Dec 1, 2014

கால் நடை மருந்தகத்தை அமைச்சர் ஆனந்தன் திறந்து வைத்தார்.

திருப்பூர் அடுத்துள்ள பெருந்தொழுவில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை மருந்தகத்தை  வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்து, கால்நடைகளுக்கான ஊட்டச்சத்து உணவை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், மேயர் அ.விசாலாட்சி, பல்லடம்  கே.பி.பரமசிவம் எம்.எல்.ஏ.,மாவட்ட  ஊராட்சி தலைவர் எம்.சண்முகம்,துணைத்தலைவர் ஆனந்தகுமார், மாவட்ட கவுன்சிலர் ப.நடராஜன், மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், கிருத்திகா சோமசுந்தரம், நிலைக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி, பொங்கலூர் ஒன்றிய குழுத்தலைவர் சிவாச்சலம், கரைப்புதூர் நடராஜ், உகயனூர் பழனிசசாமி, லோகநாதன், புத்தரச்சல் பாபு,  ராஜேஷ் கண்ணா, கோகுல், ராஜ்குமார், கால்நடை துறை இணை இயக்குனர் நாகராஜன், உதவி இயக்குனர் ராமச்சந்திரன், டாக்டர் சங்கரநாராயணன், மக்கள் தொடர்பு அலுவளர் தமிழ் மொழி அமுது ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா கொண்டாட்டம்

திருப்பூர் ஸ்ரீ வீரரகவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் வெங்கட் ரமணா கோவிந்தா என்ற பக்தர்களின் கோஷத்தால் விண் அதிர்ந்தது. விழாவில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், கலெக்டர் கோவிந்தராஜ், மேயர் விசாலாட்சி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
800 ஆண்டுகள் பழம் பெருமை வாய்ந்த இக்கோயிலுக்கு15 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
காலை ஸ்ரீவீரராகவப் பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின், வாஸ்து சாந்தி பூஜை மற்றும் யாகம் நடந்தது. ஸ்ரீரங்கம் ராமன் பட்டர் தலைமையில், பட்டாச்சாரியார்கள் பூஜை, பாராயணங்கள் செய்தனர். யாக சாலை பிரவேசம், கும்பங்களில் எம்பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களின் பிம்ப அக்னியாதி சதுஸ்தான பூஜைகள் நடைபெற்றன.7 மணிக்கு சதுஸ்தான பூஜைகள், சாந்தி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு காலை 9.47 மணிக்கு, விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம், 10.22க்கு, மூலவர்களுக்கு மஹா கும்பாபிஷேகமும்  நடைபெற்றது.தொடர்ந்து  வெங்கட் ரமணா கோவிந்தா என்ற பக்தர்களின் கோஷத்தால் விண் அதிர்ந்தது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மூலவர்களுக்கு ப்ராணப்திஷ்டை, மஹா தீபாராதனைகளும் நடைபெற்றன..கும்பாபிஷேகத்தை ஸ்ரீரங்கம் க.ஸ்ரீராமன்பட்டாச்சார்யார் தலைமையிலான குழுவினர் நடத்தினர். 
இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்,  மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், மாநகராட்சி மேயர் அ.விசாலாட்சி, ஆணையாளர் மா.அசோகன், துணை மேயர் சு.குணசேகரன், மாநகர காவல் ஆணையாளர் எஸ்.என்.சேஷசாய், மாநகர மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வி.ராதாகிருஷ்ணன், ஜெ.ஆர்.ஜான், கிருத்திகா சோமசுந்தரம், மாநகராட்சி நிலைக்குழு தலைவர்கள், எம்.கண்ணப்பன் (45வது வார்டு ) உள்ளிட்ட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அண்ணா தி.மு.க.மாவட்ட நிர்வாகிகள் அன்பகம் திருப்பதி, எம்.மணி, மார்க்கெட் சக்திவேல், கே.என்.சுப்பிரமணியம், அட்லஸ் லோகநாதன், எஸ்பி.என்.பழனிச்சாமி, திருமுருகன்பூண்டி முன்னாள் பேரூராட்சி தலைவர் லதா சேகர்,கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதனை தொடர்ந்து  சிறப்பு மஹா அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மலை 6.30 மணிக்கு வாழும் கலைபயிற்சி பெங்களூர் டாக்டர்.அருண்மாதவனின் இன்னிசை நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து நாகை முகுந்தனின் தெய்வீக சொற்பொழிவு நடைபெற்றது.
ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் காண வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர்களும், மாநகர காவல்துறையும் செய்திருந்தனர். மாநகர ஆணையாளர் எஸ்.என்.சேஷசாய் தலைமையில் உதவி ஆணையாளர்கள் திருநாவுக்கரசு, சுந்தரவடிவேல் மற்றும் துணை கண்காணிப்பாளர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.கோயில் பகுதிகளிலும், சுற்றுப்பகுதிகளிலும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.பழைய பஸ் நிலையம் வரும் ஒரு சில பேருந்துகள் இடம் மாற்றியமைத்து பக்தர்களுக்கு வசதி செய்து இருந்தனர்.
ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாநகர பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது  சுமார் 2 லட்சம் பேர் கலந்து கொண்ட மஹா சிறப்பு அன்னதானம் விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர்  விழா கமிட்டி நிர்வாகிகள் டாக்டர் எஸ்,தங்கவேல், கிளாசிக் போலோ டி.ஆர்.சிவராம், கிரீட்டிங்ஸ் வி.ராஜேந்திரன், சௌமீஸ் எக்ஸ்போர்ட் எம்.முத்து நடராஜன், திருப்பூர் ஸ்ரீ வாரி டிரஸ்ட்  கே.பி.ஜி.பலராமன், செல் எக்ஸ்போர்ட் தம்பு (எ) சி.ஆர்.ராஜேந்திரன், உஷா எம்.எம்.ரவிக்குமார் மற்றும், ராஜகோபால் ஆகியோர் செய்திருந்தனர்.
வீரராகவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருப்பூர் மாநகரம் விழா கோலம் பூண்டிருந்தது.


வருகின்ற 2016 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் தமிழ்நாட்டில் முதலிடம் பெரும் வகையில் நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும் என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.

திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க., பொங்கலூர் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் அவினாசிபாளையத்தில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் .எஸ்.சிவாச்சலம் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:-
திருப்பூர் மாவட்டம் கட்சி ரீதியாக 3 அமைப்புகளாக செயல்பட்டு வந்தது. இதுவரை புறநகர் மாவட்டத்தில் இருந்த பல்லடம் சட்டமன்ற தொகுதி, திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதற்காக கழக நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து கொள்வோம். திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் இதுவரை 3 சட்டமன்ற தொகுதிகளில் அண்ணா தி.மு.க.இயக்கம் அனைத்து தேர்தல்களிலும் சிறப்பாக பணியாற்றி வெற்றியை தந்துள்ளது. 
அந்த வகையில் வருகின்ற காலத்தில், பல்லடம் தொகுதி இணைக்கப்பட்டுள்ள  மாநகர் மாவட்ட கழகம் தமிழக அளவில் சிறப்பாக செயல்பட வேண்டும்; நாம் ஒற்றுமையாக இருந்து மக்கள் முதல்வர் ஜெயலலிதாவின் கரங்களை வலுப்படுத்த வேண்டும். தேர்தல்களில் வெற்றி பெற்று வெற்றியை ஜெயலலிதா பொற்பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
 திருப்பூர் மாநகர் மாவட்டம் அம்மா அவர்களின் எக்கு கோட்டையாக உள்ளது. மாநில அளவில் கடந்த தேர்தலில் திருப்பூர் வடக்கு தொகுதி தமிழக அளவில்  முதல் இடத்திலும், பல்லடம் தொகுதி இரண்டாவது இடத்திலுமாக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். இனிமேலும் நமக்குள் எந்த வேற்றுமையும் இல்லாமல் வருகிற தேர்தல்களிலும் வெற்றிக்கனியை பறித்து அம்மா அவர்ளின் பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
பொங்கலூர் தொகுதியாக இருந்தபோது முதல் எம்.எல்.ஏ.வாக அண்ணா தி.மு.க.இயக்கம் உறுப்பினர்தான் வெற்றி பெற்றார். இப்பகுதிகளில் பல்வேறு வெற்றிகள் நம் இயக்க தொண்டர்களால் பெற்று இருக்கிறோம்.எனவே,வருகிற காலத்திலும் மாநகர் மாவட்டத்துடன் இணைந்து வெற்றிகளை பெற வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
கூட்டத்தில்  பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார். மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜன், ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணியம், .ஊராட்சி தலைவர்கள் யு.எஸ்.பழனிசாமி, கரைபுதூர் நடராஜன், சார்பு அணி நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், கண்ணப்பன், மார்க்கெட் சக்திவேல், கே.என்.சுப்பிரமணியம், எம்.மணி, ஸ்டீபன் ராஜ், தொகுதி செயலாளர் லோகநாதன் மற்றும் பொங்கலூர் ஒன்றியம்,  திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.திருப்பூர் அடுத்துள்ள பொங்கலூரில் நடந்த மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்

திருப்பூர் மாவட்டம், மடத்துகுளம் அடுத்துள்ள கொழுமம் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில்



திருப்பூர் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் அண்ணா திமு.க.பொதுசெயலாளர் ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்வராக பதவி ஏற்க சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைப்பெற்றது மாவட்டபேரவை செயலாளர் ஜி.வி. வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன்,  அரசு கேபிள் டி,வி, நிறுவனத் தலைவர் கே.ராதாகிருஷ்ணன், மடத்துகுளம் சட்டமன்ற உறுப்பினர் சி.சண்முகவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் ஒன்றிய பேரவை செயலாளர் சிவலிங்கம், ஊராட்சி மன்றத்தலைவர் இந்திராணி மயில்சாமி, உடுமலை நகரமன்ற துணைதலைவர் எம்.கண்ணாயிரம், ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

திருப்பூர் அ.தி.மு.க.சார்பில் பெருமாள் கோவிலுக்கு ரூ.5 லட்சம் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்

திருப்பூரில் புகழ்பெற்ற வீரராகவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
நடைபெற உள்ளது. இதற்காக திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வீரராகவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு நன்கொடையாக ரூ.5 லட்சத்து ஆயிரத்தை மாநகர் மாவட்ட செயலாளரும், தமிழக வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் திருப்பணி குழுவினரிடம் வழங்கினார்.
இதில் எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளரும், துணை மேயருமான குணசேகரன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, நிர்வாகிகள் மார்க்கெட் சக்திவேல், உஷா ரவிக்குமார், சோமசுந்தரம், ராஜேஷ் கண்ணா, கண்ணபிரான் மற்றும் கோவில் திருப்பணி குழுவினர் கிளாசிக் சிவராமன், சவுமீஸ் நடராசன், பலராமன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.