Oct 16, 2018

திருச்சி உலக உணவு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பேட்டி

திருச்சி - 16.10.18

உலக உணவு தினத்தையொட்டி சத்தான உணவை உட்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி - உடலுக்கு கெடுதல் தரும் அஜினோமோட்டோ உள்ளிட்ட ரசாயன பொருட்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.


அனைவருக்கும் சத்தான சரிவிகித உணவு கிடைக்கப் பெற வேண்டும், கலப்பட உணவுப் பொருட்களை  கண்டறிந்து  அவற்றை தடுக்கப்பட வேண்டும், ஆயுளைக் குறைக்கும் துரித உணவுப் பொருட்களை தவிர்த்துவிளம்பர மோகத்தில் இருந்து வெளியேறி இயற்கை உணவுகளையும் சத்தான உணவுகளையும் பொது மக்கள் உண்ண வேண்டும் என்ற கோட்பாட்டுடன் உலக உணவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

இதனிடையே உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் திருச்சியில் அனைவரும் சரிவிகித நஞ்சில்லாத உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், ஆரோக்கியமான வாழ்வுக்கு அத்தியாவசியமான உணவுப் பொருட்களை தயாரித்து நுகர்வோருக்கு வழங்க வேண்டும், சுகாதாரமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி மாணவ மாணவிகள் உணவு பாதுகாப்பு மற்றும் சத்தான உணவு குறித்த வீதி நாடகத்தை அரங்கேற்றினார் மேலும் அனைவரும் ஆரோக்கிய வாழ்வு வாழ சத்தான உணவை உட்கொள்ள வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டதுடன் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து தென்னூர் வரையிலான இருசக்கர வாகன பேரணி சென்றனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் கு. ராஜாமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தடைசெய்யப்பட்ட பொருட்கள் விநியோகம் செய்வதை கண்டறிய குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதனை உணர்ந்து உணவு தயாரிப்பு தொழிலில் ஈடுபடுவார்கள் சட்டங்களை முழுவதும் பின்பற்றி தரமான பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். உடலுக்கு கெடுதல் தரும் அஜினோமோட்டோ உள்ளிட்ட ரசாயன பொருட்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் அதனை அனுமதிப்பதை தடை செய்யப்படும், கண்காணிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. குட்கா பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்படும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார்.

பேட்டி - திரு.கு.ராசாமணி, மாவட்ட ஆட்சியர்

Oct 12, 2018


Oct 7, 2018

திருச்சி சுகாதாரத்துறை அமைச்சர்வி ஜயபாஸ்கர் பேட்டி

திருச்சி_07.10.18

திருச்சியிலிருந்து விமானம் மூலம் சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில்...

பருவமழை காலங்களில் அல்லது மழை காலம் முடிந்த பிறகு மக்கள் நல்வாழ்வுத்துறையின் பணிகள் மிகவும் அத்தியாவசியமானதாகும்.
அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாகவும், சுகாதாரத்துறை செயலாளர்கள் மூலமாகவும் மழைக்கு பின்னால் நோய் தொற்று  ஏதும் இல்லாத அளவிற்கு மிகுந்த முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டுமென்று அலர்ட் செய்து இருக்கிறோம். அந்தவகையில் தமிழ்நாடு முழுக்க நடமாடும் மருத்துவ குழுக்கள், அவசர உதவிக்கு 108 ஊர்தி, மற்றும் பொதுமக்கள் அவசர தகவலுக்கு 104 போன்ற கட்டுப்பாட்டு அறைகளும் தயார் நிலையில் உள்ளன.

போதுமான அளவு மருந்து, மாத்திரைகளும் கையிருப்பில் உள்ளன. பொது மக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். முதல்வர் உத்தரவின் பேரில் குறிப்பாக எல்லையோர பகுதிகளில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.

திருச்சி அரசு மருத்துவமனைக்கு விரைவில் கூடுதலாக மருத்துவர்களும், செவிலியர்களும் பணியமர்த்தப் படுவார்கள். வெகு விரைவில் 6 கோடி மதிப்பில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவி திறக்கப்படும். அது மட்டுமின்றி 18 கோடி மதிப்பில் புற்றுநோயை கண்டறிந்து குணப்படுத்தக்கூடிய கருவி ஏர்போர்ட் அத்தாரிட்டி சார்பில் நிறுவப்படஉள்ளது.இன்னும் வரும் காலங்களில் திருச்சி அரசு மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக இயங்கும் என்று தெரிவித்தார்.

Oct 5, 2018

திருச்சி : மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேட்டி :



திருச்சி :
மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி  பேட்டி :


அக்டோர் 7ம் தேதி கூடுதல் மழை பெய்யும் என்பதால் மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு எதிர்கொள்ளும் பொருட்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க பருகியது

கடந்த காலம் எங்கே எல்லாம் மழை சேதம் ஏற்பட்டு இருக்கிறது. அதை எல்லாம் கணக்கெடுத்து தற்போது சேதம் ஏற்படாமல் பாதுகாப்பதிலும் தாழ்வான பகுதியில் இருக்க வேண்டும் என்றும், காவிரி கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தபடுகிறது. வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, அதேபோல பொதுப்பணித் துறை நெடுஞ்சாலைத் துறை போன்ற துறையில் தொடர்ந்து முன்னெச்சரிக்கை பணிகளில் மழைக்காலங்களில் தடையின்றி செல்வதற்கு சிறிய, பெரிய பாலங்கள் ரோடுகள் எந்தவிதத் தடையுமின்றி செல்ல உறுதி செய்துப்படுகிறது.
ஏற்கனவே அதிகமாக மழை பெய்து பாதிக்ககூடிய154 இடங்கள் கண்டறிய பட்டுள்ளன. அந்த பகுதியில் உள்ள மக்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள் அரசு தயார் நிலையில் உள்ளன. மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ஒரு பகுதிக்கு 10 பேர் விதம் 1,440 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தீயணைப்புத்துறையினர் பயிற்சி எடுத்து வருகின்றனர் கால்நடைகள் பாதுகாப்பு தேவைப்படுகிறது கால்நடை பராமரிப்பு துறை இணைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது, மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்களுக்கு வேண்டுகோள் காவிரி ஆற்றில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது குழந்தைகள், பெரியவர்கள் தண்ணீர் அருகில் செல்லாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும், மேலும் ஏரிகள் குளங்கள் தண்ணீர் இருப்பதால் அதில் ஆபத்தை உணராமல் உள்ளே சென்று குளிக்க வேண்டும் அவற்றை தவிர்க்க வேண்டும்.

12 நேரடி கொள்முதல் நிலையங்கள் உள்ளன.

38 இடங்களில் அதிகபடியான மழை பாதிப்பு இருக்கும்.
41 இடங்களில் மிதமான பாதிப்பு இருக்கும்.
72 இடங்கள் பாதுகாப்பான இருக்கும்.

பள்ளி செல்ல கூடிய குழந்தைகள் பாதுகாப்பாக அனுப்புவதற்கு பெற்றோர்களை கேட்டு கொள்ள படுகிறது. பள்ளி நிர்வாகமும் பள்ளி குழந்தைகளை பார்த்து கொள்ள வேண்டும்.

அவசர உதவிக்கு 1077 என்ற என்னும், 0431 - 2418995 என்னையும் தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

திருச்சி துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி

திருச்சி-05.10.18

தமிழகத்தில் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது-துணை முதலமைச்சர் ஒ.பன்னிர்செல்வம் பேட்டி


தேனியிலிருந்து சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்த துணை முதலமைச்சர் ஒ.பன்னிர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில்...

தங்க தமிழ் செல்வன் அளித்த பேட்டியை நான் இன்னும் முழுமையாக பார்க்கவில்லை,அதை பார்த்த பின்பு விரிவான பதிலை அளிக்கிறேன்.

தமிழகத்தில் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

டி.டி.வி தினகரனை கடந்த ஆண்டு சந்தித்தீர்களா என்கிற கேள்விக்கு *அது கடந்த காலம்* என பதில் அளித்தார்.