Oct 3, 2014

எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் உண்ணாவிரதம்

சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுவிக்க வலியுறுத்தி, சென்னை எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில், நாளை உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதில், அ.தி.மு.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,க்கள் கலந்து கொள்கின்றனர். சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள, எம்.ஜி.ஆர்., நினைவிடம் முன், அ.தி.மு.க., சார்பில், நாளை நடக்க உள்ள போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.