Showing posts with label trichy sabarinathan. Show all posts
Showing posts with label trichy sabarinathan. Show all posts

Feb 8, 2022

திருச்சி மாநகராட்சி 7 வது வார்டில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் பிரியா சிவக்குமார் பிரச்சாரம்


 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின்  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 7 வது வார்டில் அதிமுக சார்பில் இரட்டை இலை  சின்னத்தில் பிரியா சிவக்குமார் போட்டியிடுகிறார்.

 இதையொட்டி தனது வார்டுக்குட்பட்ட  நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று 7 வது வார்டுக்குட்பட்ட ஸ்ரீரங்கம் கீதாபுரம், மங்கம்மா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

இந்நிகழ்வின்போது பூக்கடை ரங்கராஜ் உள்ளிட்ட வட்டக்கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

திருச்சி மாநகராட்சி 03 வது வார்டில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ரேவதி பிரச்சாரம்

 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின்  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 03 வது வார்டில் அதிமுக சார்பில் இரட்டை இலை  சின்னத்தில் ரேவதி போட்டியிடுகிறார். இதையொட்டி தனது வார்டுக்குட்பட்ட  நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று 03 வது வார்டுக்குட்பட்ட ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள வீடுகளுக்கு சென்று  துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாக்கு சேகரிப்பின் போது வட்ட கழக செயலாளர் கே.செல்வம், பி.சுப்பிரமணி, அமுல்தாஸ், ராஜம்மாள், ராஜா, சவேரியார், கலைவாணன், கிருஷ்ணவேணி, லலிதா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Dec 11, 2021

திருச்சி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளை கொண்டாடிய மகளிர் அணி இணைச் செயலாளர்

 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நளை சிறப்பாக கொண்டாடிய 50 உட்பட்ட பகுதியில் பிரம்மாண்டமாக பொதுமக்களுக்கு இலவச அரிசி பருப்பு உணவு வகைகளை சேவை செய்த எம்.எஸ்.நஸிமா ஃ பாரிக்


திருச்சி காஜா பேட்டை அருகில் 50 வார்டுக்கு உட்பட்ட பகுதியில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெ ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு


மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் எம்.எஸ்.நஸிமா ஃ பாரிக் ஏற்பாட்டின் பேரில் ஏழை எளிய மக்களுக்குஅரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்களை

முன்னாள்  அமைச்சரும் மாநகர் மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி என்.நடராஜன் பொது மக்களுக்கு வழங்கிய போது  அருகில் முன்னாள் கோட்ட தலைவர் மனோகரன் முன்னாள் துணை மேயர் சீனிவாசன் பகுதி செயலாளர் ஏர்போர்ட் விஜி ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

May 6, 2020

திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சிராபபள்ளி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக 
தடைசெய்யபபட்டு தனிமை படுத்தப்பட்ட பகுதிகளான துவரங்குறிச்சி தொட்டியம் அலகரை ஆகிய 
இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு அவர்கள் இன்று  நேரில் 
சென்று பாவையிட்டு ஆய்வு செய்தார். 



 சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து திருசசிராப்பள்ளி மாவடடத்திற்கு வருகை 
புரிந்த 28 நபர்களையும் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டு அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்படடுள்ளது.
தனிமைப்படுத்தபபட்ட நபர்களின் வீடுகளில் சுகாதார துறையின் மூலம் அறிவிப்பு நோட்டீஸ்
ஒட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. துவரங்குறிச்சி மற்றும் தொட்டியம் வட்டம் அலகரை 
ஆகிய இடங்களில் நேரில் பார்வையிட்டு தனிமைப்படுத்தபபட்டவர்கள் 14 நாடகள் தனிமையில் 
இருக க வேண்டுமென்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். 
இந்நிகழ்சசியில் முசிறி கோடடாட்சியர் (பொ)பழனிதேவிமருங்காபுரி வட்டாட்சியர் 
சாந்தி தொட்டியம் வட்டாட்சியர் மலர் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள்
செந்தில்,ரவி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Apr 25, 2020

திருச்சி மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச கபசுரக் குடிநீர்

திருச்சி மாநகராட்சி சார்பில் மாநகராட்சி ஆணையர் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு சமூக இடைவெளியை பின்பற்றி கபசுரக் குடிநீர் பாக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டது

திருச்சி தமிழக அரசு ஆரோக்கியம் திட்டத்தின் கீழ்  தொற்று பரவாமல் இருக்க  எதிர்ப்பு சக்தியை தூண்டும் வகையில்  கபசுர குடிநீர் தமிழக அரசால் வலியுறுத்தப்பட்டு  பொதுமக்களுக்கு  பணியாளர்களுக்கு  வழங்கப்பட்டு வருகிறது.

  அதனடிப்படையில்  இன்று திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இலவசமாக கபசுர மூலிகை பாக்கெட் வழங்கப்பட்டது திருச்சி மாநகராட்சியில் கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தியாக சித்தாவில் பயன்படுத்தப்படும் கபசுர மூலிகை பாக்கெட்டுகளை மாநகராட்சி ஆனையர் சிவசுப்பிரமணியன,பொன்மலை கோட்டம் உதவி ஆணையர் தயாநிதி, திருச்சி பீமநகர் சித்த மருத்துவமனை மருத்துவர் ரத்தினம், ஆகியோர் கலந்துகொண்டு மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கபசுர மூலீகை பாக்கெட் வழங்கினார் இதில் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு வாங்கி பயனடைந்தனர்

Apr 9, 2020

திருச்சி 144 தடை உத்தரவை மீறி நடத்தப்பட்ட மசாஜ் சென்டருக்கு அரசு அதிகாரிகள் சீல்

  • திருச்சி



அரசு தடையை மீறி அனுமதியின்றி நடத்தப்பட்ட மசாஜ் சென்டர் க்கு சீல்


தமிழகத்தில் தொற்று பரவாமல் இருக்க மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன அதன் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது இதில் அத்தியாவசிய பொருட்களான மளிகை பால் போன்ற பொருட்களுக்கு கால அவகாசம் கொடுத்து கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது மத்திய அரசு மாநில அரசு அறிவிப்பை எதிர்த்து திருச்சி உறையூர் ஹவுசிங் போர்டில் ஒரு வீட்டில் கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் என்னும் பெயரில் போலியான மசாஜ் சென்டர் இயங்கி வந்தது


 144 தடை உத்தரவை மீறி நடைபெற்றது நடைபெற்ற மசாஜ் சென்டரில்  மசாஜ் செய்வதாகவும் அரசு முறையான அனுமதி பெறாமல் மசாஜ் சென்டர் நடத்தி வருவதாகவும் மாவட்ட ஆட்சியருக்கு  தகவல் கிடைத்துள்ளது மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் திருச்சி சித்த தலைமை மருத்துவர் காமராஜ் ஆய்வு செய்தார் ஆய்வு செய்து கொண்டிருக்கும் போது மசாஜ் சென்டரில் வேலை பார்க்கும் பெண்கள் மேனேஜர் பின் வழியாக தப்பி ஓடிவிட்டனர் பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தாசில்தார் முன்னிலையில் மசாஜ் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது

தப்பி ஓடிய நபர்களை மற்றும் அதன் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

Apr 20, 2019

குணசீலம் தெப்ப உற்சவம்

 குணசீலம் தெப்ப உற்சவம்  நடைபெற்றது
  


வைகுண்ட வாசுதேவன் குணசீல மகரிஷி யின் தவத்திற்காக ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசன் ஆக காட்சியளித்த திருத்தலம் குணசீலம் இந்த க்ஷேத்திரத்தில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் சங்கு சக்கரதாரியாக கையில் சங்கு சக்கரத்துடன் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார் முக்கியமாக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் 48 நாட்கள் பூஜித்து வந்தால் அவருடைய பிரச்சனைகள் தீரும் என்பது அதிகம் அதேபோன்று திருப்பதிக்கு சென்று பிரார்த்தனை செலுத்த இயலாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செலுத்துவதால் தென் திருப்பதி  என்று அழைக்கிறார்கள் இந்த இடத்திலே பிரதி வருடம் சித்ரா பௌர்ணமி அன்று எம்பெருமானுக்கு மிக விசேஷமாக நடைபெறுகிறது

எம்பெருமானுடைய அந்த புராண அந்த வரலாறு நிறைவு பெறும் வழியாக ஆதிமூலமே என்று அழைத்து அந்த கஜேந்திர மோட்சம் அளித்தார் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியே இந்த குணசீல  பெருமானுக்கு எப்போதும் சித்ரா பௌர்ணமியன்று பிரதி வருட  நடைபெற்று வருகிறது வருகிறது அவ்வாறு வருடமும் இந்த வருடமும் நடைபெற்றது

ஆதிமூலமே என்று அழைத்த கஜேந்திரனுக்கு மோட்சம் பாடி அருளிய ஸ்ரீமன் நாராயணனை போற்றும் வகையிலே இந்த திருக்கோவிலில் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்திலே எம்பெருமானுடைய சன்னதிக்கு முன் புறமாக உள்ள பாபவிநாச தீர்த்தம் தொடக்கத்திலே தற்போது மிகவும் விசேஷமாக நடைபெற்று வருகிறது அவ்விதமே இந்த வருடமும் இந்த சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தில் அன்று எம்பெருமானுக்கு தற்போது விசேஷமாக நடைபெற்றுள்ளது எம்பெருமான் ஸ்ரீமூர்த்தி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஆலயத்தில் எழுந்தருளி சகஸ்கர தீப அலங்கார சேவை கண்டருளி அதன்பின் எம்பெருமான் தெப்பத்தில் எழுந்தருளி சேவை சாதித்தார் அதன்பின் இங்கே மைய மண்டபத்தில் அபிஷேக ஆராதனையும் அதன் பின்பாக விசேஷமான ஆராதனைகளும் நடைபெற்று எம்பெருமான் மண்டபத்தில் எழுந்தருளிய தீபாராதனை நடைபெற்றது அதன் பின்பு கண்ணாடி அறை சேவை நிறைவுபெற்று எம்பெருமான் எழுந்தருளினார் விசேஷமான வருடா வருடம் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்திலே சிறப்பா நடைபெற்றது

Mar 26, 2019

திருச்சி விமான நிலையத்தில் 50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்


செம்பட்டு:  இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து இன்று காலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி வந்தது அதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர் அப்போது 4 பேர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அவர்கள் கொண்டு வந்த பொருட்களை சோதனை செய்தனர் அப்போது அவர்கள் ஆசனவாயில் மறைத்து இலங்கையில் இருந்து கடத்தி வந்த ரூபாய் 49.5 இலட்சம் மதிப்புள்ள தங்கத்தை உருக்கி பேஸ்ட் வடிவில் செய்து மறைத்து எடுத்து வந்ததை கண்டு பிடித்த நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பைசல், அலி கான், காஜா, மற்றும் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

அவர்களிடமிருந்து ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள 1.9 கிலோ மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தது திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் லிங்கம் நகர் பொது நல சங்க தலைவரிடம் ஆதரவு கோரினார்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்  திருச்சி உறையூர் லிங்கம் நகர் பொது நல சங்க தலைவர் சிவக்குமாரிடம் ஆதரவு கோரினார்.திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன்  அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் பொருளாளர் திரிசங்கு, ஜோதிவானன், உறையூர் பகுதி செயலாளர் சதீஷ் ஜங்சன் பகுதி செயலர் தன்சிங் பாலக்கரை பகுதி செயலாளர் கண்ணன் பொன்மலை பகுதி செயலாளர் சங்கர்  ஏர்போர்ட் பகுதி செயலாளர் ரமேஷ்   அம்மா பேரவை செயலாளர் சரவணன் செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார்  உட்பட பல நிர்வாகிகள உடனிருந்தனர்.

Mar 25, 2019

திருச்சி மறைமாவட்டம் தூய மரியன்னை பேராலயம் முன்பு சாருபாலா தொண்டைமான் வாக்கு சேகரித்தார்




அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்  திருச்சி மறைமாவட்டம் தூய மரியன்னை பேராலயம் முன்பு கிருத்துவ சகோதர சகோதரிகளிடம் ஆதரவு கோரினார்.திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன்  அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் பொருளாளர் திரிசங்கு, ஜோதிவானன், ஜங்சன் பகுதி செயலர் தன்சிங் பாலக்கரை பகுதி செயலாளர் கண்ணன் பொன்மலை பகுதி செயலாளர் சங்கர்  ஏர்போர்ட் பகுதி செயலாளர் ரமேஷ்   அம்மா பேரவை செயலாளர் சரவணன் செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார்  உட்பட பல நிர்வாகிகள உடனிருந்தனர்.

Mar 22, 2019

திருச்சி ஜே ஜே பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா

ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரி
ஆண்டு விழா – 2019


ஜெ. ஜெ. பொறியியல் கல்லூரியின் 2019-ம் ஆண்டு விழா 22-03-2019 (வெள்ளிகிழமை) அன்று மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. முதலில் தமிழ்தாய் வாழ்த்து பிறகு யோகா மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் இனிதே துவங்கப்பட்டது.  செல்வன். னு. கெவின் ஜார்ஜ் நான்காம் ஆண்டு கணினி துறை மாணவர் வரவேற்புரை வழங்கினார்.  நம் கல்லூரி முதல்வர்           முனைவர். ளு. சத்தியமூர்த்தி ஐயா அவர்கள் ஆண்டு அறிக்கையை வாசித்தார்.  இக்கல்வி ஆண்டின் மாணவர்களின் சாதனைகளை விளக்கமாக எடுத்துரைத்தார். னுச. ளு. ராமமூர்த்தி செயலாளர்ஜெ.ஜெ. கல்விக் குழுமம் அவர்கள் முன்னிலை வகித்து விழாவை சிறப்பித்தார்.  ஆச. பு. ரவிச்சந்திரன் இணை செயலாளர்ஜெ.ஜெ. கல்விக் குழுமம் ஆச. யு.மு.மு ரவிச்சந்திரன் நிதிநிலை கட்டுப்பாட்டாளர் ஜெ.ஜெ. கல்விக் குழுமம்அறங்காவலர்கள்ஜெ.ஜெ. கல்விக் குழுமம் மற்றும் நம் கல்ல}ரியின் செயல் இயக்குநர் முனைவர். வு. சிவசங்கரன் ஆகியோர் விழா உரையாற்றி சிறப்பித்தார்கள்.


இந்த வருட ஆண்டு விழாவின் சிறப்பம்சம் நம் சிறப்பு விருந்தினர் திரு. ஏ. சொல்லின் செல்வன் அவர்கள் நம் கல்லூரியின் முன்னாள் இயந்திரவியல் துறை மாணவர் என்பதே ஆகும்.
நம் சிறப்பு விருந்தினர் திரு. ஏ. சொல்லின் செல்வன் கார்னியான்ஸ் தொழிற்சாலை பெரம்பலூரில் நிறுவனராக உள்ளார்.  சிறப்பு விருந்தினர் தனது உரையில் யோகா மாணவர்களை பாராட்டிää ஒரு அழகான மேற்கோளை சொல்லி தனது உரையை துவக்கினார்.  அந்த மேற்கோள் “கல்வி என்பது நம் வாழ்க்கையின் ஒரு பகுதியே ஆகும்இ வாழ்க்கை அதற்கு மேலும் உள்ளது” என்று கூறிவிட்டு இக்கல்லூரியின் முன்னாள் மாணவராக இருந்து இன்று இந்த கல்லூரிக்கே சிறப்பு விருந்தினராக வந்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.  மேலும் தனது உரையில் மாணவர்களை பார்த்து நீங்கள் வேலை தேடுவதை விட மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் நிலைக்கு உயருங்கள் என்று கூறினார்.  மேலும் மாணவர்கள் தங்கள் அறிவு திறனை வளர்த்து ஒரு சிறந்த தொழில் முனைவராக தங்கள் எதிர்கால வாழ்க்கையில் விளங்க வேண்டும் என்று வாழ்த்தினார்.
அடுத்ததாக  தனது உரையில்  தானும் ஆரம்பகாலங்களில் தொழில் முனைவராக இருந்தபோது பலவிதமான தோல்விகளையும் சங்கடங்களையும் சந்தித்ததாகவும் தனது தொடர் முயற்சி மற்றும் கடின  உழைப்பாலும் ஒரு சிறந்த  வெற்றி பெற்ற தொழில் முனைவராக விளங்குவதாக கூறினார்.  தன்னுடைய நிறுவனத்தில் 92  பேர் பணி புரிவதாக பெருமையுடன் தெரிவித்தார்.   மேலும் அவர் மாணவர்கள் தொழில்; முனைவராக  ஆவதற்கு பல விதமான ஆலோசனைகளை வழங்கினார். தனது உறையின் இறுதியில் பார்வையாளர்களை கேள்விகள் கேட்க செய்து அனைத்திற்கும் அழகான விரிவான பதில்களை வழங்கினார்.  நம் சிறப்பு விருந்தினரின் உரை மாணவர்களை மிகவும் ஊக்குவிப்பதாக இருந்தது.
விழாவை 210 மாணவ மாணவியருக்கு கல்வி மற்றும் பல்துறை சாதனைகளுக்காக பரிசுகள் வழங்கப்பட்டன.  நம் கல்லூரியின் கலைத்துறை மாணவர்கள் பல்வேறு விதமான கலை நிகழ்சிகளை மிகவும் அழகாக செய்து காட்டினர்.  நம் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மின்ணணுவியல் துறை மாணவி எஸ். ஜே. ஜாஃப்ரின்  நன்றியுரை வழங்கினார்.

Dec 1, 2018

கைத்தறி சிறப்பு கண்காட்சி

திருச்சி      01.12.18

மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்கம்


தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை இணைந்து நடத்தும் மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி திருச்சி தில்லைநகர் 5 வது கிராஸில் அமைந்துள்ள மக்கள் மன்றத்தில் தொடங்கியுள்ளது.


இன்று முதல் ஜனவரி 16 வரை நடக்கும் கைத்தறி கண்காட்சியை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி தொடங்கிவைத்தார்.

இந்த விற்பனை கண்காட்சியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த 52 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் சார்பாக 35 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

பட்டு சேலை, பட்டு வேஷ்டி, துண்டு, போர்வை விரிப்புகள் மற்றும் கால்மிதி போன்ற ஏராளமான கைத்தறி தயாரிப்புகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

'இயந்திரங்களை பயன்படுத்தாமல், நெசவாளர்களின் உழைப்பில் உருவாக்கப்பட்ட கைத்தறி தயாரிப்புகள், சிறப்பு தள்ளுபடி விலையில், இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. இவை தரத்தில், மற்ற இயந்திர தயாரிப்புகளை விட உயர்ந்தவை. மக்கள் இதுபோன்ற பொருட்களை வாங்கினால் தான், நெசவாளர்களின் வாழ்வு புத்துயிர் பெரும். அதற்கு இதுபோன்ற கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்ச்சிகள் உபயோகமாக இருக்கும்.' என்றார்

தொடக்க விழாவில், மாவட்ட ஆட்சியர் திரு .கு.இராசா மணி, கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள்  பங்கேற்றனர்.

Mar 5, 2018

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புதுத்தெரு, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

திருச்சி       

ஸ்ரீரங்கம்,அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேக விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புதுத்தெரு, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

கும்பாபிஷேக நிகழ்ச்சி நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அன்று காலை காவிரி ஆற்றில் தென்கரையில் மேல சிந்தாமணி படித்துறை பகுதியில் இருந்து பக்தர்கள் புனித நீர் எடுத்து வந்தனர். மாலையில் கால யாக பூஜையும் தொடர்ந்து நேற்று காலை கால யாக பூஜையும், பிரசாதம் வழங்குதல் நடைப்பெற்றது. மாலையில் மூன்றாம் கால யாக பூஜையும் நடைப்பெற்றது. இன்று காலை நான்காம் கால யாக பூஜையும், மஹா பூர்ணாஹீதியுடன் கலசங்கள் புறப்பாடு நடைப்பெற்றது.

அதனை தொடர்ந்து திருக்குடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவில் யாக சாலை பிரவேஷம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் விமானத்திற்கும், மூலஸ்தானத்திற்கும் கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. பின்னர் தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Mar 3, 2018

திருச்சி 3.3.18 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு 200பேருக்கு அன்னாதம் மற்றும் இலவச வேட்டி சேலைகளை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி வழங்கினார்

திருச்சி      3.3.18

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு  200பேருக்கு அன்னாதம் மற்றும் இலவச வேட்டி சேலைகளை  அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி வழங்கினார்.


திருச்சி மாநகர் மாவட்ட கழக சார்பில் அனைத்து வார்டுகளிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அன்னதானம், நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை செய்யப்பட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். 

அதன் ஒரு பகுதியாக இன்று  திருச்சி பெரியகடை வீதி சந்துக் கடை பகுதியில் மாநகர் மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 70-வது பிறந்த நாளை முன்னிட்டு    எழை எளிய மக்கள் 200 பேருக்கு மதியம் உணவுகள் மற்றும் 200 பேருக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகளை  அமைச்சர்கள்  வெல்லமண்டி என்.நடராஜன், எஸ். வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியானது சந்துகடை வார்டு வட்ட பிரதிநிதி  சந்துரு  ஏற்பாட்டில் செய்யப்பட்டிருந்தது. 

இந்த நிகழ்ச்சியில் மாநில வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் வக்கீல் ராஜ்குமார், மாநகர மாவட்ட துணைச் செயலாளர் ஜாக்குலின், மாநகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பத்மநாபன்,  பகுதி கழக செயலாளர்கள அன்பழகன், கலீல் ரஹ்மான், என்.எஸ்.பூபதி, எம்.ஆர்.ஆர். முஸ்தபா, மாநகர பொருளாளர் மலைக்கோட்டை அய்யப்பன், நத்தர்வலி வலி வார்டு பொறுப்பாளர் தர்கா காஜா, மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் தமிழரசி, டாக்டர் சுப்பையா, நத்தர்வலி தர்காவின் பரம்பரை அறங்காவலர் தர்கா அமீன், மாநகர மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் கோட்ட தலைவர் மனோகர், கேபிள் முஸ்தபா, ஜே.எல். ஜமால், இலியாஸ், மொய்தீன்,ஜவஹர்லால் நேரு, கட் பீஸ் ரமேஷ், காசிப்பாளையம் சுரேஷ், வீரமுத்து, சாந்திதேங்காய்கடைகங்காதரன், தியாக ராஜன், அக்தர் பெருமாள் டி.எஸ்.ராமலிங்கம்ம
மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

 அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டு சால் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன்பாட்டுக்கு வரும் என மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்

திருச்சி 3.3.18
திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன்பாட்டுக்கு வரும் என மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்

திருச்சி திருவாணைக்காவல் மேம்பால பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ராஜாமணி இது குறித்து தெரிவித்தது திருச்சி மக்களின் போக்குவரத்து நெரிசலை பூர்த்தி செய்யும் வகையில் சென்னை-திருச்சி-திண்டுக்கல் சாலையில் (தற்போது மாநில நெடுஞ்சாலையில்) உள்ள குறுகிய திருவாணைக்காவல் ரயில்வே மேம்பாலத்திறற்கு மாற்றாக நான்கு வழித்தட புதிய மேம்பாலம் கட்ட தமிழக அரசால் உத்திரவிடப்பட்டிருந்தது அதன்படி இப்பாலம் பணிகள் சென்னை- திருச்சி சாலையில் நான்கு வழித்தடமாகவும் கல்லணை மார்க்கத்தில் மூன்று வழித்தட இணைப்பு பாலமாகவும் அமைக்கப்பட்டுவருகிறது.இப்பால பணி சென்னை திருச்சி கல்லணை ஆகிய மூன்று சாலைகளையும்  இணைக்கும் சாலையாக  உள்ளது
இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தால் 2.10 லட்சம்மக்கள் தொகை கொண்ட திருவரங்கம்ääதிருவாணைக்காவல் மற்றும் லால்குடி புள்ளம்பாடிதிம்மராய சமுத்திரம் மேலூர் திருச்சி மாநகரம் மற்றும் கரூர் குளித்தலை நகரத்துடன் இணைக்கும்.தற்போது திருவானைக்காவல் பழைய மேம்பாலத்தை அகற்றிவிட்டு புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது
இப்பால வேலைப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இப்புதிய மேம்பாலத்தின் நீளம் 1430.284 மீட்டரும் 17.20 அகலமும் பாலப்பகுதியில் மட்டும் கட்டுமான பணிகள் 907.76 மீட்டரும் பாலத்தின் ஓடுதள அகலம் 7.50மீட்டரும் (நான்கு வழிச்சாலை )ஆகும் 
இப்புதிய மேம்பாலத்திற்கு 48 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது பாலத்தின் மீதம் உள்ள பணிகளை முடிக்க துரித நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு முடிபெரும் தறுவாயில் உள்ளது என்றும் அதனால் சென்னை- திருச்சி திண்டுக்கல் சாலையை இணைக்கும் வகையில் திருவானைக்காவல் மேம்பாலம் ரூ47.3கோடி மதிப்பில் கட்டப்பட்டு தற்போது 85 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில் மீதமுள்ள பணிகள் முடிவுற்ற நிலையில் மீதமுள்ள பணிகள் விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் செயல்பட வேண்டுமெனவும் தடுப்பு சுவர் மற்றும் அணுகு சாலைகள் அமைக்கும் பணி முடிந்தவுடன் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Oct 5, 2017

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே தீராம் பாளையத்தில்ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் விதைப்பந்து தயாரித்தல் பணி

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே  தீராம் பாளையத்தில் உள்ள காந்திய நடுநிலைப் பள்ளியில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கரூர் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவில் 2லட்சம் மரக்கன்றுகள் வழங்கினார் அதனை ஊக்குவிக்கும் விதமாக ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் தீராம் பாளையம் காந்திய நடுநிலைப் பள்ளியை தத்தெடுத்து விதைப்பந்து தயாரித்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர், 


(விதைப்பந்து என்பது மர செடி விதைகளை செம்மண் உருண்டை செய்து அதன் நடுவில் வைத்து அதைபந்து போல் உருட்டி வைத்து அதனை நம் நினைக்கும் இடத்தில் வீசி விட்டால் மழை காலத்திலோ அல்லது அதன் மீது தண்ணீர் பட்டாலோ அந்த விதை முலைத்து விடும்) அதே போன்று பிளக்ஸ் பேனர்கள் வைத்து மாணவ மாணவியர்க்கு பேனா பென்சில் வைக்க பர்ஸ் வடிவமைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் திருமலைராஜ், முன்னால் துணை ஒன்றிய தலைவர் ராமசாமி, பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் கோபி கிருஷ்ணன் கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் தங்கரமேஷ் ,முனைவர் அருண் பிரகாஷ் கலந்து  கொண்டனர்.                 


பேட்டி ... முனைவர் அருண் பிரகாஷ்
பேட்டி ... மாணவி யோக லெட்சுமி

Sep 4, 2017

திருச்சிபூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு கண்காட்சியை திருச்சி மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி துவக்கி வைத்தார்.

திருச்சி                                                                                      

தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் திருச்சி சிங்கார தோப்பில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில்
கொலு கண்காட்சியை திருச்சி மாவட்ட  ஆட்சியர் கு.ராசா மணி துவக்கி வைத்தார்.
மேலாளர் கங்காதேவி உடன் இருந்தனர் -


நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு துவக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு கொலு
கண்காட்சியானது  இன்று முதல் வரும் 7ம் தேதி வரை  நடைபெறுகிறது
இக்கண்காட்சியில் சிறப்பு அம்சமாக கொலு செட்டுகள் கொண்ட பள்ளி பொம்மைகள், மரப்பாச்சி பொம்மைகள், காகித கூழ் பொம்மைகள், மண் மற்றும் பளிங்கு, மாக்கல், நவரத்தின கற்கலால் ஆன பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் தசாவதார, அஷ்டலட்சுமி செட், கார்த்திகை பெண்கள் செட், விநாயகர், மகாலட்சுமி மற்றும் முருகர், கீதா உபதேச செட்டுகள் விற்பனைக்கு உள்ளது.
மேலும் கல்கத்தா, மணிப்பூர் ராஜஸ்தான், ஒரிசா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தருவிக்கப்பட்ட பொம்மைகளும் விற்பனைக்கு உள்ளது. இக்கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு தங்கள் வீடுகளில் கொலு வைப்பதற்கு வாங்கிச் சென்றனர்.
நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மைகளுக்கு 10 சதவீத சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது



பேட்டி  : இராசாமணி - மாவட்ட ஆட்சித் தலைவர்

Aug 31, 2017

திருச்சி 31.8.17 பாஜாகவின் காலடியில் அரசையும்அஇஅதிமுகாவை அடகு வைத்து விட்டனர்முன்னாள் கொறாடா மனோகரன் பேச்சு


திருச்சி 31.8.17
பாஜாகவின் காலடியில் அரசையும்அஇஅதிமுகாவை  அடகு வைத்து விட்டனர்முன்னாள் கொறாடா மனோகரன் பேச்சு 

திருச்சி அஇஅதிமுகாவி;ல்புதிதாக  டிடிவி.தினகரானால் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் திருச்சி நீதி மன்றம் அருகே உள்ள  எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
அதில் பேசிய முன்னாள் தலைமைகொறாடாவும் தற்போது  மாவட்ட செயலாளருமான மனோகரன் கூறிய போது தற்போதைய ;முதல்வர் அமைச்சர்எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் பாஜாகவின் காலடியில் அரசையும் அஇஅதிமுகாவை அடகு வைத்து விட்டனர் என்றார்.
தியாகசின்னம்மா அறிவுறுத்தலின் பேரில் துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் எங்களை அறிவித்தார் அதன் படி நாங்கள் முதல் முறையாக எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க வரவுள்ளோம் எ ன்பதை அறிந்த உள்ளுர் அமைச்சர்கள் ஆர்டிஓ மற்றும் காவல்துறை அதிகாரிகளை ஏவி எங்களை மிரட்டி தடுக்க முயற்சி செய்ய பார்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 
டிடிவி. தினகரன் தலைமையில் திருச்சி என்றும் அவர் பின்னால் இருந்து வெற்றியை பெற்று தருவோம் என்பதை நாங்கள் கூறுகிறோம் என்றார்.
இந்நிகழ்ச்சியில் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜசேகர் கழகஅமைப்பு செயலாளர் சாருபால தொண்டைமான்கிழக்கு மாவட்ட செயலாளர் மனோகரன் மேற்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் பகுதி வட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்
பேட்டி மனோகரன்

Aug 27, 2017

கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி திருச்சி பிரஸ் கிளப்பில் பேட்டி. தமிழக சட்டமன்ற முன்னாள் கொறடா மனோகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகர் உடன் உள்ளனர்.

கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி திருச்சி பிரஸ் கிளப்பில் பேட்டி. தமிழக சட்டமன்ற முன்னாள் கொறடா மனோகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகர் உடன் உள்ளனர்.

தினகரன், சசிகலா ஆகியோர் செல்லாக்காசுகள் என்று எம்பி குமார் கொடுத்த பேட்டிக்கு கண்டனம். நாங்கள் இதுவரை பல கட்ட போராட்டங்களை சந்தித்துள்ளோம்.  பொறியாளர் கலியப்பெருமால் வீட்டிற்கு உதவியாளராக வந்தவர் குமார். கட்சிக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம். யார் யாரெல்லாம் கட்சிக்கு குந்தகம் விளைவிக்கிறார்களோ அவர்களை நீக்குவதில் டிடிவி தயக்கம் காட்டவில்லை

ஊழல் ஆட்சி நஞைபெறுகிறது என மக்கள் உணர்கிறார்கள். கூடிய விரைவில் ஆட்சியை தூக்கி எறிவார்கள்.
அம்மாவிற்கு இருந்த பாதுகாவலர்கள் எடப்பாடி க்கும் பணிபுரிகிறார்கள். அம்மா-வை போலவே நடித்துக்கொண்டிருக்கிறார் எடப்பாடி. எம்பி குமார் சின்ன பையன். கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.
22 எம்எல்ஏக்கள் உங்கள் ஆட்சி வேண்டாம் என்று சொல்கின்றனர். பதவியை ராஜினாமா செய்யுங்கள். முக்கியமான துறைகளை கையில் வைத்துக்கொண்டு யாருக்கும் தராமல் தாந்தோன்றி தனமாக செயல்படுகிறார் முதல்வர். வெல்லமண்டி நடராஜன் எங்கள் கோஷ்டியில் இருந்தால் பதவி போகும் என்ற பயத்தில் பேசிக்கொண்டுள்ளார்.
தினகரனின் உருவபொம்மையை எரிக்க காவல்துறை அனுமதி கொடுக்கிறது. தவறான பாதையில் காவல்துறை செற்றுக்கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியை நம்பி யாரும் இறங்காதீர்கள்.
இந்த அரசு நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கிறது. காப்பாற்றிக்கொள்ள முதல்வர் பதவி விலக வேண்டும்.
இக்கட்சியை டில்லியில் இருந்து ஒரு முதலாளி இயக்க முயற்சிக்கிறார். விலைபோய்விட்டார்கள். 11 துரோகிகளை கூடே இணைத்து கொண்டு அழகு பார்க்கிறார்கள். சசிகலா இதுவரை யாரையும் தவறாக பேசவில்லை. சிறையில் இருக்கும் போது கூட எடப்பாடி குறித்து நலம் விசாரித்து வருகிறார். - புகழேந்தி
 கமல்ஹாசனுக்கு பயந்து அமைச்சர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரியை மூடுகின்றனர். கவர்னர் பதில் அளித்துவிட்டால் இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும். ஓபிஎஸ் அணியில் உள்ள 11 எம்எல்ஏக்கள் அதிமுகவில் இலீலை என்பதை நிரூபிக்க நீதிமன்றம் செல்லவுள்ளோம்.
 சசிகலா உதவி இல்லையென்றால் இன்று எம்பி குமார் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க முடியாது. 2006 க்கு பிறகு தான் குமார் கட்சிக்கு வந்தார். தினகரனையும் சசிகலாவையும் செல்லாத நோட்டுகள் என்று கூறியவர் கள்ளநோட்டு. - முன்னாள் கொறடா மனோகரன் பேட்டி
  ஆட்சியில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் சுரண்டியவர்கள் எல்லாம் சூட்கேசுடன் ஓடிவிடுவார்கள்.கட்சியை டிடிவி தான் காப்பாற்றுவார்-புகழேந்தி

Aug 15, 2017

திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.யு.அருண் இ.கா.ப. அவர்களுக்குஇந்திய குடியரசு தலைவரின் மெச்சத்தகுந்த பணிக்கான பதக்கத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் வழங்கினார்.

தமிழக காவல்துறையில் கடந்த 2016-ஆம் ஆண்டில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.யு.அருண் இ.கா.ப. அவர்களுக்கு இந்திய குடியரசு தலைவரின் மெச்சத்தகுந்த பணிக்கான பதக்கத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இன்று 15.08.17-ம் தேதி காலை சென்னை கலைவானர் அரங்கத்தில் சுதந்திர தின விழாவில்
வழங்கினார்.

மேலும்திருச்சி மாநகர குற்றப்பிரிவு உதவி ஆணையர் திரு.மு.அருள் அமரன் மற்றும் ஸ்ரீரங்கம் சட்டம் ஒழுங்கு சரக உதவி ஆணையராக பணிபுரிந்து ஒய்வு பெற்ற திரு.மு.அங்குசாமி ஆகியோர்களுக்கும் குடியரசு தலைவர் பதக்கம் வழங்கப்பட்டது. 
காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த திருச்சி மாநகர காவல் அதிகாரி மற்றும் ஆளினர்களுக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

திருச்சி மாநகர காவல்துறையில் கடந்த 2014-ம் ஆண்டு சிறப்பாக பணிபுரிந்தமைக்காக அமர்வு நீதிமன்ற காவல் நிலைய தலைமைக் காவலர் 2517 திரு.N.கோவிந்தராஜ் மற்றும் மாநகர ஆயுதப்படை தலைமைக் காவலர் 2810 திரு.வு.அருள் முருகானந்தம் ஆகியோர்களுக்கும் முதலமைச்சரால் அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.
காவல்துறையில் கடந்த 2016-ஆம் ஆண்டில் மெச்சத்தகுந்த வகையில் பணிபுரிந்தமைக்காக திருச்சி கைவிரல்ரேகை பதிவுக்கூடத்தில் காவல் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஒய்வு பெற்ற திரு.ளு.ராதாகிரு~;ணன்கண்டோன்மெண்ட் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.கு.இருதயராஜ் ஸ்ரீரங்கம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு தலைமைக் காவலர் 2872 திரு.ளு.சேகர் மாநகர குற்றப்பிரிவு பெண் முதல்நிலைக் காவலர் 936 திருமதி.ஆ.வள்ளி மற்றும் மாநகர ஆயுதப்படையை சேர்ந்த தலைமைக் காவலர் 2793 திரு.மு.வெங்கடே~;பாபு முதல்நிலைக் காவலர் 2113 திரு.ளு.சுந்தரமூர்த்தி ஆகியோர்களுக்கு முதலமைச்சரால் அண்ணா பதக்கம் சென்னையில் இன்று 15.08.2017-ம் நடைபெற்ற சுதந்திர விழாவில் வழங்கப்பட்டது.