Sep 25, 2018

மலைக்கோட்டை தாயுமானவர் சன்னதி

மலைக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழா 13-ம் நாளை முன்னிட்டு பிள்ளையாருக்கு  27-வகை அபிஷேகம்


மலைக்கோட்டை


திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி இன்;று மதியம் மாணிக்க விநாயகர் கோவிலில் உற்சவ விநாயகருக்கு 27 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு நடன கணபதி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மலைக்கோட்டை கோவில்
தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். மலை உச்சியில் உச்சிப்பிள்ளையாரும் மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி
முழு முதற்கடவுள் என்று போற்றப்படும் விநாயகர் எல்லா வகையான துன்பங்களையும் போக்கும் ஆற்றல் படைத்தவர். விநாயகரை வழிபட்டால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் கிரக தோஷங்கள் நீங்கும் செல்வ செழிப்பு உண்டாகும். நல்ல கல்வி கிடைக்கும்.  “ஓம் கம் கணபதியே நம” என்பது விநாயகர் நாமம். இந்த நாமத்தை அன்றாடம் 3 முறையோ அல்லது 111 முறையோ சொன்னால் வாழ்க்கையில் அனைத்தும் கிடைக்கும் என்;பது நம்பிக்கை.  அழகிற்கு முருகன் அறிவுக்கு கணபதி (விநாயகர்) என்று அனைவராலும் சொல்லப்படுகிறது.
இந்த பிள்ளையாருக்கு ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் வளர்பிறையில் வரும் சதுர்த்தியன்று விநாயகர் சதுர்த்தி (விநாயகர் பிறந்த நாள்) அமாவாசை முடிந்த 4-வது நாள்  கொண்டாடப்படுகிறது.
ராட்சத கொழுக்கட்டை
இந்த விநாயகர் சதுர்த்தி விழாவை  முன்னிட்டு மலைக்கோட்டை உச்சி விநாயகர் மாணிக்க விநாயகருக்கு  150 கிலோ எடை கொண்ட மிக பிரமாண்ட ராட்சத கொழுக்கட்டை  தயாரிக்கப்பட்டு  உச்சிப்பிள்ளையாருக்கும் மாணிக்க விநாயகருக்கும் தலா 75 கிலோவாக பிரித்து தொட்டில் கட்டி தூக்கி சென்று படையல் போட்டு பக்தர்கள் அனைவருக்கும் கொழுக்கட்டை பிரசாதம் வழங்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மலைக்கோட்டை உச்சி விநாயகர்  மாணிக்க விநாயகர் கோவிலில் கடந்த 13-ம்தேதி தொடங்கி விநாயகருக்கு ஒவ்வொரு நாளும் உபயதாரர்களை கொண்டு மாணிக்க விநாயகர் கோவில் மண்டபத்தில் உற்சவ கணபதிக்கு பால கணபதி நாகாபரண கணபதி  லஷ்மி கணபதி
தர்பார் கணபதி பஞ்சமுக கணபதி மூசிக கணபதி இராஜ கணபதி மயூர கணபதிகுமார கணபதி வல்லப கணபதி ரிஷபாருட கணபதி சித்தி புத்தி கணபதி  என 12 நாட்கள் மாலை 6 மணிக்கு அலங்காரம் செய்யப்பட்டு  அபிஷேகம் நடைபெற்றது.
27 வகை அபிஷேகம்
 இதில் 13-ம் நாளான இன்று பகல் 12 மணிக்கு மாணிக்க விநாயகர் கோயில் மண்டபத்தில் உற்சவ கணபதிக்கும் மாணிக்க விநாயகர் மூலவருக்கும்  திருச்சி சாரதாஸ் சார்பில் விபூதி சந்தனாதி தைலம் திரவிய பொடி அரிசி மாவு நெல்லி முல்லி பொடி மஞ்சள் பொடி குங்குமம் தேன் நெய் பஞ்சாமிர்தம் பால் தயிர் எலுமிச்சம்பழம் சாத்துக்குடி கரும்புசாறு திராட்சை விளாம்பழம்  மாதுளை அன்னாசிப்பழம் முப்பழம் பழவகைகள் அன்னாபிஷேகம் வெந்நீர் இளநீர் சந்தனம் சொர்ணாபிஷேகம் பன்னீர்  உள்ளிட்ட 27 வகையான அபிஷேகமும் அதை தொடர்ந்து நடன கணபதிக்கு சிறப்பு அலங்காரமும்  நடைபெற்றது.
14-ம் நாளான நாளை (புதன் கிழமை) காலை 11 மணிக்கு மூலவர் உற்சவருக்கு திருக்கோயில் பணியாளர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகம் லட்சார்ச்சனையும் நடைபெற்று விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு பெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் அர்ச்சகர்கள் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
 ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் 

Sep 19, 2018

திருச்சி பூம்புகார் விற்பனை மையத்தில் கண்காட்சி திறந்து வைத்து மாவட்ட ஆட்சியர் பேட்டி அளித்தார்

திருச்சி – 18.09.18

 
       



திருச்சி பூம்புகார் விற்பனைமையத்தில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி தொடங்கியது – ஏராளமானோர் பார்வையிட்டு வாங்கிச்செல்கின்றனர்.

முக்கொம்பு மேலணை உடைப்பால் மூடப்பட்ட முக்கொம்பு சுற்றுலா மையம் விரைவில் திறக்கப்படும் - ஆட்சியர் பேட்டி.
                 


தமிழகத்திலுள்ள கைவினைக் கலைஞர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில் பூம்பூகார் விற்பனைநிலையம் செயல்பட்டுவருகிறது. இதனிடையே தமிழக மக்களால் இல்லங்களில் நட்பை வளர்க்கும் விதமாகவும், சந்தோஷத்தை வெளிப்படுத்தும்விதமாக நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி பண்டிகையையொட்டி திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் இன்று முதல் அக்டோபர் 20ம்தேதிவரை நடைபெறும் நவராத்திரி 'கொலுபொம்மைகள்' கண்காட்சி தொடங்கியது. இக்கொலு பொம்மைகள் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். இக்கண்காட்சியில் சிறப்பு அம்சமாக பலவித கொலுபொம்மைகள், ராமாயண கதையை விளக்கும் பொம்மைகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், கடவுள்கள், கொலு செட்டுகள், கொண்டபள்ளி பொம்மைகள், மரப்பாச்சி பொம்மைகள், காகிதக்கூழ், மண், பலிங்கு, மாக்கல், நவரத்தினகற்கள், மெழுகு, சந்தனமரம், நூக்கமரம் போன்ற பொருட்களால் ஆன பொம்மைகள், புதிய வரவுகள் என ரூ.50முதல் 25ஆயிரம் வரை இடம்பெற்றுள்ளது. கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த கொலு பொம்மைகளை ஏராளமானோர் பார்வையிட்டு பொருட்களை வாங்கிச்சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு ஆட்சியர் அளித்த பேட்டியில் முக்கொம்பு கொள்ளிடம் கதவணை சேதமடைந்து தற்காலிக பராமரிப்பு பணிகள் முழுஅளவில் முடிக்கப்பட்டு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதுடன், 20ஆயிரத்து 152கனஅடி தண்ணீர் வரப்பட்டுள்ளது, கொள்ளிடத்தில் 700கனஅடி தண்ணீர் வெளியாகிறது. அதேபோன்று வாய்க்கால்பாசனத்திற்காக 500கனஅடிதண்ணீர் திறக்கப்படுவதுடன், நாளைமுதல் 200கனஅடி தண்ணீர் கூடுதலாக திறக்கப்படவுள்ளது. சம்பாசாகுடிக்கான தண்ணீர் உரியமுறையில் செல்ல பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. தண்ணீரை முழுவதும் நிறுத்துவதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது. வடகிழக்குபருவமழைக்கு முன்னதாக கொள்ளிடத்தில் பாதுகாப்பானமுறையில் கண்காணிக்கவும், உரியமுறையில் வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. 410கோடி ரூபாய்க்கு கட்டப்படும் கதவணையின் பூர்வாங்கப்பணிகளுக்கான அறிக்கை தயாரிக்க ஆய்வுசெய்து தயரிக்கப்பட்டுவருவதுடன், அப்பணிகளும் விரைவில் முடிவடைந்து பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீர்வரத்து அதிகரித்து இருந்தாலேயே முக்கொம்பு கொள்ளிடம் உடைப்பு சரிசெய்யும் பணிகள் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், உடைப்பால் விவசாயத்திற்கும், தண்ணீர் விவசாயத்திற்கு செல்வதற்கும் எந்தவித தொடர்பும் இல்லையென ஆட்சியர் தெரிவித்தார். அதேநேரம் மேலணை உடைப்பால் மூடப்பட்ட முக்கொம்பு சுற்றுலா மையம் வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பேட்டி : 1)திரு.கு.ராஜாமணி – மாவட்ட ஆட்சியர்

Sep 18, 2018

திருச்சி பூம்புகார் விற்பனை நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கண்காட்சியை திறந்து வைத்தார்

திருச்சி
18.09.2018
 
 தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் , பூம்புகார் விற்பனை நிலையம் திருச்சி சிங்காரதோப்பில்  மாநகர மக்களின் பேராதரவோடு 44 வருடங்களை வெற்றிகரமாக கடந்து 45 வது வருடத்தில் அடிஎடுத்து வைக்கிறது என்பதை மகிழ்வோடு தெரிவிப்பதோடு வழமைபோல் இவ்வாண்டும் வருகின்ற நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு 18.09.2018  முதல் 20.10.2018 வரை (ஞாயிறு உட்பட) கொலு கண்காட்சி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இக்கண்காட்சியின் சிறப்பு அம்சமாக பலவித கொலு பொம்மைகள், கொலு செட்டுகள், கொண்டபள்ளி  பொம்மைகள், மரபாச்சி பொம்மைகள், காகிதக்கூழ் பொம்மைகள், மண், பளிங்குக்கல், மாக்கல், நவரத்தின கற்களினாலான பொம்மைகள் குறைந்த பட்சமாக ரூ.50 முதல் ரூ.25000 வரை இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
இக்கண்காட்சியை திரு.கு.இராசாமணி,இ.ஆ.ப.,மாவட்டஆட்சித்தலைவர்,    திருச்சிராப்பபள்ளி,அவர்கள் 18.09.2018 செவ்வாய் கிழமை அன்று மாலை 6.00  மணியளவில் குத்துவிளக்கேற்றி கண்காட்சியை துவக்கி வைத்தார்கள்.
இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ள பொம்மை செட்டுகள்:

                 அஷ்ட பைரவர் செட், நவதுர்கா வாகனம், கிராமிய விளையாட்டுகள் செட், வேத மூர்த்திகள் செட், கார்த்திகை தீபம், கள்ளழகர் செட், கல்யாண ஊர்வலம்,  கிரிக்கெட், சஞ்சீவி செட், பெருமாள் ஊர்வலம் செட், நவ கண்ணிகள் செட், பானைகிருஷ்ணன் செட், தசாவதாரம் செட், அஷ்டலக்ஷ்மி செட், கயிலாய மலைசெட், கார்த்திகை பெண்கள் செட், ஸ்ரீரங்கம் செட், அன்னபூரணி செட்,          விநாயகர் செட், மஹாலக்ஷ்மி வரம் செட், மாயா பஜார் செட்,                             சீனிவாச கல்யாணம் செட், மீனாட்சி கல்யாணம் செட், மும்மூர்த்தி செட், ராமர் பட்டாபிஷேகம் செட், தாத்தா பாட்டி செட், பெருமாள் தாயார் செட்,
    ராமர் பாலம் செட், சுக்ரீவர் பட்டாபிஷேகம் செட், கனகதாரா செட், முருகர் உபதேசம் செட், கஜேந்திர மோட்ஷம் செட், மாங்கனி செட், கீதா உபதேசம் செட், ஜோதிர்லிங்கம் செட், பரத நாட்டியம் செட், அசோகவனம் செட், பீஷ்மர் அம்பு படுக்கை செட், கனையாழி செட், ஆழ்வார் செட், கோபியர் டான்ஸ் செட், விவசாய செட், தட்டாங்கி செட், ஜடாயு மோட்சம் செட், ராமர் செட், அகலியா சாப விமோட்சம் செட் முதலான பொம்மைகள்  கல்கத்தா, மணிபூர், இராஜஸ்தான், ஒரிஸா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட பொம்மைகள், எண்ணற்ற தனி பொம்மைகளும் பலவிதமான மாடல்களில் வண்ணங்களில் இடம் பெற்றுள்ளன.
              இக்கண்காட்சியில் காட்சிக்கும் விற்பனைக்கும் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து தருவிக்கப்பட்டுள்ள அழகிய கொலு பொம்மைகளை திருச்சி மாநகர மக்கள் வாங்கி தங்கள் இல்லத்திற்கு அழகூட்டி, வரும் நவராத்திரி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ அன்புடன் அழைக்கின்றோம்.
     என பூம்புகார் சார்பாக மேலாளர் தெரிவித்தார்

Sep 7, 2018

திருச்சி பூம்புகார் விற்பணை நிலையம் கணபதி தரிசனம் சிறப்பு கண்காட்சி

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்
             


  பூம்புகார் விற்பனை நிலையம்இ திருச்சி- 8
           

 கணபதி தரிசனம் – சிறப்பு கண்காட்சி


      ஐங்கரன்இ ஆனைமுகத்தோன்இ கஜேந்திரன்இ விக்னேஸ்வரன்இ கணபதிஇ பிள்ளையார் என்று பல பெயர்களில் அழைக்கப்படுபவர்இ கடவுளின் மூலக் கடவுள் என்றும் போற்றப்படுபவர்இ நம் அனைவராலும் வணங்கப்படுபவர் விநாயகர். விநாயகர் என்றால் வினை தீர்ப்பவர்இ வினையை அகற்றுபவர் என்று பொருள். நம் வாழ்விலும் பல இன்னல்கள்இ கஷ்டங்கள்இ தீராத வினைகள் இருக்கின்றன. இப்பிரச்சனைகளை அகற்றும் கடவுள் நம் விநாயகர். இவரின் பண்டிகையை தான் நாம் விநாயகர் சதுர்த்தி என்று அழைத்து ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம்.  
இவர் கலைகளின் கடவுளாகவும் ஞானத்தின் கடவுளாகவும் வணங்கப்படுவார்இ. இந்த விநாயகர் பல வடிவங்களில்இ பல அவதாரங்களில் கணபதியாக தோற்றம் கொண்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்சிக் கழகம் கைவினைஞர்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் தமிழகம் முழுவதும் மற்றும் புது டெல்லிஇ கொல்கத்தாஇ உட்பட அனைத்து விற்பனை நிலையங்களை நடத்தி வருவதோடுஇ மற்றொருவித வாய்ப்பாக இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பலவகைக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக திருச்சி சிங்காத்தோப்பில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையம்இ 06.09.2018 முதல் 15.09.2018  வரை (ஞாயிறு உட்பட) கணபதி தரிசனம் என்ற சிறப்பு கண்காட்சி ஒன்றை தன் விற்பனை நிலையத்தில் நடத்தி வருகிறது.
இக்கண்காட்சியினை திரு.யு.ளு.சமது யுபுஆ (ர்சு) டீர்நுடுஇ  திருச்சி அவர்கள் வியாழன் கிழமை அன்று துவக்கி வைத்து சிறப்பித்தார்கள்.


Sep 3, 2018

திருச்சி இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியின் ஆறாம்  பட்டமளிப்பு விழா கல்லூரி
வளாகத்தில் 02.09.2018 அன்று நடைபெற்றது.



பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை ஏற்று கல்லூரியின் செயலர் திரு ராஜசேகரன் தொடங்கி
 வைத்தார்.  இயக்குனர் முனைவர் பாலகிருஷ்ணன் மற்றும் முதல்வர் முனைவர்
பாரதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



விழாவில் சிறப்பு விருந்தினராக பெங்களூர் டீ.சி.எஸ் தலைமை அதிகாரி  திரு.
அபூர்ப தாஸ் கலந்து கொண்டார்.



முன்னதாக கல்லூரியின் அறிக்கையை கல்லூரி முதல்வர் திரு பாரதிராஜா பதிவு
செய்தார். அதில் மாணவ மாணவிகளின் சாதனைகள், பேராசிரியர்களின் சாதனைகளை
குறிப்பிட்டார்.



பின்னர் பட்டமளிப்பு உரை நிகழ்த்திய  பெங்களூர் டீ.சி.எஸ் தலைமை அதிகாரி  திரு.
அபூர்ப தாஸ் தனது உரையில் முதலாவதாக புதிய பட்டதாரிகளுக்கு வாழ்த்துக்களை
தெரிவித்தார்.



பின்னர் தொடர்ந்து பேசுகையில், மாணவர்கள் தங்கள் தனி திறமைகளை வளர்த்து
கொள்வதன் அவசியம் பற்றி குறிப்பிட்டார். மேலும் மாணவர்கள் உயர்ந்த
எண்ணங்களையும், சிந்தனைகளையும் வளர்த்துகொண்டால் வாழ்வில் பல சாதனைகளை
படைக்கலாம் என்று கூறினார்.

Sep 2, 2018

திருச்சி அமைச்சர்கள் முக்கொம்பு கொள்ளிடம் ஆய்வு

திருச்சி.         1.9.18

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மதகுகள் பணிகள் இன்னும் நான்கு நாட்களில் பணிகள் நிறைவடையும், தண்ணீர் வரத்து அதிமாக வருவதால் இரும்பு தூண்களை கொண்டு பணிகள் நடைபெற்றுவதாக ஆய்வு பின் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் 45 மதகுகள் உள்ளன. இதில் 6-வது மதகில் இருந்து 14-வது மதகு வரை உள்ள 9 மதகுகள் கடந்த 22-ந் தேதி இரவு திடீரென்று இடிந்து விழுந்தன. இதனால் கொள்ளிடம் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறியது. உடைந்த மதகுகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணி ரூ.95 லட்சம் செலவில் நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக 1-வது மதகில் இருந்து 17-வது மதகு வரை 220 மீட்டர் தூரத்துக்கு 3 லட்சம் மணல் மூட்டைகள் அடுக்கி தடுப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், அணையின் முன்பாக கான்கீரிட் சுவர் அமைத்தல், மதகு உடைந்த இடங்களில் பாறாங்கற்களை கொண்டு நிரப்புதல் உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் இரவு, பகலாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் மதகுகள் உடைந்த இடத்தில் தண்ணீரின் வேகத்தை கட்டுப்படுத்தி சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதில் கடும் சவால் ஏற்பட்டுள்ளது. இதற்காக முக்கொம்பு கொள்ளிடம் அணை சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அணை உடைந்த இடத்தில் மிகவும் ஆழமாக இருப்பதால் அங்கு பாறாங்கற்கள் கொண்டு நிரப்பும்போது, அவை உள்ளே இறங்கி விடுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ராணுவ உதவி கோர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் கொள்ளிடம் அணையின் 6-வது மதகில் இருந்து 14-வது மதகு வரை மட்டுமே உடைந்துள்ள நிலையில் நேற்று பாதுகாப்பு கருதி 5-வது மதகில் பொருத்தப்பட்டு இருந்த மதகை ஏற்றி, இறக்க பயன்படக்கூடிய (கியர் பாக்ஸ்) இரும்பு ராடுகள், சங்கிலிகள் மற்றும் இரும்பு பொருட்கள் ஆகியவற்றை அதிகாரிகள் உத்தரவின்பேரில் தொழிலாளர்கள் அகற்றினார்கள். தற்போது மேட்டூர் அணையில் இருந்து 4 ஆயிரம் கனஅடி மட்டுமே தண்ணீர் வருவதால், காவிரியில் 1,700 கனஅடியும், கொள்ளிடத்தில் 2,300 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்து வருவதால் இனி, பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்காலிகமாக சீரமைக்கும் பணி ரூ.95 லட்சம் செலவில் நடைபெற்று பணிகளை இன்று மாலை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி , பொதுப்பணித்துறை அமைச்சர் பிரபாகரர், சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வராஜ், பரமேஸ்வரி முருகன் மற்றும் பொதுபணித்துறை அதிகாரிகள் ஆகியோர் பார்வையிட்டு பணிகளை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பொதுபணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் பணிகளை குறித்து விரிவாக ஆய்வு செய்தாரா. பின்னர் படகு மூலம் பணிகள் நடைபெற்றுபணிகளை பார்வையிட்டார். பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது ', முக்கெம்பு மதகுளை பணிகளை பார்வையிட்டு அங்கு பணிகளை குறித்து ஆய்வு செய்ய தமிழக முதலைமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தினார். அதன் பேரில் நான் மற்றும் அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளரமதி, பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர் , மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆகியோரிடம் பணிகளை குறித்து ஆலோசனை செய்தேன்.

தண்ணீர் அலம் குறிப்பிட்ட பகுதியில் 14 அடி முதல் 20 அடியாக உள்ளது. அங்கு பெரும் சவலாக இருநாதாலும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இரவு பகலாக 13 பொக்லைனை கொண்டு நாள்  ஓன்றுக்கு 50 ஆயிரம் மூட்டைகளும், மறுபுறமும் பெரிய அளவிலான பாறைகளும் கொண்டும் தண்ணீர் தடுக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

இன்று அதிகமாக தண்ணீர் வரத்து அதிகமாக காணப்படுகிறது. ஆகையால் இரும்பு தூண்களை கொண்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் மூன்று அல்லது நான்கு தினங்களில் பணிகளா முடிவடைய பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை படுத்தப்பட்டுள்ளது. அது ஓரு புறம் இருக்க புதிய அணைகள் கட்டும் பணிக்கான ஆய்வு பணிகள் நடைபெற்றது. கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை எனபது உண்மையில்லை தேவையான பகுதிக்கு தண்ணீர் வந்து கொணாடு இருக்கிறது.

எந்த அளவுக்கு பணிகளை முடிக்கம் முடியுமோ அந்த அளவுக்கு பணிகளை முடிக்கப்பட்டும் .15 ஆடி அகலத்தில் இருப்பதால் பல்வேறு நுணுக்கங்களை கொண்டு பணிகள் நடைபெற்றது வருகிறது.மணல் மூட்டிகளை அடுக்கி வைப்பது பெரும் சவலாக கொண்டு தொழிலாளர்கள் வேவை பார்த்து வருகிறார்கள். அவ்வப்போது பணிளை குறித்து தமிழக முதலைமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டறிந்து வருகிறார். மணல் அள்ளுவதால் இந்த மதகுகள் விழந்தது காரணம்

திருச்சி கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கோட்டம், மணிகண்டம் ஒன்றியத்தில், ராம்ஜி நகர் பகுதியில் புங்கனூர் கிராமத்தில் 750 கால்நடைகளுக்கு இலவச கோமாரி நோய் தடுப்பூசி  முகாம் இன்று நடைபெற்றது. இதில்  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி அவர்கள் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். அருகில் புங்கனூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் சின்னத்துரை, புங்கனூர் செல்வம், அக்தர் பெருமாள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் உள்ளனர்.