Jun 8, 2018

திருச்சி கிருஷ்ணா ஸ்கேன் சென்டர் மீது அதிகாரிகள் நடவடிக்கை

திருச்சி முறையற்று செயல்பட்ட கிருஷ்ணா ஸ்கேன்  செய்யும் ஸ்கேன் சென்டர் மாவட்ட ஆட்சித்தலைவர் பரிந்துரையின்

பேரில் குருநாதன் தமிழ்நாடு பிரதிநிதி சீர் முறை ஆணையம் அவர்கள் மற்றும் இணை இயக்குனர் மருத்துவர் ஷம்ஷத் பேகம் தலைமையில் நடத்திய ஆய்வுகளில் முறையற்ற ஆவணங்கள் இல்லாமலும் ஸ்கேன் சென்டர் செயல்பட்டு வந்துள்ளது தெரிந்தது அதனடிப்படையில் அவர்கள் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்தனர்

அப்போது இணை இயக்குனர் மருத்துவர் சம்பத் பேகம் கூறுகையில் இன்றைக்கு மட்டும்  45 நோயாளிகள் பரிசோதனை செய்யப்பட்டு ள்ளது அதில் 18 பேர் கர்ப்பிணி பெண்கள் மூன்று மாத காலங்களாக முறையான ஆவணங்கள் பராமரிப்பு இல்லாமலும் ஸ்கேன் சென்டர் ரினிவல் செய்வதற்கு எந்தவித முயற்சியும் எடுக்காமல் செயல்பட்டு வந்தது அதில் கடந்த சனிக்கிழமை நாங்கள் ஆய்வு செய்த ஆய்வின் போது ஸ்கேன் சென்டரில் முறையாக லைசன்ஸ் வாங்கும்போது இருந்த மருத்துவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்றுள்ளனர் ஆனால் ஸ்கேன் சென்டரில் நிரந்தரமான மருத்துவர்கள் இல்லாமல் அவ்வப்போது மருத்துவர்களை அழைத்து ஸ்கேன் செய்துள்ளனர் ஸ்கேன் அப்படி ஸ்கேன் செய்யும்போது form 6 நிரப்பப்படவில்லை இந்த ஸ்கேன் சென்டருக்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் மறுப்பும் தெரிவிக்கவில்லை மேலும் ஸ்கேன் சென்டர் முறையற்ற நடத்தி வந்தனர் பொதுநலன் கருதி மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பேரில் நாங்கள் ஆய்வு மேற்கொண்டோம் சட்டப்படி ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் இந்நிகழ்வின்போது தில்லைநகர்புவனேஸ்வரி காவல்துறை துணை ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்



பேட்டி மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் சம்சாத் பேகம்