Jul 17, 2016

திருச்சி - 17-07-2016 41வது அகிலஇந்திய மின்வாரிய அணிகளுக்கிடையேயான கபடி போட்டி - ஹிமாச்சலபிரதேச அணி கோப்பையை வென்றது

திருச்சி - 17-07-2016            சபரிநாதன் 9443086297
41வது அகிலஇந்திய மின்வாரிய அணிகளுக்கிடையேயான கபடி போட்டி - ஹிமாச்சலபிரதேச அணி கோப்பையை வென்றது

அகில இந்திய மின்வாரியங்களுக்கு இடையேயான கபடி போட்டி திருச்சி கடந்த 14ம் தொடங்கி நடைபெற்று வந்தது. தேசிய அளவில் நடத்தப்படும் 41வது போட்டியான இந்த போட்டியில் தமிழ்நாடு டெல்லி பஞ்சாப் சட்டீஸ்கர் தெலுங்கானா இமாச்சல பிரதேசம் குஜராத் மகராஷ்டிரா உள்ளிட்ட 16 அணிகள் விளையாடின. இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் ஹிமாச்சல பிரதேச அணியும்ää பஞ்சாப் அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஹிமாச்சல பிரதேச அணி 36 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி 22 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடம் பெற்றது. ஹரியானா 3வது இடம் பிடித்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பையும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இவ்விழாவில் தமிழக சுற்றுலாதுறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மைதுறை அமைச்சர் வளர்மதி மின்சாரவாரிய திருச்ச் மண்டல தலைமை பொறியாளர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர்.

திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது

திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்டசெயலாளர் மனோகரன் அமைச்சர் வெல்;லமண்டிநடராஜன் அமைச்சர் வளர்மதி அமைச்சர் உதயகுமார் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும்  பனைபுரம் கர்ணன் அத்தர்பெருமாள் வசந்தி அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.