Feb 25, 2015

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பழமுதிர்சோலை முருகன் கோவிலில் தங்கரதம் இழுத்து வழிபாடு

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பழமுதிர்சோலை முருகன் கோவிலில் தங்கரதம் இழுத்து வழிபாடு
மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் 67–வது பிறந்த நாளையொட்டி பழமுதிர்சோலை முருகன் கோவில் தங்க ரதம் ஆர்.சாமி எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் எம்.எல். ஏ.க்கள் முத்து ராமலிங்கம், தமிழரசன் இழுத்தனர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதாவின் 67–வது பிறந்த நாளை முன்னிட்டு அழகர்கோவில் பழமுதிர்சோலை முருகன் கோவிலில் ஆர்.சாமி எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் தங்க ரதத்தினை எம்.எல்.ஏ.க்கள் முத்துராமலிங்கம், தமிழரசன், மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மராஜா, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஜபார் மற்றும் அ.தி.மு.க.வினர் இழுத்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், உசிலம்பட்டி மகேந்திரன், பாண்டியம்மாள், மேலூர் நகராட்சி தலைவர் சரவணன், யூனியன் சேர்மன் செல்வராஜ், கொட்டாம்பட்டி யூனியன் சேர்மன் வெற்றிச்செழியன், அ.வல்லாளப்பட்டி சேர்மன் உமாபதி, கொட்டாம்பட்டி யூனியன் வைஸ் சேர்மன் குலோத்துங்கன், தொகுதி செயலாளர் வலையபட்டி தலைவர் செல்வம் என்ற பெரியபுள்ளான், அலங்கா நல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் முரு கேசன், மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன்.
மாணவரணி மாணிக்கம், அண்ணா தொழிற் சங்க செயலாளர் முருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நரசிங்கம்பட்டி ஓடையன், சூரக்குண்டு துரை அண்ணா, கிடாரிப்பட்டி சுரேஷ் என்ற கோயிலான், திருவாதவூர் சசிகலா மோகன், புதுச்சுக்காம்பட்டி சிவசொக்கனான்டி, துணைத்தலைவர்கள் தர்மராஜ், ஆசாத்தான், கண்ணன், விவேகானந்தன், கொட்டாம் பட்டி ஒன்றிய கவுன்சிலர் அய்யாபட்டி நயினான், கூட்டுறவு சங்க தலைவர்கள், மேலூர் நிலவள வங்கி தலைவர் பாலகிருஷ்ணன், சுக்காம்பட்டி ராசு, கீழையூர் வேலு, அ.வல்லாளபட்டி தலைவர் அசோகன், சொக்க லிங்கபுரம் காதர்ஷா, கொட்டாம்பட்டி பூமிநாதன் மற்றும் நிர்வாகிகள் அட்டப் பட்டி முத்தலீபு, வாசுகி சின்னகருப்பன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.