Sep 20, 2014

கீழணை & வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்க, ஜெயலலிதா உத்தரவு




சாகுபடிக்காகத் தண்ணீர் திறப்பது தொடர்பாகத் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு:
 
கடலூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள பாசன பகுதிகளுக்குச் சாகுபடிக்காக கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து  தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன. 
 
வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து சாகுபடிக்காக 21.9.2014 முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். 
 
இதனால், கடலூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 1,31,903 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வீராணம் ஏரியிலிருந்து நாளை மறுநாள் தண்ணீர் திறக்க உத்தரவு!

23THJAYA_1307669f


விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து நாளை மறுநாள் தண்ணீர் திறந்து விடுமாறு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள பாசன பகுதிகளுக்கு சாகுபடிக்காக கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து தனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து சாகுபடிக்காக நாளை மறுநாள் முதல் தண்ணீர் திறந்து விட தான் உத்தரவிட்டுள்ளேன் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதனால், கடலூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 31 ஆயிரத்து 903 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை தான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

பாசனத்துக்காக வீராணம் ஏரியில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு


வீராணம் ஏரியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (செப்.21) முதல் பாசனத்துக்காகத் தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு: கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள பாசனப் பகுதிகளுக்கு சாகுபடிக்காக கீழணை, வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அவர்களது வேண்டுகோளை ஏற்று கீழணை, வீராணம் ஏரியிலிருந்து சாகுபடிக்காக வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன். இதனால் கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 903 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

கோவையில் இடைதேர்தல் மோதல்: அதிமுக எம்எல்ஏ உள்பட175 பேர் மீது வழக்கு


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

கோவையில் மேயர் இடைதேர்தல் மோதல் தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ. மற்றும் பா.ஜ. வேட்பாளர் உள்பட 175 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி பா.ஜ. மேயர் வேட்பாளர் நந்தகுமார் நேற்று முன்தினம் தனது கட்சியினருடன் கோவை சவுரிபாளையம் மாரியம்மன் கோயில் மைதானம் அருகே காரில் சென்றார். அப்போது அங்கே தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி தலைவரின் கார் நின்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த நந்தகுமார் மற்றும் கட்சியினர், வெளியூர்காரர்கள் தேர்தல் விதிமுறை மீறி தங்க கூடாது என்றனர்.இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பாஜக வேட்பாளர் தாக்கப்பட்டார். வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதுகுறித்து பாஜகவினர் பீளமேடு போலீசில் புகார் செய்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்தில் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடர்பாக  துடியலூர் டி.வி.எஸ் நகரை சேர்ந்த பா.ஜ., இளைஞரணி செயலாளர் கார்த்திக்கை (25) போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பாஜக, அதிமுக தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து இரு தரப்பினர் மீதும் பொது சொத்துக்கு சேதம்  ஏற்படுத்துதல், கொலை மிரட்டல், சட்டவிரோதமாக கூடுதல் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் நந்தகுமார் தந்த புகாரின் பேரில் போடிநாயக்கனூர் நகராட்சி சேர்மன் பழனிசாமி உள்பட 50 பேர் மீதும், பாஜக மாவட்ட துணை தலைவர் தாமு கொடுத்த புகாரின் பேரில் பீளமேடு பாரதி நகரை சேர்ந்த அதிமுக எம்எல்ஏ சின்னச்சாமி உள்பட 50 பேர் மீதும், பீளமேடு அதிமுக 65வது வார்டு அவை தலைவர் ஜெயகோபால் கொடுத்த புகாரின் பேரில் பாஜக வேட்பாளர் நந்தகுமார் உள்பட 25 பேர் மீதும், சவுரிபாளையம் தேர்வீதி அதிமுக நிர்வாகி வெள்ளியங்கிரி கொடுத்த புகாரின் பேரில் பாஜக வேட்பாளர் நந்தகுமார் உள்பட 50 பேர் என மொத்தம் 175 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பீளமேடு போலீஸ் ஸ்டேஷன் பெண் எஸ்.ஐ சாமியாத்தாள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்த காரணத்தினால்தான் எஸ்.ஐ. மாற்றப்பட்டார் என்று பாஜகவினர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். இதனிடையே சாமியாத்தாள் இட மாறுதலுக்கான முறையான உத்தரவு இதுவரை அவருக்கு வழங்கப்படவில்லை. எனவே அவர் இடமாற்றம் செய்யப்பட்டாரா அல்லது இல்லையா என்பதில் குழப்பம் நிலவுகிறது