Mar 30, 2016

Mar 19, 2016

திருச்சி அஇஅதிமுக சார்பில் கருமண்டபம்கோயில் அருகே நடந்த தெருமுனை பிரச்சாரம் அபிஷேகபுரம் கோட்ட தலைவர்ஞானசேகரன் மற்றும் பகுதி செயலாளர் நாகநாதர் பாண்டி தலைமையில் நடைபெற்றது;

திருச்சி 19.3.16                                     சபரிநாதன் 9443086297
திருச்சி அஇஅதிமுக சார்பில் கருமண்டபம்கோயில் அருகே நடந்த தெருமுனை பிரச்சாரம் அபிஷேகபுரம் கோட்ட தலைவர்ஞானசேகரன் மற்றும் பகுதி செயலாளர் நாகநாதர் பாண்டி  தலைமையி;ல் நடைபெற்றது;
அப்பொழுது அப்பகுதி மக்களுக்கு கோட்டதலைவர் ஞானசேகர் தான் அம்மா ஆட்சியில் செய்த திட்டங்கள் பற்றி தெரிவிக்கையில்  திருச்சியில் மணப்பாறை செல்லும் வழியில் உள்ள தார் சாலை அகலப்படுத்த பலகோடி தி;ட்டங்கள் வழியே தெருவிளக்குகள் பொன்நகர் மேம்பாலம் கட்ட பல கோடி போன்ற பலத்திட்டங்கள் அனைத்தும் அம்மாவின் ஆட்சியில் நம் பகுதி மக்களுக்காகவே நிறைவேற்றப்பட்டது என்று பகுதி மக்களுக்கு விளக்கிக்கூறினாh இப்;படிப்;பட்ட திட்டங்கள் அனைத்தும் மக்களுக்காகவே அம்மாஆட்சியில் நிறைவேற்றப்பட்டது என தெரிவித்தார்.
கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் மக்களவை கழக துணைத்தலைவர் மனுக்கள் பரிசீலனைக்குழு உறுப்பினர் குமார் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் தலைமை கொறாடா   மனோகரன் ஸ்ரீரங்க சட்ட மன்ற உறுப்பினர் வளர்மதி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி மாவட்ட கழக அவைத்தலைவர் தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்கிகள் இணையத்தின் தலைவர்வெல்லமண்டிநடராஜன்   சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் சிங்கமுத்துஆகியோர்கள் சிறப்புரையாற்றினார்கள்

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.

Mar 15, 2016

திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்தார்.

திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்தார்.
------------------------------------------
திருச்சிராப்பள்ளி மாவட்டம் தூய வளனார் தன்னாட்சி கல்லூரியில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து மாபெரும் கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.
மாபெரும் கையெழுத்து இயக்கத்தினை தொடங்கிவைத்து மாணவ மாணவியர்களிடையே மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:
இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2016 அன்று 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும். தேர்தல் நாளன்று வாக்காளர் அனைவரும் வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றவேண்டும். மாணவ மாணவியர்கள் உறவினர்கள்ää நண்பர்கள் வீட்டின் அருகில் வசிப்போர் ஆகியோரிடம் வாக்களிப்பதின் அவசியத்தை எடுத்து கூற வேண்டும்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல்; நேர்மையாகவும் நியாயமாகவும்அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும். மனச்சாட்சிப்படி வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில்  வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட முறையான வாக்காளர் கல்வி மற்றும் வாக்காளர் பங்கேற்பு (ளுஎநநி) பற்றி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில்ää திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தெருமுனைப் பிரச்சாரம் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டுதல்ää துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தல் வீடியோ வாகனம் மூலம் திரைப்படக் கலைஞர்கள் நடித்துள்ள விழிப்புணர்வு குறும்படம் திரையிடுதல் பொதுமக்கள் கூடும் இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது பற்றிய செயல்முறை விளக்கம்ää பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மக்கள் அதிகமாகக் கூடும் சந்திப்புகளில் கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தர்பகராஜ் திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் கணேஷ்குமார் தூய வளனார் கல்லூரி முதல்வர் .ஆன்ட்ரோ கல்லூரி செயலர் செபாஸ்டின் அரியமங்கலம் பகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் .பத்மாவதி மற்றும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 40136 மாணவ மாணவியர்கள்பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமி தெரிவித்தார்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 40136 மாணவ மாணவியர்கள்பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர் மாவட்ட ஆட்சித்தலைவர்  பழனிசாமி
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 40136 மாணவ மாணவியர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமி அவர்கள் தெரிவித்தர். 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று (15.03.2016) தொடங்கி வருகின்ற 13.04.2016 முடிய நடைபெறுகிறது. திருச்சிராப்பள்ளி தெப்பக்குளம் பி~ப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமி அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
ஆய்விற்க்குப் பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தது :
திருச்சிராப்பள்ளி வருவாய் மாவட்டத்தில் 20249 மாணவர்களும்ää 19887 மாணவிகளும் ஆக மொத்தம் 40136 மாணவ மாணவிகள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வானது இன்று முதல் 15.03.2016 முதல் 13.04.2016 முடிய நடைபெறவுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 427 பள்ளிகளில் உள்ள 144 தேர்வுமையங்களில் மாணவ மாணவிகள் தேர்வெழுதுகின்றனர். இத்தேர்விற்கு 144 தலைமையாசிரியர்கள் முதன்மை கண்காணிப்பாளராகவும் 212 பட்டதாரி ஆசிரியர்கள் துறை அலுவலர் மற்றும் கூடுதல் துறை அலுவலர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 2100 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளாகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இத்தேர்வு மையங்களில் முறைகேடுகள் ஏதும் நடைபெறமால் இருக்க 175 ஆசிரியர்கள் பறக்கும்படை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 138 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 118 பார்வையற்றோருக்கு 118 ஆசிரியர்கள் சொல்வதை எழுதும் உதவி தேர்வளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 20 பேருக்கு கூடுதலாக ஒரு மணிநேரம் தேர்வு எழுத அரசு தேர்வு துறை இயக்குநர் அவர்களால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 10ம்வகுப்பு பொதுத்தேர்வு சிறப்பாகவும் அமைதியாகவும் நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஆய்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆனந்தி மற்றும் கல்வித்துறை வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தார்.