May 6, 2020

திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சிராபபள்ளி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக 
தடைசெய்யபபட்டு தனிமை படுத்தப்பட்ட பகுதிகளான துவரங்குறிச்சி தொட்டியம் அலகரை ஆகிய 
இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு அவர்கள் இன்று  நேரில் 
சென்று பாவையிட்டு ஆய்வு செய்தார். 



 சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து திருசசிராப்பள்ளி மாவடடத்திற்கு வருகை 
புரிந்த 28 நபர்களையும் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டு அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்படடுள்ளது.
தனிமைப்படுத்தபபட்ட நபர்களின் வீடுகளில் சுகாதார துறையின் மூலம் அறிவிப்பு நோட்டீஸ்
ஒட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. துவரங்குறிச்சி மற்றும் தொட்டியம் வட்டம் அலகரை 
ஆகிய இடங்களில் நேரில் பார்வையிட்டு தனிமைப்படுத்தபபட்டவர்கள் 14 நாடகள் தனிமையில் 
இருக க வேண்டுமென்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். 
இந்நிகழ்சசியில் முசிறி கோடடாட்சியர் (பொ)பழனிதேவிமருங்காபுரி வட்டாட்சியர் 
சாந்தி தொட்டியம் வட்டாட்சியர் மலர் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள்
செந்தில்,ரவி மற்றும் பலர் உடன் இருந்தனர்.