May 13, 2015

திருச்சி தில்லைநகர் 1வது கிராஸில் உள்ள எஸ்ஆர்டி மஹாலில் சிறப்பு கண்காட்சி மற்றும் சிறப்பு விற்பனை 13.5.15 முதல் 24.5.15 வரை நடைபெற உள்ள இந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிச்சாமி துவங்கிவைத்தார்.




கோ-ஆப்டெக்ஸ் என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1935-ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு தொடர்ந்து 80 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது இந்தியாவிலுள்ள கைத்தறி நிறுவனங்களிலேயே முதன்மை நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் திகழ்வதற்கு நெசவாளர்களின் ஒத்துழைப்பும் வாடிக்கையாளர்களின் பேராதரவும் தான் முக்கிய காரணங்களாக இருந்து வருகிறது.
அதன் அடிப்படையில ;மக்கள் பயன்பெற திருச்சி தில்லைநகர் 1வது கிராஸில் உள்ள எஸ்ஆர்டி மஹாலில் சிறப்பு கண்காட்சி மற்றும் சிறப்பு விற்பனை 13.5.15 முதல் 24.5.15 வரை நடைபெற உள்ள இந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிச்சாமி துவங்கிவைத்தார்.

tricht aiadmk celebration