May 16, 2020

அம்மா உணவகத்தில் உணவு சாப்பிட்ட அமைச்சர் வளர்மதி

திருச்சி மே 16

அம்மா உணவகத்தில் உணவு சாப்பிட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி



திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார்



 கொரோனா தொற்று பாதிப்பை அடுத்து தமிழகத்தில் பல்வேறு கட்சியினரும் தனியார் அமைப்பினரும் உணவு மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றனர். தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகத்தில் காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளைகளிலும் இலவச உணவு வழங்கி வருகின்றனர்.


இதன் ஒரு பகுதியாக திருச்சியில்  வாழ்வாதாரத்தை இழந்து இருக்கும்  ஸ்ரீரங்கம் பகுதியை சார்ந்த பொதுமக்களுக்கு அப்பகுதியில் உள்ள அம்மா மண்டப சாலையில், மற்றும் 
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை அருகில் உள்ள அம்மா உணவகங்களில் மூன்று வேளைகளும் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவுகளில் இன்று தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்,  
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் அப்போது அம்மா உணவகத்தின் உள்ள சமையல் கூடம் மற்றும் பொதுமக்கள் அருந்தும் குடிநீர் ஆகியவை ஆய்வு செய்து அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகளையும் அவர் சாப்பிட்டார். மேலும் பொதுமக்களிடம் அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவின் தரத்தை குறித்தும் கேட்டறிந்தார். மேலும் இவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் சிறந்த முறையில் உரிய நேரத்தில்  தரமான உணவுகளை வழங்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது பகுதி செயலாளர் டைமண்ட் திருப்பதி பனையபுரம் கர்ணன் அதிமுக பொறுப்பாளர்கள் அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

திருச்சி தொடர்ச்சியாக நிவாரணப் பொருட்கள் வழங்கி வரும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

திருச்சி மே 15

திருச்சியில் 
அரிசி மளிகை மற்றும் காய்கறிகள் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்குவதற்கு முன்பு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களை வரிசையில் அமரச் செய்து சமூக இடைவெளியை பின்பற்ற வலியுறுத்தி அவர்களுக்கு ஆலோசனை வழங்கிய  பின்னர் பொருட்களை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பொதுமக்களுக்கு வழங்கினார். 

கொரோனா  தாக்குதல் காரணமாக 
தமிழகத்திலும் 
ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏழை - எளிய பொதுமக்கள்  உணவுக்கு  கஷ்டப்பட்ட வருகின்றனர். 

தமிழக அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும்  நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்த வகையில் திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 45 நாட்களுக்கு மேலாக வார்டு வாரியாக 

                     
நிவாரண பொருட்களை தொடர்ந்து வழங்கி வருகிறார்.
இன்று மலைக்கேட்டை  பகுதிக்குட்பட்ட 13வார்டு பொதுமக்களுக்கு அப்பகுதியில் 
உள்ள லூர்துசாமி பிள்ளை பூங்காவில் 
அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் அடங்கிய 
தொகுப்பை 250 குடும்பத்தினருக்கு  வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள்  சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு நாற்காலி போட்டு அமர வைக்கப்பட்டனர்.
மேலும் முக கவசம் அணிந்து பொருட்களைப் வாங்கி சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் ஜவகர்லால் நேரு, பகுதி செயலாளர் அன்பழகன், சந்து கடை சந்துரு அதிமுக வட்ட பொறுப்பாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

May 10, 2020

திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மக்களுக்கு நிவாரணம்

திருச்சியில்  அமைச்சர் தொடர் நிவாரணம் ...!


கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்திலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், படிப்படியாக ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்கே கஷ்டப்பட்ட சூழ்நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து தமிழக அரசு சார்பிலும், அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் தாங்களாக முன்வந்து நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். 


இந்த வகையில் திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிவாரண பொருட்களை தொடர்ந்து வழங்கி வருகிறார். அவரது கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு வாரியாக  நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். இந்த வகையில் இன்று திருச்சி மாநகராட்சி  மக்களுக்கு
25 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வீடு வீடாக சென்று வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் சமூக இடைவெளியுடனும், முக கவசம் அணிந்து பொருட்களைப் வாங்கி சென்றனர்.

இந்நிகழ்ச்சியின் போது ஜவஹர்லால் நேரு மகளிரணி ஜாக்குலின் முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரா பகுதி செயலாளர் அன்பழகன் சந்துகடை சந்துரு மற்றும் கட்சிப் பிரதிநிதிகள் கட்சிப் பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

May 8, 2020

திருச்சி 390 பெயருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்

திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 
390 துப்புரவுப் பணியாளர்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் 
மொத்தம் 487500 மதிப்பிலான பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு
அவர்கள் இன்று(08.05.2020) வழங்கினார். 

 மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துப்புரவுப் பணியாளர்களுக்கு அத்தியாவசிய 
மளிகைப்பொருட்களை வழங்கி தெரிவித்ததாவது:

 திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்தடுப்பு பணி முன்னெச்சரிக்கை 
தொடர்பாக மருத்துவத்துறை ஊரக வளர்ச்சித்துறை காவல்துறை மாவட்ட நிர்வாகம் ஆகிய துறை 
அலுவலர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றுவதனால் நோய்தொற்று அதிகஅளவில் பரவாமல்
தடுக்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்ட 51 நபர்கள் 
முழுமையாக குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படடுள்ளனர். மருத்துவர்கள் செவிலியர்கள்
துப்புரவுப்பணியாளர்கள் ஒருங்கிணைந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர். தற்போது 
திருச்சி மாவட்டத்தை சார்ந்த 11 நபர்கள் அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த 9 நபர்களும் பெரம்பலூர்
மாவட்டத்தைச்சார்ந்த 13 நபர்களுக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தைச்சார்ந்த 2 நபரும் கரூர்
மாவட்டத்தினை சார்ந்த 1 நபரும் ஆக கூடுதல் 36 நபர்கள் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். அனைத்து 
நபர்களும் நலமுடன் உள்ளனர். மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சை முறையால் நோய் தொற்று 
ஏற்பட்டுள்ளவர்கள் முழுமையாக குணமடைந்துள்ளனர். தமிழக அரசு சார்பாகவும் மாவட்ட 
நிர்வாகத்தின் சார்பாகவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் 
கொள்கிறேன்
 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்யும் 390 
பணியாளர்களுக்கு 20 நாட்களுக்கு தேவையான தலா 10 கிலோ அரிசி 1கிலோ துவரம் பருப்பு
1கிலோ பச்சைப்பயிறு 1 கிலோ உளுந்தம் பருப்பு1 கிலோ பாசிப்பருப்பு 1கிலோ கோதுமை மாவு1 
கிலோ சர்க்கரை போன்ற ரூ.1250 மதிப்பீட்டில் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை 390 
துப்புரவு பணியாளர்களுக்கு மொத்தம்  487500 மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அத்தியாவசிய பொருட்கள் ஊரக வளர்ச்சி பொறியியல் துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது. 
 பொதுமக்கள் அனைவரும் வெளியில் செல்லும் போது முககவசம் அணிய வேண்டும் கைகளை 
கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் சேர்ப்பு கொண்டு கைகளை கழுவவேண்டும்
சமூகஇடைவெளியை கடைபிடிக்க வேண்டும் இவ்வாறு கடைபிடித்தால் நோய் தொற்றில் இருந்து 
நம்மைநாம் பாதுகாத்துக் கொள்ள முடியும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்
தெரிவித்துள்ளார் 
 இதனை தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா வைரஸ் நோய்பரிசோதனை 
செய்யும் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு இன்று(08.05.2020) 
நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
 இந்நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர்.அனிதா இணை இயக்குநர்
(மருத்துவம்மற்றும் ஊரகநலப்பணி) டாக்டர்.லெட்சுமி துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) 
டாக்டர்.சுப்ரமணி மருந்து கண்காணிப்பாளர் டாக்டர்.ஏகநாதன் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நகர்நல 
அலுவலர் ஜெகநாதன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர் ஊரக 
வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ் ஊரக வளர்ச்சி பொறியியல்துறை
உதவிப பொறியாளர் வடமலைக்குமார் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் உடன் உள்ளனர்.

திருச்சியில் மளிகைப் பொருட்கள் தொகுப்பை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.

திருச்சி 

திருச்சியில் 
மளிகைப் பொருட்கள் தொகுப்பை அமைச்சர் வழங்கினார். 

கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்திலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், படிப்படியாக ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதனால் ஏழை மக்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்கே கஷ்டப்பட்ட சூழ்நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து தமிழக அரசு சார்பிலும், அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் தாங்களாக முன்வந்து நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்த வகையில் திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
அவரது கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு வாரியாக  நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். 

  • இதன் ஒரு பகுதியாக இன்று பொது மக்களுக்கு

மளிகைப் பொருட்கள்  வழங்கினார்.

May 6, 2020

திருச்சி பள்ளிகள் கல்விக்கூடங்கள் பயிற்சி நிலையங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கடும் எச்சரிக்கை

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் கல்லூரிகள் பயிற்சி நிலையங்கள் 
மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் மீதான தடை அரசின் மறு உத்தரவு 
வரும்வரை அமலில் இருக்கும்

மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும்  2020-2021 ஆம் ஆண்டிற்கான 
சேர்க்கை பணிகள் (இணையவழி உட்பட) மற்றும் கட்டணம் வசூல் செய்தல் போன்ற எந்த ஒரு 
பணியும் மேற்கொள்ளுதல் கூடாது என திட்டவட்டமாக அறிவிக்கப்படுகிறது. 

 *அரசாணை மீறி 
செயல்படும் பள்ளிகள் மீது கடுமையான துறைவாரி நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட 
ஆட்சித்தலைவர் சிவராசு எச்சரிக்கை* 

 கொரோனா  வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளுதல் சார்ந்து அரசால் 
பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பள்ளிகள் கல்லூரிகள் பயிற்சி 
நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் செயல்பாடுகள் மீதான தடைகள் அரசின்
மறுஉத்தரவு வரும்வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதனைத்தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்உள்ள அனைத்து வகைபள்ளிகளிலும்  2020-2021 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை பணிகள் (இணையவழி உட்பட) மற்றும்
கட்டணம் வசூல் செய்தல் போன்ற எந்த ஒரு பணியும் மேற்கொள்ளுதல் கூடாது என திட்டவட்டமாக 
அறிவிக்கப்படுகிறது. 
 இவ்வானையினை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடுமையான துறைவாரி நடவடிக்கை 
மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு எச்சரிக்கை 
விடுத்துள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

*திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் 
தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்* 

நமது மாவட்டத்தினை சார்ந்த 51 நபர்கள் கொரோனா வைரஸ் நோய் 
பாதிக்கப்பட்டதன் விளைவாக சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஏற்கனவே 47 நபர்கள்
பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வருகை 
புரிந்த 28 நபர்கள் மற்றும் இதர மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து வருகை புரிந்த 
667 நபர்களுக்கு இரத்த பரிசோதனை செய்ததில் ஏற்கனவே 4.5.2020 அன்று 4 நபர்களுக்கு 
கொரோனா வைரஸ் நோய் தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள 
304 நபர்களுக்கு இன்று(5.5.2020) ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் 303 நபர்களுக்கு
கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. 1 நபருக்கு 
கொரோனா வைரஸ் நோய் தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது. 
திருச்சி மாவட்டத்தை சார்ந்த 9 நபர்கள் அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த 9
நபர்களும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த 12 நபர்களுக்கும் புதுக்கோட்டை 
மாவட்டத்தைச் சார்ந்த 1 நபரும் ஆக கூடுதல் 31 நபர்கள் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
அனைத்து நபர்களும் நலமுடன் உள்ளனர். 
வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிறமாவட்டங்களிலிருந்து திருச்சி 
மாவட்டத்திற்குள் வரும் நபர்கள் உடனடியாக சுகாதாரத்துறையினரை தொடர்பு கொண்டு 
தகவல் தெரிவிப்பதுடன் 14 நாட்களுக்கு வீட்டினை விட்டு வெளியே வராமல்
தனித்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது. 
தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். 
விழித்திரு - விலகி இரு - வீட்டில் இருக்கஎன்பதை கடைபிடிக்க வேண்டும். திருச்சிராப்பள்ளி 
மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் 
அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சிராபபள்ளி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக 
தடைசெய்யபபட்டு தனிமை படுத்தப்பட்ட பகுதிகளான துவரங்குறிச்சி தொட்டியம் அலகரை ஆகிய 
இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு அவர்கள் இன்று  நேரில் 
சென்று பாவையிட்டு ஆய்வு செய்தார். 



 சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து திருசசிராப்பள்ளி மாவடடத்திற்கு வருகை 
புரிந்த 28 நபர்களையும் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டு அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்படடுள்ளது.
தனிமைப்படுத்தபபட்ட நபர்களின் வீடுகளில் சுகாதார துறையின் மூலம் அறிவிப்பு நோட்டீஸ்
ஒட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. துவரங்குறிச்சி மற்றும் தொட்டியம் வட்டம் அலகரை 
ஆகிய இடங்களில் நேரில் பார்வையிட்டு தனிமைப்படுத்தபபட்டவர்கள் 14 நாடகள் தனிமையில் 
இருக க வேண்டுமென்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். 
இந்நிகழ்சசியில் முசிறி கோடடாட்சியர் (பொ)பழனிதேவிமருங்காபுரி வட்டாட்சியர் 
சாந்தி தொட்டியம் வட்டாட்சியர் மலர் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள்
செந்தில்,ரவி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

திருச்சி வனச்சரக அலுவலர்கள் அதிரடி நடவடிக்கை வேட்டையில் ஈடுபட்டவர்கள் கைது

திருச்சி வலைவீசி முயல் பிடிக்க  முயற்சித்தவர் கைது ஒருவர் தப்பி ஓட்டம் தலைமறைவு

திருச்சி வனச்சரகர் பழனிவேல் தலைமையில்  வனவா் சரவணன்   மற்றும் 


வனக்காப்பாளா் கருப்பையா, ஜான் ஜோசப் வனக்காவலா் சுகாஷினி ஆகியோர் திருச்சி வனச்சரகம், கண்ணனூா் பகுதி பகளவாடி காப்புகாட்டில்,  வேட்டையாடிய காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரவி 27/2020 மற்றும் 
சங்கா்(Driver-தலைமறைவு)25/2020 ஆகிய இருவர்  வலை வைத்து முயல் பிடித்த குற்றத்திற்காக  கைது செய்து  
வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்து வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 பிரிவு 2(1), 2(16)(a)( b), 2(35), 2(37), 9, 39(1)(d), 50, 51(1)  & IPC 188, 269, 270, 271  
r/w 3 of Epidemic Act 1897 & 134, 135 TN Public Health Act 1939 r/w 51(d) Disaster Management Act 2002 படி
துறையூா் நீதிமன்ற நீதிபதி அவா்கள் உத்தரவுபடி 15 நாட்கள் சிறைகாவலில் அடைக்கப்பட்டனா். Hero Splendor இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது