Feb 28, 2015

செக்கானூரணியில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ரத்ததானம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ரயில்வே பட்ஜெட்டை பொதுவாக வரவேற்கிறேன்!- இது ஜெயலலிதா!
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ரத்ததானம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 67–வது பிறந்த நாளையொட்டி செக்கானூ ரணியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார்.
பாசறை மாவட்ட செயலாளர், ஆலங்குளம் செல்வம், பேரவை முன்னாள் மாவட்டச் செயலாளர் மனோகரன், திருப்பரங்குன்றம் ஓன்றிய அவைத்தலைவர் சந்தனத் தேவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜெயலலிதாவின் 67–வது பிறந்தநாளை குறிக்கும் வகையில், மாவட்ட கவுன்சிலர் அய்யப்பன் உள்பட 67 பேர் ரத்ததானம் செய்தனர்.
இதனையடுத்து செக்கானூரணி பஸ்நிலையத்தில் மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணி 5 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது. முன்னாள் அமைப்புச் செயலாளர் ராஜேந்திரன், நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
முன்னாள் மாவட்டச்செயலாளர் ஜெயராமன், விவசாயபிரிவு மாவட்டச் செயலாளர் வேலுச்சாமி, உசிலம்பட்டி நகர்மன்ற தலைவி பஞ்சவர்ணம், மீனவர் அணி மாவட்டச் செயலாளர் போத்திராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி அ.இ.அ.தி.மு.க மக்களின் முதல்வர் அம்மா அவர்களின் 67 பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு மருத்துவ முகாம்

 ஸ்ரீரங்கத்தில் ராமச்சந்திர மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவமுகாம் நடை பெறுகிறது.
ஸ்ரீரங்கதில் நெல்சன் ரோட்டில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இன்றும் துவங்கிய இந்த முகாம் நாளையும்  நடைபெறுகிறது. இந்த 2 நாள் முகாமில் மருத்துவ கல்லூரி தலைவர் டாக்டர் ஆனந்தன்,முடங்கியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் துறை குமார், துணை மருத்துவ தலைவர்கள் டாக்டர் சுகாஸ் பிரபாகர், டாக்டர் மோகன் சௌத்ரி உள்ளிட்ட    மருத்துவர்களும், துணை மருத்துவர்களும், பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நலம், சரும நோய், காது மூக்கு, தொண்டை, இதய நோய், முடக்கியல், கண், நரம்பியல், சிறுநீரகம், பல் நல துறை உள்ளிட பல மருத்துவ துறைகளில் இலவச பரிசோதனைகளும் சிகிச்சைகளும் அளிக்க படுகிறது.
முகாமில் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின்படி அறுவை சிகிச்சை செய்ய ஆவன செய்ப்படுகிறது.
ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே, இசிஜி, 2 டி எக்கோ அல்ட்ரா சவுண்டு போன்ற பரி சோதனைகள் அவசியத்தின் பேரில் இலவசமாக செய்யபடுகிறது. சில மாத்திரைகள் 7 நாட்களுக்கு இலவசமாக வழங்கபடுகிறது. 

Feb 27, 2015

Feb 26, 2015

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.திமு.க., சார்பில் மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் 67-வது பிறந்தநாளையொட்டி, திருப்பூரில் 100 இடங்களில் 100 வாகனங்கள் மூலம் தலா 1000 பேருக்கு என ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்தார்.







திருப்பூர் மாநகர் மாவட்ட அ.திமு.க., சார்பில் மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் 67-வது  பிறந்தநாளையொட்டி, திருப்பூரில் 100 இடங்களில் 100 வாகனங்கள் மூலம் தலா 1000 பேருக்கு என ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்தார். திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், கிருத்திகா சோமசுந்தரம், ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், அணி செயலாளர்கள் கண்ணப்பன், கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி, ஆனந்தகுமார், ஸ்டீபன்ராஜ், சீனியம்மாள், கே.என்.சுப்பிரமணியம், அட்லஸ் லோகநாதன், உஷாரவிக்குமார், எஸ்.பி.,என்.பழனிசாமி, கவுன்சிலர்கள் கீதா, சண்முகசுந்தரம், ரத்னகுமார், ஷாஜகான், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Feb 25, 2015

ஜெயலலிதா பிறந்தநாள்: ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்- முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. வழங்கினார்

ஜெயலலிதா பிறந்தநாள்: ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்- முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. வழங்கினார்
மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் 67–வது பிறந்தநாள் திருப்பரங்குன்றத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
புறநகர் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று அதிகாலையில் முதல் பூஜையாக ஜெயலலிதா பெயரில் மகா பூஜை செய்யப்பட்டது. ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என்று சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இதற்காக 67 தேங்காய்கள், 67 வாழைப்பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு பூஜை நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் தமிழரசன் எம்.எல்.ஏ., மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தர்மராஜா, மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், பசுமலை கூட்டுறவு சங்க தலைவர் ஐ.பி.எஸ். பாலமுருகன், மதுரை மாநகராட்சி சுகாதாரக்குழு தலைவர் வக்கீல் முனியாண்டி, கவுன்சிலர்கள் முத்துக்குமார், சந்தியா பலராமன், நகர தலைவர் ராசு, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், யூனியன் துணைத்தலைவர் ராம கிருஷ்ணன், நகர செயலாளர்கள் பாலமுருகன், பன்னீர் செல்வம், மரக்கடை முருகேசன், பேரவை ஒன்றிய துணைச்செயலாளர் தெய்வம், கூட்டுறவு சங்க துணைத்தலைவர் நாகராஜன், மகாதேவன், மாயி, பேரவை துணைத் தலைவர் ஒச்சாத்தேவர், சுமதி, சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருநகர் 8–வது பஸ் நிறுத்தத்தில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி கூட்டுறவு சங்க தலைவர் பாலமுருகன் தலைமையில் மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர சைக்கிளை முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ வழங்கினார்.
திருநகர்– தனக்கன்குளம் பிரிவில் உள்ள பாலர் இல்ல மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. உணவு வழங்கினார். தனக்கன்குளம் பஞ்சாயத்து தலைவர் கருத்தக்கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் செல்லக்கண்ணு, வட்ட செயலாளர்கள் பொன்.முருகன், கோபால், சூரி, விளாச்சேரி பஞ்சாயத்து துணைத்தலைவர் நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றம், திருநகர் உள்ளிட்ட 67 இடங்களில் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.

ஜெயலலிதா பிறந்தநாளில் 67 பெண்களுக்கு இலவச சேலை: மதுரை கூடல் நகர் அ.தி.மு.க. பிரமுகர்கள் வழங்கினர்

ஜெயலலிதா பிறந்தநாளில் 67 பெண்களுக்கு இலவச சேலை: மதுரை கூடல் நகர் அ.தி.மு.க. பிரமுகர்கள் வழங்கினர்அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை கூடல் நகரில் அ.தி.மு.க.வினர் ஏழைப் பெண்கள் 67 பேருக்கு இலவச சேலைகளை வழங்கினர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 67-வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. தலைமைக் கழகத்தில் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் கேக் வெட்டி கொண்டாடினர். போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் வீட்டின் முன்பு திரண்ட மகளிரணியினர் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

இதுதவிர அனைத்து பகுதிகளிலும் கோவில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம், நலத்திட்ட உதவிகள் என பல்வேறு வகையில் பிறந்தநாள் விழாவை அந்த வகையில், மதுரை மாநகர் 1-வது வார்டு கூடல் நகரில் அ.தி.மு.க. பிரமுகர் எஸ்.தனபாலன் தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

பிறந்தநாளை நினைவூட்டும் வகையில் 67 ஏழைப் பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டன. இதுதவிர ஆயிரம் பேருக்கு சர்க்கரைப் பொங்கலும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், குண்டுசேகர், சண்முகம், கே.மாரியப்பன், சின்னசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பழமுதிர்சோலை முருகன் கோவிலில் தங்கரதம் இழுத்து வழிபாடு

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பழமுதிர்சோலை முருகன் கோவிலில் தங்கரதம் இழுத்து வழிபாடு
மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் 67–வது பிறந்த நாளையொட்டி பழமுதிர்சோலை முருகன் கோவில் தங்க ரதம் ஆர்.சாமி எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் எம்.எல். ஏ.க்கள் முத்து ராமலிங்கம், தமிழரசன் இழுத்தனர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதாவின் 67–வது பிறந்த நாளை முன்னிட்டு அழகர்கோவில் பழமுதிர்சோலை முருகன் கோவிலில் ஆர்.சாமி எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் தங்க ரதத்தினை எம்.எல்.ஏ.க்கள் முத்துராமலிங்கம், தமிழரசன், மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மராஜா, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஜபார் மற்றும் அ.தி.மு.க.வினர் இழுத்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், உசிலம்பட்டி மகேந்திரன், பாண்டியம்மாள், மேலூர் நகராட்சி தலைவர் சரவணன், யூனியன் சேர்மன் செல்வராஜ், கொட்டாம்பட்டி யூனியன் சேர்மன் வெற்றிச்செழியன், அ.வல்லாளப்பட்டி சேர்மன் உமாபதி, கொட்டாம்பட்டி யூனியன் வைஸ் சேர்மன் குலோத்துங்கன், தொகுதி செயலாளர் வலையபட்டி தலைவர் செல்வம் என்ற பெரியபுள்ளான், அலங்கா நல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் முரு கேசன், மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன்.
மாணவரணி மாணிக்கம், அண்ணா தொழிற் சங்க செயலாளர் முருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நரசிங்கம்பட்டி ஓடையன், சூரக்குண்டு துரை அண்ணா, கிடாரிப்பட்டி சுரேஷ் என்ற கோயிலான், திருவாதவூர் சசிகலா மோகன், புதுச்சுக்காம்பட்டி சிவசொக்கனான்டி, துணைத்தலைவர்கள் தர்மராஜ், ஆசாத்தான், கண்ணன், விவேகானந்தன், கொட்டாம் பட்டி ஒன்றிய கவுன்சிலர் அய்யாபட்டி நயினான், கூட்டுறவு சங்க தலைவர்கள், மேலூர் நிலவள வங்கி தலைவர் பாலகிருஷ்ணன், சுக்காம்பட்டி ராசு, கீழையூர் வேலு, அ.வல்லாளபட்டி தலைவர் அசோகன், சொக்க லிங்கபுரம் காதர்ஷா, கொட்டாம்பட்டி பூமிநாதன் மற்றும் நிர்வாகிகள் அட்டப் பட்டி முத்தலீபு, வாசுகி சின்னகருப்பன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மக்களின் முதல்வர் அனைத்து சதியில் இருந்தும் விரைவில் விடுபடுவார்: வக்கீல் பசும்பொன் பாண்டியன் பேச்சு

மக்களின் முதல்வர் அனைத்து சதியில் இருந்தும் விரைவில் விடுபடுவார்: வக்கீல் பசும்பொன் பாண்டியன் பேச்சு
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 67–வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை காளவாசலில் இன்று அ.தி.மு.க. தொழிற்சங்க இணைச் செயலாளர் வக்கீல் சே. பசும்பொன் பாண்டியன் தலைமையில் 67 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தொழிற்சங்க துணைச்செயலாளர் பூக்கடை முருகன், ராஜசேகர், திருமுருகன், அரசரடி மு.சண்முகம், போஸ், போஸ், வாபர் பாட்சா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பசும்பொன் பாண்டியன் பேசியதாவது:–
தமிழர்களின் உணர்வாக, உயிர் மூச்சாக, அரணாக மக்களால் நான், மக்களுக்காக நான் என்று வாழ்ந்து வருகிற அம்மா அவர்களின் பிறந்த தினத்தில் அகிலமே ஆர்த்தெழுந்து, ஆர்ப்பரிப்புடன் உள்ளம் உவகையோடு கொண்டாடி வருகிறது. தனக்கென வாழாமல் தமிழர்கள் தரணி யெங்கும் தலை நிமிர்ந்து வாழ்ந்திட தன்னையே அர்ப்பணித்து வாழ்கிற தங்கத்தாரகை அம்மாவின் பிறந்த தினத்தில் தாய் தமிழகமே சீரும், சிறப் போடும் கொண்டாடி மகிழ்ந்து வருகிறது.
பிறந்த குழந்தைகளுக்கு உடனடி தேவையாக கிப்ட் பாக்ஸ் மூலம் தேவையை நிவர்த்தி செய்தததை தாய்மார்கள் அம்மாவை உளமாற வாழ்த்துகிறார்கள். வயோதிகர்களும், கர்ப்பிணிகளும், கணவரால் கைவிடப்பட்டோரும் அம்மா அவர்களின் அற்புத திட்டத்தால் அபார பயன் அடைந்து இதய சக்தியோடு அம்மாவை வாழ்த்துகிறார்கள்.
நீதிக்குத்தண்டனையா? என்று அறம் சார்ந்தோர் வருந்தி அம்மா அவர்கள் அனைத்து சதியிலிருந்தும் விடுபட்டு அனைத்து தரப்பு மக்களின் ஆதரவுடன் அரியணையில் மீண்டும் அமர்ந்து நல்லாட்சி தருவார் என்று நல்லோர் இதயங்கள் அம்மா அவர்களை உலக தமிழினமே வாழ்த்தி வணங்குகிறது.
நாளைய உலகிற்கு அம்மா வழிகாட்டியாக சமூக விஞ்ஞானியாக பரிணமிக்க உள்ளார்கள். அம்மா காலத்தில் நாம் வாழ்ந்ததே நாளைய சரித்திரமாக மாற உள்ளது. அம்மாவின் தலைமையில் சாதனை படைப்போம். அம்மாவை வாழ்த்துவோம், வணங்குவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

ஜெயலலிதா பிறந்தநாள்: மதுரை மாநகராட்சியில் 67 அடி நீள கேக் வெட்டி கொண்டாட்ட

ஜெயலலிதா பிறந்தநாள்: மதுரை மாநகராட்சியில் 67 அடி நீள கேக் வெட்டி கொண்டாட்டம்
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி மதுரை மாநகராட்சியில் மேயர் ராஜன்செல்லப்பா தலைமையில் அமைச்சர் செல்லூர் ராஜூ 67 அடி நீள கேக்கை வெட்டினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 67–வது பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. மதுரை மாநகராட்சியில் சிறப்பு கவுன்சில் குழு கூட்டமும் நடைபெற்றது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பு கூட்ட மன்ற அரங்கின்வெளியே 67 அடி நீளமுள்ள பிரமாண்ட கேக் வைக்கப்பட்டது. அதனை மேயர் ராஜன்செல்லப்பா தலைமையில் அமைச்சர் செல்லூர் ராஜூ வெட்டினார்.
அப்போது அ.தி.மு.க. நிர்வாகிகளும், கவுன்சிலர்களும் அம்மா வாழ்க என்று கோஷமிட்டனர். தொடர்ந்து மேயர் ராஜன் செல்லப்பா தலைமையில் கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் செல்லூர் ராஜூ, கோபாலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.போஸ், சுந்தர்ராஜ், முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் துணை மேயர் திரவியம் உறுதிமொழி வாசித்ததும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை பாராட்டி மேயர் ராஜன்செல்லப்பா தீர்மானங்களை வாசித்தார்.
அப்போது அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் கவுன்சிலர்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். கமிஷனர் கதிரவன், மண்டலத் தலைவர்கள் சாலைமுத்து, ராஜபாண்டியன், சண்முகவள்ளி, நிலைக்குழு தலைவர்கள் முத்துக்கருப்பன், சுகந்தி அசோக், முனியாண்டி, கவுன்சிலர்கள் முருகேசன், ராஜீவ்காந்தி, கேசவ பாண்டியம்மாள், அனுராதா, கார்னர் பாஸ்கரன் உள்பட அனைவரும் பங்கேற்றனர்.
மதுரை மாநகராட்சி எல்கையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் கட்டணமில்லா பிறப்பு சான்றிதழ் வழங்குவது, இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அம்மா இளைஞர் மேம்பாட்டு மையம் தொடங்கி அதன் மூலம் உயர்கல்வி மேம்பாட்டு பிரிவு, விளையாட்டு மேம்பாட்டு பிரிவு, கலை மேம்பாட்டு பிரிவு போன்றவற்றை அரசு மானியத்துடன் ஒவ்வொரு மண்டலத்திலும் செயல்படுத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

ஜெயலலிதா பிறந்தநாள்: அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் சர்வ சமய பிரார்த்தனை- அன்னதானம்

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் சர்வ சமய பிரார்த்தனை மற்றும் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 67–வது பிறந்த நாள் மதுரையில் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஜெயலலிதா நீடூழி வாழவேண்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
பின்னர் அங்குள்ள நந்தவனத்தில் மா, வில்வ மரக்கன்றுகளை அமைச்சர் செல்லூர் ராஜூ நட்டார். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன.
தெற்குவாசல் முகைதீன் ஆண்டவர் பள்ளி வாசலில் ஜெயலலிதா நீடூழி வாழ வேண்டி சிறப்பு தொழுகை நடந்தது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மலர் போர்வை போர்த்தி வழிபாடு நடத்தினர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டன. தெற்கு 2–ம் பகுதி சார்பில் 100 பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டன.
பின்னர் கீழவாசல் தூய மரியன்னை தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
மதுரை அண்ணாநகரில் பகுதி செயலாளர் முருகன் ஏற்பாட்டில் 10 ஆயிரம் பேருக்கு மதிய அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. மதுரையில் உள்ள 76 வார்டுகளிலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் இனிப்பு வழங்கி ஜெயலலிதா பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினர். இன்று மாலை 6 மணிக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் தெற்கு கிருஷ்ணன் கோவிலில் தங்கத்தேர் இழுக்கப்படுகிறது.
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி இன்று அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தங்கமோதிரம் வழங்கப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சி வருகிற 26–ந் தேதி நடக்கிறது.
அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவிக்கிறார். மேலும் அனைத்து பகுதி, தொகுதி, வட்டங்களிலும் ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன

அ.இ.அ தி.மு.க கழக நிரந்தர பொது செயலாளர் அம்மாவின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு நத்தர்சா பள்ளிவாசலில்

அ.இ.அ தி.மு.க கழக நிரந்தர பொது செயலாளர் அம்மாவின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு நத்தர்சா  கவுன்சிலர்  மற்றும்  சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர்சார்பில் திருச்சி நத்தர்சா பள்ளிவாசலில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது  தலைமை கொறடா மனோகரன் அவை தலைவர் வெல்லமண்டி நடராஜன்மேற்கு சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி ஸ்ரீரங்க சட்டமன்ற உறுப்பினர் வளர்மதி  சுரேஷ் குப்தா   கழக உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் 

Feb 24, 2015

அ.இ.அ தி.மு.க கழக நிரந்தர பொது செயலாளர் அம்மாவின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு


அ.இ.அ தி.மு.க கழக நிரந்தர பொது செயலாளர் அம்மாவின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ராகவேந்திர கோவிலில் மக்களின் முதல்வர் அம்மா பல்லாண்டு வாழ வெள்ளி தேர் தலைமை கொறடா மனோகரன் அவை தலைவர் வெல்லமண்டி நடராஜன்மேற்கு சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி ஸ்ரீரங்க சட்டமன்ற உறுப்பினர் வளர்மதி  சுரேஷ் குப்தா   மருத்துவரணி டாக்டர் சுப்பையா மகளிரணி டாக்டர் தமிழரசி கழக உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் 

அ.இ.அ.தி.மு,க அரசு சார்பில்சாதனை விளக்க கண்காட்சி

அ.இ.அ.தி.மு,க  அரசு சார்பில்சாதனை விளக்க கண்காட்சி திருச்சி ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் அருகே அமைச்சர் பூனாட்சி துவங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் பழனிசாமி,தலைமை கொறடா மனோகரன் மற்றும் சட்டமன்ற உறுபினர்கள் மாமன்ற உறுபினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் 

Feb 22, 2015

திருச்சி அ.இ.அ.தி.மு.க கழக பொது செயலாளர் புரட்சி தலைவி அம்மா 67வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி பெரிய மிளகுப்பாறையில் உள்ள ஸ்ரீஒண்டி கருப்புசாமி ஸ்ரீராஜகாளி அம்மன் கோவிலில் மாபெரும் அன்னதானம் நலத்திட்டங்கள் வழங்கும்

திருச்சி அ.இ.அ.தி.மு.க கழக பொது செயலாளர் புரட்சி தலைவி அம்மா 67வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி பெரிய மிளகுப்பாறையில் உள்ள ஸ்ரீஒண்டி கருப்புசாமி ஸ்ரீராஜகாளி அம்மன் கோவிலில் மாபெரும் அன்னதானம் நலத்திட்டங்கள் வழங்கும்,விழாவில் மாவட்ட மாணவரணி இணை செயலாளர் சதீஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.விழாவை குமார் கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் தலைமை கொறடா மனோகரன் எம்.எல்.எ .க்கள் விழாவினை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்

Feb 21, 2015

திருச்சி அ.இ.அ.தி.மு க சார்பில் வயலூரில் திமுக சமுக விரோதிகளால் தாக்கப்பட்டு இறந்த அ.தி மு க பிரமுகர் குடும்பத்திற்கு நிவாரண தொகை மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்


திருச்சி அ.இ.அ.தி.மு க சார்பில் வயலூரில் திமுக சமுக விரோதிகளால் தாக்கப்பட்டு இறந்த அ.தி மு க பிரமுகர் குடும்பத்திற்கு நிவாரண தொகை மற்றும் பாதிக்கப்பட்ட  குடும்பத்திற்கு கழக நிரந்தர பொது செயலாளர் சார்பில் தலைமை கொறாடா மனோகரன்,அமைச்சர் பூனாட்சிமற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆகியோர்  ஆறுதல் கூறினர்.

திருச்சி அ இ அ தி மு கசார்பாக கழக நிரந்தர பொது செயலாளர் அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட நீதி மன்றம் அருகே உள்ள புரட்சிதலைவர் M.G.R சிலைக்கு

திருச்சி  அ இ அ தி மு கசார்பாக கழக நிரந்தர பொது செயலாளர்  அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட நீதி மன்றம் அருகே உள்ள புரட்சிதலைவர் M.G.R சிலைக்கு தலைமை கொறாடா மனோகரன்,அவை தலைவர் வெல்லமண்டி நடராஜன்,சட்ட மன்ற உறுப்பினர்கலந்து கொண்டு மாலை அணிவித்தனர்  

திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளரும் எம்பியுமான டி.ரத்தினவேல் தலைமை வகித்தார்.

திருச்சி புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் செயல்வீரர்கள் ஆலோசனைகூட்டம்
ஜெயலலிதா பிறந்த தின விழாவை முன்னிட்டு நடைபெற்றது
மண்ணச்சநல்லூர்,பிப் ,21:
            அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 67- வது பிறந்த தின விழாவைமுன்னிட்டு திருச்சி புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் செயல்வீரர்கள்,வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் நெ.1 டோல்கேட்டில் நடைபெற்றது.
      கூட்டத்திற்கு திருச்சி ுறநகர் மாவட்ட கழக செயலாளரும் ம்பியுமான டி.ரத்தினவேல் தலைமை கித்தார்.
        மாநில கதர் மற்றும் கிராமத் தொழில்கள்துறை அமைச்சரும் திருச்சிமாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளருமான டி.பி.பூனாட்சிஎம்பியும்மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் .குமார்,பெரம்பலூர் எம்,பி மருதராஜாமுன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமானஎன்.ஆர்.சிவபதிிருச்சி மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் அம்மா பேரவைமாவட்ட செயலாளருமான தி.ராமுதிருச்சி மாவட்ட ஊராட்சி தலைவர்ராசாத்தி ஆகியோர் சிறப்புரை வழங்கி ஆலோசனை வழங்கினார்கள்.
      மேலும் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் டி.இந்திராகாந்திஆர.சந்திரசேகர்,முன்னாள் அமைச்சர்கள் .பொன்னுசாமிஅண்ணாவிமுன்னாள் மாவட்டமாணவரணி செயலாளர் அறிவழகன் விஜய்ஒன்றிய செயலாளர்கள் டி.என்.டி.சூப்பர்நடேசன்,எம்.கே.ராஜமாணிக்கம்பொதுக்குழு உறுப்பினர்கள்டி.என்.ிவக்குமார்கே.ஜெயராமன்யூனியன் சேர்மேன்கள்நளாயினிநாகராஜன்என்.ஆர்.சேதுபதிதுணைச் சேர்மேன்வெற்றிச்செல்விதர்மலிங்கம், புள்ளம்பாடி பேரூராட்சி தலைவர்ஜேக்கப்அருள்ராஜ்மாவட்ட கவுன்சிலர் அரிசிமூக்கன்,எம்ஜிஆர் மன்ற மாவட்டமாணவரணி துணைச்செயலாளர் சிறுமருதூர் கதிரவன் ஆகியோர் கூட்டத்தில்பங்கேற்றனர்.

திருச்சி சிறுபாண்மை பிரிவு சார்பில் சிறப்பு பிரார்த்தனை

திருச்சி  கழக நிரந்தர பொதுசெயலாளர்  அம்மா 67 பிறந்தநாள்  சிறுபாண்மை பிரிவு சார்பில் சிறப்பு  பிரார்த்தனை மாவட்ட செயலாளர்  மாவட்ட சிறுபான்மை நலப் பிரிவு  மீரான் தலைமையில் நடைபெற்றது  மற்றும் அவை தலைவர் வெல்லம் மண்டி நடராஜன் மற்றும்  நத்தர்ஷா  கவுன்சிலர்  ஆகியோர்  கழக உறுபினர்கள் கலந்து கொண்டனர் 

Feb 18, 2015

Feb 16, 2015

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தேர்தல் அ இ அ தி மு க வெற்றி கொண்டாட்டம்

திருச்சி  ஸ்ரீரங்கம்   சட்டமன்ற   தேர்தல் அ இ அ தி மு க  வெற்றி கொண்டாட்டம் தலைமை கொறடா மனோகரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் குமார் இனிப்பு வழங்கினார்கள் 

Feb 15, 2015

அமைச்சர் எஸ்.எஸ்.எம்.ஆனந்தன் நடத்திய பிரமாண்ட வாக்காளர் பேரணி

ஸ்ரீ ரங்கம் தொகுதி திருபராய்துறையில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் நடந்த வாக்காளர் பேரணி எதிகட்சிகளை மிரள வைத்துள்ளது
ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் எஸ்.வளர்மதியை ஆதரித்து திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் தேர்தல் பெறுப்பாளரும் மாநகர் மாவட்ட செயலாளரும்,வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் திருப்பராய்த்துறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளில் மாவட்ட நிர்வாகிகள் கடந்த  25 நாட்களாக வீடு, வீடாக சென்று அண்ணா தி.மு.க.வேட்பாளர் வளர்மதிக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். வாக்கு சேகரிப்பின் இறுதி கட்டமாக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள ஊர்வலமாக ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று அண்ணா தி.மு.க அரசின் 3 1/2 ஆண்டு சாதனைகள் எடுத்து கூறியும், ஸ்ரீ ரங்கம் தொகுதி மக்களுக்கு மக்கள் முதல்வர் ஜெயலலிதா எழுதிய 14 பக்க கடிதத்தின் புத்தகங்களை வழங்கியும், மக்கள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் விலையில்லா 20 கிலோ அரிசியும், முதியோகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவிதொகையும், பள்ளி குழந்தைகளுக்கு மடிகணினி, சைக்கிள், புத்தகம் என 14 வகையான விலையில்லா பொருட்கள் வழக்கப்படுகிறது  மேலும் ஸ்ரீ ரங்கம் தொகுதிக்கு ரூ.400 கோடிக்கும் மேல் பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகள் அவரது ஆட்சியில் நடந்துள்ளது. மேலும் பணிகள் நடைபெற இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி வாக்கு சேகரித்தார்.அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுடன் துணை மேயர் சு.குணசேகரன், தெற்கு தொகுதி செயலாளர் தம்பி மனோகரன், பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன்,நிர்வாகிகள் எம்.மணி, கண்ணப்பன்,அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், வழக்கறிஞர் சுப்பிரமணியம்,  வளர்மதி  கருணாகரன், சாகுல்ஹமீது, தாமோதரன், தனபால் ராஜேஷ்கண்ணா, திருமுருகன்பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் லதாசேகர், சடையப்பன், இளைஞர் அணி நீதிராஜன் அந்தநல்லூர் கூட்டுறவு சங்க தலைவர் கண்ணன் ஆகியோர்கள் சென்றனர்.
மகளிர் அணி மாநில துணைச்செயலாளரும் திருப்பூர் மேயருமான அ.விசாலாட்சி தலைமையில் மகளிர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் சிறுகமணி பேரூராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிபுரம், மாரியம்மன்கோவில் ஆதிதிராவிடர் காலனி பகுதிகளில்  உள்ள நெல், கரும்பு, வாழை தோட்டங்களில் வேலை பார்க்கும் வாக்காளர்களிடம், திண்ணை பிரச்சாரம் மூலமாகவும், மக்கள் முதல்வர் ஜெயலலிதா பெண்குலம் காக்க பல்வேறு திட்டங்களை அளித்துள்ளார்.குறிப்பாக தொட்டில் குழந்தை திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, வீட்டில் உள்ள தாய்மார்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, வெண்மை புரட்சியை ஏற்படுத்த 2 கறவை மாடுகள், 24 ஆடுகள் வழங்கும் திட்டம், படித்த பெண்களுக்கு திருமணத்தின்போது திருமணத்திற்கு தாலிக்கு 4 கிராம் தங்கம், ரூ.50 ஆயிரம் வரை உதவி தொகை, இப்படி எண்ணற்ற உதவிகளை வழங்கி வரும் மக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பெண்களான நாம் நன்றி கடன் பட்டு இருகிறோம்.அவரது கரத்தை வலுப்படுத்த இரட்டை இலை  சின்னததிற்கு  அதிகப்படியான ,வாக்குகளை நீங்கள் அளிக்க வேண்டும் என மேயர் விசாலாட்சி வாக்கு சேகரித்தார். மேயருடன் அன்னூர் அமுல்கந்தசாமி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி ஈஸ்வரன்,மாநகர் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் ராஜ்குமார், பாசறை அன்பரசன், கவுன்சிலர் சத்தியா, கீதா,முன்னாள் கவுன்சிலர் ருக்குமணி, மாவட்ட பிரதிநிதி கோமதி, மகளிர் அணி நிர்வாகிகள் அமுதா சரஸ்வதி, சுந்தரம்பாள், மும்தாஜ் தலைமை கழக பேச்சாளர்கள் வேங்கை விஜயகுமார், பாரதிபிரியன் ஆகியோர் உள்பட 100 க்கும் மேற்பட்டவர்கள் உடன் சென்றனர்.
அந்தநல்லூர் ஊராட்சியில் ஏழுமனூரில் வடக்கு தொகிதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், இலைகன்ர் அணி நகர செயலாளர் ஹரிகரசுதன், கவுன்சிலர்கள கணேஷ், கலைமகள் கோபால்சாமி மற்றும் வேலுமணி, அசோக்குமார், சாமிகணேஷ், மணிகண்டன், ராஜேந்திரன், தலைமை கழக பேச்சாளர் எரியிட்டி சேகர் உள்ளிட்ட ஆகியோர் மக்கள் முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளை வாக்களர்கள் மத்தியில் கலைநிகழ்ச்சி மூலம் எடுத்து கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். அனலை பகுதியில் வடக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஒன்றியக்குழு தலைவர் ஆர்.சாமிநாதன் ஆகியோர் தலைமையில் கரகாட்டம், ஒயிலாட்டங்கள்  நடத்தி வாக்கு சேகரித்தனர். இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் பட்டுலிங்கம் மற்றும் முத்துரத்தினம், ஒன்றிய கவுன்சிலர் ரத்தினசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்
திருப்பராய்த்துரை ஊராட்சி அம்பேத்கார் நகரில் 4வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம் தலைமையில் கவுன்சிலர்கள் பேபி தர்மலிங்கம், சண்முகம், வேலுசாமி, பிரியாசக்திவேல், மற்றும் ரத்தினகுமார், லோகநாதன் ஆகியோர்கள்  மக்கள் முதல்வர் ஜெயலலிதா அரசின் சாதனைகள் அடங்கிய புத்தகத்தை வீடு, வீடாக சென்று தாமார்களிடம் வழங்கி வேட்பாளர் வளர்மதிக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். பெருகமணி பகுதியில் உள்ள காந்திநகர், மேட்டுபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் தலைமையில்  மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜ், கரைபுதூர் ஊராட்சி தலைவர் நடராஜன், பல்லடம் நகர்மன்ற துணைத்தலைவர் வைஸ் பழனிசாமி, முன்னாள் துணை தலைவர் சூ.தர்மராஜன், கூட்டுறவு சங்க தலைவர்கள் சித்துராஜ், ராமமூர்த்தி, தெற்கு ஒன்றிய செயலாளர் சில்வர் வெங்கடாசலம், ஒன்றிய துணைத்தலைவர் சிராஜ்தீன்,ஊராட்சி துணை தலைவர் அஸ்கர் அலி மற்றும் சி.டி.சி.பழனியப்பன், கவுன்சிலர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள்  கடைவீதி, நெல் வயல்கள், வாழை தோட்டங்களில் சென்று வாக்காளர்களிடம் மக்கள் முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீ ரங்கம் தொகுதி வாக்களர்களுக்கு எழுதியுள்ள 14 பக்க புத்தகங்களை வழங்கியும், அண்ணா தி.மு.க.அரசின் 3 1/2 ஆண்டு சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் இரட்டை இலை  சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
கடந்த 25 நாட்களுக்கு மேலாக திருபராய்த்துறை ஒன்றிய பகுதிகளில் முகாமிட்டு ஒவ்வொரு நாளும் வாக்களர்களை சந்தித்து அண்ணன் தம்பிகளாக, அக்கா தங்கைகளாக உறவினர்களாக இருந்து மக்கள் முதல்வர் ஜெயலலிதா ஆணையினை ஏற்று வாக்கு சேகரித்து வந்த திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் நேற்று 11 ம் தேதியுடன் இறுதி கட்ட பிரச்சாரம  மாலை 6 மணியுடன் முடிந்ததால் தங்களது ( திருப்பூர்) சொந்த ஊருக்கு செல்ல பயணமாயினர். அவர்களை பிரிய மனமில்லாமல் பொதுமக்கள் கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்து வழி அனுப்பி வைத்தனர்.



tirupur new colloctor office visit







Feb 13, 2015

திருச்சியில் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அ இ அ தி மு க கழக வேட்பாளர் வளர்மதி பார்வையிட்டார்



திருச்சியில் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில்  அ இ அ தி மு க கழக வேட்பாளர் வளர்மதி பார்வையிட்டார்  அப்பொழுது  நல்ல முறையில் வாக்கு பதிவு நடைபெறுவதாக கூறினார்   அப்பொழுது பெச்ட்பாபு    துணை மேயர்  ஸ்ரீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர் 

Feb 11, 2015

திருச்சி 139 சட்டமன்ற இடை தேர்தலில் முதல்வர் பன்னிர் செல்வம் மகன் ravindranaathkumaar திருவாணைகவலில் பிரச்சாரம் செய்தார்

திருச்சி  139 சட்டமன்ற இடை தேர்தலில்  இன்று முதல்வர் பன்னிர் செல்வம் மகன் ravindranaathkumaar  பிரச்சரம் திருவாணைகவலில்  பிரச்சாரம் செய்தார் உடன் தலைமை கொறடாமனோக ரன்  ஆகியோர் உடனிருந்தனர் 

திருச்சியில் 139 சட்டமன்ற இடை தேர்தலில் இறுதிநாளான இன்று அமைச்சர் காமராஜ் பிரச்சாரம் செய்தார்

திருச்சியில் 139 சட்டமன்ற இடை தேர்தலில்  இறுதிநாளான  இன்று அமைச்சர் காமராஜ்  பிரச்சாரம்  செய்தார்  இதில் ஏராளமான கழக தொண்டர்கள்   மற்றும் தலைமை கொற டா  மனோகரன் மற்றும் சினிமா நடிகை விந்திய சிறப்பு உரை யாற்றி பிரச்சாரம் செய்தானர் 

திருச்சி ஸ்ரீரங்கம் நெல்சன் நகரில் அ இ அ தி மு க வேட்பாளரை ஆதரித்து சினிமா நடிகை விந்திய வேட்பாளருடன் பிரச்சாரம்


  1. திருச்சி  ஸ்ரீரங்கம்  நெல்சன் நகரில் அ இ அ தி மு க  வேட்பாளரை  ஆதரித்து  சினிமா நடிகை விந்திய  வேட்பாளருடன் பிரச்சாரம்  அப்போது அவர் கூறியதுமக்களின்  முதல்வர் அம்மா  நன்றி  செலுத்தும்  வகையில்  நாம் அ இ அ தி மு க வேட்பாளருக்கு ஓட் டு  போடவேண்டும்  என்றார் 

Feb 10, 2015

Feb 6, 2015

ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் 'மக்கள் முதல்வர்' புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா அவர்கள் எழுதியுள்ள வேண்டுகோள் கடிதம்

கடந்த 2011–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற வைத்து, இந்த வெற்றியின் மூலம் மூன்றாம் முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, தமிழக மக்களுக்கு சேவை புரிந்திடுவதற்கான நல்வாய்ப்பினை நீங்கள் எனக்கு நல்கினீர்கள். இதற்காக முதலில் எனது நெஞ்சார்ந்த நன்றியை தற்போது மீண்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
கடந்த 2006 முதல் 2011 –ம் ஆண்டு வரை நடைபெற்ற மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில், அனைத்துத் துறைகளும் அதல பாதாளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அதுவன்றி, நில அபகரிப்பு, நாள்தோறும் கொலை, கொள்ளை, சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்பதுடன் மின்வெட்டால் தமிழகமே இருள் சூழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டது. ஏழை எளியோருக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அனைத்துத் துறைகளையும் தங்கள் குடும்ப சொத்தாக பாவித்து கபளிகரம் செய்து தமிழ்நாட்டையே சின்னாபின்னப்படுத்தியது தி.மு.க. அரசு. ஒரு அவல ஆட்சியை தந்த தி.மு.க.வை மக்கள் சக்தி என்னும் உங்கள் துணையோடு வீழ்த்தி, அண்ணா தி.மு.க. ஆட்சியை மீண்டும் ஏற்படுத்தி தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்று உள்ளேன்.
தமிழக மக்களின் வாழ்வு வளம் பெறவும், தமிழ்நாடு நலம் பெறவும், பல்வேறு முன்னோடி திட்டங்களைத் தீட்டி தமிழர்களின் பெருமையை நிலைநாட்டியதை அங்கீகரிக்கும் வகையில் தான், கடந்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் எனது தலைமையிலான அண்ணா தி.மு.க.வுக்கு மகத்தான வெற்றியை தமிழக மக்கள் தேடித்தந்தார்கள். திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்த ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியிலும் அண்ணா தி.மு.க. வேட்பாளருக்கு பெருவாரியான வாக்குகளை வழங்கி, வளர்ச்சிக்கு உறுதுணையாக நாங்களும் உள்ளோம் என்பதை நீங்கள் பறைசாற்றினீர்கள்.
இந்த நிலையில் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தல், நீங்கள் விரும்பாத இடைத்தேர்தல் என்பதை நான் நன்கு அறிவேன். இந்த இடைத்தேர்தல் சதிகாரர்களால் போடப்பட்ட வழக்கின் தீர்ப்பின் காரணமாக ஏற்படுத்தப்பட்ட இடைத்தேர்தல். சதியும் விதியும் இணைந்து நடத்திய சதுராட்டத்தில், விளைந்திட்ட இடைத்தேர்தல், ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர் பெருமக்களாகிய உங்கள் அன்பும், பற்றும் என்னுடன் பின்னிப் பிணைந்துள்ள பாசத்தையும், இந்த இடைத் தேர்தலால் எள்ளளவும் குறைத்திட இயலாது. நமக்குள்ளே உள்ள பந்தம் இன்னும் மேன்மை அடையவே இது வழிவகுக்கும்.
கீழமை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு இறுதியானதல்ல. அந்த தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்யப்பட்டு, அந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. தற்போது நடைமுறையில் உள்ள தீர்ப்பு இறைவனின் திருவிளையாடல் தான். நமக்கு சோதனை அளித்துள்ள இறைவன், நம் நெஞ்சுரத்தை வலுப்படுத்தி இதையே சாதனையாய் மாற்றி விடுவார் என்பதில், உங்களைப் போலவே எனக்கும் அதிக நம்பிக்கை உண்டு. இருப்பினும் இந்த இடைப்பட்ட காலத்தில் தேர்தல் சட்ட விதிமுறைகளின்படி நடைபெற உள்ள இந்த இடைத்தேர்தலில், உங்களது பொன்னான வாக்குகளை, அண்ணா தி.மு.க. வேட்பாளர் எஸ்.வளர்மதிக்கு வழங்கும்படி உங்களை இந்த கடிதம் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.
2011–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கை மூலம் தமிழக மக்களுக்கு நான் வழங்கி இருந்தேன். அவற்றில் பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளேன். ஸ்ரீரங்கம் தொகுதி மக்களாகிய உங்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தின் போது வழங்கிய வாக்குறுதிகளில், பெரும்பாலானவற்றை நிறைவேற்றி உள்ளேன். எஞ்சிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இன்னும் காலம் உள்ளது.
தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் பீடு நடைபோடச் செய்யவேண்டும் என்ற கோட்பாட்டுடனும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்கிட வேண்டும் என்ற குறிக்கோளுடனும், பல்வேறு திட்டங்களை கடந்த மூன்றரை ஆண்டுகளில் அண்ணா தி.மு.க. அரசு நிறைவேற்றி உள்ளது.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி திட்டங்களுக்கு கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளன. அதே நேரத்தில், அனைத்து மக்களையும், குறிப்பாக விளிம்பில் உள்ள மக்களை அரவணைத்து, இந்த அரசு அவர்களுக்கான அரசு, ஏழை எளியோருக்கான அரசு, ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் அரசு’ என்பதற்கேற்ப, பல்வேறு நலத்திட்டங்களை அண்ணா தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது.
ஏழை எளியோருக்கு நிவாரணம் வழங்குவதோடு, அவர்கள் வாழ்வில் வசந்தம் வீசிட, அவர்கள் தங்கள் சொந்தக் கால்களிலேயே நின்று, அரசை மட்டும் சார்ந்திராமல், தங்களுக்குத் தேவையானவற்றை அவர்களே வாங்கிக் கொள்கிற சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கான திட்டங்களையும் உங்கள் அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகத் தான் மனிதவள மேம்பாட்டிற்கான கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுக்கு என பல்வேறு புதுமை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அடிப்படையில் தான் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கும் திட்டம்; ரூ.50 ஆயிரம் வரை திருமண உதவித்தொகையும், தாலிக்கு 4 கிராம் தங்கமும் வழங்கும் திட்டம், விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டம், ஏழை கிராமப்புற மக்களுக்கு கறவை பசுக்கள் மற்றும் வௌ்ளாடுகள் வழங்கும் திட்டம்; சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் திட்டம், அரசு கேபிள் டிவி மூலம் மாதம் ரூ.70 என்ற குறைந்த கட்டணத்தில் அதிக எண்ணிக்கையிலான தொலைக்காட்சி சேனல்களை கண்டுகளிக்க வழிவகை செய்யும் திட்டம்; மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம்; விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டம்;கட்டணமில்லாக் கல்வி; கட்டணமில்லா பேருந்து பயண அட்டை, ஆண்டுதோறும் 4 விலையில்லா பள்ளிச்சீருடைகள், புத்தகப்பைகள், காலணிகள், நோட்டுப்புத்தகங்கள், பாடப்புத்தகங்கள், கணித உபகரணப் பெட்டி, கிரையான்ஸ் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கும் திட்டம், பள்ளிக்குழந்தைகள் விரும்பி உண்ணும் வகையிலான கலவை சாதம் வழங்கிடும் சத்துணவுத் திட்டம், உயர் வகுப்புகளில் இடைநிற்றலைத் தவிர்க்கும் வகையிலான ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், தாய் சேய் நலம் காக்கும் வகையில் ரூ.12 ஆயிரம் வழங்கும் மகப்பேறு உதவித் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம், நெசவாளர்களுக்கான பசுமை வீடுகள் திட்டம், இந்துக்கள் மானசரோவர் மற்றும் முக்திநாத் புனிதப் பயணம் மேற்கொள்ள மானியம் வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதேபோன்று, ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்படுவதுடன், வெளிச்சந்தையில் ஒரு கிலோ ரூ.20 என்ற விலையில் அரிசி விற்பனை, சிறப்பு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25–க்கும், ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30–க்கும், ஒரு கிலோ உளுத்தம் பருப்பு ரூ.30–க்கும் வழங்கப்படுகின்றன. குறைந்த விலையில் தரமான காய்கறி கிடைக்கும் வகையில் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு மீதான மதிப்புக் கூட்டுவரி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்கள் வயிறாற உண்ணும் வகையில் ‘அம்மா உணவகங்கள்’ அனைத்து மாநகராட்சிகளிலும் திறக்கப்பட்டுள்ளன. இந்த உணவகங்களில் இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பர் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
அம்மா உணவகங்கள் மட்டுமின்றி, ‘அம்மா குடிநீர்’, ‘அம்மா உப்பு’, ‘அம்மா விதைகள்’ மற்றும் ‘அம்மா மருந்தகங்கள்’ என மக்கள் நலன் காக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவையன்றி, 190 ரூபாய்க்கு ஒரு மூட்டை சிமெண்ட் வழங்கும் ‘அம்மா சிமெண்ட்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களின் குறைகளுக்கு உடனடித் தீர்வு ஏற்படுத்தும் வகையிலான ‘அம்மா திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சமூக நீதியை நிலைநாட்டிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல் தொடர்ந்து 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வாடகைக் கட்டிடங்களில் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளுக்கு சொந்தக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. புதிய விடுதிகள் துவங்கப்பட்டு உள்ளன. இந்த விடுதிகளில் உணவுக் கட்டணம், பள்ளி விடுதிகளுக்கு மாதம் ஒன்றுக்கு 755 ரூபாய் எனவும், கல்லூரிகளுக்கு 875 ரூபாய் எனவும் உயர்த்தப்பட்டுள்ளது. சுயநிதி கல்வி நிறுவனங்களில் இலவச, கட்டண இருக்கைகளில் அனுமதிக்கப்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கு நிர்ணயிக்கப்பட்ட கற்பிப்புக் கட்டணம் உள்ளிட்ட கட்டாயக் கல்வி கட்டணங்கள் அனைத்தும் அரசே வழங்குகிறது. தாட்கோ மூலம் சுயதொழில் துவங்க மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது.
வேளாண் துறையில் சிறப்பு சலுகைகள் வழங்கியதன் காரணமாகவும், புதிய உத்திகளை கடைபிடித்ததன் காரணமாகவும், விவசாய உற்பத்தியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. 2011–12–ம் ஆண்டு உணவு தானிய உற்பத்தியில் 101.52 லட்சம் மெட்ரிக் டன் என்ற சாதனையை தமிழகம் எய்தியது. இதற்காக மத்திய அரசின் விருதும் நமக்கு கிடைத்துள்ளது. 2012–13–ம் ஆண்டில் பருவ மழை பொய்த்ததன் காரணமாகவும், கர்நாடகா தண்ணீர் திறந்து விட மறுத்ததன் காரணமாகவும், உணவு தானிய உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டது. விவசாயத்தில் புதிய உத்திகளை கையாண்டதன் காரணமாகவும், டெல்டா மாவட்டங்களில் 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டதன் காரணமாகவும், விவசாய பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு அரசே தனது செலவில் பயிர் காப்பீடு செய்தது. அதுவன்றி, இந்தியாவிலேயே முதன்முறையாக வறட்சிக்கு என நிவாரணம் வழங்கிய அரசு அண்ணா தி.மு.க. அரசு தான். 20 லட்சத்து 90 ஆயிரம் விவசாயிகளுக்கு 1,328 கோடியே 49 லட்சம் ரூபாய் வறட்சி நிவாரணமாக வழங்கப்பட்டது. 2013–14–ம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 110.65 லட்சம் மெட்ரிக் டன் என புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2013–14–ம் ஆண்டுக்கு பயறு வகைகளில் உற்பத்தி சாதனைக்காக கிருஷிகர்மான் என்ற மத்திய அரசின் விரும் கிடைக்கப் பெற்றுள்ளது. முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் அதிகபட்ச உணவு தானிய உற்பத்தி 82.63 லட்சம் மெட்ரிக் டன் தான். ஆனால் கடந்த ஆண்டின் உணவு தானிய உற்பத்தி முந்தைய தி.மு.க. ஆட்சியின் அதிகபட்ச உற்பத்தியை விட 34 விழுக்காடு அதிகமாகும்.
காவிரி டெல்டா பகுதிகளில் எந்தவித பிரச்சினையும் இன்றி விவசாயம் செய்திட நமக்குரிய காவிரி தண்ணீரை கர்நாடகம் திறந்து விடுவது அவசியமாகும். உச்சநீதிமன்றத்தின் மூலம் போராடி காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தது உங்கள் அன்பு சகோதரி தான். இந்த இறுதி ஆணையை சரிவர நடைமுறைப்படுத்திட காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை அமைக்கப்பட வேண்டும். இதற்காக தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று காவிரியில் நமக்கு உரிய உரிமைகளை கட்டிக் காக்க மேகதாதுவில் கர்நாடகம் அணைகள் கட்ட உத்தேசித்து உள்ளதற்கு தடையாணை வழங்க உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் துணையோடு தமிழகத்தின் நலன் காக்கப்படும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்."

Feb 3, 2015

சாலை மறியல் செய்தவர்களை சமரசம் செய்த அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்.

திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்றிய விபரம் வருமாறு:-
திருப்பூர் மாவட்டம், பல்லடம், உடுமலைப்பேட்டை ரோட்டில் உள்ளது ஜல்லிபட்டி ஊராட்சி சின்னப்புத்தூர் கிராமம். இந்த ஊரின் சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் பல்லடம், திருப்பூர், உடுமலைபேட்டை மற்றும் கோவை ஆகிய ஊர்களுக்கு செல்ல பல்லடம் - உடுமலை ரோட்டில் உள்ள சின்னப்புத்தூர் பிரிவு பஸ் நிறுத்ததிற்கு வந்து  அங்கிருந்து பஸ் பயணம் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இந்த பேருந்து நிறுத்தத்தில் அந்த வழியாக செல்லும் டவுன் பஸ்கள் கூட நிறுத்தப்படாமல் செல்வதாக கூறபடுகிறது. இதனால் கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ,மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர், கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் கோரிக்கை நிறைவேற்றப்படாத காரணத்தினால் சின்னப்புத்தூர் பிரிவு பஸ் நிறுத்தத்தில் பள்ளி மாணவ,மாணவிகள்,கிராம மக்கள் சாலை மறியலி ல் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த வழியில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. 
உடுமலைபேட்டையில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ளவதற்காக திருப்பூரில்  வனத்துறை அமைச்சர் ஆனந்தன் அந்த வழியாக சென்றார். பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவியர்கள் சாலையில் அமர்ந்து இருப்பதை பார்த்து உடனடியாக காரி லிருந்து இறங்கிய பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்  தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.காரிலிருந்து இறங்கிய அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து பொதுமக்கள் அவர்களது கோரிக்கைகளை சம்பத்தபட்ட அதிகாரிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மூலம் தெரிவித்து தீர்வு காணவேண்டும் என்றும், சாலை மறியல் செய்து போக்குவரத்தை தடை செய்ய கூடாது என அறிவுறித்திநார்.
மேலும் அதே இடத்தில் இருந்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் அவரது செல்போன் மூலம் பேசி சின்னப்புத்தூர் பிரிவில் நகர பேருந்துகள் நின்று செல்ல உடனடி நடவடிக்கை எடுத்தார்.அதனை அதனை தொடர்ந்து அந்தவழியாக வந்த அரசு பஸ் ஓட்டுனர்கள்  மற்றும் நடத்துனர்களிடம் எக்காரணம் கொண்டும் பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தாமல் செல்லக்கூடாது என்றும், குறிப்பாக பள்ளி மாணவ,மாணவியர்களை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என அறிவுரை கூறினார்.
இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு நன்றி தெரிவித்து கலைந்து சென்றனர்.