Apr 27, 2018

திருச்சி பள்ளி கல்வி துறை அமைச்சர் பேட்டி

திருச்சி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்கம் சார்பில் நூலகர்கள் மற்றும் வாசகர் வட்ட தலைவர்கள் கருத்தரங்கம், மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் தொடக்க விழா, உலக புத்தக தின போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ,பரிசளிப்பு விழா திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தலைமையில் நடைபெற்றது.


பள்ளி கல்வித்துறை அமைச்சர் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார்.

விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, பாரளுமன்ற உறுப்பினர் பா.குமார்
கலெக்டர் ராஜாமணி, மாவட்ட நூலக அதிகாரி சிவக்குமார், மாணவரணி கார்த்திகேயன், அருள் ஜோதி, ஏர்போர்ட் விஜி,பொன்.செல்வராஜ்,தர்கா காஜா, திருப்புகழ், அக்தர் பெருமாள், மகாலட்சுமி மலையப்பன்
பலர் கலந்து ெகாண்டனர்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியில்

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழகத்தில் உள்ள மையங்களில் நீட் தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்கொண்டு வருகிறது. அதற்கான கடிதத்தை சிபிஎஸ்சி-க்கு கடிதம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது விடுமுறை காலங்களில்  சிறப்பு வகுப்பு நடத்தும் பள்ளிகள் மீது புகார்கள் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.