Aug 27, 2017

கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி திருச்சி பிரஸ் கிளப்பில் பேட்டி. தமிழக சட்டமன்ற முன்னாள் கொறடா மனோகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகர் உடன் உள்ளனர்.

கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி திருச்சி பிரஸ் கிளப்பில் பேட்டி. தமிழக சட்டமன்ற முன்னாள் கொறடா மனோகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகர் உடன் உள்ளனர்.

தினகரன், சசிகலா ஆகியோர் செல்லாக்காசுகள் என்று எம்பி குமார் கொடுத்த பேட்டிக்கு கண்டனம். நாங்கள் இதுவரை பல கட்ட போராட்டங்களை சந்தித்துள்ளோம்.  பொறியாளர் கலியப்பெருமால் வீட்டிற்கு உதவியாளராக வந்தவர் குமார். கட்சிக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம். யார் யாரெல்லாம் கட்சிக்கு குந்தகம் விளைவிக்கிறார்களோ அவர்களை நீக்குவதில் டிடிவி தயக்கம் காட்டவில்லை

ஊழல் ஆட்சி நஞைபெறுகிறது என மக்கள் உணர்கிறார்கள். கூடிய விரைவில் ஆட்சியை தூக்கி எறிவார்கள்.
அம்மாவிற்கு இருந்த பாதுகாவலர்கள் எடப்பாடி க்கும் பணிபுரிகிறார்கள். அம்மா-வை போலவே நடித்துக்கொண்டிருக்கிறார் எடப்பாடி. எம்பி குமார் சின்ன பையன். கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.
22 எம்எல்ஏக்கள் உங்கள் ஆட்சி வேண்டாம் என்று சொல்கின்றனர். பதவியை ராஜினாமா செய்யுங்கள். முக்கியமான துறைகளை கையில் வைத்துக்கொண்டு யாருக்கும் தராமல் தாந்தோன்றி தனமாக செயல்படுகிறார் முதல்வர். வெல்லமண்டி நடராஜன் எங்கள் கோஷ்டியில் இருந்தால் பதவி போகும் என்ற பயத்தில் பேசிக்கொண்டுள்ளார்.
தினகரனின் உருவபொம்மையை எரிக்க காவல்துறை அனுமதி கொடுக்கிறது. தவறான பாதையில் காவல்துறை செற்றுக்கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியை நம்பி யாரும் இறங்காதீர்கள்.
இந்த அரசு நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கிறது. காப்பாற்றிக்கொள்ள முதல்வர் பதவி விலக வேண்டும்.
இக்கட்சியை டில்லியில் இருந்து ஒரு முதலாளி இயக்க முயற்சிக்கிறார். விலைபோய்விட்டார்கள். 11 துரோகிகளை கூடே இணைத்து கொண்டு அழகு பார்க்கிறார்கள். சசிகலா இதுவரை யாரையும் தவறாக பேசவில்லை. சிறையில் இருக்கும் போது கூட எடப்பாடி குறித்து நலம் விசாரித்து வருகிறார். - புகழேந்தி
 கமல்ஹாசனுக்கு பயந்து அமைச்சர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரியை மூடுகின்றனர். கவர்னர் பதில் அளித்துவிட்டால் இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும். ஓபிஎஸ் அணியில் உள்ள 11 எம்எல்ஏக்கள் அதிமுகவில் இலீலை என்பதை நிரூபிக்க நீதிமன்றம் செல்லவுள்ளோம்.
 சசிகலா உதவி இல்லையென்றால் இன்று எம்பி குமார் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க முடியாது. 2006 க்கு பிறகு தான் குமார் கட்சிக்கு வந்தார். தினகரனையும் சசிகலாவையும் செல்லாத நோட்டுகள் என்று கூறியவர் கள்ளநோட்டு. - முன்னாள் கொறடா மனோகரன் பேட்டி
  ஆட்சியில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் சுரண்டியவர்கள் எல்லாம் சூட்கேசுடன் ஓடிவிடுவார்கள்.கட்சியை டிடிவி தான் காப்பாற்றுவார்-புகழேந்தி