Oct 10, 2014

AIADMK HQ Secretary Mr. Palaniappan Arikai - 10th Oct 2014




சுப்ரீம் கோர்ட்டில் இன்று அல்லது செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது ஜெயலலிதா ஜாமீன் மனு!

சுப்ரீம் கோர்ட்டில் இன்று அல்லது செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது ஜெயலலிதா ஜாமீன் மனு!

உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது இன்று அல்லது செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூர் தனிநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த 27-ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன், ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைதண்டனையும், தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜெயலலிதாவும் மற்ற 3 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். ஜாமீன் - மேல்முறையீடு மனு ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதுதவிர மேல் முறையீடு தொடர்பாகவும், தனிநீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும், தங்கள் சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்று கோரியும் தனித்தனியாக 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதி ரத்னகலா கடந்த 29-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விடுமுறைகால நீதிபதி ரத்தினகலா முன்னிலையில் கடந்த 30-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் இல்லாமல் மனுவை விசாரிக்க முடியாது என்று கூறி நீதிபதி ரத்தினகலா விசாரணையை தள்ளிவைத்தார். ஒத்திவைப்பு இதைத்தொடர்ந்து ஜெயலலிதா தரப்பில் இந்த மனுவை அவசர அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என்று கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்றத்தின் வழக்கமான அமர்வுக்கு மாற்றி கடந்த 1-ந் தேதி நீதிபதி ரத்தினகலா உத்தரவிட்டார். ஜாமீன் தள்ளுபடி அதன்படி, தசரா விடுமுறைக்கு பின் 7-ந் தேதி கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரா முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஒன்றாக தாக்கல் செய்தது காரணம் இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதாவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்காமல் போனதற்கு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்ததுதான் ஒருவேளை காரணமாக இருக்கலாம் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். ஜெயலலிதா மட்டும் சுப்ரீம் கோர்ட்டில்.. முதலில் ஜெயலலிதா மட்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்து இருந்தால், வயது, உடல் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் கிடைத்து இருக்கக்கூடும் என்றும், அதன்பிறகு மற்ற 3 பேரும் ஒவ்வொருவராக மனு தாக்கல் செய்து ஜாமீன் பெற்று இருக்கலாம் என்றும் கருதப்பட்டது. இதனால் நேற்று ஜெயலலிதா சார்பில் மட்டும் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. என்ன காரணங்கள்? வழக்கறிஞர் ஜெய் கிஷோர் என்பவர் பெயரில் தாக்கல் செய்யப்பட்ட சுமார் ஆயிரம் பக்கங்கள் கொண்ட அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பெண் என்பதால்.. நான் ஒரு பெண்மணி. 66 வயதான எனக்கு உடல் ரீதியாக பல்வேறு உபாதைகள் உள்ளன. இந்த குறிப்பிட்ட வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்றதால் எனக்கு உயர் ரத்த அழுத்த நோய், சர்க்கரை வியாதி மற்றும் மூச்சுத் திணறல் போன்ற கடுமையான பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளன. நான் முதல்-அமைச்சராக இருந்த போது இந்த வழக்கு தொடர்பாக அதிகார துஷ்பிரயோகம் எதுவும் செய்யவில்லை. மேல்முறையீட்டு மனு தனிநீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனை மற்றும் அபராதத்தையும் எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து உள்ளேன். இந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை, தனிநீதிமன்றம் தண்டனையாக விதித்துள்ள 4 ஆண்டுகளுக்கு அதிகமாகவும் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. சாதாரண தண்டனை மேலும் என்னுடைய ஜாமீன் மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்குவது குறித்து உச்சநீதிமன்றம் வகுத்துள்ள பல்வேறு வரையறைகளை கருத்தில் கொள்ளாமல் மனுவை நிராகரித்து இருக்கிறது. எனக்கு விதிக்கப்பட்டு இருப்பது கடுங்காவல் சிறை தண்டனை அல்ல; சாதாரண தண்டனைதான். இதற்கு ஜாமீன் வழங்குவதில் உள்ள நடைமுறைகளை உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ள தவறிவிட்டது. கருணை அடிப்படையில்.. எனவே, நான் 66 வயதான பெண் என்பதையும், உடல் ரீதியாக எனக்கு உள்ள பல்வேறு உபாதைகளையும் கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. விசாரணை? உச்சநீதிமன்ற பதிவாளரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜெயலலிதாவின் இந்த ஜாமீன் மனு, இன்று தலைமை நீதிபதி அமர்வில் பரிசீலனைக்காக முன்வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இன்று? இதனை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், இந்த மனுவின் மீதான விசாரணை இன்று அல்லது செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

கோவையில் ஓர் தமிழனின் கேள்வி.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில்
அபாண்டா பழிவாங்க பட்டாரா.......?
கர்நாடக அரசை காவிரி .ஒக்கேxனக்கல்
பிரச்சனையில் எதிர்த்ததால்
பழிவாங்கப்பட்டாரா .............?
அல்லது பிரதமர் பதவிக்கு ஆசை பட்டதால்
தமது அரசுக்கு போட்டியாகவந்துவிடுவாரோ
பிற்காலத்தில் அரசுக்கு தலைவலி
கொடுபாரோ என்று பா.ஜ க வால்
பழிவாங்க பாட்டாரா..........?
அந்நாளில் மோடி அமெரிக்க போன
மர்மம் என்ன .......?

செல்வி ஜெயலலிதா அவர்கள் 18 ஆண்டுகளுக்கு முன்
குற்றப்பத்திரிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் குற்றங்களில்
ஈடுபட்டாரா இல்லையா என்பது பற்றி அல்ல இந்த இடுகை.

அவர் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் சந்தேகத்திற்கிடமின்றி
நிரூபிக்கப்பட்டு விட்டனவா இல்லையா என்பது பற்றியும் அல்ல
இந்த இடுகை. இந்த விஷயங்களை எல்லாம் தாண்டி -

அவர் மீது தண்டனை விதிக்கப்பட்ட விதமும்,
அதன் பிறகு அவருக்கு நடக்கும் நிகழ்வுகளும் -
பற்றியே இங்கு விவாதம்.

சுப்ரமணிய குன்ஹா என்கிற ஒருமித்த சக்தி ஒன்றைப்பற்றி,
நேற்றைய செய்தி ஒன்றின் மூலம் தெரிய வருகிறது.

ஏதோ ஒரு கோர்ட்டில் பதிவாளராக ( கவனிக்கவும் -
நீதிபதியாக அல்ல பதிவாளராக ) பணி செய்துகொண்டிருந்தவர்
10 மாதங்களுக்கு முன்னர் இந்த வழக்கை ‘எப்படியாவது’ விரைவில்
முடிக்க வேண்டும் என்கிற உத்திரவுடன் (?) அனுப்பப்படுகிறார்.
அதன் பிறகு வழக்கு புதிய வேகத்துடன்,
வித்தியாசமான அணுகுமுறையுடன் முன்னேறுகிறது – முடிகிறது….!!!

பொதுவாக, கிரிமினல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்படுவது
குறித்து – சுப்ரீம் கோர்ட் சில நடைமுறைகளை அறிவித்திருக்கிறது.

வழக்கு விசாரணகள் முடிந்த பிறகு, ஒரு நாள் குறித்து,
குற்றம் சாட்டப்பட்டவரை நேரடியாக கோர்ட்டுக்கு வரவழைத்து -
அவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்கள் எவ்வித சந்தேகத்திற்கும்
இடமின்றி நிரூபிக்கப்பட்டு விட்டன என்றும், அந்த கோர்ட்
அவரை “குற்றவாளி” என்று தீர்மானிப்பதாகவும் அறிவித்து விட்டு,

தீர்ப்பு கூற மற்றொரு நாளைக் குறித்து, தனக்கு விதிக்கப்படும்
தண்டனை பற்றி குற்றவாளி ஏதேனும் கூற விரும்பினால், கூறலாம் -
கோர்ட் அதை அனுமதிக்கிறது என்று கூற வேண்டும்.
பின்னர் குற்றவாளி தண்டனை பற்றிய தனது வேண்டுகோளை
முன்வைக்கலாம். அதன் பின்னர் அடுத்த நாளில், அல்லது
குறிப்பிடப்படும்` வேறோரு நாளில் தண்டனையை அறிவிக்க வேண்டும்.
இது தான் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ள நடைமுறை.

இந்த வழக்கில் இந்த நடைமுறை சுத்தமாக மீறப்பட்டுள்ளது.
காலை 10 மணிக்கு கோர்ட்டுக்கு வரவழைக்கப்பட்டவர் மாலை
5.30 மணி வரை அங்கேயே தங்க வைக்கப்பட்டு, அதன் பின்னர்
அன்றே – தண்டனையை நிறைவேற்றும் சடங்கு முடிகிறது.

அதாவது சனிக்கிழமை முகூர்த்தம் குறித்து,
(மறுநாள் ஞாயிறு – அப்பீலுக்குப் போக முடியாது – அதன் பிறகும்
ஒருவாரம் தொடர்ச்சியாக தசரா விடுமுறை) நேரடியாக
சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

ஒரு மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் -
முதலமைச்சராக கோர்ட்டுக்கு வருபவர்,
தண்டனை விதிக்கப்பட்டு நேரடியாக
சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறார் என்றால் -
தனது அரசியல் சட்ட பொறுப்புக்களை பின் ஒப்படைக்க
கால அவகாசம் கொடுக்க வேண்டாமா ? நாள் கணக்கில்
இல்லாவிடிலும் குறைந்த பட்சம் ஒரு 2 மணி நேரமாவது
தன் சகாக்களிடம் மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்ய
அனுமதியளிக்க வேண்டாமா …?

தண்டனையை விதித்த பிறகு, நீங்கள் மாற்று ஏற்பாடு செய்து
கொள்ளவும், உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெறவும் வசதியாக
உங்களுக்கு ஒரு வார காலம் அவகாசம் கொடுக்கப்படுகிறது -
என்று சொல்லி இருந்தால் – கோர்ட்டின் பாரபட்சமின்மையை
புரிந்து கொள்ள முடியும் …? இந்த அணுகுமுறை இல்லாமல்
போனது ஏன் …? சட்டத்தில் இதற்கு நிச்சயம் இடம் இருக்கிறது -
ஆனால் ஆணை இடுபவர் மனதில் இல்லாமல் போனது ஏன் ….?

சரி – சிறைக்குச் சென்ற பிறகும் ஏன் இத்தனை கெடுபிடிகள்…?
முதலமைச்சர் பொறுப்பில் இருந்தவரை நேரடியாக காராக்கிருகத்துக்கு
கொண்டு வந்து விட்டார்கள் – அவர் பார்த்துக்கொண்டு வந்த
பல பொறுப்புகள் பாதியில் இருக்கும். அதனை முழுமையாகச்
செய்ய ஆலோசனை பெற ஒரு மாநிலத்தின் தலைமைச்செயலாளர்
வந்தால், அவரை பார்க்க அனுமதிக்க மறுத்தது ஏன் …?
ஒரு நாள் முழுவதும், கிட்டத்தட்ட 7 மணி நேரம், ஒரு மாநிலத்தின்
தலைமைச்செயலரையும், ஆலோசகரையும் – சிறை வாசலில்
நிற்கவைத்து திருப்பி அனுப்பி – அவமதித்தது ஏன் …?

சரி – மறுநாள் ஜாமீனுக்கு பெட்டிஷன் கொடுத்தால், அதற்கடுத்த நாள்
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சொல்லி விட்டு,
மறுநாள் விசாரணைக்கு வந்தால் – மீண்டும் அடுத்த வாரம் தான்
விசாரணை என்று சொன்னது என்ன காரணத்தால்….?

அரசாங்க வக்கீலுக்கு உரிய நேரத்தில் அனுமதி உத்தரவு கொடுக்காதது
ஏன்…? இது கவனக்குறைவா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா….?
தனியாக ஒருவக்கீல் நியமிக்கப்படாத நேரங்களில்,

கோர்ட்டில் வழக்கமாகச் செயல்படும்
state govt.standing counsel தானாகவே இந்த வழக்கிலும் சேர்த்துக்கொள்ளப்
படுவது தான் மரபு. இல்லையென்றால், அட்வகேட் ஜெனரலுக்கு
தகவல் போகும். உரிய நேரத்தில் யாராவது ஒரு அரசு வக்கீல்
அனுப்பப்படுவார்…அது இங்கே நடக்காதது ஏன் …?

மீண்டும பதிவாளரைப் பார்த்து விசேஷ அனுமதி கோரி,
அரசு வக்கீலுக்கும் ஆணை வந்து, கோர்ட் கூடினால் -
வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலே -
அடுத்த வாரம் ரெகுலர் கோர்ட் விசாரிக்கும் என்று சொல்லிவிட்டு
போய்க்கொண்டே இருக்கிறார்……

முக்கியமான வழக்கு – ரெகுலர் கோர்ட் தான் விசாரிக்க வேண்டும்
என்பது கோர்ட்டுக்கு வரும் முன்பு தெரியாதா ?
அல்லது பதிவாளருக்குத்தான் தெரியாதா ?
முன்னதாகவே தலைமை நீதிபதியிடம் கலந்து ஆலோசனை
செய்திருக்க மாட்டார்களா ..?
ஏன் எல்லாரையும் வரவழைத்து அவமானப்படுத்த வேண்டும் …?
ஏன் டென்ஷனை, பரபரப்பை அதிகரிக்க வேண்டும்….?

எல்லாருக்கும் இன்று வெளியே வந்து விடுவார் என்கிற எதிர்பார்ப்பை
உண்டுபண்ணி விட்டு, பின்னர் மீண்டும் தள்ளிப் போடுவதன்
பின்னணி என்ன ….? வேறு எங்கிருந்தாவது உத்திரவு எதாவது
எதிர்பார்க்கப்படுகிறதா …?

இப்படி மாற்றி, மாற்றி இழுத்தடித்தால் – ஏற்கெனவே
கொதித்துப்போயிருக்கும் கட்சித்தொண்டர்களிடம் இது டென்ஷனை
அதிகரிக்காதா ? அல்லது வன்முறையைத் தூண்ட வேண்டும்
என்பது தான் உத்தேசமா…?

இரண்டு மாநிலங்களுக்கிடையே ஏற்கெனவே ஏகப்பட்ட
பிரச்சினைகள். காவிரி நீர் சம்பந்தமாக தகராறுகள்….
கோர்ட் வழக்குகள். கர்நாடகா அரசுக்கு தமிழ்நாட்டின் மீதும்,
சிறையில் இருக்கும் செல்வி ஜெயலலிதா மீதும் ஏகப்பட்ட
காழ்ப்புணர்ச்சி….
இந்த நிலையில் – உணர்வுகளுடன் விளையாடும் இத்தகைய
செயல்கள் இயல்பானவை தானா ?

கர்னாடகா அரசில் அதிகாரத்தில் இருக்கும்
காங்கிரஸ் கட்சிக்கு வெறுப்பு….
காங்கிரஸ் தலைமைக்கு சொல்லோணா வெறுப்பு …
சு.சு.வின் மறைமுக சித்து வேலைகள் தொடர்கின்றன….
இத்தனையையும் வாய் திறவாமல் வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்கிறது பாஜக தலைமை …

காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை,
கச்சத்தீவு பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை
என்று மாறி மாறி தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் -
அம்மா போனால் – திண்ணை நமக்குத்தான் என்று
ஆவலுடன் காத்துக் கிடக்கிறது தமிழக பாஜக.

இவர்கள் அத்தனை பேரும், தனித்தனியாகவும்,
கூட்டாகச் சேர்ந்தும் செய்வது -
‘அப்பட்டமான பழிவாங்கல்’ அல்லாமல் வேறென்ன…..???