Mar 18, 2021

திருச்சி ஸ்ரீரங்கத்தை புனித நகரமாக மாற்றுவேன் கு.பா.கிருஷ்ணன் பேச்சு

 மத்திய மாநில அரசினால் வழங்கப்படும் நிதியை ஸ்ரீரங்கம் மக்களுக்கு முழுமையாகப் பெற்று தந்து ஸ்ரீரங்கத்தை புனித நகரமாக மாற்றுவேன் என அதிமுக வேட்பாளர் கு ப கிருஷ்ணன் தேர்தல் பரப்புரை.


ஜீயபுரம் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் நடைபெறவுள்ள சட்ட மன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க சார்பில்  முன்னாள் அமைச்சர் *கு ப  கிருஷ்ணன்* நேற்று காலை  ஸ்ரீரங்கம் மேலூரில் உள்ள அய்யனார் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்பகுதியில் உள்ள மக்களிடம் வாக்கு 

சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, அவர் பேசுகையில்

 புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா வழியே வந்த எடப்பாடி K. பழனிச்சாமி ஆட்சியை தான் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். மக்கள் எதிர்பார்ப்பது அமைதியான வாழ்க்கையை ரவுடியிசங்கள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும். நில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்ற நிலையில் தான் தமிழகம் உள்ளது .தமிழகத்தை கூறுபோடும் நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் போராடி வருகிறது.திருச்சி மாவட்டத்தில் கட்சிக்கு தலைமையாக உள்ள கே. என். நேரு 12 ஆண்டு காலம் அமைச்சராக உள்ளார்.அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியின்போது அமைச்சராக 5 ஆண்டு காலம் மட்டுமே நான் பொறுப்பேற்றுக் கொண்டேன் .அச்சமயம் 42 லட்சம் மதிப்பிலான மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டது.பின்னர் வந்த திமுக ஆட்சியில் அதற்கு கீழே விசுவநாதன்  மருத்துவக்கல்லூரி என பெயர் மட்டும் சூட்டப்பட்டது.திமுக கட்சியில் இருக்கும் ஸ்டாலின் தன்னைத்தானே செயல் தலைவர் என கூறிக்கொள்கிறார்.எதிர்க் கட்சியான திமுக  தகுதியை வளர்த்துக் கொண்டு  அதிமுகவிடம் போட்டி போடவேண்டும்.மேலூர் மக்களின் அத்தியாவசிய தேவைகளையும் சாலை கழிப்பிடம் மற்றும் பாலம் அமைத்து தரப்படும் எனவும் கூறினார்.அதனைதொடர்ந்துஸ்ரீரங்கம் நெடுந் தெருவில் பிரசார பயணத்தை மேற்கொண்ட வேட்பாளர்  மக்களிடம் கூறுகையில் திருவரங்கத்தில் நிலவிவரும் குடிநீர் பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படும்.

திருவரங்கத்தை புனித நகரமாக மற்றி மத்திய அரசினால் ஒதுக்கப்படும் நிதியை முழுமையாகப் பெற்று தரப்படும் என்று கூறி பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.


இந்த நிகழ்ச்சியல் ஸ்ரீரங்கம் பகுதி கழக செயலாளர்கள் சுந்தர்ராஜன்,திருப்பதி,ஒன்றிய கழக செயலாளர்கள்முத்துகருப்பன்,அழகேசன்,ஜெயகுமார்,நடராஜ்செல்வராஜ்,கூட்டனி கட்சி தலைவர்கள்பா.ஜ.க.மாவட்ட தலைவர்ராஜேஷ்,உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

திருச்சி அதிமுக மண்ணச்சநல்லூர் வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

 திருப்பட்டூர், சனமங்களம், சீதேவிமங்களம் ஆகிய ஊராட்சிகளில்  மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் மு.பரஞ்ஜோதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்


அதிமுக ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், அதிமுக பிரமுகர் புல்லட் ஜான் மற்றும்  வடக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.

திருச்சி முசிறி அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளர் செல்வராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள்  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்கள் நேற்று முன்தினம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

 திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ்  வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் .


இதை தொடர்ந்து இன்று மாலை முசிறி அருகே உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் வேட்பாளர் செல்வராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


மேட்டுப்பாளையம், மோருப்பட்டி, கவராப்பட்டி ஆகிய பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு சால்வை அணிவித்து ஆதரவு திரட்டினார்.


இந்த பிரச்சாரத்தின்போது தாத்தையங்கார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயம், கிழக்கு ஒன்றிய செயலாளர் குமரவேல், பேரூராட்சி செயலாளர் கிட்டு என்கிற கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் சேர்மன் செம்மலை, ஒன்றிய கவுன்சிலர் பாஸ்கர், அங்கமுத்து, மகாராஜன், தகவல் தொழில்நுட்பப்பிரிவு திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தலைவர் ரூபன், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட இணைச்செயலாளர் கவி அரசு, தா.பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய மகேந்திரன், தா.பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் திவாகர், மேட்டுப்பாளையம், பேரூராட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சுதாகர், ஒன்றிய துணைத் தலைவர் பொன்மனச்செம்மல் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளுடன் வீடு வீடாகச் சென்ற வேட்பாளர் செல்வராஜ் இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார்

திருச்சி மண்ணச்சநல்லூர்அதிமுக வேட்பாளர் அலுவலகம் திறக்கப்பட்டது

 மண்ணச்சநல்லூர் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.


தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 தனது வேட்புமனுவை அதிமுக சார்பில் தாக்கல் செய்தார்

இந்நிலையில் இன்று மண்ணச்சநல்லூர் பேருந்து நிலையம் அருகே வேட்பாளர் அலுவலகம் திறக்கப்பட்டது.

புதிய அலுவலகத்தை பரஞ்ஜோதி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், ஆதாளி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.