Oct 31, 2014

வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினா

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை பணி குறித்த அனைத்துததுறை அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமையில் நடந்த இந்தகூட்டத்தில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேரிடர் மேலாண்மை பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் மழைக்காலம் தொடரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் எந்த நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுகொண்டார்..
திருப்பூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தது தொடர்பாக வெள்ளம் ஏற்பட்டன. கடந்த 2013ம் ஆண்டு மாவட்டத்தில் 303 மி.மீ,. மட்டுமே; ஆனால் இந்த ஆண்டு 28.10.2014 வரை 650 மி.மீ.,  பெய்துள்ளது. இது கடந்த ஆண்டை  விட இருமடங்காகும். மேலும் மழைப்பொழிவு இன்னும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 திருப்பூர் மாவட்டத்தில் மழை காரணமாக காங்கயம்-தாராபுரம் ரோட்டில் முதலிபாளையம் பகுதியில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதில் போக்குவரத்து முழுவதுமாக தடைபட்டது. இப்பாலம் நெடுஞ்சாலை  துறை மூலமாக சரி செய்யப்பட்டுள்ளது.கடந்த 1-ந்தேதி முதல் 25.10.2014 வரை மழையால்  சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ. 2500 வீதம் 15 ஆயிரம்  ரூபாயும்,முழுவதுமாக சேதமடைந்த 8 குடிசைகளுக்கு ரூ. 5 ஆயிரம் வீதம் 40 ஆயிரம் ரூபாய் என மொத்தம் ரூ. 55 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர், தாராபுரம்  அருகில் உள்ள அலங்கியம் காந்திநகரில் வசிக்கும் நாசுவம்புளியன் மகன் சுஜித் (வயது 12) என்பவர் கடந்த 27 -ந்தேதி அப்பகுதியில் தேங்கி நின்ற மழை நீரில் மூழ்கி இறந்தார். மேலும் அவினாசி, ராயம்பாளையம் வடிவேல் மகன் உதயகுமார் என்கிற மணிகண்டன் (வயது 10) ஓடைப்புரம்போக்கில் தேங்கி இருந்த மழை நீரில் கடந்த 28-ந்தேதி மூழ்கி இறந்தார். மழை நீரில் மூழ்கி இறந்த இரண்டு சிறுவர்களின் குடும்பத்துக்கு உடனடி நிவாரண உதவியாக தலா ரூ.1.50 லட்சம் என ரூ.3 லட்சம் உதவி தொகை வழங்கப்பட்டது. இத்தொகைக்கான காசோலையை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.. ஆனந்தன் வழங்கினார். அப்போது திருப்பூர் கலெக்டர் .ஜி.கோவிந்தராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் பாரிவேல் மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், திருப்பூர் சப்-கலெக்டர் செந்தில்ராஜன், துணை மேயர் சு.குணசேகரன், அவினாசி பேரூராட்சி மன்ற தலைவர் ஆர்.ஜெகதாம்பாள், மாமன்ற உறுப்பினர்கள் எம்.கண்ணப்பன்  சண்முகசுந்தரம்,தாசில்தார்கள் சைபுதீன், கண்ணன்,மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை பணியில் சிறப்பாக ஈடுபட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் பாரிவேள் நன்றி தெரிவித்தார்.


திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தொகுதியில் உள்ள கொமரலிங்கம் பேரூராட்சிக்குட்பட்ட

பள்ளிகள் மற்றும் சாலையோரங்களில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா சட்டமன்ற உறுப்பினர் சி.சண்முகவேலு தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கொமரலிங்கம் பேரூராட்சித்தலைவர் கே.ஆர்.சிவக்குமார், பேரூர் கழகச் செயலாளர் கே.ஏ.வரதராஜ், செயல அலுவலர் தாஜ்நீஷா மற்றும் அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிர மடைந்ததைதொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் பெய்தகனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில்

சிக்கி உயிரிழந்த தாராபுரம் வட்டம் அலங்கியத்தைசேர்ந்த சிறுவன் சுஜீத்தின் பெற்றோர்க்கு மக்களின் முதல்வர் ஜெயலலிதா  அறிவுறைப்படி வனத்துறை அமைச்சர்எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலா 1.50 லட்சம் மதிப்புள்ள காசோலையை வழங்கினார்.அருகில்  மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், மாவட்ட ஊராட்சித்தலைவர் எம்.சண்முகம், துணைமேயர் சு.குணசேகரன் மாவட்டவருவாய் அலுவலர் பாரிவேல் ஆகியோர் உள்ளனர்.


திருப்பூர் தேவர் பேரவை சார்பில் காங்கேயம் ரோடு,ராக்கியபாளையம் பிரிவு அருகில் நடந்த

107வது தேவர் ஜெயந்தி விழாவில் அவரது படத்திற்கு மாநகராட்சி துணை மேயர் சு.குணசேகரன் மாலை அணிவித்து 500 பேருக்கு அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி நிலைக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி, வளர்மதி கரு.ராமச்சந்திரதேவர், பிரிண்ட் பீல்டு தம்பி, மூகாம்பிகை தங்கவேல்,அருணகிரி தேவர், டைகர் சிவா, குப்பாண்டிதேவர், மாணிக்கம்,தமயநாதன், தினேஷ், சண்முகம் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மக்கள் முதல்வர் ஜெயலலிதா நல்லாசியுடன்,84 நெசவாளர்களுக்கு தலா ரூ.2.30 லட்சம் மதிப்பில்

மொத்தம் ரூ.2 கோடி மதிப்பிலான பசுமை வீடுகள் கட்ட பல்லடம் அடுத்துள்ள கிருஷ்ணாபுரம், மூகாம்பிகைநகரில் பூமிபூஜை விழா நடந்தது.விழாவிற்கு ஊராட்சி மன்றத்தலைவர் படையப்பா மூர்த்தி தலைமை தாங்கினார்.விழாவில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பரமசிவம், மாவட்ட ஊராட்சித்தலைவர் வி.எம்.சண்முகம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தண்ணீர்பந்தல் ப.நடராஜ்,காரைப்புதூர் ஊராட்சி மன்றத்தலைவர் ஏ.நடராஜ்,கூட்டுறவு சங்க தலைவர்கள் எஸ்.எஸ்.மணியன், சொக்கப்பன், நெசவாளர் கூட்டுறவு வங்கி இயக்குநர், பல்லடம் வட்டார வளர்ச்சிஅலுவலர் மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் ,இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் விலையில்லாசைக்கிள் மற்றும் லேப் -டாப் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கி பேசினார்


துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன், திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி பல்லடம் .எம்.எல்.,ஏ.பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், பள்ளி மாணவ-மாணவிகள் 368 பேருக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி,மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை வழங்கி பேசியதாவது:-
கல்வித்துறையை மேம்படுத்த மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி தமிழக அரசு  திட்டங்களை வழங்கி வருகிறது. தமிழகம் முதன்மை மாநிலமாக வேண்டும் என ஜெயலலிதாவின் நோக்கத்தை நிறைவேற்ற  அரசு கல்விக்காக ரூ.17 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது.1 முதல் 10 ம் வகுப்பு வரை அனைத்து குழந்தைகளும் கல்வி பெற வேண்டும்; இடைநிற்றலை தடுக்க வேண்டும். என்ற அடிப்படையில் பள்ளிக்குழந்தைகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் விலையில்லாமல் வழங்கப்படுகின்றன.எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மிதிவண்டி, மடிக்கணினி உள்பட 14 வகை பொருட்கள் வழங்கப்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 15486 பேருக்கு ரூ.4.92 கோடி மதிப்புள்ள விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. 
மக்கள் முதல்வர் ஜெயலலிதா திட்டங்களால் தான் இன்றைக்கு கல்வியில் தமிழகம் 20-வது இடத்தில் இருந்து 8-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.திருப்பூர் மாவட்டம் 13-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.திட்டங்களை  பெற்று தமிழகத்தை நாட்டிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்கும் வகையில் மாணவ, மாணவியர்கள் நன்றாக படிக்க வேண்டும். மடிக்கணினி மூலம் சர்வதேச அளவில் உங்கள் கல்வித்தரத்தை உயர்த்தி கொள்ளுங்கள்.உங்கள் பள்ளியின் கோரிக்கையை ஏற்று ஜெயலலிதா வழிகாட்டுதல் படி கல்வித்துறை  அமைச்சரிடம் பேசி இங்கு 30 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள், 2 கழிப்பறைகள் அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
விழாவில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் பேசும்போது; மக்கள் முதல்வர் ஜெயலலிதாவழிகாட்டுதல்படி உலகத்தில் எந்த பணக்கார நாட்டிலும் இல்லாத திட்டம் மாணவர்களுக்கு சைக்கிள்,, மடிக்கணினி வழங்கும் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. 10, 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.500 ம், 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.2000- என ஒவ்வொரு மாணவர்களுக்கும் ரூ.5000 தமிழக அரசு டெபாசிட் செய்கிறது. உலகத்திலேயே தமிழகத்தில் தான் இவ்வளவு சிறப்பான திட்டங்கள் வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்தி நீங்கள் ( மாணவர்கள்) முன்னேற வேண்டும் என பேசினார்..
திருப்பூர் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசுகையில்;தமிழக அரசு பள்ளிக்குழந்தைகள் கல்வித்தரம் உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கல்விக்காக தமிழக அரசு மடிக்கணினி, சைக்கிள் உள்பட 14 வகை பொருட்களை விலையில்லாமல் வழங்குகிறது. இதை நன்கு பயன்படுத்தி மாணாக்கர்கள் முன்னேற வேண்டும் என்றார்.
திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி பேசும்போது, மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி மாணவர்களுக்கு சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் உங்கள் தாய் தந்தையால் கூட தர முடியாத திட்டங்கள் வழங்கப்படுகிறது.முந்தய காலத்தில் இது போன்ற திட்டங்கள்எதுவும் இல்லை. ஜெயலலிதா வழிகாட்டுதல்படி அவரது அரசே கல்விக்காக  வழங்குகிறது. இதை பயன்படுத்தி ஒவ்வொரு மாணவர்களும்  நன்றாக படிக்க வேண்டும் ; ஜெயலலிதாவிற்கு என்றும் நீங்கள் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் பிஷப் உபகரசாமி அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில்ரூ.63.30 லட்சம் மதிப்புள்ள மடிக்கணினிகள் 377 மாணவ, மாணவியர்களுக்கும், ரூ.16.30 லட்சம் மதிப்புள்ள மிதிவண்டிகள் 390 மாணவ, மாணவியர்களுக்கும்,, , ஜெயவாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.45 கோடி மதிப்பில் ஆயிரத்து 454 மாணவியர்களுக்கும், நஞ்சப்பா மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.66.15 லட்சம் மதிப்புள்ள மடிக்கணினிகள் 394 மாணவர்களுக்கும் மற்றும் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி.அரசு மேல்நிலைப்பள்ளி, மற்றும் அவினாசி கருவலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் விலையில்லா மிதிவண்டி மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார். 
பல்லடம் எம்.எல்.ஏ ,பரமசிவம் அவினாசி எம்.எல்.ஏ.கருப்பசாமி, துணை மேயர் சு.குணசேகரன்,மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், அவினாசி ஒன்றிய குழுத்தலைவர் பத்ம நந்தினி ஜெகதீசன், பேரூராட்சி மன்றதலைவர் ஆர்.ஜெகதாம்பாள் ஆகியோர் வாழ்த்தி பேசினார். மாவட்ட கல்வி அலுவலர் முருகன் வரவேற்றார்.விழாவில் பல்லடம் நகராட்சி துணைத்தலைவர்  வைஸ் பழனிசாமி, மண்டலத்தலைவர்கள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன்,கிருத்திகா சோமசுந்தரம்,நிலைக்குழு தலைவர்கள் அன்பகம் திருப்பதி, வசந்தாமணி, பட்டுலிங்கம், பூலுவபட்டி பாலு, பிரியா சக்திவேல், அவினாசி ஒன்றிய செயலளார் மு.சுப்பிரமணியம், நகர செயலாளர் ராமசாமி, தொகுதி செயலாளர் சேவூர் வேலுசாமி, தொழில் அதிபர் கிளாசிக் போலோ சிவராமன், மாவட்ட கல்வி அலுவலர் கரோலின்,கூட்டுறவு சங்க தலைவர்கள் எம்.மணி, கோகுல், சில்வர் வெங்கடாசலம், மாமன்ற உறுப்பினர்கள் வேலுசாமி, கண்ணப்பன்,செல்வம் லட்சுமி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவநீதகிருஷ்ணன், உதவி அலுவலர் சாய்பாபா, இடுவம்பாளையம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மூர்த்தி மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க இயக்குனர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 


பசும்பொன் முத்துராமலிங்கதேவர் 107 வது ஜெயந்தி விழா மற்றும் 52 வது குருபூஜை விழாவில் கடந்த 3 நாட்களாக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடந்து வருகிறது

பசும்பொன் முத்துராமலிங்கதேவர் 107 வது ஜெயந்தி விழா மற்றும் 52 வது குருபூஜை விழாவில் கடந்த 3 நாட்களாக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடந்து வருகிறது. மூன்றாம் நாளான இன்று காலை பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது சமாதியில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், செல்லூர் ராஜு, காமராஜ், டாக்டர் சுந்தர்ராஜன், செந்தூர் பாண்டியன், ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.அஞ்சலி நிகழ்ச்சிக்கு பின், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னேற்ற முன்னனி ஆகிய கட்சிகளின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்ன தானத்தினை முதல்வர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.உடன் எராளமான அ.தி.மு.க தொண்டர்கள் கலந்து கொண்டனர் ...

தேவர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் ..

பசும்பொன் முத்துராமலிங்கதேவர் 107 வது ஜெயந்தி விழா மற்றும் 52 வது குருபூஜை விழாவில் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் ..

Oct 29, 2014

தொழிலாளர் நலன்களை காக்க நலத்திட்டங்களை வழங்கி வருபவர் மக்கள் முதல்வர் ஜெயலலிதா என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் 2484 பேருக்கு 56.70 லட்சம் மதிப்பிலான அரசு உதவிகளை வழங்கி பேசினார்.


தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் நல வாரியங்களின் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர் டவுன் ஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கி பேசினார்.மாவட்ட தொழிலாளர் நல அலுவலர் ராஜாராமன் வரவேற்று பேசினார். 
 விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம.ஆனந்தன் பயனாளிகளுக்கு ரூ 56.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
மக்கள் நலனுக்காக ஜெயலலிதா கடந்த 3 ஆண்டுகளில் நல வாரியங்களை ஏற்படுத்தி, அதில் தொழிலாளர்களை உறுப்பினர்கலாக்கி, நல வாரியங்கள் மூலமாக  தொழிலாளர்கள் நல்ல முறையில் பயன் பெற வேண்டும் என செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் அவருடைய வழிகாட்டுதலின்படி தமிழக அரசு இன்று பல்வேறு நல திட்டங்கள்;ஐ செய்து வருகிறது. 17 தொழிலாளர் நல வாரியங்களில் 1,17,528 உறுப்பினர்கள் உள்ளனர். உறுப்பினர்களுக்கு திருமண உதவித்தொகை, விபத்து, இயற்கை மரண உதவி தொகை வழங்கப்படுகிறது. ஓய்வு பெற்ற உறுப்பினர்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படுகிறது.
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின் பேரில் எந்த மாநில கட்டுமான தொழிலாளியாக இருந்தாலும் நல உதவி வழங்கப்பட்டு வருகிறது. இன்று நடைபெறும் விழாவில் 213 பேருக்கு கல்வி உதவி தொகையாக  46 லட்சத்து 30 ஆயிரத்து ஐநூறு ரூபாயும், 85 பேருக்கு திருமண உதவி தொகையாக 3 லட்சத்து 53 ஆயிரம் ரூபாயும், 19 பேருக்கு மகப்பேறு உதவியாக 1 லட்சத்து 14 ஆயிரம் ரூபாயும், 8 பேருக்கு கண் கண்ணாடி உதவி தொகையாக 3 ஆயிரத்து 983 ரூபாயும், 13 பேருக்கு இயற்கை மரண உதவி தொகையாக 2 லட்சத்து 21 ஆயிரம் ரூபாயும், 2 பேருக்கு விபத்து மரண உதவி தொகையாக 2 லட்சத்து 4 ஆயிரம் ரூபாயும், 144 பேருக்கு மாதம் ரூ 1000 க்கான ஓய்வூதிய ஆணைகள் என மொத்தம் 2484 பேருக்கு 56 லட்சத்து 70 ஆயிரத்து 483 ரூபாய் மதிப்பிலான அரசு உதவி வழங்கப்படுகிறது.
இப்படிப்பட்ட நலத்திட்டங்களை உருவாக்கி தமிழக தொழிலாளர்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஜெயலலிதாவழிகாட்டுதல் படி தமிழக அரசு வழங்கி வருகிறது. வருகிற காலத்தில் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடைய வேண்டும்.மக்கள் முதல்வர் ஜெயலலிதா தொழிலாளர்கள் நலனுக்காக இன்னும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்க உள்ளாரஇவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
விழாவில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கி பேசும்போது,
தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. 10ம் வகுப்பு முதல் கல்லூரி வரை அரசு கல்வி உதவி வழங்குகிறது. திருமண உதவி, இயற்கை, விபத்து மரண உதவி மற்றும் ஓய்வூதியங்களை வழங்கி வருகிறது. இவ்வாறு தொழிலாளர் நலனுக்காக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.எனு கூறினார்.
திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி பேசும்போது கூறியதாவது:-
மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் வழிகாட்டுதல்  படி உங்களுக்கான திட்டங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் படி இந்த விழா நடக்கிறது. மக்கள் முதல்வர் ஜெயலலிதா என்றும் மக்களுக்கான திட்டங்களை எந்த இறுக்கமான சூழ்நிலையிலும் வழங்குகிறார்கள். அவர் மீண்டு மக்களுக்கான திட்டங்களை தொடர்வார்கள். என்று பேசினார்.
இந்த விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எம்.சண்முகம், துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் வி.ராதாகிருஷ்ணன், நிலைக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி, கவுன்சிலர்கள் கண்ணப்பன், கருவம்பாளையம் மணி, மார்க்கெட் சக்திவேல், கண்ணபிரான்,கலைமகள் கோபால்சாமி, ஜெகநாதன், சுந்தரமூர்த்தி, திருப்பூர் தொழிலாளர் அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து  கொண்டனர்.

திருப்பூர் மாநகராட்சி 56-வது வார்டு கே.வி.ஆர்.நகர் பகுதியில்

உள்ள கூலி தொழிலாளிகள்முருகன் மற்றும் மாகாளி ஆகிய இருவரின் வீடுகள் மழை காரணமாக  இடிந்து விழுந்தது.  வீடு இழந்த இருவர்களின் குடும்பத்தினர்களுக்கு திருப்பூர் தெற்கு தாசில்தார் கண்ணன், நகரமைப்பு குழு தலைவர் அன்பகம் திருப்பதி ஆகியோர் அரசு உதவி தொகை தலா ரூ.2500, மற்றும் வேட்டி-சேலை, அரிசி, மண்ணெண்ணெய் ஆகியவற்றை வழங்கினார். உடன் கிராம நிர்வாக அலுவலர் விஜயராகவன் உள்ளார்.

அண்ணா தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு எதிரான

அநீதியை எதிர்த்தும், மீண்டும் அவர் தமிழக முதல்வராக ஆட்சி பொறுப்பெற்கவும், அவர் பூர்ண நலம் பெறவும் வேண்டி மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.சண்முகவேலு தலைமையில் காரத்தொழுவு அருள்மிகு அழகு நாச்சியம்மன் கோவில், திருமூர்த்திமலை அருள்மிகு அமணலிங்கேசுவரர் கோவில்களுக்கு நடைபயணம் சென்று பிரர்த்தனை செய்தனர்.

Oct 28, 2014

வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட சாலைகளை செப்பனிடவும், குளம் குட்டைகளைச் சீரமைக்கவும் 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்

முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் துவங்குவதற்கு முன்னரே, வெள்ளப்பெருக்கிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டு, அதன் அடிப்படையில் அதற்கான நடவடிக்கைகள் மாவட்ட ஆட்சித் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்டன.
புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கை காரணமாக, 21.10.2014 அன்று திண்டுக்கல் மாவட்டம், காளிப்பட்டியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய இரு குடும்பங்களைச் சேர்ந்த 10 நபர்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, 24.10.2014 அன்று வடகிழக்கு பருவமழை குறித்த ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றபோது, மழையினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க அரசு செயலாளர் நிலையில் உள்ள 20 அதிகாரிகள் மழையினால் பாதிக்கப்பட்ட 20 மாவட்டங்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டு, அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்க இடம், உண்ண உணவு, உடுக்க உடை ஆகியவை அளிக்கப்படுவதையும், மீட்பு மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்படுவதையும் அவர்கள் உறுதி செய்தனர்.
இந்தச் சூழ்நிலையில், நிவாரணப் பணிகளை மேலும் முடுக்கிவிடும் வகையில், 27.10.2014 அன்று தலைமைச் செயலகத்தில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேலுமணி, உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை குறித்தும், அதன் காரணமாக ஏற்பட்டுள்ள மனித உயிரிழப்புகள் குறித்தும், கால்நடை உயிரிழப்புகள் குறித்தும், சேதமடைந்துள்ள குடிசைகள் மற்றும் பயிர்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த ஆண்டு இதுவரை 204.5 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என்றும், இது இயல்பாக பெறும் மழை அளவான 151 மில்லி மீட்டருடன் ஒப்பிடும்போது 35 விழுக்காடு அதிகம் என்றும், தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் 28 மாவட்டங்களில் கூடுதலாக மழை பெய்துள்ளது என்றும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கனமழை காரணமாக மின்சாரம் தாக்கியும், இடி மற்றும் மின்னல் தாக்கியும், சுவர் இடிந்து விழுந்தும், வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டும் இதுவரை 30 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மேலும் 1 லட்சம் ரூபாயினை முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
இந்த பெருமழைக்கு 108 கால்நடைகள் பலியாகியுள்ளதாகவும், இவற்றில் மாடுகளை இழந்த உரிமையாளர்களுக்கு 20,000 ரூபாய் நிவாரணத் தொகையும், ஆடுகளை இழந்த உரிமையாளர்களுக்கு 2,000 ரூபாய் நிவாரணத் தொகையும், கோழிகளை இழந்த உரிமையாளர்களுக்கு 100 ரூபாய் நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டதாகவும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த பெருமழைக்கு இதுவரை 250 குடிசை வீடுகள் முழுமையாகவும், 623 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன என தெரிவிக்கப்பட்டது. முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு 5,000 ரூபாய் நிவாரணத் தொகையும், பகுதியாக சேதமடைந்த குடிசைகளுக்கு 2,500 ரூபாய் நிவாரணத் தொகையும் வழங்க அதிகாரிகளுக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு அரிசி, வேட்டி-சேலை, மண்ணெண்ணெய் ஆகிய பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.
கனமழை காரணமாக, சில இடங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதாக இந்த ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. வெள்ள நீர் வடிந்த பிறகே பயிர்ச் சேதம் குறித்து சரியாக ஆய்வு செய்ய இயலும் என்பதால், வெள்ள நீர் வடிந்த பின் ஆய்வு செய்து அறிக்கை அனுப்புமாறு அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சாலைகளைப் பொறுத்தவரை, கனமழை காரணமாக, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 797 சாலைகளில் 3070 இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இவற்றில் 2505 இடங்களில் உள்ள பள்ளங்கள் செப்பனிடப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பள்ளங்களை செப்பனிடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. பிற மாவட்டங்களைப் பொறுத்த வரையில் 4,765 நீளச் சாலைகள் கனமழையில் சேதமடைந்துள்ளதாகவும், அவற்றை செப்பனிடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட சாலைகளை செப்பனிடவும், குளம் குட்டைகளைச் சீரமைக்கவும் 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இந்த ஆண்டு இறுதி வரை வடகிழக்கு பருவமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதால், மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து பாதுகாப்பு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் அரசு இயந்திரம் தயாராக உள்ளது என்பதை அதில் கூறியுள்ளார்.

Oct 27, 2014

சோதனைகளை வென்று நிரந்தர முதல்வராக ஜெயலலிதா வருவார்: அமைச்சர் செல்லூர்ராஜூ பேச்சு

Photo: சோதனைகளை வென்று நிரந்தர முதல்வராக ஜெயலலிதா வருவார்: அமைச்சர் செல்லூர்ராஜூ பேச்சு

                            தமிழக மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் கழக நிரந்தரப்பொதுசெயலாளர் ,தங்கத்தாரகை ,இதய தெய்வம், புரட்சித்தலைவி,மக்களின் முதலவர் அம்மா அவர்களின் நல்லாசியுடன் மதுரை மாவட்ட கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு உதவிகள் வழங்கும் விழா மதுரையில்  நடைபெற்றது.தொழிலாளர் நலத்துறை ஆணையர் ராதாகிருஷ்ண பாண்டியன் தலைமை தாங்கினார். இணை ஆணையர் ராஜா முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் செல்லூர்ராஜூ கலந்து கொண்டு வாரிய தொழிலாளர்கள் 1594 பேருக்கு ரூ.43 லட்சம் மதிப்பிலான நிதி உதவிகளை வழங்கி பேசிய போது ,மதுரை மாவட்டத்தில் அமைப்புசாரா வாரிய உறுப்பினர்களாக 3 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். அதனை 5 லட்சமாக மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவது பாராட்டுக்குரியது. உழைப்பவரே உயர்ந்தவர் என்ற லட்சியத்தை கொண்டது அ.தி.மு.க. இயக்கம்.புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், மக்களின் முதல்வர் அம்மாவும் தொழிலாளர்களை தங்கள் வீட்டு பிள்ளைகளாக பாவித்து பல்வேறு நலத்திட்டங்களை தந்துள்ளனர். தொழிலாளியின் வியர்வை காயும் முன், ஊதியம் கொடுக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர் மக்களின் முதல்வர் அம்மா.தொழிலாளர்களின் குழந்தைகள் சமுதாயத்தில் உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், மக்களின் முதல்வர் அம்மாவும் திட்டங்களை தந்திருக்கிறார்கள்.தொழிலாளர்கள் தங்குவதற்காக சென்னையில் ஜீவா இல்லம் அமைத்தவர் எம்.ஜி.ஆர். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து தந்தவர் அம்மா. அமைப்பு சாரா நல வாரியத்தில் கட்டிட தொழிலாளர்களையும் சேர்த்து சலுகைகள் வழங்கியவர் அம்மா. கருணை உள்ளம் கொண்ட அம்மா, சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தொழிலாளிகளின் தலை எழுத்தையே மாற்றி காட்டினார்.தொழிலாளர் வர்க்கத்திற்கு வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை, சலுகைளை வாரி வழங்கியவர் அம்மா. இதை தொழிலாளர்கள் ஒரு போதும் மறக்கக்கூடாது.தொழிலாளி இறந்தால் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ.1 லட்சம் என்று இருந்ததை ரூ.5 லட்சமாக உயர்த்தினார். அப்படிப்பட்ட மக்களின் முதல்வர் அம்மாவுக்கு தொழிலாளர்கள் அரணாக இருக்க வேண்டும்.சூழ்ச்சியாளர்களால் அம்மாவுக்கு சோதனை ஏற்பட்டபோது தமிழகமே கொதித்தெழுந்தது. அம்மா விடுதலை ஆக வேண்டும் என்று அவரவர் தெய்வங்களை வழிபாடு செய்தனர். மக்களின் பிரார்த்தனை பலித்தது. அதுபோல அவருக்கு எதிரான அநீதியை விரைவில் முறியடிப்பார். மீண்டும் தமிழகத்தின் நிரந்தர முதல்–அமைச்சராக வருவார். தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்களை அள்ளி தருவார் என உரையாற்றினார்
மதுரை மாவட்ட கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு உதவிகள் வழங்கும் விழா மதுரையில் நடைபெற்றது.தொழிலாளர் நலத்துறை ஆணையர் ராதாகிருஷ்ண பாண்டியன் தலைமை தாங்கினார். இணை ஆணையர் ராஜா முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் செல்லூர்ராஜூ கலந்து கொண்டு வாரிய தொழிலாளர்கள் 1594 பேருக்கு ரூ.43 லட்சம் மதிப்பிலான நிதி உதவிகளை வழங்கி பேசிய போது ,மதுரை மாவட்டத்தில் அமைப்புசாரா வாரிய உறுப்பினர்களாக 3 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். அதனை 5 லட்சமாக மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவது பாராட்டுக்குரியது. உழைப்பவரே உயர்ந்தவர் என்ற லட்சியத்தை கொண்டது அ.தி.மு.க. இயக்கம்.புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், மக்களின் முதல்வர் அம்மாவும் தொழிலாளர்களை தங்கள் வீட்டு பிள்ளைகளாக பாவித்து பல்வேறு நலத்திட்டங்களை தந்துள்ளனர். தொழிலாளியின் வியர்வை காயும் முன், ஊதியம் கொடுக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர் மக்களின் முதல்வர் அம்மா.தொழிலாளர்களின் குழந்தைகள் சமுதாயத்தில் உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், மக்களின் முதல்வர் அம்மாவும் திட்டங்களை தந்திருக்கிறார்கள்.தொழிலாளர்கள் தங்குவதற்காக சென்னையில் ஜீவா இல்லம் அமைத்தவர் எம்.ஜி.ஆர். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து தந்தவர் அம்மா. அமைப்பு சாரா நல வாரியத்தில் கட்டிட தொழிலாளர்களையும் சேர்த்து சலுகைகள் வழங்கியவர் அம்மா. கருணை உள்ளம் கொண்ட அம்மா, சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தொழிலாளிகளின் தலை எழுத்தையே மாற்றி காட்டினார்.தொழிலாளர் வர்க்கத்திற்கு வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை, சலுகைளை வாரி வழங்கியவர் அம்மா. இதை தொழிலாளர்கள் ஒரு போதும் மறக்கக்கூடாது.தொழிலாளி இறந்தால் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ.1 லட்சம் என்று இருந்ததை ரூ.5 லட்சமாக உயர்த்தினார். அப்படிப்பட்ட மக்களின் முதல்வர் அம்மாவுக்கு தொழிலாளர்கள் அரணாக இருக்க வேண்டும்.சூழ்ச்சியாளர்களால் அம்மாவுக்கு சோதனை ஏற்பட்டபோது தமிழகமே கொதித்தெழுந்தது. அம்மா விடுதலை ஆக வேண்டும் என்று அவரவர் தெய்வங்களை வழிபாடு செய்தனர். மக்களின் பிரார்த்தனை பலித்தது. அதுபோல அவருக்கு எதிரான அநீதியை விரைவில் முறியடிப்பார். மீண்டும் தமிழகத்தின் நிரந்தர முதல்–அமைச்சராக வருவார். தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்களை அள்ளி தருவார் என உரையாற்றினார்