Dec 7, 2014

திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க., மற்றும் ஜெயலலிதா பேரவை சார்பில், பொது செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி செவந்தாம்பாளையம் ஸ்ரீ மாகாளியம்மன், கோவிலில் சிறப்பு பூஜை

 பிரார்த்தனை மாவட்ட பேரவை தலைவர் அட்லஸ் சி.லோகநாதன் தலைமையில் நடந்தது மாநகர மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் பூஜையை  தொடங்கி வைத்து அன்னதானம் வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் மேயர் அ.விசாலாட்சி,  துணை மேயர் சு.குணசேகரன்  மாவட்ட பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், வடக்கு தொகுதி செயலாளர் ஜான்,ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், சில்வர் வெங்கடாசலம், சேவூர் வேலுசாமி, கிருத்திகா சோமசுந்தரம்,நிர்வாகிகள் கண்ணப்பன், கருவம்பாளையம் மணி, மார்க்கெட் சக்திவேல், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிசாமி, கண்ணன், சின்னு, சாகுல்ஹமீது, ரஞ்சித் ரத்தினம், கோமதி சம்பத், ரத்னகுமார், ஈஸ்வரமூர்த்தி, குமார், மோட்டார் பாலு, பொன்னுசாமி, பாசறை லோகநாதன், அன்பரசன், எஸ்.ஆர்.நகர் ரவி, கோகுல்,கவுன்சிலர்கள் பேபி தர்மலிங்கம் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் நேரு யுவகேந்திரா தமிழ்நாடு,விழுதுகள் பவுண்டேசன் இணைந்து

கிராமந்தோறும் பசுமைச்சோலை அமைக்கும் திட்டம்” கீழ் ஒரு ஆண்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ்.தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தாராபுரம் ஒன்றியப் பெருந்தலைவர் பி.ரமேஷ். என்.ஒய்.கே.என்  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன், உதவி இயக்குநர் (ஊ) சங்கமித்திரை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதி நிதிகள் கலந்து கொண்டானர்.

திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அடுத்துள்ள காட்டூர் வெள்ளநத்தத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ரேசன் கடையை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் திறந்து வைத்து ரேசன் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம்,  மாவட்ட ஊராட்சித்தலைவர் எம்.சண்முகம், ஒன்றிய குழுத்தலைவர்கள் எஸ்.சிவாச்சலம், எம்.கே.ஆறுமுகம், திருப்பூர் மண்டல கூட்டுறவு இணை பதிவாளர் சா.பாபு, துணை பதிவாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சண்முகவேல், கூட்டுறவு நிலவள வங்கி தலைவர் புத்தரச்சல் பாபு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எதிர்கால இந்தியாவிற்கு நல்ல குடிமகன்களை உருவாக்கி தருகின்ற பொறுப்பு உடையவர்களாக ஆசிரியர்களும், பெற்றோர்களும் உள்ளனர் என்று தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பிரமணியம்பேசினார்.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு மற்றும் விருது வழங்கும் விழா பல்லடம் அடுத்துள்ள லட்சுமி மில் அருகில் உள்ள புரபசனல் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் வரவேற்று பேசினார்.
விழாவில் 2014ம் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியருக்கான விருது உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் டி.சிவக்குமார், ஆர்.பழனிசாமி, வி.மாரியப்பன், உடுமலை ஸ்ரீவிசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியைகள் ஆர்.சுகந்தி,பி.சுகந்திலதா,உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சி.எஸ்.வசந்தராஜ், திருப்பூர் கே.எஸ்.சி.அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சி.சிவகுமார்,ஆசிரியை யு.ஏ.ஆர்.வகிதா ஆகியோருக்கும், 40 பள்ளிகளுக்கு சிறந்த பள்ளிக்கான விருதையும்,10 மற்றும் 12ம் வகுப்பு பாடப்பிரிவில் 100 சதம் தேர்ச்சி விகித்தை அளித்த 1520 ஆசிரியர்களுக்கும் ஆக மொத்தம் 1569 ஆசிரியர்களுக்கு விருது மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி புரபசனல் கல்வி நிறுவனங்களின் தலைவரும்,தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் சுப்பிரமணியம் வழங்கி பாராட்டினார்.அப்போது அவர் பேசியதாவது:-
உலகில் உள்ள பணிகளில் சிறந்த பணி ஆசிரியர் பணியாகும்.இந்த பணிக்கு நிகர் வேறு ஏதும் இல்லை.தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளிலும் நல்ல தேர்ச்சி விகித்ததை அளித்துள்ளனர். ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர் போன்றவர்கள் அவர்கள் தான் எதிர்கால இந்தியாவிற்கு நல்ல குடிமகன்களை உருவாக்கி தருகின்ற பொறுப்பும் உடையவர்களாகவும் உள்ளனர் என்று பேசினார்.
இந்த விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் கரோலின்,நேர்முக உதவியாளர் நூர்மாலிக், புரபசனல் கல்லூரி இயக்குநர் சந்திரமோகன்,முதல்வர் சந்திரசேகர்,தலைமை நிர்வாக அலுவலர் முத்துக்குமார்,வளாக பராமரிப்பு அலுவலர் யுவராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதம் தேர்ச்சி விகிதம் பெற்ற கன்னிவாடி, மூலனூர் (மாதிரி), புதுப்பை, திருப்பூர் பாளையக்காடு எம்.என்.எம்.செட்டியார் பள்ளி, அவிநாசி புனித தாமஸ் பள்ளி , கோவிந்தாபுரம் மாணிக்கசாமி, உடுமலை எஸ்.வி.ஜி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளும்,
பஞ்சலிங்கம்பாளையம், கருகம்பாளையம், கருகன்காட்டுபாளையம், பொல்லிகாளிபாளையம், என்.சி.ஜி.வலசு, நஞ்சைதலையூர், சங்கரண்டாம்பாளையம், சின்னக்காம்பட்டி, பேரளம்,தேர்பட்டி, நல்லிமடம்,ஒலப்பாளையம்,மலையாண்டிபட்டணம்,போதம்பாளையம்,வஞ்சிபாளையம், புதுப்பை ,சர்கார்பெரியபாளையம்,கோடங்கிபாளையம்,கொங்கல்நகரம்,மூலனூர், திருமலைகவுண்டம்பாளையம், சின்னகாம்பாளையம், பொட்டிகாம்பாளையம், ஆதிதிராவிடர் நலப்பள்ளி, காட்டூர், நடுவேலம்பாளையம், துங்ககாவி, அருகம்பாளையம், லட்சுமி நாய்க்கன்பட்டி, திருப்பூர் புதுராமகிருஷ்ணபுரம் மற்றும் நொய்யல் வீதி ஆகிய அரசு உயர்நிலைப்பள்ளிகளுக்கும்,
12ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதம் தேர்ச்சி விகிதம் பெற்ற வடுகபட்டி,கன்னிவாடி, படியூர், புதுப்பை ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கும் விருது மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது

திருப்பூர், பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, வரும் கல்வியாண்டில் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தெரிவித்தார்


திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக்கப்பள்ளி இணைந்து நடத்திய பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் யு.எஸ்.பழனிசாமி தலைமை தங்கினார். திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் குணசேகரன், மாவட்ட கூட்டுறவு நிலவள வங்கி தலைவர் புத்தரச்சல் பாபு ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார். தலைமை ஆசிரியர்கள் கா.முருகேசன் (உயர்நிலைப்பள்ளி) சு.மனோகரன் (துவக்கப்பள்ளி) ஆகியோர் வரவேற்றனர். பட்டதாரி ஆசிரியர் சு.மாரிசாமி ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், 10ம் வகுப்பு  பொதுத்தேர்வில் 100 சதம் தேர்ச்சி விகிதத்தை அளித்த ஆசிரியர்களுக்கும் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கி பேசியதாவது:-
தமிழகத்தில் கல்வி கற்க பொருளாதாரம் ஒரு தடையாக இருக்க கூடாது.என்படஹ்ர்ககவும், கல்வி கற்கதாதவர்கள் இருக்ககூடாது என்பதற்காக மக்களின் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் கல்வி துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஜெயலலிதா வழிகாட்டுதலுடன் தமிழகம் வளர்ச்சி பாதையில் முன்னேறி கொண்டுள்ளது. இப்பள்ளியை மேல் நிலைப்பளியாக தரம் உயர்த்தவேண்டும் என அனைவரும் வலியுறுத்தினர். 2014-15ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்டு இருக்க வேண்டும். அதனால் அடுத்த கல்வி ஆண்டில் நிச்சயமாக இந்த பள்ளி தரம் உயர்த்தி தரப்படும். அதற்கான பூர்வாங்க பணிகளை கல்வி அமைச்சர் செய்து வருகிறார். இப்பள்ளியில் படிக்கும் 500 கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரும்போதும், போகும்போதும் பள்ளி முன்பு செல்லும் மாநில நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறினார்கள். நிச்சயமாக விரைவில் நெடுஞ்ச்சலை துறை அதிகளிடம் பேசி விரைவில் பள்ளிக்கு முன்பு வேகத்தடை அமைத்து தரப்படும். 
மேலும் பள்ளிக்கு அரசு நிலம் இருக்கும் பட்சத்தில் விளையாட்டு மைதானம் அமைப்பது குறித்து மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்படும்.இப்பள்ளியின் வழியாக செல்லும் உயர் அழுத்த மின்சார கம்பியை வேறு பாதை வழியாக கொண்டு செல்ல மின்சார வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும்.வரும் எனவே, மாணவ, மாணவியர்கள் தமிழக அரசு வழங்கும் திட்டங்களை பெற்று அவற்றை பயன்படுத்தி வீட்டிற்கும், நாட்டிற்கும் மக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். 
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
விழாவில் திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி, பல்லடம்  கே.பி.பரமசிவம் எம்.எல்.ஏ, திருப்பூர் மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம்,பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.சிவாச்சலம் ஆகியோர் வாழ்த்தி பேசினார். திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் சு.குணசேகரன், மண்டலத்தலைவர் வி.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு வங்கி தலைவர்கள் எஸ்.பி.லோகநாதன், கருவம்பாளையம் மணி, மார்க்கெட் சக்திவேல், கவுன்சிலர் கண்ணப்பன்,மாவட்ட கவுன்சிலர் பழனிசாமி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் இந்திராணி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுப்பிரமணியம், வார்டு உறுப்பினர்கள் தனலட்சுமி, சரோஜினி, ஆசிரியர்கள் மஞ்சுளா, செல்வகுமார் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் மாணவ மாணவியர்களின் கலை நிகழ்சிகள் நடை பெற்றது.
முடிவில் பட்டதாரி ஆசிரியை ஏ.அனிதா நன்றி கூறினார். திருப்பூர் மாவட்ட அளவில் சிறந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் சிறந்த பள்ளிகளுக்கு விருது வழங்கும் விழா பல்லடம்  புரபசனல் கல்லூரியில் நடைபெற்றது.திருப்பூர் அடுத்துள்ள பொல்லிகாளிபாளையம் பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.



தொழில்துறையினருக்கு தமிழக அமைச்சர்கள் அழைப்பு

திருப்பூர் மாவட்ட சி.ஐ.ஐ., அமைப்பு,  தமிழக அரசின்  தொழில் துறை வளர்ச்சிக்கான கருத்தரங்கு காங்கயம் ரோட்டில் உள்ள வேலன் ஹோட்டலில் நடந்தது. 
கூட்டத்துக்கு சிஐஐ திருப்பூர் மாவட்டத் தலைவர் ராஜா எம்.சண்முகம் தலைமை தங்கினார்.சிஐஐ தமிழகத் தலைவர் ரவிசாம் முன்நிலை வகித்தார். தமிழக தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி, ஊரக தொழில்துறை அமைச்சர் ப.மோகன், வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், மேயர் அ.விசாலாட்சி, சத்யபாமா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்  கே.பி.பரமசிவம், கருப்பசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம் துணை மேயர் சு.குணசேகரன், ஆகியோர் விளக்க உரை ஆற்றினர்.
கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-
தமிழக முதல்வராக ஜெயலலிதா 3வது முறை பொறுப்பேற்ற 3 வது நாளில் திருப்பூர் சாயப்பட்டறை பிரச்சினைக்கு வட்டியில்ல கடனாக ரூ.200 கோடி கொடுத்ததால்தான்  இன்று தொழில் பனியன் சிறப்பாக இருக்கிறது என்று தொழில் துறையினரே  கூறுகின்றனர். இங்கே தொழிலை விட்டு விட்டு செல்லப்போவதில்லை என்று நீங்களே சொல்வதிலேயே  தமிழகம் தொழில் செய்வதற்கு சிறப்பாக உள்ளது என்று தெரிகிறது தொழில் துறையினர் நினைத்து பார்க்க வேண்டும், கர்நாடகா உள்ளிட்ட வேறு மாநிலங்களை விட தமிழகத்தில் தான் தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இங்கிருந்து தொழிற்சாலைகள் வேறு எங்கும் செல்லாத அளவுக்கு மக்கள் முதல்வர் ஜெயலலிதா பார்த்து உள்ளார்.தமிழகத்தில் அனைவரும் கடுமையான உழைப்பாளிகள்; அதனால் தான் தமிழகம் சிறப்பாக இருக்கிறது. 
திருப்பூரை பொறுத்த வரை இங்கே இருக்கிற ஒவ்வொருவரும் தமது உழைப்பை கொடுத்து இம்மாநகரை முன்னேற்றி இருக்கிறீர்கள். அதற்கு மக்கள் முதல்வர் ஜெயலலிதா அரசு தேவையான பாதுகாப்பு வழங்குகிறது. அந்த அளவுக்கு சட்டத்தின் ஆ ட்சி நடக்கிற மாநிலமாக தமிழகம் உள்ளது. உங்களுக்கு என்ன தேவையோ அதை ஜெயலலிதா செய்கிறார். உங்கள் தேவை என்ன என்று கேட்பதற்காக தான் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். ஜெயலலிதா   வழிகாட்டுதலுடன் திருப்பூரில் கடந்த ஒரு மாதம் முன்பே  மகளிர் விடுதி  கட்ட ஆலோசிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடக்கிறது. திருப்பூரில் ஆய்வு மையம் அமைக்க ஜெயலலிதா கூறி நடவடிக்கை எடுக்கபடும்.
உங்களுடைய பிரச்சினை எது என்றாலும் அதை உடனடியாக தீர்க்க வேண்டும் என ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தொழில் செய்ய வருபவர்களுக்கு ஆட்சியாளர்கள் தான் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த அரசு செயல்படுகிறது.தொழிலையும் பாதுகாக்க வேண்டும்; அதே சமயம் மக்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிரது. உங்களுக்கு தேவையான தொழிலாளர்களுக்கான பயிற்சி மையம் கேட்டிருக்கிறீர்கள் அதையும் ஏற்பாடு செய்ய மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும். இங்குள்ள தொழில் முனைவோர் முதலீடுகள் செய்வதற்கு வேறு மாநிலங்களுக்கு செல்லாமல் தமிழகத்தையே தேர்வு செய்திட வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு மே மாதம் நடத்த உள்ள தொழில்துறை மாநாட்டில் திருப்பூர் தொழில்துறையினர் அதிகளவில் பங்கேற்று ரூ.10,ஆயிரம் கோடி அளவுக்கு தமிழகத்திலேயே முதலீடு செய்வதற்கான உறுதியை அளிக்க வேண்டும். 
தென் தமிழகத்தில் தொழில் துவங்கினால் நிலத்தின் மதிப்பில் 50 சதவீதம் குறைத்து ஜெயலலிதா அறிவித்துள்ளார். அப்பகுதியில் தொழில் துவங்க அரசு உங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரும். சி பாரம் பிரச்சினையை சம்பந்தப்பட்ட துறையில் தெரிவித்து, தீர்வு காணப்படும். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மட்டும் தான் நல்ல சலுகைகளும், பாதுகாப்பும் கிடைக்கிறது. மக்கள் முதல்வரின் அரசு தொழிலுக்கு என்றென்றும் பாதுகாப்பாக இருக்கும் 
இவ்வாறு அமைச்சர் தங்கமணி பேசினார்.ஊரக தொழில்துறை அமைச்சர் ப.மோகன் பேசியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில், மிகப்பேரிய அளவில் இந்தியாவிலேயே பின்னாலாடையில் சிறந்து விளங்குகிறது.  நீட்ஸ் என்கிற திட்டத்தை மக்கள் முதல்வர் ஜெயலலிதா தீட்டி, அத்திட்டத்தில் ஜெயலலிதா  50 சதவீதத்தை தர செய்தவர். மகளிருக்கென சேலம், சென்னையில் தொழிற்பேட்டையை அமைத்து தந்த இந்த அரசு அவரது வழிகாட்டுதலின் பேரில் . இன்றைக்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் பின்னலாடை ஏற்றுமதி செய்கிறது. 18 ஆயிரம் கோடி வர்த்தகம், 20 லட்சம் பேருக்கு வாய்ப்பு அளிக்கிறது. உலகளவில் 4 சதவீத அளவில் இம்மாநகர் ஏற்றுமதி செய்கிறது. 
தமிழ்நாடு அரசால் இந்த துறை மூலம்  சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறந்த மாநிலம் தமிழ்நாடு என மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்துக்கு ஒற்றை சாளர தேர்வு பணிகள் இணைய தளம் மூலம் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை அம்மாவின் அரசு ஆய்ந்து தீர்த்து வைக்கும்.சாலை வசதிகள், தொழிற்பேட்டைகள் கேட்டுள்ளனர். ஏற்கனவே 2 இடங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு நடந்து வருகிறது. மக்கள் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பின் படி ராசாத்தா வலசில் பெரிய தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ., மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது. குறைந்த பட்சம் 20 பேர் சேர்ந்து தொழில் நடத்த முனைந்தால் அதற்காக ரூ.0 கோடி வழங்க அரசு தயாராக இருக்கிறது. திருப்பூர்   மாவட்டத்தில் மட்டும் மக்களின் முதல்வர் அரசு மாவட்ட தொழில் மையம் மூலம் நீட்ஸ் திட்டம் மூலம் 15.62 கோடி ரூபாய் மானியமாக வழங்கி இருக்கிரார். வேலை வாய்ப்பற்றவர்களுக்கு ரூ.1.97 கோடி வழங்கப்பட்டுள்ளது. முதலீட்டு மானியமாக 9.3 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தொழில் நலனுக்காக ஜெயலலிதா  தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.இவ்வாறு அமைச்சர் ப.மோகன் பேசினார்.
வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:-
மக்கள் முதல்வர் ஜெயலலிதா திருப்பூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது ஆட்சி பொறுப்பேற்றவுடன்  தி.மு.க.ஆட்சியில் கைவிடப்பட்ட சாய சலவை பிரச்சினைக்கு தீர்வு காண்பேன் என கூறினார். அவருக்கு ஆதரவளித்து பெரும்பான்மையான வெற்றியை பெற்று தந்த திருப்பூர் வாழ் மக்களுக்கும், தொழில் துறையினருக்கும் நன்றி செலுத்தும் வகையில் ஆட்சி பொறுப்பேற்ற 3 நாட்களில் மக்கள் முதல்வர்  அதற்கான நடவடிக்கை எடுத்தார். அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அழைத்து  சாயா, சலவை பிரச்சனை குறித்த அறிக்கை கேட்டு, தீர்வு காண ஆணையிட்டார். சாயப்பட்டறை அதிபர்களை அழைத்து பேசி, தொழிலையும் காப்பாற்ற வேண்டும், விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும் என்கிற அடிப்படையில் தீவிரமாக ஆராய்ந்து , வட்டியில்லா கடனாக ரூ.200 கோடி யை அள்ளி கொடுத்து  திருப்பூரின் தொழிலை காப்பாற்றிய மாபெரும் முதல்வர் ஜெயலலிதா. இதன் காரணமாக இந்த தொழில் இன்று நல்ல நிலைக்கு வந்து உள்ளது. இன்றைக்கு எல்லா இடத்திலும் தொழில் நன்றாக இருக்கிறது என்று கூறுகின்றனர். அதற்கு காரணம் மக்கள் முதல்வர் ஜெயலலிதாதான். எனவே என்றைக்கும் தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தரும் அவரை என்றும் நீங்கள் மறந்து விட கூடாது. இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார். 
திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி பேசும்போது, இன்றைக்கு திருப்பூர் மாநகர் அந்நிய செலாவணியை அதிக அளவில் ஈட்டி தருகிறது. உங்களுக்கு கவலையே இருக்க கூடாது என்று தான் மக்ல்கின் முதல்வர் ஜெயலலிதா மின் பற்றாக்குறை தீர்க்க பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததார். இங்கு பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று ஆண்டு காலத்தில் மட்டும் ரூ.87 கோடிக்கு சாலை வசதிகள் மட்டும் மேம்படுத்தப்பட்டுள்ளது.  மக்கள் முதல்வர் ஜெயலலிதா  அரசு பின்னலாடை தொழில் வளர தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகிறது என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், மண்டல தலைவர் வி.ராதாகிருஷ்ணன், ஜெ.ஆர்.ஜான், கிருத்திகா சோமசுந்தரம், விஜயகுமார், பட்டுலிங்கம் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள், மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ் மொழி அமுது, சி.ஐ.ஐ., தலைவர் ராஜா சண்முகம், மாநில தலைவர் ரவிசாம், துணை தலைவர் மைகோ வேலுசாமி, ஸ்ரீதரன், கே.பி.ஜி. கோவிந்தசாமி, வைகிங் ஈஸ்வரன், டீமா முத்துரத்தினம், விஜயகுமார், டெக்பா ஸ்ரீகாந்த்,ஆகியோர் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.