Sep 30, 2014

NEWS 30.09.14


ஜெயலலிதா அவசர மனு: கர்நாடக ஐகோர்ட் தலைமை பதிவாளருடன் நீதிபதி குன்ஹா திடீர் சந்திப்பு!

Jayalalithaa-gets-relief-in-disproportionate-assets-case




























சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை நாளையே விசாரிக்க கோரி ஜெயலலிதா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை பதிவாளரை, நீதிபதி மைக்கேல் டி குன்ஹா சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா கடந்த 27ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தார்.
இதனிடையே, தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுத் தாக்கல் செய்திருந்தார். மேலும் ஜாமீன் கேட்டும் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
ஜாமீன் மனுவை இன்று விசாரித்த விடுமுறைகால நீதிபதி ரத்னகலா, மனு மீதான விசாரணையை அக்டோபர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். ஆனால், மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், மேல்முறையீட்டு மனுவை நாளையே விசாரிக்க கோரி ஜெயலலிதா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் தேசாயிடம், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் இந்த மனுவை அளித்துள்ளார்.
இதனிடையே, ஜெயலலிதா தரப்பில் அவசர மனு அளிக்கப்பட்ட நிலையில் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பட்டேலை, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹா இன்று திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நடந்தது.
ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை பதிவாளரை நீதிபதி மைக்கேல் டி குன்ஹா சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

- See more at: http://newsalai.com/?p=28469#sthash.b7WHQPOZ.dpuf

அ.தி.மு.க. தொண்டர்கள் 3–வது நாளாக உண்ணாவிரதம்



சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை பெங்களூர் கோர்ட்டு வழங்கியதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. தொண்டர்கள் தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜெயலலிதா மீதான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து தென்சென்னை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் வி.என். ரவி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கோயம்பேட்டில் நேற்று உண்ணா விரதம் மேற்கொண்டுள்ளனர்.
அந்த வகையில் தென்சென்னை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் விருகை. வி.என். ரவி தலைமையில் கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த உண்ணாவிரதத்திற்கு மைத்திரேயன் எம்பி, அமைப்பு செயலாளர் பொன்னையன், ஓட்டுநர் அணி மாநில செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த உண்ணாவிரதத்தில் எம்எல்ஏக்கள் ஜி. செந்தமிழன், எம். கே. அசோக், மயிலை ராஜலெட்சுமி, முன்னாள் எம்எல்ஏ பி.எஸ். அண்ணாமலை, சென்னை மாநகராட்சி சுகாதார நிலைக்குழு தலைவர் ஆ. பழனி, கவுன்சிலர்கள் எம்.எம். பாபு, நூர்ஜகான், என்.எஸ். மோகன், முன்னாள் கவுன்சிலர்கள் சொ. கடும்பாடி, ராஜேந்திர பாபு, பாசறை மாவட்ட செயலாளர் விஜயகுமார், நிர்வாகிகள் சைதை சாரதி, தி.நகர் ஆறுமுகம், எம்.ஜி.ஆர் நகர் அன்பு, மயிலை ராஜேஷ்கண்ணா உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
சென்னையில் நேற்று 3–வது நாளாக தொண்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். வடசென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பாலகங்கா ஏற்பாட்டில் 4 தொகுதிகளில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
எழும்பூர் பகுதி செயலாளர் மகிழன்பன் தலைமையில் பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டிலும், துறைமுகம் பகுதி செயலாளர் இருசப்பன் தலைமையில் மின்ட் அரசு அச்சகம் அருகிலும் உண்ணாவிரதம் நடந்தது.
திரு.வி.க.நகர் பகுதி செயலாளர் சுகுமார் தலைமையில் மகாலட்சுமி தியேட்டர் அருகிலும், ராயபுரம் பகுதி செயலாளர் ராமஜெயம் தலைமையில் ஜி.ஏ.ரோட்டிலும் உண்ணாவிரதம் நடந்தது. இதில் கவுன்சிலர்கள் இம்தியாஸ், சந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திரு.வி.க.நகர் பஸ் நிலையம் அருகில் சென்னை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தலைமை கழக பேச்சாளர் தரங்கை கண்ணன், கவுன்சிலர் உஷா பெருமாள், பெருமாள், ஆர்.கே.சந்திரன், அசோக், யுவராஜ், செல்வி, கோமதி, குமார், கோபி, ரவி, ஆனந்த், பாஸ்கர், முருகேஷ், பிரகாஷ், ஜெயின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பூர் பகுதி செயலாளர் லட்சுமி நாராயணன் தலைமையில் மூலக்கடை சந்திப்பில் உண்ணாவிரதம் நடந்தது.இதில் அவைத்தலைவர் மதுசூதனன், மாவட்ட செயலாளர் வெங்கடேஷ்பாபு, வட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தென்சென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கோயம்பேடு பஸ் நிலையம் எதிரில் மாவட்ட செயலாளர் வி.என்.ரவி தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது.
இதில் மேயர் சைதை துரைசாமி, முன்னாள் அமைச்சர் பொன்னையன், மைத்ரேயன் எம்.பி., எம்.எல்.ஏக்கள் செந்தமிழன், அசோக், ராஜலட்சுமி, டாக்டர் அழகு தமிழ்செல்வி, வே.சோலை, கவுன்சிலர் மலைராஜன், வி.என்.சேகர், தனசேகர், அரி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற் றனர்.
மாதவரம் மூலக்கடையில் பெரம்பூர் பகுதி செயலாளர் லட்சுமி நாராயணன் தலைமையில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
இதில் 150 பெண்கள் உள்பட 600–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மூலக்கடை சக்தி, முன்னாள் கவுன்சிலர் எறும்புலி வடிவேல் ஆகியோரும் பங்கேற்றனர்.

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் வலுக்கிறது



சென்னை, அக்.1 - ஜெயலலிதா மீதான வழக்கில் வழங்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை நந்தனம் கல்லூரி மாணவர்கள் நேற்று கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள நகர் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஜோனாஷா டி சன்னா (வயது 19) சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை தொலைக்காட்சி மூலம் பார்த்து மிகுந்த வேதனை அடைந்து, தனது வீட்டு சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்போல, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள வங்கி நாராயணபுரத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி நாகலட்சுமி (17) தனது உடலில் தானே மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
சென்னை நந்தனத்தில் உள்ள கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று ஜெயலலிதா மீதான தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் ஜெயலலிதாவை விடுதலை செய் என்று கோஷம் எழுப்பியதுடன், மத்திய அரசு மற்றும் நீதித்துறைக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல மாநிலக்கல்லூரி மணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு போலீஸ்பாதுகாப்புபோடப்பட்டது
உலக தமிழாராய்ச்சி நிறுவன மாணவர்கள் உண்ணாவிரதம்:
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வு மையத்தின் மாணவர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை முதலே வகுப்புகளுக்கு செல்லாமல் மாணவ-மாணவிகள் ஆய்வு மையத்தின் வெளியே அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ‘‘எங்களது ஆராய்ச்சி மையத்தின் தரத்தை உயர்த்தியதில் முதல்-அமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. மேலும், மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியும் ஊக்கப்படுத்தி வருகிறார். அவர் கைது செய்யப்பட்டது மாணவ-மாணவிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை கண்டிக்கும் வகையில் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகிறோம்’’, என்றனர். இந்த போராட்டத்தில் 80-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பினர்.

அவசரகால ஜாமின் மனு நாளை விசாரணைக்கு வருகிறது

ஜெயலலிதா, சொத்துக்குவிப்பு வழக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம், மேல்முறையீடு
மேல்முறையீட்டு மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என விடுமுறை கால நீதிபதிக்கு கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் பி.ஏ.பட்டேல் உத்தரவிட்டுள்ளார்.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை மற்றும் ரூ.100 கோடி அபாராதம் அளித்தும் உத்தரவிட்டது.
 
இதையடுத்து, நேற்று(29.09.14) ஜெயலலிதா சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரியும், தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும் மேல்முறையீட்டு மனு அளிக்கப்பட்டது.
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங், தனக்கு அரசு அறிவிப்பாணை கிடைக்கவில்லை என்றும், வழக்கை விசாரிக்க கால அவகாசம் வேண்டும் என்றும் கூறியதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
 
இந்நிலையில், ஜாமின் மனுவை அவசர கால மனுவாக ஏற்றுக்கொண்டு விசாரிக்க வேண்டும் என்று ஜெயலலிதா சார்பில் உயர்நீதிமன்ற பதிவாளரிடம் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இதையடுத்து, விடுமுறை கால நீதிமன்ற நீதிபதி ரத்னகலா இந்த மனுவை நாளை விசாரிப்பார் என்று கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் பி.ஏ.பட்டேல் உத்தரவிட்டார். இதையடுத்து, ஜெயலலிதா ஜாமின் மனு மீதான விசாரணை நாளை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

முதல் "அசைன்மென்ட்"டாக இதை எடுத்துக் கொள்ளுங்கள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்- கொ.ஜ.க. கோரிக்கை!

முதல்


அதிமுகவினர் இன்னும் ஜெயலலிதா ஷாக்கிலிருந்து விடுபடவில்லை. ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான புதிய அரசும் அழுத கண்ணும், புலம்பிய மனமுமாக பதவியேற்று முடித்துள்ளது. சட்டசபை கூடுமா என்பதும் கூட தெரியவில்லை. இந்த நிலையில் சட்டசபையின் முதல் கூட்டத்தில் இதை முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றுங்கள் என்று கூறி ஒரு திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளது கொங்குநாடு ஜனநாயக கட்சி. இதுகுறித்து ஓ.பன்னீர் செல்வத்துக்கு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.நாகராஜ் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தின் விவரம்: புதிதாக பொறுப்பேற்ற மாண்புமிகு முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கும் கொங்குநாடு ஜனநாயக கட்சி மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சரவை முதல் தீர்மானமாக அத்திக்கடவு- அவினாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கி திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுத்து மத்திய அரசுக்கு அனுப்பி கொங்குமண்டல மக்களின் வாழ்வாதாரம் காக்க வேண்டும். கொங்குநாடு ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழக முதல்வருக்கு 28.07.2014 அன்று அத்திக்கடவு- அவினாசி திட்டம் தொடர்பாக கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத்தலைவர் நாகராஜ் அவர்கள் கடிதம் அனுப்பியிருந்தார். அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் 500 குளம், குட்டைகளை ஒரு டி.எம்.சி. தண்ணீரால் நிரப்பினால் 30 இலட்சம் மக்களும்,50,000 கால்நடைகளும் வாழ்வாதாரம் பெறும்.1,000 மெகாவாட் மின்சாரம் சிக்கனமாகும் என தமிழக முதல்வருக்கு கொங்குநாடு ஜனநாயக கட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதற்கு தமிழக அரசின் சிறப்புச்செயலாளர் அனுப்பிய பதில் கடிதத்தில் 03.06.2014 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் மாண்புமிகு பாரதப்பிரதமரை நேரில் சந்தித்து அத்திக்கடவு- அவினாசி திட்டம் உள்பட நேரில் கோரிக்கை மனு அளித்துள்ளதாக தெரிவித்தார். மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி அத்திக்கடவு- அவினாசி திட்டம் நிறைவேற தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி திட்டச்செலவில் 25% தமிழக அரசு நிதி ஒதிக்கினால் மட்டுமே திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 50 ஆண்டு காலமாக 310 கோடியில் காமராஜர் அவர்களால் துவங்கப்பட்ட இத்திட்டம் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டுள்ளது. 1956 முதல் 2006-ம் ஆண்டு வரை மட்டும் 50 ஆண்டுகளில் 40 ஆண்டுகள் மட்டுமே பவானிசாகர் அணையின் தேவை போக மீதமுள்ள உபரிநீர் வீணாக கடலில் சென்றுள்ளது. ஜூலை முதல் நவம்பர் மாதம் வரை 5 முறை அணை நிரம்பி 25 டி.எம்.சி. உபரிநீர் வீணாக கடலில் கலந்துள்ளது. ஒரு டி.எம்.சி. தண்ணீர் இருந்தால் 3 ஆண்டு காலம் 3 மாவட்டங்களில் 500 குளம்,குட்டைகள் நிரப்பப்படுவதால் விவாசயம் செழிக்கும். கொங்குநாடு ஜனநாயக கட்சி தொடர்ச்சியாக பலமுறை முதல்வருக்கு கடிதம் அனுப்பியும் அரசு சிறப்புச்செயலாளர்களை நேரில் சந்தித்தும் இதுவரை திட்டம் முன்னேறுவதற்கான எவ்வித முகாந்தரமும் இருப்பதாக தெரிவதில்லை. தமிழக முதல்வர் இதுவரை இத்திட்டம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. தமிழக அமைச்சர்கள் திட்டம் நிறைவேற்றப்படும் என்று பொதுக்கூட்டங்களில் பேசுவதோடு சரி சட்டசபையில் அவர்கள் இதுபற்றி பேசுவதில்லை. 50 ஆண்டு காலமாக வழித்தடத்தை நிறைவேற்ற ஆய்வுகள் நடைபெறுவதாக சொல்லுவதால் இதை "நீண்டகாலமாக நடைபெறும் ஆய்வு"என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறச் செய்யலாம். கடந்த ஆண்டு 835 கோடியை வறட்சி நிவாரணமாக விவசாயிகளுக்கு வழங்கிய தமிழக அரசு இத்திட்டம் நிறைவேற ஆரம்பகட்ட நிதியாக 200 கோடி நிதியை ஒதுக்கி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றுமாறு கொங்குநாடு ஜனநாயக கட்சி கேட்டுக்கொள்கிறது. பாரதப்பிரதமரிடம் மனுகொடுப்பதால் மட்டும் இத்திட்டத்தை நிறைவற்ற முடியாது. வரும் நவம்பர் 18-ல் கொங்குநாடு ஜனநாயக கட்சி சார்பில் நடைபெறும் பட்டினிப்போராட்டத்திற்குள் இத்திட்டத்திற்கு செயல்வடிவம் கிடைக்கப் பெறவில்லை என்றால் கொங்குநாடு ஜனநாயக கட்சி கிராமம், கிராமமாக சென்று இத்திட்டத்திற்கு மக்களை ஓரணியில் திரட்டி அரசுக்கெதிரான போராட்டத்தை வலுப்படுத்தும் என கொங்குநாடு ஜனநாயக கட்சி சார்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.,க. சார்பில், துணை மேயர் சு.குணசேகரன் தலைமையில், பழைய பஸ் ஸ்டாண்டு முன் மறியலில் ஈடுபட்டனர் 500க்கும் மேற்பட்டோர் .கைதாகினர்.







Displaying IMG_9710.JPG



Displaying IMG_9702.JPG




திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.,க.  சார்பில், துணை மேயர் சு.குணசேகரன் தலைமையில், பழைய பஸ் ஸ்டாண்டு முன் மறியலில்  ஈடுபட்டனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் .கைதாகினர்.
நிகழ்ச்சியில்  மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம்,  ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், எஸ்.ஆர்.ஜெயக்குமார், கருவம்பாளையம் மணி, கருணாகரன்,  தம்பி மனோகரன்,நிலைக்குழு தலைவர்கள்  அன்பகம் திருப்பதி, பட்டுலிங்கம், பூளுவபட்டி பாலு, ஒன்றிய தலைவர்  சாமிநாதன்,  கவுன்சிலர்கள்   கீதா, சபரி, கணேஷ், சத்யா, சுப்பிரமணி, ரங்கசாமி, சண்முகசுந்தரம், விஜயகுமார், பிரியா சக்திவேல், பாலசுப்பிரமணியம், சின்னசாமி, ஈஸ்வரன், கனகராஜ, அமுதா வேலுமணி,   கட்சி நிர்வாகிகள் மார்க்கெட் சக்திவேல், தேவராஜ், அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், ராஜேஷ் கண்ணா, கண்ணபிரான், சடையப்பன்,  ராஜ்குமார்,அன்பரசன், ஹரிஹரசுதன், வேலுமணி,  நீதிராஜன், மதுரபாரதி,  பாஸ் என்கிற பாஸ்கரன், வே.சரவணன், ருக்குமணி, கோமதி,  ஈஸ்வரமூர்த்தி, ரத்தினகுமார், பி.லோகநாதன்,சுந்தராம்பாள், பரமராஜன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்











திருப்பூர் மறியல், கைவிரல் அறுப்பு, கடையடைப்பு

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.,க.  சார்பில், துணை மேயர் சு.குணசேகரன் தலைமையில், பழைய பஸ் ஸ்டாண்டு முன் மறியலில்  ஈடுபட்டனர்.அன்பகம் திருப்பதி, கருவம்பாளையம் மணி, கண்ணப்பன், ஸ்டீபன்ராஜ், உள்ளிட்டோர் பங்க்ஹெற்றனர்.





தீர்ப்பையடுத்து தனது கைவிரலை அறுத்து  தொண்டர்.




Displaying IMG_9681.JPG





Displaying IMG_9663.JPG

Displaying IMG_9648.JPG

ஜெயலலிதாவை ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்திக்கிறார்


தமிழக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பெங்களூர் வந்தார். அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள ஜெயலலிதாவை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து பேசுகிறார்.

அனுமதி மறுப்பு 

சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் சசிகலா, இளவரசியும் சிறையில் உள்ளனர்.

ஜெயலலிதாவை பார்ப்பதற்காக அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மேயர்கள் மற்றும் பல்வேறு பதவிகளில் உள்ளவர்கள், நிர்வாகிகள் வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்து வருகிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் வருகை 

இந்த நிலையில் தமிழக முதல்–அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் நேற்று பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து அவர் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்தார். அவருடன் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட சில அமைச்சர்களும் வந்தனர். அவர்கள் ஜெயலலிதாவை சந்திக்க முயற்சி செய்தனர். ஆனால் மாலை 6 மணிக்கு மேல் ஜெயிலில் உள்ள கைதிகளை சந்திக்க அனுமதி இல்லை.

இதனால் அவர்கள் நேற்று இரவு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கினர். பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள ஜெயலலிதாவை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து பேசுகிறார்கள். அப்போது தனது தலைமையில் புதிய அரசு அமைந்து உள்ளது குறித்து விளக்கி கூறுகிறார். தமிழக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகையையொட்டி பெங்களூர் நகர போலீசார் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

நூறு கோடி அபராதம் செலுத்த இயலாத நிபந்தனை: ஜெயலலிதா!

நூறு கோடி அபராதம் செலுத்த இயலாத நிபந்தனை: ஜெயலலிதா!நூறு கோடி அபராதம் செலுத்த இயலாத நிபந்தனை என்று ஜெயலலிதா பெங்களூர் நீதிமன்றத்தில் அளித்துள்ள ஜாமீன் மனுவில் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றுள்ள ஜெயலலிதா ஜாமீன் கேட்டு பெங்களூர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். அதில், "’தனக்கு 66வயது ஆகிறது. சர்க்கரை வியாதி, ரத்தக்கொதிப்பு நோய் உள்ளதால் தொடர்ந்து சிகிச்சை எடுத்டுக்கொள்ள வேண்டும். பெங்களூர் சிறைச்சாலையில் போதிய பாதுகாப்பு இல்லை என்பதால் அச்சுறுத்தல் உள்ளது. மேலும் , 100 கோடி அபராதம் என்பது நிறைவேற்ற முடியாத நிபந்தனை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர, தான் ஒரு சாதாரண நபர் அல்ல மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக இருக்கிறேன் என்றும், தமிழ்நாட்டில் ஒரு கோடி அதிமுக தொண்டர்கள் உள்ளனர். அவர்களிடத்தில் தனக்கு நல்ல பெயர் இருக்கிறது என்றும், ஜாமீனில் சென்றால் எங்கும் தப்பி ஓடமாட்டேன். வெளியே சென்றால் சாட்சிகளை கலைக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வரும், தங்களது வழக்கறிஞர்கள் மூலமாக தனித்தனியாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சார்பில் 4 மனுக்கள் தாக்கல்


ஜெயலலிதா தரப்பில் மொத்தம்  4 மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று அப்பீல் மனுவாகும். அந்த அப்பீல் மனுவில், சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்கா மிகவும் தவறான தீர்ப்பை வழங்கியுள்ளார். நெறி தவறிய அந்த  தண்டனையை குறைக்க  வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது.
மற்றொரு அப்பீல் மனுவில் ’சிறப்பு கோர்ட்டு அளித்த ரூ.100 கோடி அபராதம், 4 ஆண்டுகள் தண்டனை ஏற்புடையதல்ல. எனவே இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மூன்றாவது மனு ஜாமீன் மனுவாகும்.அந்த ஜாமீன் மனுவில்,  நான் அரசியல் கட்சியின் தலைவர். எனக்கு 66வயது ஆகிறது. சர்க்கரை வியாதி, ரத்தக்கொதிப்பு நோய் உள்ளதால் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். எங்கும் தப்பி ஓட மாட்டேன், சாட்சிகளையும் கலைக்க மாட்டேன்.. ஜாமீன் மனுவில் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார். பெங்களூர் சிறைச்சாலையில் போதிய பாதுகாப்பு இல்லை என்பதால் அச்சுறுத்தல் உள்ளது. மேலும் , 100 கோடி அபராதம் என்பது நிறைவேற்ற முடியாத நிபந்தனை. நான் ஒரு சாதாரண நபர் அல்ல. மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக இருக்கிறேன். தமிழ்நாட்டில் ஒரு கோடி அதிமுக தொண்டர்கள் உள்ளனர். அவர்களிடத்தில் எனக்கு நல்ல பெயர் இருக்கிறது. ஜாமீனில் சென்றால் எங்கும் தப்பி ஓடமாட்டேன். வெளியே சென்றால் சாட்சிகளை கலைக்க மாட்டேன் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

நான்காவது மனுவில் தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை கர்நாடகா ஐகோர்ட்டு மீண்டும் நடத்தி மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தனது ஜாமீன் மனு மீதான விசா ரணையை நாளை செவ் வாய்க்கிழமையே எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாகையில் மீனவர்கள் உண்ணாவிரதம் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்




சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதை கண்டித்து, நாகையில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதம்

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதை கண்டித்து நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள், மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று நாகை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நாகை நம்பியார் நகர் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் தலைமையில் சுமார் 200 பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாகை நகரசபை தலைவர் மஞ்சுளா சந்திரமோகன், நாகை நகர அ.தி.மு.க. செயலாளர் சந்திரமோகன், தமிழ்நாடு தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் இயக்குனர் கண்ணன், சங்கர், சுரேஷ், சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வெள்ளப்பள்ளம்

அதே போல வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளம், வானவன் மகாதேவி ஆகிய மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 450 பேர் வெள்ளப்பள்ளம் தார் ரோடு அருகே பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் அமைதியான முறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். மேலும் இந்த உண்ணாவிரதத்தில் அ.தி.மு.க.வினர் 50 பேர் கலந்து கொண்டனர்.

சாலை மறியல்

அதேபோல், நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கல்லூரி வகுப்பை புறக்கணித்துவிட்டு நாகை காடம்பாடி அருகே நாகை - நாகூர் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், செங்கமலகண்ணன் மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து பேரணியாக புறப்பட்டனர். அப்போது ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த பேரணி காடம்பாடி வழியாக சென்று உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாகை புதிய பஸ் நிலையம் வரை சென்றனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நாகையில் மீனவர்கள் உண்ணாவிரதம் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்




சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதை கண்டித்து, நாகையில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதம்

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதை கண்டித்து நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள், மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று நாகை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நாகை நம்பியார் நகர் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் தலைமையில் சுமார் 200 பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாகை நகரசபை தலைவர் மஞ்சுளா சந்திரமோகன், நாகை நகர அ.தி.மு.க. செயலாளர் சந்திரமோகன், தமிழ்நாடு தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் இயக்குனர் கண்ணன், சங்கர், சுரேஷ், சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வெள்ளப்பள்ளம்

அதே போல வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளம், வானவன் மகாதேவி ஆகிய மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 450 பேர் வெள்ளப்பள்ளம் தார் ரோடு அருகே பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் அமைதியான முறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். மேலும் இந்த உண்ணாவிரதத்தில் அ.தி.மு.க.வினர் 50 பேர் கலந்து கொண்டனர்.

சாலை மறியல்

அதேபோல், நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கல்லூரி வகுப்பை புறக்கணித்துவிட்டு நாகை காடம்பாடி அருகே நாகை - நாகூர் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், செங்கமலகண்ணன் மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து பேரணியாக புறப்பட்டனர். அப்போது ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த பேரணி காடம்பாடி வழியாக சென்று உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாகை புதிய பஸ் நிலையம் வரை சென்றனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.