Jul 31, 2017

திருச்சி 30.7.17 திருச்சி மணிகண்டம் ஒன்றிய சார்பாக அஇஅதிமுக கழகம்(புரட்சித்தலைவி அம்மா) சார்பில் மாநகர் மாவட்டத்தின் சார்பாக ஒபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டம்

திருச்சி 30.7.17

திருச்சி மணிகண்டம் ஒன்றிய சார்பாக அஇஅதிமுக கழகம்(புரட்சித்தலைவி அம்மா) சார்பில் மாநகர் மாவட்டத்தின் சார்பாக ஒபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டம் சோமரசம் பேட்டையில் நடைபெற்றது
அதில் பேசிய முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி அம்மாவழியில் நடக்கும் நம் தலைவரும் கூடிய விரைவில் முதலவர் நாற்காளியில் அமரப்போகும் ;அண்ணன்ஒபிஎஸ் அவர்கள் தலைவர் எம்ஜிஆர் மீது அவளவற்ற பற்று கொண்டவர் என்பதன் உதராணம் ஒன்று கூறுகிறேன் தலைவர்100 ஆண்டு விழாவை வழியுறுத்தும் வகையில் அவரின் உருவப்படம் பதித்த நாணயம் வெளியிட வழியுறுத்தி பாரத பிரமரிடம் கோரிக்கை வைத்துள்ளார் அண்ணன் ஒபிஎஸ் என்றும் மீண்டும்ஒரு உதாரணம் அண்ணன் ஒபிஎஸ் விரைவில் முதல்ஆகிறார்என்பதற்;கு முன்னாள் குடியசுத்தலைவர் அப்துல்களாம் அவர்களின் நினைவிடத்திற்கு வந்த பாரதபிரதமர் மதுரை விமான நிலையத்தில் அண்ணன் ஒபிஎஸ் அவர்களை சந்தித்து 15 நிமிடம் பேசியுள்ளார் அதன் எதிரொலி அண்ணன் ஒபிஎஸ் விரைவில் தமிழக முதல்வர் ஆகப்போகிறார் என்பது கூடிய விரைவில் n தரியும் என்றார்
அதனை தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் பூனாட்சி அம்மா வழியில் ஒபிஎ ஸ் அண்ணன் அவர்களுக்கு வழுசேர்க்கும் அளவிற்கு கட்சியின் தொண்டர்களை அணிதிரட்டி வழுசேர்க்க நாம் பாடுபட வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சி மணிகண்டம் ஒன்றிய செயலாளர் பரமசிவம்மற்றும் பொருப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது அதில் முன்னாள்அமைச்சர்கள் பரஞ்சோதி பூனாட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினாகள் மற்றும் மகளிர் அணி சார்பில் முன்னாள் மறைந்தஅமைச்சர் மரியம் பிச்சை மனைவி கஸ்தூரி மரியம் பிச்சை ஸ்ரீரங்கம் பகுதி பிரேம் ஆனந்த்ääசெல்வம்ஆகியோர் கலந்து கொண்டனர்.

Jul 26, 2017

திருச்சி – 25.07.17 ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு வஸ்திர மரியாதை இன்று புறப்பட்டது

திருச்சி – 25.07.17

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு வஸ்திர மரியாதை இன்று புறப்பட்டது.

ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் எனப்படும் ரெங்கநாதரை நித்தமும் நினைத்து திருப்பாவை அருளிய ஆண்டாள், ஸ்ரீவில்லிபுத்தூரில் நாச்சியார் திருநட்சத்திரமான ஆடிமாதம் பூர நட்சரத்திரத்தின்போது அவதரித்தவர். பெருமாளுக்கான மாலையைத் தான் அணிவித்த பிறகே கொடுத்ததால் சூடிக்கொடுத்த சுடர்கொடி என்று பக்தர்களால் போற்றப்படும் ஆண்டாள் ஸ்ரீரங்கத்திற்கு வந்து ரங்கநாதரின் திருவடிகளில் ஐக்கியமானார். இதனையடுத்து சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கநாதரின் சார்பில் வஸ்திர மரியாதை வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில் 108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாதும், பூலோகவைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திலிருந்து - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலுக்கு ஆண்டு தோறும் வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடைபெறும்.
அதன்படி இன்று மாலை ஆண்டாளுக்கு சமர்ப்பிப்பதற்கான பட்டுபுடவைகள், வஸ்திரங்கள், மங்களப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள், பழங்கள் யாவும் ஸ்ரீவில்லிபுத்தூருக்குப் புறப்பட்டுச் சென்றது. இந்த வஸ்திரங்கள் யாவும் நாளை மதியம் ஆண்டாள் கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டு, நாளை மறுதினம் ஆடிப்பூரத்தின்;போது ஸ்ரீரங்கம் வஸ்திரமரியாதை கொண்டு அலங்கரிக்கப்பட்டு ஆண்டாள் காட்சியளிப்பார். வஸ்திரமரியாதை யாவும் ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் ஜெயராமன் தலைமையில் கோவில் நிர்வாகிகள் அனைவரும் இதனை எடுத்துச் சென்றனர். இந்த வைபவத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


பேட்டி : திரு.சுந்தர்பட்டர் - ஸ்ரீரங்கம்கோவில்

Jul 23, 2017

திருச்சி ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

திருச்சி ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா 22.07.2017(சனிக்கிழமை) அன்று நடைபெற்றது. கல்லூரித் தலைவர் பேராசிரியர் க. பொன்னுச்சாமி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் சு. சத்தியமூர்த்தி அறிக்கை வாசித்தார்.  விழாவில் அண்ணா பல்கலைக்கழக மாணவர் விவகாரங்கள் துறை இயக்குநர் முனைவர்   எ. இளையபெருமாள் பல்கலைக்கழக தரவரிசையில் தேர்ச்சி பெற்ற 13 மாணவ மாணவியருக்கு பட்டம் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் இவ்விழாவில்; 962 மாணவ மாணவியர் இளங்கலை மற்றும் முதுகலையில் பட்டங்களைப் பெற்றனர்.
மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பு விருந்தினர் பேசியதாவது:  இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புறங்;களைச் சார்ந்தவர்களாகவே உள்ளனர். அவர்களில் 60மூ பேர் மட்டுமே தேர்வுளை எதிர்கொண்டு அதில் வெற்றி பெறுகின்றனர். மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து தங்கள் வாழ்க்கை விதத்தையும் வேலை வாய்ப்புகளையும் மற்றும் சமுதாய சிந்தனையும் கொண்டு வாழ வேண்டும் என வலியுத்தினார். தேர்வுகளை எதிர்கொள்ளும் 60மூ மாணவர்களை மூன்று பிரிவுகளாக பிரித்தார். அதில் முதல் 20மூ பேரை தமிழிலும் ஆங்கிலத்திலும் எவ்வாறு எழுதுவது என்று கூட தெரியாதவர்கள் அதனால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை. அடுத்;த 20மூ பேர்; படிப்பு சார்ந்த அறிவு சிறிதுமின்றி தங்கள் துறைக்கு சம்மந்தம் இல்லாத வேலைக்கு செல்கின்றனர். கடைசி 20மூ பேர் நல்ல அறிவுத்திறன்இ தொழில்நுட்பத்திறன் மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றைக் கொண்டு மிகச் சிறந்த வேலையை பெறுகின்றனர். ஆசிரியர்களாகிய எங்கள் ஒவ்வொருவருடைய ஆசையும் எண்ணமும் என்னவெனில் எங்கள் மாணவர்கள் ஒவ்வொருவரும் அதிகார மிடுக்கோடும் ஆளுமைதிறனோடும் வாழவேண்டும் என்பதே ஆகும். மேலும் தன்னுடைய உரையில் அறிவும் திறமையும் பெற்றிருந்தால் இந்த உலகமே உங்களுடையது என்றார்.  
சிறப்பு விருந்தினர் தன்னுடைய வாழ்;க்கையே உதாரணமாக மாணவர்களிடையே கூறி சாதனையாளர்கள் அனைவருமே வசதியான குடும்பத்தில் இருந்து வருபவர்கள் அல்லர். பெரும்பான்மையான சாதனையாளர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்திலிருந்து வந்தவர்கள் ஆவர். வெற்றி பெறுவதற்கு தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் மற்றும் நல் அறிவும் போதுமானவை ஆகும். 
இன்றைய மாணவர்கள் அனைவரும் தங்கள் பெற்றோர்களுக்கும் தங்களை உருவாக்கிய கல்வி நிறுவனங்களுக்கும் என்றென்றும் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். உங்கள் பெற்றோர்களையும்  நீங்கள் கல்வி பயின்ற கல்வி கூடங்களையும் மறந்தால் அதுதான் உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய பாவச்செயல் என்றார். தன்னுடைய உரையை இறுதியாக ஒரு தமிழ் கவிதையுடன் அழகாக முடித்தார். 
அக்கவிதை “அரிது அரிது மானிடராதல் அரிது… எனக்கூறி அப்பேர்பட்ட மானிடப்பிறப்பை பெற்ற நாம் அதன் கடமையை செவ்வேனே செய்வோம் என மாணவர்களை வாழ்த்தி தன் சிறப்பு உரையை இனிதாக முடித்தார். பட்;டம் பெற்ற மாணவர்கள் அனைவரும் கல்லூரி முதல்வரின் தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் பின்னர் தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.

Jul 22, 2017

திருச்சி ருத்ர சாந்தி யோ காலயம் சார்பில் மாணவி சாதனை

 திருச்சி           22.7.17

சூரிய நமஸ்கார பயிற்சியில் திருச்சி மாணவி உலக சாதனை. ருத்ர சாந்தி யோகாலயம் சார்பில் 2.3 அடி ஆழ நீச்சல் குளத்தில் 120 சூரிய நமஸ்காரம் யோகப் பயிற்சினை 40நிமிடங்களில் 1440 நிலைகளை செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி திருச்சி கண்டோன்மென்ட் அருகே  நடைபெற்றது.

திருச்சி ராஜாஜி வித்யாலயா பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ராஷ்மி நீச்சல் குளத்தில் 120 சூரிய நமஸ்கார யோகப் பயிற்சினை செய்து உலக சாதனை செய்தார். இச்சாதனையை பதஞ்சலி புக் ஆப் வேல்டு ரெக்கார்டு புத்தகம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது.

ருத்ர சாந்தி யோகாலய நிறுவனர் யோகரத்னா கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். பதஞ்சலி புக் ஆப் வேல்டு ரெக்கார்டு முதன்மை நடுவராக முனைவர் அசோகன் மதிப்பீடு செய்தார். பாரதிய ஜனதா கட்சி மாநில செயலர் பொன் பாலகணபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விஐபி ஏஜென்சி நிர்வாக இயக்குநர் மனோகரன் , ஸ்ரீ காவேரி கலை பண்பாட்டு மைய தலைவர் ஜெயநந்தினி , அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் விஜயகுமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மதிப்பீடு செய்தார். பாரதிய ஜனதா கட்சி மாநில செயலர் பொன் பாலகணபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விஐபி ஏஜென்சி நிர்வாக இயக்குநர் மனோகரன் , ஸ்ரீ காவேரி கலை பண்பாட்டு மைய தலைவர் ஜெயநந்தினி , அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் விஜயகுமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

Jul 19, 2017

திருச்சி சமூக நலத்துறை

திருச்சி 19.7.17
திருச்சி சமூக நலத்துறை சார்பில் பெண்களின் பிரச்சனை மற்றும் பெண்களுக்கு என்ன சட்ட என்பதை விளக்க விழிப்புணர்வு முகாம்மத்திய பேருந்து நிலையம்அருகே உள்ள தனியாhபள்ளி; அரங்கில்நடைபெற்றது
அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருச்சி ஆகிய 12 மாவட்டங்களிலிருந்து பெண்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்அதில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து எப்படி பாதுகாப்பது என்ற குறித்த விளக்க உரைகள் பங்கு பெற்ற பெண்கள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது இந்த முகாம் தமிpழகத்தில் 5 மாவட்டகளில் ஒரு மாவட்டமாக திருச்சியில் ஒரு பகுதி நடைபெற்றது 
இந்நிகழ்ச்சியை சட்டக்ஆலோசனை மையத்தின் செயலர் கீதா துவங்கி வைத்தார். அரசு சட்டக்கல்லூரி விரிவுரையாளர் கௌரி விளக்கமளித்தாh.;இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் அனைத்தும் சமூக நலத்துறை அதிகாரி உஷா ராணி அவர்களால் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது


Jul 14, 2017

திருச்சி ஓ பி எஸ் வழியில் நடப்போம் அம்மாவின் ஆட்சியை மக்களுக்கு கொடுப்போம், திருச்சியில் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி பேச்சு



திருச்சி ஓ பி எஸ் வழியில் நடப்போம் அம்மாவின் ஆட்சியை மக்களுக்கு கொடுப்போம், திருச்சியில் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி பேச்சு
தமிழகத்தில் அம்மா இறந்தவுடன்   சதிகாரர்களின் பிடியில் இருந்தது தற்ப்போது தான் விடிவு பிறந்துள்ளது நாம் ஒன்று சேர்ந்து அம்மாவின் ஆட்சியை அம்மா வழியில் நடக்கும் ஓ பிஎஸ் அவர்களை ஆதரித்து ஓ பிஎஸ் அவர்களை முதல் ஆக்குவோம் எல்லாம் ஒன்று சேருவோம் என்று முன்னால் அமைச்சர் பூனாட்சி கூறினார்   இந்நிநிகழ்ச்சியி ல் முன்னாள் அமைச்சர் பூனாட்சி பரஞ்சோதி முன்னாள் கோட்ட தலைவர் மனோகர் முன்னாள் அமைச்சர் மரியம் பிச்சை மனைவி கஸ்தூரி ஆகியோர் மற்றும் வி என் ஆர் செல்வம் , பிரேம் ஆனந்த் மற்றும்பல நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்   

Jul 12, 2017

திருச்சி உறையூர் நாச்சியார் கோவிலில் நடைபெறும் கடைசி நாள் உற்சவம் திருமங்கை ஆழ்வார் மங்கள சாசனம்

திருச்சி உறையூர் நாச்சியார் கோவிலில் நடைபெறும் கடைசி நாள் உற்சவம்
திருமங்கை ஆழ்வார் மங்கள சாசனம் செய்யப்பட்டதும் திருப்பால் ஆழ்வாரின் அவதார ஸ்தலமாக உறையூர் நாச்சியார் கோவில் கொண்டாடப்படுகிறது. இங்கு பிரதானமாக மகாலெட்சுமி பரிபூர்ண அனுகிரஹம் பெற்ற இத்திருக்கோயிலில்  பலப்பல என்று10 நாள் உற்சவம் என இன்று கடைசி நாள் உற்சவம் நடைப்பெற்றது.
இந்த மகாலெட்சுமி கர்ப்ப கிரகத்தில் புறப்பட்டு இந்த மண்டபத்தில் எழுந்தருளிருந்தும், இந்த உற்சவத்தில் சேவை செய்யும் அனைவருக்கும் மன்னும் நம்மை நாடி வரும் அடியார்க்கு எல்லாம் நலன்களும் கிடைக்க பெற்று தாயார் திருவடிகளை பிராத்திக்கிறேன் என்றார்.
பேட்டி: சுந்தர். பட்டர் (கோவில் அர்ச்சகர்

Jul 10, 2017

Trichy New superindent Police for Trichy rural


திருச்சி அஇஅதிமுக (அம்மா) எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் மாநில செயலாளர் சிவபதி தலைமையில்

அதிமுக (அம்மா) எம்.ஜி.ஆர்
இளைஞரணி சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா முன்னிட்டு அகில இந்திய கபடி போட்டி திருச்சி சிவானி கல்லூரியில் கடந்த 4 நாட்களாக நடந்தது. இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஹரியனா அணியும், பெண்கள் பிரிவில் ஹிமாசல பிரதேச அணியும் வெற்றிப் பெற்றன. இந்த அணிகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோப்பை வழங்கினார்.

இப்போட்டியில் 29 மாநிலங்களிலிருந்து பெண்கள் பிரிவில் 21 அணிகளும், ஆண்கள் பிரிவில் 28 அணிகளும் கலந்து கொண்டனர். இன்று நடந்த இறுதிப் போட்டியில் பெண்கள் பிரிவில் ஹிமாச்சல பிரதேச அணி ஹரியானாவை 33-12 என்ற கணக்கில் வென்றது. அதுப்போல ஆண்கள் பிரிவில் ஹரியனா அணி பஞ்சாப் அணியை 20 - 14 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் கோப்பையை வென்றது. இரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற அணிக்கு ரொக்க பரிசாக 3 இலட்சம் 2 இலட்சம் 1 இலட்சம் மற்றும் கோப்பையும் வழங்கினர்.

போட்டியின் போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்,
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றானது கபடி இந்த விளையாட்டு தெற்காசிய அளவில் அதிகமாக விளையாடப்படுகிறது. 2004-ம் ஆண்டு முதல் நடந்து வரும் கபடி உலகப் கோப்பை போட்டியில் இந்தியாவை தவிர மற்ற நாடுகள் வென்றதில்லை. சென்னையில் உலக கோப்பை கபடி போட்டி நடத்த 1 கோடி ரூபாய் ஒதுக்கியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்றார்.

இந்நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில செயலாளர் சிவபதி தலைமை வகித்தனர். மேலும் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, காமராஜ், விஜயபாஸ்கர் துரைக்கண்ணு,M.P.க்கள் ரெத்தினவேல், விஜிலா MLA க்கள் முருகுமாறன், செல்வராஜ், சந்திரசேகர், பரமேஸ்வரி மற்றும் சிவானி கல்வி குழும தலைவர் செல்வராஜ் என பலர் கலந்து கொண்டனர்.