Jan 21, 2015

திருப்பூர் மாநகராட்சி 23-வது வார்டு, அம்பேத்கர் நகரில் திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் மூலம் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஆவணப்படங்கள் திரையிடப்படுவதை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பார்வையிட்டார்







திருப்பூர் மாநகராட்சி 23-வது வார்டு, அம்பேத்கர் நகரில் திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் மூலம் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஆவணப்படங்கள் திரையிடப்படுவதை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பார்வையிட்டார். திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், நிலைக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி, கவுன்சிலர்கள் கண்ணப்பன், சண்முகசுந்தரம்,  மற்றும் ஹரிஹரசுதன், தமிழக அரசின் கள விளம்பர துணை இயக்குனர் சண்முக சுந்தரம்,  மக்கள் தொடர்பு அலுவலர்கள் கலைச்செல்வன், தமிழ்மொழி அமுது, உதவி அலுவலர்கள் சாய்பாபா, பாலாஜி, உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம்; அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் தந்தவர் மக்கள் முதல்வர் அம்மா பொங்கல் விழாவில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பெருமிதம்










திருப்பூர் மாவட்டம் கேத்தனூர் ஊராட்சி அம்மா நகரில், பொங்கல் விழா நடந்தது. 
தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பொதுமக்களுக்கு பொங்கல், கரும்பு மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ&மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். திருப்பூர் கலெக்டர் கு.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். கோவை எம்.பி., நாகராஜன், பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், சப்&கலெக்டர் செந்தில்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தாரை தப்பட்டை முழங்க அப்பகுதி மக்கள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முன்னிலையில் பொங்கல் வைத்து பூஜை செய்தனர்.
 விழாவில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசும்போது கூறியதாவது:&பல்லடம் சட்டமன்ற தொகுதி, கேத்தனூர் ஊராட்சியில் மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் ஆணைக்கிணங்க, பட்டாக்களை வழங்கி வீடுகளை உருவாக்கி இப்பகுதியில் பொங்கல் விழா நடக்கிறது. இன்று மனிதனுக்கு தேவை உண்ண உணவு, இருப்பிடம், உடை ஆகியவை; இம்மூன்றும் தான் முக்கிய தேவைகள். இன்றைக்கு மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் ஆட்சி பொறுபேற்ற போது முதல் அனைத்து ரேசன் கார்டுகளுக்கு 20 கிலோ  விலையில்லா அரிசி வழங்கி வருகிறார், அதே போல மக்களின் குடியிருப்பு சிக்கல்களை தீர்க்க வருடத்துக்கு 2 லட்சம் பட்டாக்களை வழங்க அம்மா அவர்கள் உத்தரவிட்டார். அதனடிப்படையில் நிலத்தை வகை மாற்றம் செய்து 51 பேருக்கு பட்டா வழங்கி, ரூ. 1.03 கோடி வீடு கட்டவும், அடிப்படை வசதிகளுக்காகவும் ஒதுக்கப்பட்டு பணிகள் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்லது. 
 மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் காலத்தில், தமிழகத்தில் ஏழை எளீய மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்லது. அது போல உடுக்க உடை வேண்டும், என்பதற்காக விலையில்லா வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது. 
 இவ்வாறு மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் உண்ண உணவு, உடுக்க உடை மற்றும் இருக்க இருப்பிடம் ஆகிய மூன்றையும் தந்து உள்ளார்.அனைத்து மக்களும் இன்பமாக தமிழக மக்கள் பொங்கல் கொண்டாட வாழ்த்து செய்தியும் அம்மா தந்துள்ளார். கேத்தனூரில் உருவாக்கப்பட்டுள்ள அம்மா நகர் மேம்படவும் தொடர்ந்து பொங்கல் விழா நடத்தவும், மிகப்பெரிய மாநகராக அம்மா நகர் உருவாகவும் வாழ்த்துகிறேன். இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
 இந்த விழாவில் ஒன்றிய செயலாளர்கள் கே.என்.விஜயகுமார், சிவாச்சலம், புத்தரச்சல் பாபு, யு.எஸ்.பழனிசாமி, கேத்தனூர் ஊராட்சி தலைவர் ஹரிகோபால், வக்கீல் சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டம் கேத்தனூர் ஊராட்சி அம்மா நகரில், பொங்கல் விழா நடந்தது. 
தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பொதுமக்களுக்கு பொங்கல், கரும்பு மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ&மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். திருப்பூர் கலெக்டர் கு.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். கோவை எம்.பி., நாகராஜன், பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், சப்&கலெக்டர் செந்தில்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தாரை தப்பட்டை முழங்க அப்பகுதி மக்கள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முன்னிலையில் பொங்கல் வைத்து பூஜை செய்தனர்.
இந்த விழாவில் ஒன்றிய செயலாளர்கள் கே.என்.விஜயகுமார், சிவாச்சலம், புத்தரச்சல் பாபு, யு.எஸ்.பழனிசாமி, கேத்தனூர் ஊராட்சி தலைவர் ஹரிகோபால், வக்கீல் சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்