Mar 12, 2015

பல்லடம் அடுத்துள்ள கேத்தனூரில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்துள்ள பொங்கலூர் ஒன்றியம் கேத்தனூரில் ஊராட்சி மன்ற தலைவர் ஹரிகோபால் ஏற்பாட்டின் பேரில் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் 5 ஆயிரம் பேருக்கு சிறப்பு அன்ன தானம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வும், ஒன்றிய செயலாளருமான கே.பி.பரமசிவம், பொங்கலூர் ஒன்றிய செயலாளரும், ஒன்றியக்குழு தலைவருமான எஸ்.சிவாச்சலம் ஆகியோர் தலைமை தங்கினர். பின்னர் அங்குள்ள பெருமாள் கோவிலில் அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா நீடூழி வாழவும், மீண்டும் தமிழக முதல்வராக பெறுப்பெற்கவும் வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளரும்,வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்து,  பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி  ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் (அறுசுவை விருந்து) வழங்கினார். 
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், ஒன்றிய குழு துணை தலைவர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயச்சுந்தர்,அனந்தகிருஷ்ணன், துணை தலைவர் பொன்னுசாமி, நாச்சிபாளையம் ஊராட்சி தலைவர் அப்புசாமி, திருப்பூர் நிலவள வங்கி தலைவர் புத்தரச்சல் பாபு, துத்தேரிபாளையம் கூட்டுறவு சங்க தலைவர் நாகராஜன்,ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ஜோதிமணி, கிளை நிர்வாகிகள் மகேஷ்குமார், சந்தோஷ், ரங்கராஜ் உள்ளிட்டவர்களும், கேத்தனூர் ஊராட்சி அண்ணா தி.மு.க.சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி மன்ற, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.