Dec 2, 2018

விமான நிலையத்தில் விமானம் நிறுத்தப்பட்டுள்ளது

திருச்சி  02.12.18

நேற்று இரவு திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு 1.35 மணிக்கு 150 பயணிகளை ஏற்றி கொண்டு சென்ற ஸ்கூட் விமானம், விமான ஒடுதள பாதையில் சென்று கொண்டு இருக்கும் போதே தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.

இவ்விமானத்தில் பயணித்த 150 பயணிகள் உயிர் தப்பினர், அவர்களை திருச்சி தனியார் விடுதியில் தங்க வைத்துள்ளனர்.

இது போன்ற நிகழ்வுகள் திருச்சியில் சமீபகாலமாக விமான கோளாறு, விமான விபத்து என அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்



*விமான நிலையத்தில் 10.49 இலட்சம் மதிப்புள்ள 345 கிராம் தங்கம் பறிமுதல்*

மலேசியா, துபாயிலிருந்து இரவு வந்த விமானத்திலும், இன்று காலை  சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தபோது திருவாரூரை சேர்ந்த அகமதுகான், புதுக்கோட்டையை சேர்ந்த அடைக்கலம், குலசேகரபட்டினம் சேர்ந்த அப்துல்காதர், மற்றுமொரு பயணி என 4 பேரிடமிருந்து 10.49 இலட்சம் மதிப்புள்ள 345 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை.