Mar 29, 2018

திருச்சி போக்குவரத்து துறையினக்கு அமைச்சசர்கள் பாராட்டு

திருச்சி        29.3.18


இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் அரசு போக்குவரத்துக் கழகம் ( கும்பகோணம்) இணைந்து நடத்தும் டீசல் செயல் திறனில் சாதனை புரிந்த பணியாளர்களுக்கு பரிசு வழங்குதல்

டீசல் செயல் திறன் அதிகரிப்பதால் விபத்துக்கள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. உதிரி பாகங்கள் தேய்மானம் குறைவதோடு டயர் உழைப்புத் திறன் அதிகரிக்கிறது. இதன் மூலம் போக்குவரத்துக் கழகம் டயர் உழைப்புத் திறனில் அதிகபட்சமாக 2.51 என்ற அளவில் தமிழகத்திலுள்ள அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் முதன்மை இடத்தில் உள்ளது.

கும்பகோணம் கோட்டத்துக்கு உட்பட்ட 6 மண்டலங்களிலும் இருந்து 3 4 5 டிரைவர்கள், 59 கண்டக்டர்கள், 36 தொழில் நுட்பப் பணியாளர்கள், 18 டீசல் பொறுப்பாள்கள்,6 ஓட்டுநர் கண்காணிப்பாளர்கள், 18 உதவி மற்றும் இளநிலை பொறியாளர்கள், 12 கிளை மேலாளர்கள் 6 உதவி மேலாளர்கள் என 500 பேருக்கு சாதனையாளர் பரிசுகளை திருச்சி கோஹினூர் தியேட்டர் அருகே உள்ள போக்குவரத்து கழகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

Mar 17, 2018

திருச்சி சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

திருச்சி சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி:

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.விரைவில் அமைக்கப்படும் என மத்திய அரசும் தெரிவித்துள்ளது.

உடலுறுப்பு தானத்தில் தனியார் மருத்துவமனைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை,பதிவு மூப்பு அடிப்படியில் தான் உடலுறுப்புகள் வழங்கப்படுகிறது.

தமிழகம் உடலுறுப்பு தானத்தில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது.

ஏர்வாடியில் கண் பார்வை பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள் என்றார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வெல்ல மண்டி நடராஜன் , வளர்் மதி, பாராளுமன்ற உறுப்பினர் குமார், தலைமை மருத்துவர்ககள் சம்சத் பேகம், அனிதா சித்த மருத்துவர் காமராஜ் மற்றுும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்

திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்காவில் மரம் நடுவிழா


திருச்சி ஸ்ரீீீரங்க ம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட வண்ணத்துப் பூச்சி பூங்்கா்காவில் மார்க்கன்று நடும்்் விழா
நடைபெற்றறது அமைச்சர்கள் வெல்்ல்ல மண்டி நடராாஜன் அமைச்சர் வளர்மதி பாாரளுமன்ற்ற உறுப்பினர் குமார் மாவட்டட ஆட்சித் தலைவர் இராாாசா மணி மரக்கன்றுகள் வைத்தனர்

இந்நிழ்ச்சியில் மாநில வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் வக்கீல் ராஜ்குமார், மாநகர மாவட்ட துணைச் செயலாளர் ஜாக்குலின், மாநகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பத்மநாபன்,  பகுதி கழக செயலாளர்கள் அன்பழகன், கலீல் ரஹ்மான், என்.எஸ்.பூபதி, எம்.ஆர்.ஆர். முஸ்தபா, மாநகர பொருளாளர் மலைக்கோட்டை அய்யப்பன், நத்தர்வலி வலி வார்டு பொறுப்பாளர் தர்கா காஜா, மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் தமிழரசி, டாக்டர் சுப்பையா, நத்தர்வலி தர்காவின் பரம்பரை அறங்காவலர் தர்கா அமீன், மாநகர மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் கோட்ட தலைவர் மனோகர், கேபிள் முஸ்தபா, ஜே.எல். ஜமால், இலியாஸ், மொய்தீன்,ஜவஹர்லால் நேரு, கட் பீஸ் ரமேஷ், காசிப்பாளையம் சுரேஷ், வீரமுத்து, சாந்திதேங்காய்கடைகங்காதரன், தியாக ராஜன், அக்தர் பெருமாள் டி.எஸ்.ராமலிங்கம் சீரங்கம் .பகுதி செயலாளர் டைமன் திருப்பதி, சகாாாாதேவன் பாண்டி
மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Mar 16, 2018

Trichy Central minister program

பாதுகாப்புத்துறைக்கான உபகரணங்கள் உள்நாட்டில் தயாரிக்க முன்வர வேண்டும்–அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்


திருச்சியில் தொழில்துறையினர் நடத்தும் கருத்தரங்கில் தமிழக அமைச்சர்கள், துப்பாக்கி  தொழிற்சாலையின் உயர்அதிகாரிகள் இந்தக்  கருத்தரங்கில் கலந்து கொண்டு தொழில்  வளர்ச்சிக்கான கருத்துக்களைப் பரிமாறி  கொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மத்திய  பாதுகாப்பு துறை  அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்  பேசுகையில்  :

இந்தியஅளவில் உள்ள  தொழில்களில் மத்திய  அரசின்கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில்தனியார் மயமாக்குதல்  என்பது எந்தவகையில் வளர்ச்சி பாதையை நோக்கிப்  பயணிக்கும்என்பது குறித்த  விளக்கங்களைத்தெரிவித்தார்

பொது நிறுவனங்கள்  தற்போது சிறு தனியார் நிறுவனங்களை நம்பி தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே பொதுத்துறையில்தனியார்  தலையீடு இருந்தால்  வேலைவாய்ப்புஅதிகரிக்கும்,  பொருட்களின் உற்பத்தி, பொருட்களின் தரத்தில் கூடுதல் கவனம்,  என்றும், பல வளர்ச்சிகள்  உள்ளதாக கூறினார்.

திருச்சியைப் பொறுத்தவரை பாரத மிகுமின்நிலையம்,  துப்பாக்கி தொழிற்சாலை,  உள்ளிட்டவற்றிலும் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என்று  அறிவிக்கப்பட்டது. அதற்கான  பணிகள் நடைபெற்று வருகிறது.  பாரதமிகு மின் நிலையத்தைச்சுற்றி உள்ளசிறு, குறு தொழில்  முனைவோர்கள்தங்களுடைய  திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கும்  ஒரு வாய்ப்புஇந்தத் தனியார் மயமாக்குதல் மூலம் நடக்கும்என்று கூறினார்.

ராணுவ தளவாடங்களை தமிழகத்தில் உற்பத்தி செய்யவும், தேஜஸ் விமானங்களை போர் விமானங்களாக தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். பாதுகாப்புத்துறைக்கான உபகரணங்கள் உள்நாட்டில் தயாரிக்க முன்வர வேண்டும்

தனியார் தலையீடு இல்லாமல்பொதுத்துறைநிறுவனங்கள் செயல்பட முடியாது.  பலதிறமையானவர்களை  தனியார் மயாக்குதல் மூலம் பயன்படுத்தி கொள்ள முடியும், குறிப்பாக  இந்திய இராணுவத்திற்கும்,  தமிழககாவல்துறைக்குமான  தேவையை தற்போதுஉள்ள இந்தபொதுத்துறை நிறுவனத்தால்கொடுக்க முடியவில்லை. ஆனால் தனியாரின்தலையீடு இருந்தால் அதை நாம் ஈடுசெய்யமுடியும். நாங்கள் எதையும் விற்கவில்லைஅனைத்தையும் உயிர்ப்பிக்க முயற்சிசெய்கிறோம். என்று தெரிவித்தார். நம்முடைய நாட்டில் பாதுகாப்பு துறையை தனியார் மூலம் வலிமையான நிறுவனங்களாக மாற்ற முடியும் என்பது தான் மத்திய அரசின் கொள்கை எனவே அதனை செயல்படுத்த தான் இதுபோன்ற கருத்தரங்குகள் மூலம் மக்களிடம் தனியார் மயமாக்குதலை பற்றி எடுத்துக்கூறி வருகிறோம் என்று கூறினார்.

தொழிற் வளர்ச்சிக்கான சர்வதேச மாநாடுநடைபெற உள்ளது அதில் 60 நாடுகள் மற்றும்75 நிறுவங்கள் கலந்து  கொள்வதாகவும் இதில்50%  மானியத்துடன் வழங்கப்படும் என்றும்தெரிவித்தார். மேலும் அரசு  மற்றும் தனியார்நிறுவனங்கள் நன்று வளர்ந்து Make in indiaதிட்டத்தின் கிழ் கொண்டு வந்து நாட்டைமுன்னேற்ற பாதையில் கொண்டு போவதே எங்கள் நோக்கம் எனவும்  தெரிவித்தார்.இந்தியா  ஏற்றுமதியில் சிறந்து விளங்கஓத்துழைக்குமாறும் வலியுறுத்தினார்..

Mar 14, 2018

திருச்சி 14.03.18. மாவட்ட அளவிலான தொழிற் முனைவோர் விழிப்புணர்வு முகாம்.

திருச்சி  14.03.18.

மாவட்ட அளவிலான தொழிற் முனைவோர் விழிப்புணர்வு முகாம்.

மாவட்ட அளவிலான தொழிற் முனைவோர் விழிப்புணர்வு முகாம் திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் நடைப்பெற்றது.இதில் கலந்து கொண்ட திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசா மணி பேசிய போது தமிழக அரசு புதிதாக அமைத்திடும் தொழில்களை ஊக்கப்படுத்தவும் அதன் மூலம் வேலை வாய்ப்பினை பெருக்கிடவும் மானியத்துடன் கூடிய திட்டங்களை செயல்படுத்துவதாகவும். திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பின் தங்கிய வட்டாரங்களிலும் புதியதாக தொழிலகங்கள் அமைக்கப்பட்டு அதிக பட்சம் ரூ.30 இலட்சம் மூலதன மான்யமாக வழங்கப்பட்டு வருவதாகவும்,புதியதாக அமைக்கப்பட உள்ள தொழிலங்களுக்கு மின் மான்யம், ஜி.எஸ்.டி வரி மான்யம், ஜெனரேட்டர் மான்யம் வழங்கப்படுவதாகவும், மேலும் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் சுயமாக தொழில் அமைத்திட ரூ.10 இலட்சம் வரை வங்கி கடனுதவியும் மான்யமாக 1.25 இலட்சம் அரசு வழங்குகிறது. தமிழக அரசு பட்டம் மற்றும் பட்டயம் படித்துள்ள இளைஞர்களுக்கு ஏற்ற தொழில்களை ஒரு கோடி ரூபாய் வரையிலான மதிப்பீட்டில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறனர். இத்திட்டத்தின் கீழ் ரூ.25 இலட்சம் மான்யம் வழங்கபட்டு கடனுக்கான வட்டி விகிதத்தில்  மூன்று விழக்காடு மான்யமும் வழங்கப்படுகிறது. இதில் திருச்சி மாவட்டத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்க 10 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் விரைவில் தொழிற் வளர்ச்சிடையும் எனவும்
 இந்தியன் வங்கி சார்பாக தொழிற் செய்ய 80 ஆட்டோக்கள் வழங்கப்படுகிறது. மேலும் மணப்பாறையில் 1000 ஏக்கர் இடம் ஒதுக்கி தொழிற்பேட்டை அமைய உள்ளதாகவும் கூறினார். புதிதாக தொழிற்முனைவோர்கள் இந்த திட்டங்களின் கீழ் பயன் பெற்று தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திட முன்வருமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டு கொண்டார்.

Mar 5, 2018

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புதுத்தெரு, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

திருச்சி       

ஸ்ரீரங்கம்,அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேக விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புதுத்தெரு, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

கும்பாபிஷேக நிகழ்ச்சி நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அன்று காலை காவிரி ஆற்றில் தென்கரையில் மேல சிந்தாமணி படித்துறை பகுதியில் இருந்து பக்தர்கள் புனித நீர் எடுத்து வந்தனர். மாலையில் கால யாக பூஜையும் தொடர்ந்து நேற்று காலை கால யாக பூஜையும், பிரசாதம் வழங்குதல் நடைப்பெற்றது. மாலையில் மூன்றாம் கால யாக பூஜையும் நடைப்பெற்றது. இன்று காலை நான்காம் கால யாக பூஜையும், மஹா பூர்ணாஹீதியுடன் கலசங்கள் புறப்பாடு நடைப்பெற்றது.

அதனை தொடர்ந்து திருக்குடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவில் யாக சாலை பிரவேஷம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் விமானத்திற்கும், மூலஸ்தானத்திற்கும் கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. பின்னர் தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Mar 3, 2018

திருச்சி 3.3.18 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு 200பேருக்கு அன்னாதம் மற்றும் இலவச வேட்டி சேலைகளை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி வழங்கினார்

திருச்சி      3.3.18

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு  200பேருக்கு அன்னாதம் மற்றும் இலவச வேட்டி சேலைகளை  அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி வழங்கினார்.


திருச்சி மாநகர் மாவட்ட கழக சார்பில் அனைத்து வார்டுகளிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அன்னதானம், நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை செய்யப்பட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். 

அதன் ஒரு பகுதியாக இன்று  திருச்சி பெரியகடை வீதி சந்துக் கடை பகுதியில் மாநகர் மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 70-வது பிறந்த நாளை முன்னிட்டு    எழை எளிய மக்கள் 200 பேருக்கு மதியம் உணவுகள் மற்றும் 200 பேருக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகளை  அமைச்சர்கள்  வெல்லமண்டி என்.நடராஜன், எஸ். வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியானது சந்துகடை வார்டு வட்ட பிரதிநிதி  சந்துரு  ஏற்பாட்டில் செய்யப்பட்டிருந்தது. 

இந்த நிகழ்ச்சியில் மாநில வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் வக்கீல் ராஜ்குமார், மாநகர மாவட்ட துணைச் செயலாளர் ஜாக்குலின், மாநகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பத்மநாபன்,  பகுதி கழக செயலாளர்கள அன்பழகன், கலீல் ரஹ்மான், என்.எஸ்.பூபதி, எம்.ஆர்.ஆர். முஸ்தபா, மாநகர பொருளாளர் மலைக்கோட்டை அய்யப்பன், நத்தர்வலி வலி வார்டு பொறுப்பாளர் தர்கா காஜா, மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் தமிழரசி, டாக்டர் சுப்பையா, நத்தர்வலி தர்காவின் பரம்பரை அறங்காவலர் தர்கா அமீன், மாநகர மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் கோட்ட தலைவர் மனோகர், கேபிள் முஸ்தபா, ஜே.எல். ஜமால், இலியாஸ், மொய்தீன்,ஜவஹர்லால் நேரு, கட் பீஸ் ரமேஷ், காசிப்பாளையம் சுரேஷ், வீரமுத்து, சாந்திதேங்காய்கடைகங்காதரன், தியாக ராஜன், அக்தர் பெருமாள் டி.எஸ்.ராமலிங்கம்ம
மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

 அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டு சால் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன்பாட்டுக்கு வரும் என மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்

திருச்சி 3.3.18
திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன்பாட்டுக்கு வரும் என மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்

திருச்சி திருவாணைக்காவல் மேம்பால பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ராஜாமணி இது குறித்து தெரிவித்தது திருச்சி மக்களின் போக்குவரத்து நெரிசலை பூர்த்தி செய்யும் வகையில் சென்னை-திருச்சி-திண்டுக்கல் சாலையில் (தற்போது மாநில நெடுஞ்சாலையில்) உள்ள குறுகிய திருவாணைக்காவல் ரயில்வே மேம்பாலத்திறற்கு மாற்றாக நான்கு வழித்தட புதிய மேம்பாலம் கட்ட தமிழக அரசால் உத்திரவிடப்பட்டிருந்தது அதன்படி இப்பாலம் பணிகள் சென்னை- திருச்சி சாலையில் நான்கு வழித்தடமாகவும் கல்லணை மார்க்கத்தில் மூன்று வழித்தட இணைப்பு பாலமாகவும் அமைக்கப்பட்டுவருகிறது.இப்பால பணி சென்னை திருச்சி கல்லணை ஆகிய மூன்று சாலைகளையும்  இணைக்கும் சாலையாக  உள்ளது
இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தால் 2.10 லட்சம்மக்கள் தொகை கொண்ட திருவரங்கம்ääதிருவாணைக்காவல் மற்றும் லால்குடி புள்ளம்பாடிதிம்மராய சமுத்திரம் மேலூர் திருச்சி மாநகரம் மற்றும் கரூர் குளித்தலை நகரத்துடன் இணைக்கும்.தற்போது திருவானைக்காவல் பழைய மேம்பாலத்தை அகற்றிவிட்டு புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது
இப்பால வேலைப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இப்புதிய மேம்பாலத்தின் நீளம் 1430.284 மீட்டரும் 17.20 அகலமும் பாலப்பகுதியில் மட்டும் கட்டுமான பணிகள் 907.76 மீட்டரும் பாலத்தின் ஓடுதள அகலம் 7.50மீட்டரும் (நான்கு வழிச்சாலை )ஆகும் 
இப்புதிய மேம்பாலத்திற்கு 48 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது பாலத்தின் மீதம் உள்ள பணிகளை முடிக்க துரித நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு முடிபெரும் தறுவாயில் உள்ளது என்றும் அதனால் சென்னை- திருச்சி திண்டுக்கல் சாலையை இணைக்கும் வகையில் திருவானைக்காவல் மேம்பாலம் ரூ47.3கோடி மதிப்பில் கட்டப்பட்டு தற்போது 85 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில் மீதமுள்ள பணிகள் முடிவுற்ற நிலையில் மீதமுள்ள பணிகள் விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் செயல்பட வேண்டுமெனவும் தடுப்பு சுவர் மற்றும் அணுகு சாலைகள் அமைக்கும் பணி முடிந்தவுடன் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.