Dec 31, 2014

திருப்பூரில் வழக்கம் போல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமலும், பொது வாழ்கைக்கு பாதிப்பு இல்லாமல் வழக்கம் போல பஸ்களை இயக்க அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் மற்றும் அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்தனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (தி.மு.க.ஆதரவு) ஊழியர்கள் சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 29ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்பட்டன நேற்றும், இன்றும் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் ஆகியோர் நேரில் சென்று பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் காங்கேயம் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனைக்கு சென்று பஸ்களை இயக்க அதிகாரிகளுடன் துணை மேயர் சு.குணசேகரன், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் உடுமலை கிருஷ்ணன் ஆகியோர்களுடனும் ஆலோசனை நடத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அமைச்சருடன் தொழிற்சங்க மண்டல பொருளாளர் பொன்னுசாமி, கவுன்சிலர்கள் எம்.கண்ணப்பன், சண்முகம், நிர்வாகிகள் தங்கமுத்து, கண்ணபிரான், வளர்மதி சாகுல் ஹமீது, சின்னு, அ.கண்ணப்பன், திருப்பூர் கிளை அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் செயலாளர்கள் ராஜேந்திரன், சரவணன் மற்றும்  ரவிக்குமார், மாரிமுத்து, சிவகுமார், கணேஷ், கிளை மேலாளர் குணசேகரன் உள்பட பலர் உள்ளனர். 
இதே போல் பல்லடம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் அனைத்து அரசுப் பேருந்துகளையும் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், கே.பி.பரமசிவம் எம்.எல்.ஏ.,ஆகியோர் நேரில் சென்று இயக்க நடவடிக்கை மேற்கொண்டனர். உடுமலை பகுதியில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் முன்னால் அமைச்சர் சி.சண்முகவேலு எம்.எல்.ஏ., ஆகியோர் சென்று நடவடிக்கை மேற்கொண்டனர்., தாராபுரத்தில் கே,போன்னுசாமி எம்.எல்.ஏ.வும்,காங்கயத்தில் என்.எஸ்.என்.நடராஜ் எம்.எல்.ஏ.,வும் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் அனைத்து அரசுப் பேருந்துகளும் காலை முதல் வழக்கம்போல் இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.



புத்தாண்டு நிகழ்ச்சி மாநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை

திருப்பூர்,டிச.31-
புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் ஆபாமான கலை நிகழ்ச்சி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையாளர்சேஷசாய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையாளர் எஸ்.என்.சேஷசாய் அனைத்து பத்திரிகைகளுக்கும்   அனுப்பியுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31.12.2014-ம் தேதி இரவில் உள் அரங்கினுள் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளுக்கு சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆணையரிடம் முன் அனுமதி பெற வேண்டும். திறந்த வெளியில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்த அனுமதி இல்லை. 
புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் என்ற பெயரில் கலாச்சாரத்தைச் சீரழிக்கும் விதத்தில் ஆபாசமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நிகழ்த்த அனுமதியில்லை. 
புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நடைபெறும் இடங்களில், அனுமதிக்கப்பட்ட நபர்களைத் தவிர மற்றவர்களை அனுமதிக்கக்கூடாது.
அரசு அனுமதி பெற்ற மதுபானக் கூடங்களைத் தவிர பிற இடங்களில் மது வழங்கக்கூடாது. 
தனியார் தங்கும் விடுதியில் உள்ள நீச்சல் குளங்களை 31.12.2014 இரவு 08.00 மணி முதல் 01.01.2015 காலை 06.00 மணி வரை யாரும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. 
புத்தாண்டு தின கொண்டாட்டங்கள் சார்ந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் இரவு 01.00 மணிக்குள் முடித்துக் கொள்ளவேண்டும்.  
ஹோட்டல் மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் பொழுது, எந்த ஒரு அசம்பாவிதமும் நடவாமல் இருக்கத் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிர்வாகம் எடுக்க வேண்டும். 
புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வாகன நிறுத்தும் வசதிகள் செய்திருக்க வேண்டும்.  
நள்ளிரவில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர மோட்டார் வாகனங்களில் சென்று பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு விளைவிப்பவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இசைக் கருவிகளையோ ஒலிபெருக்கிகளையோ அதிக ஒலியுடன் பயன்படுத்தக்கூடாது.
எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பயன்படுத்தக்கூடாது. 
தற்காலிகமாக அமைக்கும் மேடைகளுக்கு மாநகராட்சி மற்றும் காவல்துறை அனுமதி பெற வேண்டும்;இ தகுதிச்;சான்று பெறப்பட்டிருக்க வேண்டும்.
பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாத வகையில் புத்தாண்டு தினத்தைக் கொண்டாட வேண்டும். 
ஹோட்டல் மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மேடையில் ஆடுபவர்கள் மேடைகளின் இருந்து யாரும் கீழ் இறங்கி வர அனுமதிக்கக் கூடாது. கீழிருந்து யாரும் மேல் ஏற அனுமதிக்கக் கூடாது.
பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருத்தல் வேண்டும்.
ஹோட்டல் மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அனைத்தையும் ஊஊவுஏ கேமிராவில் பதிவு செய்து இருத்தல் வேண்டும்.
ஹோட்டல் மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கக் கூடாது.
மேற்கண்டவாறு மாநகர காவல் ஆணையாளர் எஸ்.என்.சேஷசாய் தெரிவித்தார்.

திருப்பூர் அரசு போக்குவரத்து பனிமனையில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முகாம்



தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (தி.மு.க.ஆதரவு) ஊழியர்கள் ஒரு சில கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 29ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் அரசு போக்குவரத்து பணிமனைகளில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முகாமிட்டு இன்றும்போக்குவரத்துக் கழக ஊழியர்களிடம் பேசி இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் பேருந்துகளை இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்போது துணை மேயர் சு.குணசேகரன், தொழிற்சங்க நிர்வாகிகள் கிருஷ்ணன், பொன்னுசாமி, கண்ணப்பன், ராஜேந்திரன், சரவணன்,ரவிகுமார்,கண்ணபிரான்.ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் அரசு போக்குவரத்து பணிமனைகளில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆய்வு





திருப்பூர் அரசு போக்குவரத்து பணிமனைகளில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆய்வு .திருப்பூரில் இருந்து கோவை .உடுமலை.பழனி.மதுரை உட்பட அனைத்து ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்க நடவடிக்கை திருப்பூர் கலெக்டர் கோவிந்தராஜ்  துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம் மண்டல தலைவர் .ராதாகிருஷ்ணன். அண்ணா தொழிற்சங்க செயலாளர் எம்.கண்ணப்பன், கண்ணபிரான்.உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Dec 29, 2014

திருப்பூர் மாநகர்மாவட்ட அ.தி.மு.க., அமைப்பு தேர்தல் மனுக்கள் பரிசீலனை நேற்று (ஞாயிறு) நடந்தது.








திருப்பூர் மாநகர்மாவட்ட அ.தி.மு.க., அமைப்பு தேர்தல் மனுக்கள் பரிசீலனை நேற்று (ஞாயிறு) நடந்தது. கட்சியினர் அளித்த மனுக்களை கைத்தறி துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா , வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் பரிசீலனை செய்தனர். திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி,அவினாசி எம்.எல்.ஏ., கருப்பசாமி,  துணை மேயர் சு.குணசேகரன், ஆகியோர் உடன் இருந்தனர்.

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அமைப்பு தேர்தலுக்கு நேற்று கட்சி நிர்வாகிகள் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனிடம் கட்சி நிர்வாகிகள் விண்ணப்பங்களை அளித்தனர்.







திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அமைப்பு தேர்தலுக்கு நேற்று (சனி ) கட்சி நிர்வாகிகள் விண்ணப்பம் அளித்தனர். திருப்பூர் குலாலர் கல்யாண மண்டபத்தில் ,கொங்கு மெயின் ரோடு பகுதி தேர்தலுக்கு  தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனிடம் கட்சி நிர்வாகிகள் விண்ணப்பங்களை அளித்தனர். திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம், கவுன்சிலர்கள் கணேஷ், முருகசாமி உள்ளிட்டோர பங்கேற்றனர். t

Dec 27, 2014

திருப்பூரில் நடந்த அமைப்பு தேத்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் கோகுல இந்திரா, எம்.எஸ்.எம்.ஆனந்தன் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் பல்லடம் ரோட்டில் உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமை தங்கினார்.
மேயர் அ.விசாலாட்சி  பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம், அவினாசி எம்.எல்.ஏ., கருப்பசாமி, துணை மேயர் சு.குணசேகரன் ,அவைத்தலைவர்கள் எம்.சண்முகம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் பொறுப்பாளராக கலந்து கொண்ட கைத்தறித்துறை அமைச்சர் கோகுல இந்திரா கலந்து கொண்டு பேசியதாவது:-
அண்ணா தி.மு.க.இயக்கத்தின் புதிய பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்க பொதுச்செயலாளர் மக்கள் முதல்வர் ஜெயலலிதா சில விதிமுறைகளை அறிவித்து உள்ளார்.ராணுவ கட்டுப்பாட்டுடன் இந்த இயக்கத்தை மிக அமைதியான இயக்கமாக நடத்தி வருகிறார். அண்ணா திமு.க. இயக்கத்தில் மட்டுமே 1.1/2 கோடி தொண்டர்கள் உள்ளனர் .நடைபெற உள்ள கழக அமைப்பு தேர்தலில் பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுப்பவர்கள் 5 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள். இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் மீது எந்த விதமான பு கார்களும் இருக்க கூடாது. அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து செயல்பட வேண்டும்.மற்ற கட்சியைபோல் இல்லை அண்ணா தி.மு.க. மக்கள் முதல்வர் கழக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் அன்புக்கு கட்டுப்பட்டவர்கள் நாம் என்பதை நிருபிக்கும் வகையில் அமைதியாக இருக்க வேண்டும். தேர்தல் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள விழுப்புரம் வடக்கு மாவட்ட எம்.எல்.ஏ, க்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அமைச்சர் கோகுல இந்திரா பேசினார்.
மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:- 
அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளரும், மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின் பேரில் அமைச்சர்கள் கோகுல இந்திரா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரை நம் மாவட்ட கட்சி தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்து உள்ளார். தேர்தலை எப்படி நடத்த வேண்டுமென அறிவுரை வழங்கி உள்ளார்.. அவரது ஆலோசனையின்படி இந்த தேர்தலை அமைதியாக நடத்தி தர கேட்டுக்கொள்கிறேன். கட்சி நிர்வாகிகள் விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டும். மக்கள் முதல்வர் அறிவுரைப்படி இதுவரை நல்ல முறையில் செயல்படுகிறோம் அந்தந்த பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி, அரவணைத்து செல்ல வேண்டும்; நல்ல அரவணைத்து செல்லும் பொறுப்பாளர்களை நீங்களே தேர்வு செய்து கொள்ள வேண்டும். மாவட்டத்திற்கு நியமிக்கபட்டுள்ள பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றிய நிர்வாகிகள் பல்லடம் கே.பி.பரமசிவம் எம்.எல்.ஏ.,பொங்கலூர் எஸ்.சிவாச்சலம், அவினாசி மு.சுப்பிரமணியம், வடக்கு ஒன்றியம் கே.என்.விஜயகுமார், துணை மேயர் சு.குணசேகரன்,வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், மாவட்ட பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன், அன்னூர் காளியப்பன், அவினாசி ராமசாமி, திருமுருகன் பூண்டி விஸ்வநாதன் உள்ளிட்ட நகர செயலாளர்கள் ஆகியோர்களுக்கு அமைச்சர்கள் கோகுல இந்திரா, எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் நிர்வாகிகள் பாரங்களை வழங்கினர்.



கூட்டத்தில் கருவம்பாளையம் மணி, கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், கே.என்.சுப்பிரமணி, மண்டலத் தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், ஸ்டீபன்ராஜ், தங்கமுத்து, ஒன்றிய பெருந்தலைவர் சாமிநாதன், சிராஜ்தீன், வெ.அய்யாசாமி, வி.கே.பி.மணி, அட்லஸ் லோகநாதன், உஷரவிகுமார், எஸ்.பி.என்.பழனிசாமி, கலைமகள் கோபால்சாமி, ராஜேஷ்கண்ணா, அவினாசி பேரூராட்சி தலைவர் ஜெகதாம்பாள், அன்னூர் சௌகத் அலி, பட்டுலிஙம், பூலுவபட்டி பாலு, சேவூர் வேலுசாமி, யு.எஸ்.பழனிசாமி, சில்வர் வெங்கடாச்சலம், டி.பார்த்திபன், ஹரிஹரசுதன், கருணாகரன், கண்ணபிரான், பல்லடம் ஜோதிமணி, சித்ராதேவி, வைஸ் பழனிச்சாமி, சித்துராஜ், தர்மராஜன், கவுன்சிலர்கள் முருகசாமி, செல்வம், வசந்தாமணி, பிரியா சக்திவேல்,பேபி தர்மலிங்கம் நிர்வாகிகள் ராஜ்குமார், ரத்தினகுமார், அசோக்குமார், யுவராஜ் சரவணன், பெரிச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி, பரமராஜன் நீதிராஜன் மங்கலம் சுப்பிரமணியம், மற்றும் உள்ளாட்சி அமைப்பு, கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் ஐயப்பன் கோவிலில் அமைச்சர் தலைமையில் சிறப்பு பூஜை




திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் உள்ள ஐயப்பன் கோவிலில் கணபதி ஹோமம், மஹா அஷ்டபதி ஹோமம், தீபாதரணை மற்றும் சிறப்பு அலங்கார பூஜைகள் மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் சபரிமலை பெரும்பால திருமேனி தந்திரி ரஞ்சூ பூஜைகளை நடத்தி வைத்தார். பின்னர் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் ஆனந்தன் துவக்கி வைத்தார். இந்த மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், கிருத்திகா சோமசுந்தரம் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Dec 25, 2014

அண்ணா தி.மு.க.உட்கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்

திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க., உட்கட்சி தேர்தல் வருகின்ற 27ம் தேதி முதல் 5 நாட்கள் நடைபெறுகிறது; இது குறித்த ஆலோசனை கூட்டம் மாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கே.பி.பரமசிவம் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், அவைத் தலைவர் வி.பழனிசாமி, வடக்கு தொகுதி செயலளார் ஜெ.ஆர்.ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமை தாங்கி பேசியதாவது:- 
அண்ணா தி.மு.க., கட்சியின் விதிமுறைப்படி, 5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி, பல்லடம்  ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளை கொண்ட திருப்பூர் மாநகர் மாவட்ட  அண்ணா தி.மு.கவின்  உட்கட்சி தேர்தல் வருகின்ற  27ம் தேதி துவங்கி, 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மாநகரம், மாவட்டம், ஒன்றியம், அனைத்து கிளைகள் என ஒவ்வொரு அமைப்பிலும் தலைவர், செயலாளர், இணை செயலாளர், 2 துணை செயலாளர், பொருளாளர், மேலவை பிரதிநிதி அல்லது மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் 3 என, மொத்தம் 9 வகையான பொறுப்புகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். திருப்பூர் மாநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் கோகுல இந்திரா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்களை பொதுச்செயலாளர் ஜெயலலிதா நியமித்துள்ளார். மேலும் தேர்தல் ஆணையாளர்களாக விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் எம்.எல்.ஏ.,க்கள் ஆகியோர்களும் நியமனம் செய்யபட்டுள்ளனர். எனவே, கட்சியில் தொடர்ந்து 5 ஆண்டுகள் இருப்பவர்கள் மட்டுமே, தேர்தலில் போட்டியிடவும், ஓட்டளிக்கவும் தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். அம்மா அவர்களால் நமது மாவட்டத்திற்கு தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தந்து தமிழகத்தில் அமைதியாக தேர்தல் நடந்த முதல் மாவட்டம் திருப்பூர்  மாநகர் மாவட்டம் என்ற பெருமையை மக்கள் முதல்வர் அம்மா அவர்களுக்கும், கட்சிக்கும் பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார். 
கூட்டத்தில் பல்லடம் சட்டமன்ற தொகுதியை மாநகர் மாவட்ட கழகத்தில் இணைந்து செயல்பட அனுமது வழங்கிய பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்தும், வருகிற கட்சி அமைப்பு தேர்தலை திருப்பூர் மாநகர் மாவட்ட பகுதியில் அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்தி முடிப்பது என்றும்,  திருப்பூர் மாநகர், மாவட்ட வளர்ச்சிக்காக அதிக நிதி வழங்கி மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் மக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு  நன்றியை தெரிவித்துக்கொண்டும், வருகின்ற 2016 தேர்தலில் கருணாநிதியை முழுமையாக மக்கள் புறக்கணிக்கும் வகையில் சிறப்பாக செயலாற்றுவது, மீண்டும் ஜெயலலிதா முதல்வராக வேண்டி திருப்பூரில் உள்ள கோவில்கள், மசூதிகள், சர்ச்களில் தொடர் பிரார்த்தணைகள் நடத்துவது என்பது  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.,கருப்புசாமி, தொகுதி செயலளார்கள் தம்பி மனோகரன், சேவூர் வேலுசாமி, லோகநாதன்,சார்பு அணி நிர்வாகிகள் வி.ராதாகிருஷ்ணன், கருவம்பாளையம் மணி, கண்ணப்பன், மார்க்கெட் சக்திவேல், அன்பகம் திருப்பதி, வழக்கறிஞர் சுப்பிரமணியம், ஸ்டீபன்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், சில்வர் வெங்கடாசலம், சிவாச்சலம், மு.சுப்பிரமணியம், நகர செயலாளர்கள் வி.கே.பி.மணி, ராமசாமி, விஸ்வநாதன் உள்ளிட்டவரக்ளும், சார்பு அணி நிர்வாகிகள் கரைபுதூர் நடராஜன், யு.எஸ்.பழனிச்சாமி, புத்தரச்சல்பாபு, ஆனந்தகுமார், சித்ராதேவி, ஜோதிமணி கிருதிகசொமசுன்தரம், வசந்தாமணி,அய்யாசாமி உள்ளிட்டவர்களும் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். 
முடிவில் மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் நன்றி கூறினார்.


திருப்பூரில் எம்.ஜி.ஆர்.நினைவு தினம்

திருப்பூர், பல்லடம், பொங்கலூர் பகுதியில் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க., சார்பில் கழக நிறுவனர் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பழைய பஸ் நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மகளிர் அணி மாநில துணைச் செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி தலைமையில் அண்ணா தி.மு.க.வினர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவரும் ஊர்வலமாக சென்று பார்க் ரோட்டில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் எம்.எல்.ஏ., கே.பி.பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், வடக்கு ஒன்றிய செயலளார் ஜெ.ஆர்.ஜான், அம்மா பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கருவம்பாளையம்  மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜன், எம்.மணி, சார்பு அணி நிர்வாகிகள் மார்க்கெட் சக்திவேல், வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணியம், கரைபுதூர் நடராஜன், ஜோதிமணி, சித்ராதேவி, மண்டலத்தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிசாமி, கலைமகள் கோபால்சாமி, ராஜேஷ்கண்ணா, வளர்மதி கருணாகரன், சாகுல்ஹஅமீது, தாமோதரன், கண்ணன், பட்டுலிங்கம், பூலுவபட்டி பாலு, கண்ணபிரான், வசந்தாமணி, பிரியா சக்திவேல், ரத்தினகுமார், ராஜ்குமார், ரஞ்சித்ரத்தினம், நீதிராஜன், பாசறை யுவராஜ் சரவணன்,லோகநாதன், பரமராஜன் மற்றும் உள்ளாட்சி மன்ற, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,சார்பில் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பழைய பஸ் நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்குமேயர் அ.விசாலாட்சி தலைமையில் அண்ணா தி.மு.க.வினர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் கே.பி.பரமசிவம் எம்.எல்.ஏ.,மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், கருவம்பாளையம்எம்.மணி, மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜன், மார்க்கெட் சக்திவேல், வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணியம், கரைபுதூர் நடராஜன், மண்டலத்தலைவர் கிருத்திகா சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கொண்டனர்.

Dec 23, 2014

திருப்பூரில் பேரவை சார்பில் மக்கள் நலத்திட்டங்களை விளக்கி துண்டு பிரசுரங்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் விநியோகம்

திருப்பூரில் ஜெயலலிதா பேரவை சார்பில் மக்கள் நலத்திட்டங்களை விளக்கி துண்டு பிரசுரங்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் ஜெயலலிதா பேரவை சார்பில் அரசின் மக்கள் நல திட்டங்களை விளக்கியும் கருணாநிதி ஆட்சியில் செய்த ஊழல் குறித்த துண்டு பிரசுரங்கள்  நிகழ்ச்சி 22வது வார்டு  கொடிக்கம்பம் அருகில் வார்டு கவுன்சிலர் கலைமகள் கோபால்சாமி தலைமையில்  நடைபெற்றது. மாவட்ட பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட தலைவர் அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்,பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநகர் மாவட்ட கழக  செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்தும், சிறப்பு அன்னதானம் வழங்கியும் சிறப்புரை ஆற்றினார் 
இந்த நிகழ்ச்சியில் வடக்கு  செயலாளர் ஜெ.ஆர்.ஜான், துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், மாநகர, ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார்,ஹரிகரசுதன், வளர்மதி கருணாகரன், சாகுல்அமீது, தாமோதரன், ரத்தினகுமார், அசோக்குமார்,காலனி செல்வராஜ், நீதிராஜன், கவுன்சிலர்கள் சபரிஸ்வரன், விஜயகுமார், ரங்கசாமி, கனகராஜ் புலவர் சக்திவேல், வேலுமணி, பாஸ் என்கிற பாஸ்கரன், வே.சரவணன்,உள்ளிட்டவரக்ளும், ஜெகநாதன், சுந்தரமூர்த்தி உள்ளிட்ட கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர்கள், தலைமை கழக பேச்சாளர்கள் மற்றும் மகளிர் அணியினர், பொதுமக்கள் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்
முன்னதாக மாவட்ட  அண்ணா தி.மு.க., ஜெயலலிதா பேரவை சார்பில் அணியின் மாவட்ட செயலளார் வி.ராதாகிருஷ்ணன் தலைமையில் கவுமாரியம்மன் கோவிலில், மக்கள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதலமைச்சராக வேண்டி சிறப்பு பூஜைகளை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் நடத்தி வைத்தார். 



Dec 22, 2014

தொகுப்பு வீடுகள், அம்மா நகர் திறப்பு



திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதி, கேத்தனூர் ஊராட்சி எட்டமன் நாயக்கன்பாளையத்தில், தமிழக அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதிக்கு அம்மா நகர்' என பெயர் சூட்டப்பட்ட பலகையும் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார். அருகில் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பரமசிவம்,  மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எம்.சண்முகம், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் எஸ்.சிவாச்சலம், எம்.கே.ஆறுமுகம், கேத்தனூர் ஊராட்சி தலைவர் ஹரிகோபால், கரைபுதூர் ஊராட்சி தலைவர் ஏ.நடராஜன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ் மொழி அமுது ஆகியோர் உள்ளனர்.

திருப்பூரில் பிக்-பஜாரில் நடந்த ரத்த தான முகாமினை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்தார்



திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள பிக் பஜார் வளாகத்தில் நடைபெற்றது.முகாமிற்கு 45-வது வார்டு மாமன்ற உறுப்பினர் எம்.கண்ணப்பன் முன்னிலை வகித்தார். திருப்பூர் பிக்-பஜார் கிளை மேலாளர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். ரத்ததான முகாமினை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் தொடக்கி வைத்தார்.முகாமில் பிக் பஜார் ஊழியர்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட 50 பேர் ரத்த தானம் கொடுத்தனர். இதனை திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் சண்முகவடிவு பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நடந்த ரத்த பரிசோதனை முகாமினை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.தங்கவேல் தொடக்கி வைத்தார். இந்த முகாமில் 79 பேருக்கு ரத்த வகை கண்டறியப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வி.ராதாகிருஷ்ணன், ஜெ.ஆர்.ஜான், மாவட்ட ஊராட்சித்தலைவர் வி.எம்.சண்முகம், அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் கே.என்.விஜயகுமார், கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், கே.என்.சுப்பிரமணியம், கண்ணன், ராஜேஷ்கண்ணா. கண்ணபிரான், யுவராஜ்சரவணன், ரத்தினகுமார், அசோக்குமார், பரமராஜன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பிக்-பஜார் துணை மேலாளர் தேவராஜ் நன்றி கூறினார். 

திருப்பூரில் மீண்டும் ஜெயலலிதா முதல்வராக வேண்டி அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கந்தபெருமான் கோவிலில் ஹோமம் நடத்தினார்

திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க., சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டியும், திருப்பூரில் தொழில் சிறக்க வேண்டியும் கல்லூரி சாலையில் கொங்கணகிரி அருள்மிகு ஸ்ரீ கந்தபெருமான் கோவிலில் தலைமை குருக்கள் சந்திரசேகரன் தலைமையில்  மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் முன்னிலையில் இன்று பகல் 11 மணியளவில் சத்சீத சன்மான்ய திருடதி சிறப்பு ஹோமம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இதில் துணை மேயர் சு.குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், எம்.எல்.ஏ., கருப்பசாமி, சார்பு அணி நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், கிருத்திகா சோமசுந்தரம், கருவம்பாளையம் மணி, கண்ணப்பன், மார்க்கெட் சக்திவேல், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெகதம்பாள், பலல்டம் எம்.கே.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள்  கே.என்.விஜயகுமார், ஒன்றியகுழுதலைவர் ஆர்.சாமிநாதன்,துணை தலைவர் சிராஜ்தீன், அன்னூர் காளியப்பன், சில்வர் வெங்கடாசலம், அவினாசி மு.சுப்பிரமனியம், மண்டலத்தலைவர் கிருததிகா சோமசுந்தரம், நிலைக்குழு தலைவர்கள் அன்பகம் திருப்பதி, பிரியா சக்திவேல், வி.கே.பி.மணி, வழக்கறிஞர்கள் சுப்பிரமணியம், அவினாசி ராமசாமி, ஜெகதீசன், சேயூர் வேலுசாமி, வெ.அய்யாசாமி,ஊராட்சி மன்ற தலைவர்கள் கரைபுதூர் நடராஜ், மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜன்,  திருமுருகன் பூண்டி பேரூராட்சி துணை தலைவர் விசுவநாதன், முன்னாள் தலைவர் லதா சேகர், மங்கலம் ,முருகசாமி, அஸ்கர் அலி, பாலசுப்பிரமணியம், சூர்யா,


கூட்டுறவு சங்க நிர்வாகிகள் வளர்மதி கருணாகரன், தாமோதரன்,மாநகர் மாவட்ட நிர்வாகிகள் அட்லாஸ் லோகநாதன், கலைமகள் கோபால்சாமி, எஸ்பி.என்.பழனிச்சாமி, உஷா ரவிகுமார், ராஜேஷ்கண்ணா, கண்ணபிரான், ரத்தினகுமார், அசோக்குமார், யுவராஜ் சரவணன், ரஞ்சித் ரத்தினம், சடையப்பன், நீதிராஜன், உள்ளாட்சி, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் சிறப்பு ஹோமத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல், அன்னதானம் ஆகியவற்றை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்.

திருப்பூர் அடுத்துள்ள மங்கலத்தில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் எம்.எல்.ஏ.,பரமசிவம் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில் நடை பெற்றது. முகாமிற்கு திருப்பூர் தெற்கு தாசில்தார் கண்ணன் தலைமை தங்கி பேசினார். ஊராட்சி மன்ற தலைவர் பாலாமணி சுப்பிரமணியம் வரவேற்று பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் பாரிவேல், மங்கலம் தொடக்க கூட்டுறவு வங்கி தலைவர் சில்வர் வெங்கடாசலம், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் சிராஜ்தீன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
முகாமில் வாரிசு சான்று, பட்டா மாறுதல், முதியோர், விதவை உதவி தொகை, ரேசன் கார்டு பெயர் சேர்த்தல், நீக்கல், சாதி, இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ், உள்ளிட்ட 343 மனுக்கள் பொதுமக்கள் அளித்தனர் அதில் 293 (90 சதவீதம்) மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு அவற்றை பயனாளிகளுக்கு வழங்கி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பரமசிவம் பேசியதாவது:-
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உலகம் போற்றும் அம்மா திட்டம் என்ற உன்னத திட்டத்தை தந்துள்ளார். இந்த திட்டம் மூலம் பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்வது குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு வழங்கும் திட்டங்களை நீங்கள் அனைவரும் பெற்று பயன் பெறவேண்டும். இது போன்ற நல்ல திட்டங்களை மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழங்க உள்ளார்.அவருக்கு நீங்கள் என்றும் ஆதரவு அளிக்க வேண்டும்.இவ்வாறு பரமசிவம் எம்.எல்.ஏ.பேசினார்.
மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எம்.சண்முகம் தனது வாழ்த்துரையில் பேசியதாவது:-
இது போன்ற நல்ல திட்டங்களை அளித்து வரும் ஜெயலலிதா கரங்களை நீங்கள் வலுபடுத்தும் வகையில் வரும் காலங்களில் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். உங்கள் கோரிக்கை எதுவானாலும் உங்கள் பகுதி ஊராட்சி மன்ற தலைவரிடம் அளியுங்கள் அங்கு நிர்வர்த்தி செய்து தரப்படும் என பேசினார்.
முகாமில் ஊராட்சி கழக செயலாளர் சுப்பிரமணி, பல்லடம் மார்க்கெட்டிங் சொசைடி தலைவர் சித்துராஜ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அஸ்கர் அலி, நாசர் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற செயலாளர் பொன்னுசாமி மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதி நிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் கிராம நிர்வாக அலுவலர் செல்வராணி நன்றி கூறினார்.
இதேபோல் திருப்பூர் அருகே உள்ள கணியாம்பூண்டி ஊராட்சியில் "அம்மா' திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமை தங்கினார். ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.சுப்பிரமணியம், துணைத்தலைவர் மகாலிங்கம், கூட்டுறவு சங்கத்தலைவர் மு.சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த முகாமில் 210 மனுக்கள் பெறப்பட்டு அதில் 108 மனுக்கள் மீது உடனடித் தீர்வு காணப்பட்டது. அவற்றை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஏ.கருப்பசாமி பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்த முகாமில் கிராம நிர்வாக அலுவலர் சிவாஜி, வருவாய் ஆய்வாளர் ஜெகநாதன், கூட்டுறவு சங்கத் தலைவர் முருகானந்தம், மாவட்ட கவுன்சிலர் கவிதா தங்கராஜ் மாற்றும்போது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 6 நடை மேம்பாலங்கள் அமைக்க ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், மாவட்டத்துக்கு என புதிதாக சுற்றுலாத்துறை அலுவலகம் தோற்றுவித்துஅரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டத்தின் திட்டக்குழுகூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சிமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட திட்டக்குழு தலைவர் வி.எம்.சண்முகம் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் (பொறுப்பு) ரூபன் சங்கர்ராஜ், திட்டமிடுதல் அலுவலர் வீரமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி ஒன்றியங்கள், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்தும், பிற துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் ஆய்வு செய்து பேசியதாவது:–
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 6 நடை மேம்பாலங்கள் அமைக்க ரூ.4 கோடியே 3 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வேளாண் பொறியியல் துறை சார்பில் எந்திரங்கள் வாடகைக்கு விடுவதில் இலக்கை அடையவில்லை. எனவே இதுபற்றி விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, எந்திரங்களை முழுமையாக வாடகைக்கு விட வேண்டும்.
தற்போது நல்ல மழை பெய்துள்ளதால் அனைத்து குளம், குட்டைகளும் நிரம்பி உள்ளன. இவற்றில் மீன் வளத்துறையினர் போதுமான மீன் குஞ்சுகளை விட வேண்டும். மகளிர் திட்டம், கூட்டுறவுத்துறை போன்றவற்றில் கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கு விரைவில் பூர்த்தி செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பில்லூர் 2–வது கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்துக்கு என்று இதுவரை தனியாக சுற்றுலா அலுவலகம் இல்லாமல் இருந்தது. தற்போது புதிதாக சுற்றுலாத்துறை அலுவலகம் தோற்றுவித்து, புதிதாக ஒரு அலுவலரை நியமிக்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசினார்.
கூட்டத்தில் திட்டக்குழுஉறுப்பினர்கள் கே.என்.விஜயகுமார், பழனிசாமி, நடராஜன், கோவிந்தசாமி, சண்முகசுந்தரம், ஜி.வி.வாசுதேவன், ஜெயலட்சுமி உள்ளிட்டவர்களும் மற்றும் அனைத்துத்துறை அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் அருகே புது வாழ்வு திட்டத்தில் அரசின் நல உதவிகளை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்.

ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி மக்களை தேடி சென்று சேவை செய்யும் அரசாக அண்ணா திமுக அரசு திகழ்கிறது என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், கேத்தனூர் ஊராட்சியில் தமிழக அரசின் சார்பில் 97 பயனாளிகளுக்கு ரூ.93.27 லட்சம் மதிப்பில்  97 மாற்று திறனாளிகளுக்கான உபகரனங்கள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கும் விழா  ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்,பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
தேர்தல் நேரத்தில் கொடுக்கும் வாக்குறுதிகளை எந்த அரசியல் கட்சிகளும் நிறைவேற்றிய வரலாறு இல்லை.ஆனால் இந்தியாவில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா தேர்தலின் போது அவர் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளார். தமிழகத்தில் உள்ள ஏழரை கோடி மக்களும் ஜெயலலிதா அரசில் ஏதாவது ஒரு நலத்திட்ட உதவியை நிச்சயம் பெற்று இருப்பார்கள்.அதற்கு உதாரணம் கேத்தனூர் ஊராட்சியில் அனைத்து கிராமங்களும் இன்று சிறப்பாக  இருக்கிறது என்பதற்கும், இந்த ஊராட்சி தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக திகழ்வதற்கும் காரணம் ஜெயலலிதாவின் திட்டங்கள்.அனைத்தும் தொலைநோக்கு சிந்தனையுடன் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது அதை நீங்கள் உணர வேண்டும். அரசை தேடி மக்கள் சென்ற காலம் போய் ஜெயலலிதா வழி காட்டுதலின்படி இன்று மக்களை தேடி சென்று சேவை செய்யும் அரசாக அண்ணா திமுக அரசு திகழ்கிறது.
இந்த ஊராட்சியின் மந்திரிபாளையம் பகுதிக்கு 15 நாட்களில் பட்டா வழங்கப்படும். முதியோர் ஓய்வூதிய தொகை 210 பேருக்கு இந்த கிராமத்தில் வழங்கப்படுகிறது.
ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற பின்னர்தான் 17 ஊராட்சிகளில் ,2468 குடும்பங்கள் மேம்பட புது வாழ்வு திட்டம் வாய்ப்பு அளிக்கிறது. புது வாழ்வு திட்டம் மூலம் 11218 பயனாளிகள்  பயன் பெற்று இருக்கிறநற். அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தது ஜெயலலிதாவின் திட்டம் தான். ரூ.15.60 கோடி செலவில் புது வாழ்வு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 634  சுய உதவி குழுக்கள் பயன் பெற்றுள்ளது, இரு பாலருக்கும் இத்திட்டம் மூலம் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
17 ஊராட்சிகளில் வறுமை ஒழிப்பு சங்கங்கள், கூட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 3வது முறையாக ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற வுடன் 1 லட்சம் பட்டாக்களும், அடுத்த ஆண்டில் 2 லட்சம் பட்டாக்கள் வழங்கவும் அறிவித்தார். நமது மாவட்டத்தில் மட்டும் 9 ஆயிரம் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயித்தார். இது வரை 6 ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.,
மாற்றுத்திறனாளிகளுக்கு , வாசிப்பாளர்களுக்கு இரு மடங்கு கல்வி உதவி தொகை, ஜெயலலிதா அறிவிப்பின்படி, அவரது வழி காட்டுதலின் பேரில் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் மன நல காப்பகம் அமைக்க சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்தார். அதுவும் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இப்படி பல்வேறு திட்டங்களை மக்கள் பயன்பெறும் வண்ணம் செயபடுத்தும் அரசாக மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதல்படி செயல்படுகிற இந்த அரசு செயல்படுகிறது. என்றைக்கும் அவரது விசுவாசிகளாக நீங்கள் இருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
விழாவில் பல்லடம் எம்.எல்.ஏ., கே.பி.பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், துணை மேயர் சு.குணசேகரன்,  பொங்கலூர் ஒன்றியக் குழுத்தலைவர் 
நிகழ்ச்சியில் பல்லடம் ஒன்றிய தலைவர் எம்.கே.ஆறுமுகம்,கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர்கள் நடராஜன், முருகசாமி, மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜன் உள்ளிட்ட மாவட்ட கவுன்சிலர்கள், மாவட்ட நிர்வாகிகள் கண்ணப்பன், கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவல், வழக்கறிஞர் சுப்பிரமணியம், புத்தரச்சல் பாபு, சித்துராஜ் உள்ளிட்ட கூட்டுறவு சங்க தலைவர்கள் ஜெய்ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.எம்.தங்கராஜ், மாவட்ட சுகாதாரத்துறை  துணை இயக்குனர் டாக்டர் ரகுபதி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ் மொழி அமுது,உதவி அலுவலர் பாலாஜி, மற்றும் ஏ.டி.பி.கிரிதரன், அர்ஜுன், பொது மக்கள் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..



திருப்பூரில் கியாஸ் மணியம் பெற சிறப்பு முகாமை துணை மேயர் தொடங்கி வைத்தார்

திருப்பூரில், சமையல் கியாஸ் மானியத்திற்கான பதிவு செய்யும் சிறப்பு முகாமை துணை மேயர் குணசேகரன் தொடக்கி வைத்தார்.சமையல் கியாஸ் மானியத்தை பெற வாடிக்கையாளர்களுக்கு வங்கிக் கணக்கு மூலமாக வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு, ஆதார் அட்டை எண் ஆகியவை சமையல்கியாஸ் ஏஜென்சி விநியோக மையங்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருப்பூர் மாநகர் மாவட்டஇளைஞர் அணி செயலாளரும், மாநகராட்சி துணை மேயருமான  சு.குணசேகரன், பாரத் கியாஸ் ஏஜென்சியுடன் இணைந்து திருப்பூர் வாலிபாளையம் மாநகராட்சி பள்ளியில் கியாஸ் மானிய பதிவு முகாம் நடத்த ஏற்பாடு செய்தார். அதன்படி கியாஸ் மானிய பதிவு முகாம் நடந்தது. திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன் பொதுமக்களுக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்க ஏற்பாடு  செய்திருந்தார்.இதனால் ஒரே நாளில் 31-வது வார்டு பகுதியை சேர்ந்த 800 க்கும் அதிகமானோர் கியாஸ் மானியம் பெற பதிவு ,செய்தனர். இந்த முகாமில் பி.கே.எஸ்.சடையப்பன், சிவகுமார், மாப்பிள்ளை என்கிற வெங்கிடுபதி ஆகியோர் உள்ளிட்ட கியாஸ் ஏஜன்சி அலுவலர்கள் பங்கேற்றனர். வருகின்ற 23 ந் தேதி வாலிபாளையம் மாநகராட்சி பள்ளியில் மக்களின் முதல்வர் இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், மாநகர் மாவட்ட கழக செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆலோசனையின் பேரில் கியாஸ் மானியத்துக்காக வங்கி கணக்கு துவங்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன் தெரிவித்தார்.


திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெயர் பலகையும் தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்







திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெயர் பலகையும் தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார். திருப்பூர் கலெக்டர் கோவிந்தராஜ், பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம்,  மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், ஊராட்சி ஒன்றிய தலைவர் ஆறுமுகம், கேத்தனூர் ஊராட்சி தலைவர் ஹரிகோபால், மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ் மொழி அமுது, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் நுண்கலை மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்க்கு தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்







திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் நுண்கலை மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்க்கு தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பரிசு, சான்றிதழ்களை  வழங்கினார்.திருப்பூர்  துணை மேயர் சு.குணசேகரன், கல்லூரி முதல்வர் ரேச்சல் நான்சி பிலிப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் கலெக்டர் கு.கோவிந்தராஜ் பார்வையிட்டனர்



திருப்பூர், கேத்தனூர் ஊராட்சி பள்ளியில் வைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் கலெக்டர் கு.கோவிந்தராஜ், பல்லடம் எம்.எல்.ஏ. பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், திருப்பூர் துணை மேயர் குணசேகரன், கேத்தனூர் ஊராட்சி தலைவர் ஹரிகோபால் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

அ.தி.மு.க., அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் நடந்தது



அ.தி.மு.க., அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் 
வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் நடந்தது



திருப்பூர், டிச. 22-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்ற அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், தலைமை தாங்கி  சிறப்புரையாற்றினார். அவினாசி எம்.எல்.ஏ., கருப்பசாமி, பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம், திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன் ,அவைத்தலைவர்கள் எம்.சண்முகம், வெ.பழனிசாமி  அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 கூட்டத்தில் வனத்துரை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசும்போது கூறியதாவது:&
 மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரை பொறுப்பாளர்களாக நியமித்து உள்ளார்கள். அம்மா அவர்கள் தேர்தலை எப்படி நடத்த வேண்டுமென அறிவுரை வழங்கி உள்ளார்கள். இந்த தேர்தலை நீங்கள் அமைதியாக நடத்தி தர கேட்டுக்கொள்கிறேன். கட்சி நிர்வாகிகள் விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டும். அம்மா அவர்கள் அறிவுரைப்படி இதுவரை நல்ல முறையில் செயல்படுகிறோம். கடந்த வாரத்தில் தி.மு.க., அமைப்பு தேர்தலில் பல்வேறு தகராறுகள் நடந்ததை அறிவோம். ராணுவ கட்டுப்பாட்டுடன் நமது கழகத்தை நடத்தி வரும் அம்மா அவர்கள் மிக அமைதியான இயக்கமாக நடத்தி வருகிறார்கள். 
 அந்தந்த பகுதிகளில் கழக நிர்வாகிகள்ஆஅலோசனை நடத்தி, அரவணைத்து செல்ல வேண்டும்; நல்ல அரவணைத்து செல்லும் பொறுப்பாளர்களை நீங்களே தேர்வு செய்து கொள்ள வேண்டும். 
 பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்க அம்மா அஅவர்கள் சில விதிமுறைகளை அறிவித்து உள்ளார்கள். 
அ.தி.மு.க., இடைவெளியின்றி தொடர்ந்து 5 ஆண்டுகள் இருப்பவர்கள் மட்டுமே கழக தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் தகுதி பெற்றவர்கள். கழக உறுப்பினராக இருக்கும் கால கட்டத்தில் கழக வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டவர்கள் தகுதியற்றவர்கள்.
 இந்த தேர்தலை சிறப்பாக நடத்த விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பொறுப்பாளர்கள் வர உள்ளனர். அவர்களுடன் இணைந்து, இந்த தேர்தலை சிறப்பாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
 இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:&
பல்லடம் சட்டமன்ற தொகுதியை மாநகர் மாவட்ட கழகத்தில் இணைந்து செயல்பட அனுமது வழங்கிய அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொளவ்து; வருகிற அமைப்பு தேர்தலை திருப்பூர் மாநகர் மாவட்ட பகுதியில் அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்தி முடிப்பது. திருப்பூர் மாநகர், மாவட்ட வளர்ச்சிக்காக நிதியை வாரி வழங்கி மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வது. 2016 தேர்தலில் கருணாநிதியை முழுமையாக மக்கள் புறக்கணிக்கும் வண்ணம் சிறப்பாக செயலாற்றுவது, அம்மா அவர்கள் மீண்டும் முதல்வராக வேண்டி திருப்பூரில் உள்ள கோவில்கள், மசூதிகள், சர்ச்களில் தொடர் பிரார்த்தணைகள் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 கூட்டத்தில், தொகுதி செயலாளர் ஜே.ஆர்.ஜான், வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், ஒன்றிய பெருந்தலைவர் சாமிநாதன்,  அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, மருத்துவரணி செயலாளர் சீனியம்மாள், வக்கீல் அணி செயலாளர் கே.என்.சுப்பிரமணி, வீரபாண்டி சோமு, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஸ்டீபன்ராஜ், மீனவரணி செயலாளர் தங்கமுத்து, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், நல்லூர் நகர செயலாளர் டெக்ஸ்வெல் முத்து, வேலம்பாளையம் அய்யாசாமி, வி.கே.பி.மணி,அவினாசி சுப்பிரமணி, ஜெகதாம்பாள், அன்னூர் சவுகத் அலி,பட்டுலிஙம், பூலுவபட்டி பாலு, நத்தக்காட்டு மணி,  சேவூர் வேலுசாமி, சில்வர் வெங்கடாச்சலம், எச்.ஆர்.ஜெயக்குமார், முன்னாள் எம்.பி., தியாகராஜன், கருணாகரன், கண்ணபிரான், தம்பி மனோகரன், பல்லடம் சித்ரா தேவி, ஏ.எஸ்.கண்ணன், சடையப்பன், கவுன்சிலர்கள் வசந்தாமணி, கேபிள் சிவா, சுபா மோகன், ஆனந்தன், லட்சுமி, வேலுசாமி, பிரியா சக்திவேல், சத்யா, கல்பனா, பேபி தர்மலிங்கம், ஜெயந்தி, சண்முகசுந்தரம், கே.பி.சண்முகம், வேலுசாமி,செல்வம்  சின்னசாமி, கனகராஜ், சபரி, கணேஷ், பாலன், சேகர், ஈஸ்வரன், சின்னசாமி, செந்தில்குமார், பாலசுப்பிரமணியம், அமுதா, முருகசாமி, உமா மகேஷ்வரி, கனகரராஜ், கலா, செல்வி, சுஜாதா சின்னசாமி, யு.எஸ்.பழனிசாமி, சரளை ரத்தினசாமி,அன்னூர் காளியப்பன், பூண்டி விஸ்வநாதன், ராஜேஷ்கண்ணா, நீதிராஜன், பரமராஜன், ரத்தினகுமார், பெரிச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி,  செந்தில், மூர்த்தி, செல்வம், கேபிள் பாலு, ஹரிஹரசுதன், வே.சரவணன், பாஸ் என்கிற பாஸ்கரன், அசோக், உள்ளிட்டோர் பங்கேற்றனர்

திருப்பூர் ,மாநகராட்சி போயம்பாளையம் அவினாசி நகரில் ரூ. 5.25 லட்சம் மதிப்பிலான ரேசன் கடையை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்








திருப்பூர் ,மாநகராட்சி போயம்பாளையம் அவினாசி நகரில் ரூ. 5.25 லட்சம் மதிப்பிலான ரேசன் கடையை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார். திருப்பூர் கலெக்டர் கோவிந்தராஜ், துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், கவுன்சிலர்கள் விஜயகுமார், ரங்கசாமி,  கண்ணப்பன், பட்டுலிங்கம், சண்முகசுந்தரம், பூளுவபட்டி பாலு, மற்றும் கருவம்பாளையம் மணி, தங்கமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

50 பேர் ரத்த தானம் அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் துவக்கி வைத்தார்








திருப்பூர் ,டிச.22-

திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் நம்பிக்கை நமது அமைப்பு மற்றும் பிக் பஜார் சார்பில் ரத்ததான முகாம் நேற்று காலை  திருப்பூர் டவுனில் உள்ள பிக் பஜார் வளாகத்தில் நடந்தது. முகாமிற்கு நம்பிக்கை அமைப்பு மாவட்ட தலைவர் ஆடிட்டர் சரவணன் தலைமை தாங்கினார். 45 வார்டு கவுன்சிலர் கண்ணப்பன், நம்பிக்கை நிறுவனர் ரஹீம், மாநில செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிக் பஜார் மேலாளர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். ரத்ததான முகாமை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் தொடக்கி வைத்தார்.முகாமில் பிக் பஜார் ஊழியர்கள்,பொதுமக்கள் 50 பேர் ரத்த தானம் கொடுத்தனர். இதனை திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை டாக்டர் சண்முகவடிவு பெற்றுக்கொண்டார். இதைதொடர்ந்து நடந்த ரத்த பரிசோதனை முகாமை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.தங்கவேல் தொடக்கி வைத்தார். இதில் 79 பேருக்கு ரத்த வகை கண்டறியப்பட்டது. நிகழ்ச்சியில் மண்டலத்தலைவர்கள்   ராதாகிருஷ்ணன், ஜான் மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், கழக அணி செயலாளர்கள் கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி, கே.என்.சுப்பிரமணி, கீதாஆறுமுகம்,  நிர்வாகி ஏ.எஸ்.கண்ணன் மற்றும் நம்பிக்கை அமைப்பின் 1 வது மண்டல நிர்வாகிகள் பாலாஜி, செல்வம், மணிவேல் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பிக் பஜார் துணை மேலாளர் தேவராஜ் நன்றி கூறினார். இதைதொடர்ந்து பிக் பஜார் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த கிருஸ்துமஸ் குடிலை அனைவரும் பார்வையிட்டு  பாராட்டினார்கள். முகாமிற்கான ஏற்பாடுகளை  நம்பிக்கை நிர்வாகிகள் சதானந்தம், நாராயணசாமி, நக்கீரன், காளீஸ்வரன், சையது அபுதாகீர், சுதாகர், ராஜேந்திரன், குமார் ஆகியோர் செய்து இருந்தனர். 

படம் : திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் நம்பிக்கை நமது அமைப்பு மற்றும் பிக் பஜார் சார்பில் ரத்ததான முகாமை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் தொடக்கி வைத்த போது  எடுத்தபடம்

திருப்பூர் கொடிகம்பம் நகர் பகுதியில், 22-வது வார்டு கவுன்சிலர் அலுவலகத்தை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்






திருப்பூர் கொடிகம்பம் நகர் பகுதியில், 22-வது வார்டு கவுன்சிலர் அலுவலகத்தை 
தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்  திறந்து வைத்தார். அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன் , கலைமகள் கோபால்சாமி தலைமை  தாங்கினார்கள்.
மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம்,  ஜான், முத்துசாமி,  ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், ,  கழக அணி செயலாளர்கள் கண்ணப்பன், கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், ஸ்டீபன் ராஜ், தங்கமுத்து, கே.என்.சுப்பிரமணி,  கவுன்சிலர்கள் முத்து, கீதா, கலைமகள் கோபால்சாமி,  ஏ.எஸ்.கண்ணன், கருணாகரன், சின்னு, ரத்னகுமார், நீதிராஜன், ராஜேஷ் கண்ணா,  ஷாஜகான், உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Dec 18, 2014

HON"BLE FOREST MINISTER IN DEPARTMENT REVIEW MEETING


Dec 17, 2014

திருப்பூர் தொழிலுக்கு ரூ.200 கோடி வழங்கி புத்துயிர் வழங்கியவர் ஜெயலலிதா அமைச்சர்கள் தங்கமணி, மோகன், எம்.எஸ்.எம்.ஆனந்தன், தோப்பு என்.டி.வெங்கடாசலம் ஆகியோர் புகழாரம்

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின்  25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சியின் பகுதியாக மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பழங்கரை ஐ.கே.எப்.வளாகத்தில் நடைபெற்றது.இதில்  குமரன் ரோட்டில் இருந்து காசிபாளையம் வரை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்க தன்னிறைவு திட்டத்தில் ரூ.1 கோடியே, 67 லட்சமும், திருப்பூர் காவலர் குடியிருப்பில் பூங்கா அமைக்க ரூ.6 லட்சமும்  நிர்வாகத்திடம் காசோலையாக வழங்கப்பட்டது.இந்த விழாவிற்கு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தலைவர் பப்பீஸ் ஏ.சக்திவேல் தலைமை தங்கினார். விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்களிடம் சாலை அமைப்பது, காவலர் குடியிருப்புக்கு பூங்கா அமைப்பதற்கு ஏற்றுமதியாளர் சங்கத்தினர் நிதி உதவி மற்றும் 25 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கினர். 
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-
தமிழ்நாட்டில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா அரசு, தொழில்கள் வளர தேவையான நல்ல சூழ்நிலையை உருவாக்கி தந்து உள்ளது. திருப்பூரின் ஏற்றுமதி தொழிலை பொறுத்தவரை நேரம் தவறாமை அவசியம் என்பதை உணர்ந்து, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.ஏற்றுமதியாளர் சங்கத்தினரே மக்கள் முதல்வர் ஜெயலலிதா ரூ 200 கோடி கொடுத்த பின்னர் தான் திருப்பூர் தொழில் மீண்டது என்று கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது.ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.1800 கோடி சலுகை தொகைகள் தரப்பட்டுள்ளன.அவர் தேவையான நிதி உதவிகளை அளித்த படியால் ரூ.21ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது என்பது மகிழ்ச்சி அளிக்கும் செய்தி.
திருப்பூரை தாண்டி தென் மாவட்டங்களுக்கு நீங்கள் தொழில் செய்ய வரும்போது தொழிலாளர் பற்றாக்குறை தீர்க்கப்படும். தொழிலாளர்கள் எங்கு அதிகம் உள்ளனரோ அங்கு சென்று தொழில் தொடங்க முன் வந்தால் தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சனை தீரும். தென்மாவட்டங்களில் தொழில் துவங்க முன் வந்தால் நிலத்தின் பதிவு மதிப்பு 50 சதவீதமாக குறைக்கப்பட்டும்.வாட் வரி சலுகை கிடைக்கவும் மக்கள் முதல்வரின் அரசு வழி வகை செய்யும்.மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில்தான் குறைந்த அளவில் மின்கட்டணம் நடைமுறையில் உள்ளது. திருப்பூரில் தொழிலாளர்களுக்கு மகளிர் தங்கும் விடுதி கட்ட ஜெயலலிதா அறிவித்துள்ளார். மாவட்ட கலெக்டர் அதற்கான இடத்தை தேர்வு செய்துள்ளார். தொழிலாளர்களை தங்க வைத்து பராமரிக்கும் பணியை மட்டும் நீங்கள் ஏற்றுக்கொள்ள முன் வந்தால் அரசு, விடுதி கட்டடத்தை கட்டித்தர தயாராக உள்ளது. 
வருகிற மே மாதம் தொழில் முனைவோர் மாநாட்டை மக்கள் முதல்வர் ஜெயலலிதா அரசு நடத்துகிறது. அந்த மாநாட்டில் நீங்கள் கலந்து கொண்டு தொழில் தொடங்குங்கள்.வேறு எங்கும் செல்லாமல் தமிழகத்திலேயே தொழில் முதலீடு செய்யுங்கள்.2001-06 ஜெயலலிதா ஆட்சியில் நோக்கியா கம்பெனி தமிழகம் தான் சிறந்த இடம் என தேர்வு செய்து தொழிலை துவக்கினார்கள். தினமும் 6 லட்சம் போன்களை தயாரித்து கொண்டு இருந்தனர். 2012 ம் ஆண்டு ஒரு சட்டம் கொண்டு வந்து  ரூ.2080 கோடி வரி கட்ட வேண்டும் என கூறி நோக்கியா கம்பெனியை மூட வைத்த பெருமை  காங்கிரஸ், தி.மு.க.கூட்டணி கட்சியை சாரும்.
தொழிலுக்கும், தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பான அரசாக ஜெயலலிதா அரசு இருக்கிறது. தொழிலுக்காக நீங்கள் கேட்பதை செய்து தர ஜெயலலிதா தயாராக இருக்கிறார். அவர் நான்கு அமைச்சர்களை அனுப்பி தொழில் பிரச்சினைகளை கேட்டறிந்து வரச்சொன்னார் என்றால் எந்தளவுக்கு அவர் இந்த தொழில் மீது அக்கரையுடன் இருகிறார் என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.அரசு துறை சார்பிலும் கூட்டு முதலீடுகள் அமைத்து தென் மாவட்டங்களில் தொழில் துவக்க இந்த அரசு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அமைச்சர் தங்கமணி பேசினார்.
ஊரக தொழில் துறை அமைச்சர் ப.மோகன் கலந்து கொண்டு பேசியதாவது:- 
தமிழ்நாட்டில் ரூ.63 ஆயிரத்து, 130 கோடி முதலீட்டில் 63 லட்சம் பேர் வேலை வாய்ப்பினை பெற்று வருகின்றனர். 18 ஆயிரம் கோடி ஏற்றுமதி வர்த்தகமும், ரூ.7 ஆயிரம் கோடி உள்நாட்டு வர்த்தகம் செய்யும் திருப்பூர் நகரம் என அறிகிறேன்.தமிழ்நாட்டில் 9.68 லட்சம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 23, 508 குறு சிறு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 
திருப்பூரில் தற்போது நீட்ஸ் என்கிற திட்டம் மூலம் சென்னை, மதுரை, சேலம் ஆகிய பகுதிகளில் பெண்களுக்கான சிறப்பு வர்த்தக முறை ஜெயலலிதா உருவாக்கப்பட்டு 95 ஆயிரம் சிறு தொழில் நிறுவனக்கள் துவக்கப்பட்டு மானியம் வழங்கப்பட்டுள்ளது. 3.8 கோடி ரூபாய் வேலையில்லாதவர்களுக்கு மானியமாக அளிக்கப்பட்டு உள்ளது. ரூ.115.91 கோடி மானியத்தை இந்த மாவட்டத்தில் மட்டும் மக்கள் முதல்வர் அரசு வழங்கி இருக்கிறது. 
தொழிலாளர்களுக்கு நோய்கள் ஏற்படுகிறபோது அதை எளிதில் தீர்க்க இ.எஸ்.ஐ.,மருத்துவமனையை ஜெயலலிதா வழங்கி இருக்கிறார். திருப்பூரில் 100 படுக்கைகளுடன் மிகப்பெரிய மருத்துவமனை விரைவில் துவங்கப்பட உள்ளது. தொழிலாளர் துறைக்கு ஜெயலலிதா  பல்வேறு அறிவிப்புகளை வழங்கினார். அங்கன்வாடிகள் 50 அமைக்க உத்தரவிட்டுள்ளார். நடமாடும் மருத்துவமனைகள் அமைக்க உத்தரவிட்டிருக்கிறார்..உங்கள் தொழில் இடர்பாடுகள் அனைத்தும் தீர்க்கும் ஆட்சி தான் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது.இவ்வாறு அமைச்சர் ப.மோகன் பேசினார்.
வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கலந்து கொண்டு பேசியதாவது:-
பின்னலாடை தொழில் மூலம் பல்வேறு சாதனை படைத்து திருப்பூர் நகரம் தொழிலில் சிறக்க காரணம் மக்கள் முதல்வர்தான்.இந்த ஆண்டு ரூ.25 ஆயிரம் கோடிக்கு அந்நிய செலாவணியை தரும் நகராக திருப்பூர் மாறி இருக்க காரணம் தொழில் சிறப்பாக நடத்த காரணமான ஏற்றுமதியாளர் சங்கமும், அவர்களுக்கு ஜெயலலிதா அரசு தந்த ஊக்கமும் உறுதுணையும் தான். திருப்பூரில் இந்த தொழிலை முன்னேற்றுவதற்காக அண்ணா தி.மு.க.ஆட்சி எப்போது எல்லாம் பொறுப்பேற்கிறதோ அப்போது எல்லாம் ஜெயலலிதா திருப்பூர் மீது மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தந்து உள்ளார். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மட்டும் தான் திருப்பூருக்கு பல்வேறு திட்டங்கள் தரப்பட்டுள்ளன. 991-96ம் ஆண்டு ஆட்சி காலத்தில் ஜெயலலிதா ரெயில்வே மேம்பாலம் திருப்பூரில் உருவக்கப்பட்டது. புதிய பஸ் நிலையம்குமரன் மகளிர் கல்லூரி ஆகியன உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் திருப்பூர் நகர மக்களுக்காக ஏற்றுமதியாளர் சங்கத்துடன் இனைந்து 3வது குடிநீர் திட்டம் உருவாக்கி செயல்படுத்தப்பட்டு வருகிரது. இவற்றுக்கெல்லாம் காரணம் மக்கள் முதல்வர் ஜெயலலிதாதான் என்பதை திருப்பூர் மக்கள் மறந்து விட முடியாது. அவரது ஆட்சிக்கு முன்னர் திருப்பூர் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தது என்பது தொழில் முனைவர்களான உங்களுக்கு நன்றாக தெரியும். 
 ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியாக சாய பட்டறை பிரச்சினைக்கு தீர்வு காண்போம் எனகூறி சென்றார். திருப்பூர் வடக்கு தொகுதியில் நான் போட்டியிட்டேன் எனக்கு அதிக வாக்குகளை அளித்து வெற்றி பெற செய்தீர்கள். உடனடியாக முதல்வர் ஜெயலலிதா அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அழைத்து திருப்பூர் சாயா, சலவை பட்டறைக்கு தீர்வு காண உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தொழிலும் பாதிக்கப்படக்கூடாது. விவசாயிகளும் பாதிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையில் ஆய்ந்து ரூ.200 கோடி வட்டியில்லா கடனாக கொடுத்து ஜெயலலிதா இந்த தொழிலை வாழ வைத்துள்ளார்.அவர் இன்னும் பல்வேறு திட்டங்கள் தொழில் துவங்கவும், தொழில் சிறக்கவும் தொடர்ந்து வழங்கி வருகிறார்,.
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
சுற்று சூழல் துறை அமைச்சர் தொப்பு என்.டி.வெங்கடாச்சலம் கலந்து கொண்டு பேசியதாவது:-
 மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதல்படியான இந்த அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. இன்ரைக்கு ஜெயலலிதா ஜீரோ டிஸ்சார்ஜ் என்ற முறையை அமல்படுத்தியதன் மூலமாக இன்று நொய்யல் ஆற்றில் நல்ல தண்ணீர் ஓடுகிறது. 8000 டி.டி.எஸ். அளவில் இருந்த நொய்யல் ஆற்றின் தண்ணீர் மாசு  ஜெயலலிதா நடவடிக்கையால் 2000 டி.டி.எஸ்.க்கும் குறைவாக உள்ளது. அதே நேரம் தொழிலும் முழுமையாக இயங்கி வருகிறது. மின்சாரம் தடையில்லா நிலையை உருவாக்கி ஜெயலலிதா ஆட்சியில் தான் இன்று நீங்கள் தொழிலை சிறப்பாக நடத்தும் நிலையை எட்டி இருக்கிறீர்கள். காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் காற்றுமாசு கட்டுப்படுத்தும் கருவிகள் அமைக்கப்பட்டு ஆன்லைன் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பிரிண்டிங் தொழிற்சாலிகளில் ஆர்.ஓ., சுத்திகரிப்பு கருவிகளை அமைக்க உடனடியாக இந்த அரசு அனுமதி வழங்கும். மின் வெட்டு இல்லாத மாநிலம் தமிழகம்தான்.திருப்பூர் பின்னலாடை தொழில் வளர்சிக்கு தமிழக அரசு தொடர்ந்து உதவிகரமாக இருந்து ஏற்றுமதி இலக்கை எட்ட தொடந்து ஒத்துழைப்பு வழங்கும்.எனவே நீங்கள் தொடர்ந்து இந்த அரசுக்கு ஒத்துழைப்பு தந்து உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பேசினார்.
ஏற்றுமதியாளர்கள் சங்கத்தலைவர் பப்பீஸ் ஏ.சக்திவேல் பேசும்போது,
திருப்பூர் ஏற்றுமதி வளர்ச்சியில் தமிழக அரசின் பங்கும், உதவியும் ஏராளமாக கிடைத்து இருக்கிறது.திருப்பூர் பின்னலாடை தொழில் கடந்த 3 ஆண்டுக்கு முன்னால் கேள்வி கூறியாக இருந்தது. முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்ற 3 வது நாளில் இதற்கு உடனடி தீர்வு கண்டார்.இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ.25 ஆயிரம் கோடி பின்னலாடை ஏற்றுமதி மூலம் எட்டுவோம். திருப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு பின்னலாடை கொண்டு செல்ல தூத்துக்குடி துறைமுகம் செல்ல வேண்டியுள்ளது. அதற்காக தூத்துக்குடி சாலையை அகலபப்டுத்தி தஏற்றுமதி வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்டும் வரிச்சlலுகையில் ரூ.300 கோடி நிலுவையில் உள்ளது.அவற்றை தமதம் இல்லாமல் தமிழக அரசு வழங்க வேண்டும். ஏற்றுமதியாளர்களுக்கு மின்கட்டண உயர்வில் விலக்கு அளிக்க வேண்டும்  என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தலைமை உரையில் பேசினார்.
விழாவில் திருப்பூர் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், சத்யபாமா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பரமசிவம், கருப்பசாமி, மாநகராட்சி ஆணையாளர் மா.அசோகன்ஆகியோர் வாழ்த்தி பேசினர். தொழில் அதிபர்கள் அகில் ரத்தினசாமி, சுதாமா கோபாலகிருஷ்ணன், ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி, எம்பரர் பொன்னுசாமி, கே.எம்.நிட்டிங் சுப்பிரமணியம், எஸ்பி என்.பழனிசாமி, அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், இளம் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் அருண், டிப் சங்க தலைவர் அகில் மணி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ் மொழி அமுது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





முடிவில் ஏற்றுமதியாளர்கள் சங்க துணைத் தலைவர் ஈஸ்ட்மென் சந்திரன் நன்றி கூறினார்.