Mar 14, 2021

திருச்சி ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் திருவானைக்காவலில் நிர்வாகிகள் ஆதரவைப் பெற்றார்

 


திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் திருவானைக்காவலில் அதிமுக.வினரிடம் ஆதரவு திரட்டினார்.

திருச்சி ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

இதில் ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் ஸ்ரீரங்கம் தொகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளை கிராமம் கிராமமாக சென்று சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்த வகையில் இன்று ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட திருவானைக்காவல் வடக்கு வீதி சங்கரமடம் அருகே கட்சி நிர்வாகிகளை சந்தித்தார்.அனைத்து நிர்வாகிகளுக்கும் அவர் சால்வை அணிவித்து ஆதரவு கோரினார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பனையபுரம் கர்ணன் பகுதி செயலாளர்கள் திருப்பதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.