Oct 21, 2016

தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெறவேண்டி திருச்சி மாநகர் செயலாளரும் சுற்றுலா துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில் திருவாணைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெறவேண்டி திருச்சி மாநகர் செயலாளரும் சுற்றுலா துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில்  திருவாணைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெறவேண்டி திருச்சி திருவாணைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் மாநகர் மாவட்ட கழகம் சார்பில் சிறப்பு யாகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஜம்புலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து பிராத்தனை செய்யப்பட்டது.

பின்னர் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பூலோக நாதர் கோவிலில் சிறப்பு பிராத்தனை செய்யப்பட்டது. தொடர்ந்து மாலையில் கே.கே.நகர் விநாயகர் கோவில், ஐயப்பா நகர் பெருமாள் கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில்  உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

மாநகர் மாவட்ட மாணவர் அணி சார்பில் பெரிய கடை வீதி என்.எஸ்.பி. மகாலில் நல திட்டஉதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நல துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், முன்னாள் அமைச்சர்கள் மு.பரஞ்ஜோதி, கே.கே.பாலசுப்ரமணியம், மேயர் ஜெயா, முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான்,  மாவட்ட பொருளாளர் ஐயப்பன், துணை செயலாளர் ஜாக்குலின்,   மாணவர் அணி செயலாளர் கார்த்திகேயன், அண்ணா தொழிலாளர் சங்க செயலாளர் ஜெயபால்,  மகளிர் அணி செயலாளர் எஸ்.தமிழரசி,  பகுதி செயலாளர்கள் வெல்லமண்டி என்.சண்முகம், அன்பழகன், டைமண்ட் திருப்பதி, நாகநாதர் பாண்டி,   மற்றும் அருள்ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்