், சிவகாசி நகர் மன்றத்தலைவர் வெ.க.கதிரவன், சாத்தூர் கிழக்கு ஒன்றியச் செயலர் சண்முகக்கனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   பிறகு, சிவகாசி மற்றும் திருத்தங்கலில் உள்ள தலைவர்களின் சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.