Mar 11, 2021

திருச்சி ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் அதிமுக தொண்டர்கள் வெள்ளத்தில்



ஸ்ரீரங்கம் வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனுக்கு அதிமுக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இதில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த 1991ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட கு.ப.கிருஷ்ணன் வெற்றி பெற்று வேளாண்மை துறை அமைச்சராக பதவி வகித்தார். தற்போதும் அவர் ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளராக களம் காண்கிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக சென்னையில் இருந்து கு.ப.கிருஷ்ணன் திருச்சி வந்தார்.

ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே ஏராளமான தொண்டர்கள் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொண்டர்கள் வெள்ளத்தில் மிதந்தவாறு கு.ப.கிருஷ்ணன் தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வின் போது பகுதி செயலாளர் டைமண்ட் திருப்பதி  பனையபுரம் கர்ணன் அதிமுக பிரமுகர்கள் மகளிர் அணி செயலாளர்கள் பகுதி செயலாளர்கள் அதிமுக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

திருச்சி அதிமுக மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளருக்கு அருள்வாக்கு

 திருச்சியில் அதிமுக வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு பத்மநாதன்   என்கிற வேட்பாளர் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .


அவர் புத்தூர் அருகே உள்ள கூட்டுறவு சங்க கட்டிட அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக அதிமுக கட்சி பிரமுகர்களை சந்தித்தார் அப்போது இறை வழிபாடு நடத்தப்பட்டது .


திடீர்னு ஒரு நபர் பத்மநாதன் இடம் 11837 ஓட்டு வித்தியாசத்தில் நீங்கள் ஜெயிப்பீர்கள் என்று  அதிமுக கட்சி சார்ந்த நபர் ஒருவர் இறை வாக்குறுதி அளித்தார்.

 இதனால் பரபரப்பாக காணப்பட்டது மேற்கு சட்டமன்ற தொகுதி திமுக கோட்டையாக இருக்கும் நிலையில் இப்படி இறை வாக்குறுதியால் பரபரப்பு காணப்பட்டது. விரைவில் அதிமுக கோட்டையாக மாறும் என்ற மன உறுதியில் அதிமுகவினர்.

திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக மருத்துவ மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஆலோசனை முகாம்

 திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக மருத்துவ ஆலோசனை முகாமில் ஏராளமான பொதுமக்கள் பயன் பெற்றனர்


 திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு இன்று இலவச  மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது. 


ஆண்டுதோறும் மார்ச் 11ம் தேதி உலக சிறுநீரக தினம் கொண்டாடப்படுகிறது.

சிறுநீரக நோயுடன் நல்வாழ்வு வாழ்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், மேலசிந்தாமணி அண்ணா சிலை அருகே உள்ள பிரண்ட்லைன் மருத்துவமனை மேற்கொண்டு வருகிறது.

இந்த வகையில் நேற்று (11 ஆம் தேதி) முதல் வரும் 13-ஆம் தேதி வரை இலவச ஆலோசனை வழங்கும் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் இந்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

இதில் சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக தொற்று நோய்கள், அனைத்து சிறுநீரக பிரச்சினைகள், ரத்த சுத்திகரிப்பு, பெரிடோனியல் டயாலிசிஸ், சிறுநீரகம் திசுப்பரிசோதனை, சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், ரத்தம் கலந்த சிறுநீர் கழித்தல், சிறுநீரில் கிருமித் தொற்று, சிறுநீரக கல் தொந்தரவு, பிராஸ்டேட் சுரப்பி சம்பந்தப்பட்ட தொந்தரவுகள், சிறுநீரகப் புற்றுநோய் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

சிறுநீரக சிறப்பு மருத்துவர் மற்றும் மாற்று சிறுநீரக மருத்துவ நிபுணர் டாக்டர் கணேஷ் அரவிந்த், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினர்.

இதில் ஏராளமான நோயாளிகள் கலந்து கொண்டு ஆலோசனை பெற்றனர்.

திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் 24 மணி நேரமும் சிறுநீரக சிகிச்சை மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் வசதி உள்ளது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான காப்பீட்டு திட்டம் இந்த மருத்துவமனையில் செயல்படுத்தப்படுகிறது என்று அதன் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருச்சி திருவெறும்பூர் அதிமுக வேட்பாளர் பா.குமார் அவர்களுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

திருச்சி  திருவெறும்பூர் அதிமுக வேட்பாளர் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு


திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற அதிமுக வேட்பாளர் ப.குமாருக்கு கட்சியினர் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.இதில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் ப.குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மட்டுமின்றி, அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதன் முதலாக சென்னையில் இருந்து கார் மூலம் திருச்சி வந்தார்.திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள அதிமுக திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்திற்கு வந்த குமாருக்கு அதிமுக நிர்வாகிகள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.பட்டாசு வெடித்தும், மாலை, சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.இந்நிகழ்வின் போது சகாதேவ பாண்டியன், இராவணன், கும்படி கோவிந்தராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்

திருச்சிமண்ணச்சநல்லூர் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி பிரச்சாரம் தொடங்கினார்

 சமயபுரம் மாரியம்மனை வழிபட்டு பிரச்சாரத்தை தொடங்கினார் பரஞ்சோதி


திருச்சி மண்ணச்சநல்லூர் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.சமயபுரம் மாரியம்மனை வழிபட்டு தேர்தல் பணியை பரஞ்சோதி தொடங்கினார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.


இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இதில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக பரஞ்சோதி அறிவிக்கப்பட்டுள்ளார்.முன்னாள் அமைச்சரும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான பரஞ்சோதி இன்று காலை சென்னையில் இருந்து கார் மூலம் திருச்சி வந்தார்.

திருச்சி மாவட்ட எல்லையான சமயபுரம் டோல் பிளாசா அருகே அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பரஞ்சோதி தரிசனம் செய்தார்.தொடர்ந்து சமயபுரம் நால்ரோட்டில் அலங்கரிக்கப்பட்ட அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவி மரியாதைசெலுத்தினார்.அதனை தொடர்ந்து மண்ணச்சநல்லூர் தொகுதியில் அதிமுக நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ பரமேஸ்வரி முருகன் ,ஒன்றிய செயலாளர்கள் மண்ணச்சநல்லூர் ஜெயக்குமார், ஆதாளி, மணிகண்டம் ஜெயக்குமார்,  சின்னையன் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான அய்யம்பாளையம் ரமேஷ், இபி ஏகாம்பரம் புல்லட் ஜான் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.