Mar 28, 2024

திருச்சி அஇஅதிமுக பாராளுமன்ற வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து வேட்பாளர் அறிமுக கூட்டம்


 திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவுடன் களமிறங்கிய வேட்பாளர் கருப்பையாவிற்கு ஆதரவாக அறிமுக கூட்டம் திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் பகுதி நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

Oct 23, 2022

அதிமுக போதாவூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி எஸ்.எஸ்.முத்தையா மலர்கொடி ரேஷன் கார்டு வாரியாக தீபாவளி பரிசு வழங்கினார்

 


திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அந்தநல்லூர் ஒன்றியம் அதிமுக போதாவூர் ஊராட்சி மன்ற தலைவர்

திருமதி எஸ்.எஸ்.முத்தையா மலர்கொடி அவர்கள் போதாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் அனைவருக்கும் ரேஷன் கார்டு வாரியாக தீபாவளி பரிசு வழங்கினார்.   


Feb 14, 2022

அதிமுக சார்பில் 43 வார்டில் போட்டியிடும் ஆர்.பி கணேசன் அவர்களுக்கு மக்கள் வரவேற்பு


 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 43-வது வார்டில் அதிமுக சார்பில் RP. கணேசன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரம் முடிய இன்னும் நான்கு தினங்களே உள்ள நிலையில் தனது வார்டுக்குட்பட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் வேட்பாளர் கணேசன். மேலும் இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என்று வாக்குறுதி அளித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 


அந்த வகையில் இன்று 43-வது வார்டுக்குட்பட்ட முருகன் கோவில் தெரு, காந்தி தெரு, காவேரி நகர், யமுனா புரம், ராஜ வீதி ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

பிரச்சாரம் செல்லுமிடங்களில் அப்பகுதி மக்கள் இவருக்கு ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். வாக்கு சேகரிப்பின் போது வட்டச் செயலாளர் வெங்கடேஷ், ஐயப்பன், சிவா, ஆறுமுகம், ராஜேந்திரன், கண்ணுச்சாமி, திருஞானம், சாந்தி, சித்ரா, புருசோத்தமன், கந்தசாமி, மனோகரன், பத்மநாபன், தமிழ்ச்செல்வன், சீனிவாசன், நந்தகுமார், கிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருச்சி மாநகராட்சி 39-வது வார்டில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் எஸ்.ஆர்.ரவி அவர்களுக்கு மக்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பு


 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 39-வது வார்டில் அதிமுக சார்பில் எஸ்.ஆர்.ரவி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.


 தேர்தல் பிரச்சாரம் முடிய இன்னும் நான்கு தினங்களே உள்ள நிலையில் தனது வார்டுக்குட்பட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் வேட்பாளர் ரவி. மேலும் இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என்று வாக்குறுதி அளித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று முப்பத்தி ஒன்பதாவது வார்டுக்குட்பட்ட பாரதிதாசன் நகரில் வீடு வீடாக சென்று தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

பிரச்சாரம் செல்லுமிடங்களில் அப்பகுதி மக்கள் இவருக்கு ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். வாக்கு சேகரிப்பின் போது தேர்தல் பொறுப்பாளரும், ஒன்றிய கவுன்சிலருமான பொய்கைக்குடி முருகா, எம்.ஏ.காமராஜ், வெண்ணிலா சேகர், ஜமால் பாத்திமா, பாலகிருஷ்ணன், மணிகண்டன், ரபீக், செலின், நாகமணி, மஞ்சு,ஜமால், சேட்டு, எஸ்.மணி, A. துரை, தனபால், ராஜா, அண்ணாதுரை, BHEL பாலு, அடைக்கல சாமி, M. லோகேஷ், கார்த்திக், தமிழரசி, மதியழகன், ஜோசப் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதிமுக சார்பில் திருவெறும்பூர் பகுதி செயலாளர் பாஸ்கர் (எ) கோபால்ராஜ் அவர்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு


 பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ள 

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாநகராட்சி 41 வது வார்டில் அதிமுக சார்பில் திருவெறும்பூர் பகுதி செயலாளர் பாஸ்கர் (எ) கோபால்ராஜ் 

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே இரண்டு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவர் ஆவார்.

இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்து தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் பாஸ்கர்.

இவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்.

அந்தவகையில் நேற்று தனது 41 வது வார்டுக்கு உட்பட்ட செல்வபுரம், காந்தி நகர், நேதாஜி நகர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 


வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர் பாஸ்கர் பொதுமக்களிடம் பேசுகையில்......


நான் வெற்றி பெற்றவுடன் இப்பகுதியின் அடிப்படை பிரச்சினைகளான பாதாள சாக்கடை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு அமைப்பது உள்ளிட்டவற்றை விரைந்து செயல் படுத்துவேன். மக்கள் எந்த நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம். மக்கள் பிரச்னைகளுக்காக திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் என் குரல் ஒலிக்கும். நமது வார்டை முன் மாதிரியான வார்டாக மாற்றுவேன். மேலும் பல திட்டங்களை இந்த வார்டு மக்களுக்கு பெற்று தர வாக்காளர்களாகிய நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

வாக்கு சேகரிப்பின் போது அபிமன்யு, அன்பு துறை, ராஜேந்திரன், ஆனந்தகுமார், எம்.சேகர், தீன் என்கிற அமீர் முகமது, ரூபாவதி, செல்ல பாப்பா மற்றும் கூட்டணி கட்சியினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Feb 13, 2022

திருச்சி 15வது வார்டு அதிமுக வேட்பாளர் முக கவசம் கொடுத்து பிரச்சாரம்

 


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் திருச்சி மாநகராட்சி 15 வது வார்டில் அதிமுக சார்பில் T. ரேணுகா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்து தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்.

அந்தவகையில் இன்று தனது 15வது வார்டுக்கு உட்பட்ட சஞ்சீவி நகர் பகுதிகளில் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


வாக்கு சேகரிப்பின் போது ரேணுகா பொதுமக்களிடம் பேசுகையில்...

இப்பகுதி மக்களின் எந்த அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வில்லை. நான் வெற்றி பெற்றவுடன் இப்பகுதியின் அடிப்படை பிரச்சினைகளான பாதாள சாக்கடை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு அமைப்பது உள்ளிட்டவற்றை விரைந்து செயல் படுத்துவேன். மக்கள் எந்த நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம். மக்கள் பிரச்னைகளுக்காக திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் என் குரல் ஒலிக்கும். நமது வார்டை முன் மாதிரியான வார்டாக மாற்றுவேன். மேலும் பல திட்டங்களை இந்த வார்டு மக்களுக்கு பெற்று தர வாக்காளர்களாகிய நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

வாக்கு சேகரிப்பின் போது 15வது வார்டு பிரதிநிதி காலனி தங்கவேல், வட்டச்செயலாளர் பொன் அகிலாண்டம், துணை செயலாளர் DG.தர்மலிங்கம், அவைத்தலைவர் ஊறுகாய் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் மல்லிகா செல்வராஜ், இணைச் செயலாளர் ரகுபதி, பொருளாளர் குணசேகரன், துணைச் செயலாளர் மீனா சுப்பிரமணி, மற்றும் பிரதிநிதிகள் சகாயராஜ், போட்டோ கிருஷ்ணன், பெட்டிகடை சங்கர், N.பாண்டுரங்கன், G.பாலமுருகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Feb 12, 2022

வார்டு மக்களுக்கு டீ கொடுத்து பிரச்சாரம்


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு மனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 15 வது வார்டில் அதிமுக சார்பில் T. ரேணுகா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.


வேட்புமனு தாக்கல் செய்த ரேணுகா தனது வார்டுக்குட்பட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இவர் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று தனது 15வது வார்டுக்கு உட்பட்ட சிந்தாமணி, பூசாரி தெரு, பதுவை நகர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு நோட்டீஸ் வழங்கி பிரச்சாரம் செய்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு டீ கடைக்கு சென்று,

அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு டீ போட்டுக் கொடுத்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த நிகழ்வு அப்பகுதி மக்களை பெரிதும் கவர்ந்தது.


வாக்கு சேகரிப்பின் போது ரேணுகா பொதுமக்களிடம் பேசுகையில்...


தான் வெற்றி பெற்றவுடன் 15-ஆவது வார்டு மக்களின் நீண்டநாள் பிரச்சினையான சாக்கடை பிரச்சனை சரி செய்யப்படும். மேலும் மக்களின் அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, மின் விளக்கு உள்ளிட்ட வசதிகள் விரைவில் செய்து தரப்படும். இது போன்ற மேலும் பல திட்டங்களை இந்த வார்டு மக்களுக்கு வழங்கிட இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 


வாக்கு சேகரிப்பின் போது 15வது வார்டு பிரதிநிதி காலனி தங்கவேல், வட்டச்செயலாளர் பொன் அகிலாண்டம், துணை செயலாளர்

DG.தர்மலிங்கம், அவைத்தலைவர் ஊறுகாய் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் மல்லிகா செல்வராஜ், இணைச் செயலாளர் ரகுபதி, பொருளாளர் குணசேகரன், துணைச் செயலாளர் மீனா சுப்பிரமணி, மற்றும் பிரதிநிதிகள் சகாயராஜ், போட்டோ கிருஷ்ணன், பெட்டிகடை சங்கர், 

N.பாண்டுரங்கன், G.பாலமுருகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதிமுக சார்பில் 56 வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு ராஜலட்சுமி தீவிர பிரச்சாரம்.


 56 வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு  ராஜலட்சுமி தீவிர பிரச்சாரம்.


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின்  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் 56வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு V. ராஜலட்சுமி போட்டியிடுகிறார். 

அந்த வகையில் அப்பகுதி பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் நலத்திட்டங்களை மேற்கொண்டு வரும் அவருக்கு பொதுமக்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

முன்னாள் கூட்டுறவு தலைவர் பத்மநாதன், , வட்டகளக செயலாளர் முத்துக்குமார், , வட்ட பொருளாளர் ராஜகோபால்,   பகுதி பிரதி நிதி தினேஷ்,ராஜகோபால், முருகேசன், ஆறுமுகம், அழகுராணி, மகளிரணி மாதவி, வட்ட பொருளாளர் டைல்ஸ்,முருகன் ,பூமினதான் வட்ட துணை செயயலாளர்

திருச்சி 55 வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜோசப் ஜெரால்டு பிரச்சாரம்

 


திருச்சி மாநகராட்சி 55-வது வார்டில் அதிமுக வேட்பாளர் ஜோசப் ஜெரால்டு பிரச்சாரம்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின்  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சி  மாநகராட்சி 55-வது  வார்டு உறுப்பினர் பதவிக்கு  அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட A. ஜோசப் ஜெரால்டு மனுத்தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் இன்று  தனது வார்டுக்குட்பட்ட பொன்நகர், சேட்டு காலனி, காந்தி நகர்  உள்ளிட்ட  பகுதிகளில் வீடு வீடாக சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது

ஜங்சன் பகுதி மாணவரணி செயலாளர் கருமண்டபம்  P.வெங்கடேசன்,  வட்டச்செயலாளர் அமீர், வட்ட துணை செயலாளர் செந்தில், மற்றும் D.மனோகர், பெங்களூர் ஜான் உட்பட கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.