Feb 14, 2022

அதிமுக சார்பில் 43 வார்டில் போட்டியிடும் ஆர்.பி கணேசன் அவர்களுக்கு மக்கள் வரவேற்பு


 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 43-வது வார்டில் அதிமுக சார்பில் RP. கணேசன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரம் முடிய இன்னும் நான்கு தினங்களே உள்ள நிலையில் தனது வார்டுக்குட்பட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் வேட்பாளர் கணேசன். மேலும் இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என்று வாக்குறுதி அளித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 


அந்த வகையில் இன்று 43-வது வார்டுக்குட்பட்ட முருகன் கோவில் தெரு, காந்தி தெரு, காவேரி நகர், யமுனா புரம், ராஜ வீதி ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

பிரச்சாரம் செல்லுமிடங்களில் அப்பகுதி மக்கள் இவருக்கு ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். வாக்கு சேகரிப்பின் போது வட்டச் செயலாளர் வெங்கடேஷ், ஐயப்பன், சிவா, ஆறுமுகம், ராஜேந்திரன், கண்ணுச்சாமி, திருஞானம், சாந்தி, சித்ரா, புருசோத்தமன், கந்தசாமி, மனோகரன், பத்மநாபன், தமிழ்ச்செல்வன், சீனிவாசன், நந்தகுமார், கிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருச்சி மாநகராட்சி 39-வது வார்டில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் எஸ்.ஆர்.ரவி அவர்களுக்கு மக்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பு


 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 39-வது வார்டில் அதிமுக சார்பில் எஸ்.ஆர்.ரவி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.


 தேர்தல் பிரச்சாரம் முடிய இன்னும் நான்கு தினங்களே உள்ள நிலையில் தனது வார்டுக்குட்பட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் வேட்பாளர் ரவி. மேலும் இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என்று வாக்குறுதி அளித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று முப்பத்தி ஒன்பதாவது வார்டுக்குட்பட்ட பாரதிதாசன் நகரில் வீடு வீடாக சென்று தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

பிரச்சாரம் செல்லுமிடங்களில் அப்பகுதி மக்கள் இவருக்கு ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். வாக்கு சேகரிப்பின் போது தேர்தல் பொறுப்பாளரும், ஒன்றிய கவுன்சிலருமான பொய்கைக்குடி முருகா, எம்.ஏ.காமராஜ், வெண்ணிலா சேகர், ஜமால் பாத்திமா, பாலகிருஷ்ணன், மணிகண்டன், ரபீக், செலின், நாகமணி, மஞ்சு,ஜமால், சேட்டு, எஸ்.மணி, A. துரை, தனபால், ராஜா, அண்ணாதுரை, BHEL பாலு, அடைக்கல சாமி, M. லோகேஷ், கார்த்திக், தமிழரசி, மதியழகன், ஜோசப் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதிமுக சார்பில் திருவெறும்பூர் பகுதி செயலாளர் பாஸ்கர் (எ) கோபால்ராஜ் அவர்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு


 பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ள 

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாநகராட்சி 41 வது வார்டில் அதிமுக சார்பில் திருவெறும்பூர் பகுதி செயலாளர் பாஸ்கர் (எ) கோபால்ராஜ் 

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே இரண்டு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவர் ஆவார்.

இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்து தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் பாஸ்கர்.

இவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்.

அந்தவகையில் நேற்று தனது 41 வது வார்டுக்கு உட்பட்ட செல்வபுரம், காந்தி நகர், நேதாஜி நகர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 


வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர் பாஸ்கர் பொதுமக்களிடம் பேசுகையில்......


நான் வெற்றி பெற்றவுடன் இப்பகுதியின் அடிப்படை பிரச்சினைகளான பாதாள சாக்கடை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு அமைப்பது உள்ளிட்டவற்றை விரைந்து செயல் படுத்துவேன். மக்கள் எந்த நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம். மக்கள் பிரச்னைகளுக்காக திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் என் குரல் ஒலிக்கும். நமது வார்டை முன் மாதிரியான வார்டாக மாற்றுவேன். மேலும் பல திட்டங்களை இந்த வார்டு மக்களுக்கு பெற்று தர வாக்காளர்களாகிய நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

வாக்கு சேகரிப்பின் போது அபிமன்யு, அன்பு துறை, ராஜேந்திரன், ஆனந்தகுமார், எம்.சேகர், தீன் என்கிற அமீர் முகமது, ரூபாவதி, செல்ல பாப்பா மற்றும் கூட்டணி கட்சியினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.