Showing posts with label திருச்சி சபரிநாதன் 9443086297. Show all posts
Showing posts with label திருச்சி சபரிநாதன் 9443086297. Show all posts

Jan 17, 2022

திருச்சி எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு புறநகர் வடக்கு மாவட்டம் சார்பாக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது

 திருச்சியில் எம்ஜிஆர் சிலைக்கு பரஞ்சோதி தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது


சோமரசம்பேட்டையில் எம்ஜிஆர் சிலைக்கு புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வெடி வெடித்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதுஅதிமுக நிறுவன தலைவரும், மறைந்த முதலமைச்சருமான எம்ஜிஆர் பிறந்த நாள் விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி, சோமரசம்பேட்டை குழுமணி ஜீயபுரம் பெட்டவாய்த்தலை உள்ளிட்ட பல இடங்களில் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி தலைமையில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது .   முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், கே.கே.பாலசுப்ரமணியன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், கோபி நடராஜன், மணிகண்டம் முத்துக்கருப்பன்  , நகர செயலாளர்கள், முத்தரசநல்லூர் பஞ்சாயத்து தலைவர் ஆதிசிவன், பேரூர் நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், கிளை, வார்டு, பனையபுரம் கர்ணன், நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள்  கலந்து கொண்டனர்.

Aug 15, 2021

திருச்சி முத்தரசநல்லூர் அதிமுக பஞ்சாயத்து தலைவர் ஆதிசிவன் தலைமையில் சுதந்திர தின விழா

 


திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட முத்தரசநல்லூர் பஞ்சாயத்தில் 75வது சுதந்திர தின விழா

முத்தரசநல்லூர்  அதிமுக பஞ்சாயத்து தலைவர் ஆதிசிவன் தலைமையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

முத்தரசநல்லூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் அதிமுக பஞ்சாயத்து தலைவர் ஆதிசிவன் தலைமையில் 75 ஆவது சுதந்திர தின விழா


கொடியேற்றி இனிப்புகள் வழங்கி தூய்மை பணியாளர்களுக்கு கௌரவித்து ஓய்வு பெற்ற நபருக்கு மரியாதை அன்பளிப்பு கொடுக்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பகுதியை சார்ந்த மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் பேனா பென்சில் பொருட்கள் இனிப்புகள் வழங்கப்பட்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது


மேலும் இந்நிகழ்ச்சியில் முத்தரசநல்லூர் வார்டு உட்பட்ட மெம்பர்  கணேசன் மற்றும் சதீஷ் பஞ்சாயத்து அலுவலர்கள் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தொடர்ச்சியாக மக்கள் நலனில் அக்கறை செலுத்துவதும் முத்தரசநல்லூர் கிராமத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுநலன் கருதி மக்கள் சேவையில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்டு மக்கள் பிரச்சனைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண்பதும் முத்தரசநல்லூர் கிராம மக்களுக்கு சிறப்பாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது



May 22, 2020

திருச்சியிலிருந்து வெளிமாநில தொழிலாளர்கள் அவரவர் ஊருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனுப்பிவைக்கப்பட்டனர்

திருச்சியிலிருந்து 773வெளிமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் அவரவர் ஊர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மேற்பார்வையில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணி தொடர்பாக தடை உத்தரவு அமலில் 
உள்ளதால் தமிழக முதலமைச்சர்  வெளிமாநில 
தொழிலாளர்களை அவர்களின் விருப்பத்தின் பேரில் அந்தந்த மாநிலங்களுக்கு 
பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவார்கள் என ஆணையிட்டுள்ளார்.
அதன்படி 15
மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த புலம் பெயர்ந்த இராஜஸ்தான் மாநிலத்தை 
சேர்ந்த தொழிலாளர்கள் 773 நபர்கள் திருச்சிராப்பள்ளி இரயில்வே ஜங்சன் ரயில் 
நிலையத்திலிருந்து சமூக இடைவெளி கடைபிடித்து இரவு உணவு வழங்கி
சிறப்பு இரயில் மூலம் பயணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
சிவராசு இன்று (22.05.2020) அனுப்பி வைத்தார்

May 8, 2020

திருச்சி 390 பெயருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்

திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 
390 துப்புரவுப் பணியாளர்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் 
மொத்தம் 487500 மதிப்பிலான பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு
அவர்கள் இன்று(08.05.2020) வழங்கினார். 

 மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துப்புரவுப் பணியாளர்களுக்கு அத்தியாவசிய 
மளிகைப்பொருட்களை வழங்கி தெரிவித்ததாவது:

 திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்தடுப்பு பணி முன்னெச்சரிக்கை 
தொடர்பாக மருத்துவத்துறை ஊரக வளர்ச்சித்துறை காவல்துறை மாவட்ட நிர்வாகம் ஆகிய துறை 
அலுவலர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றுவதனால் நோய்தொற்று அதிகஅளவில் பரவாமல்
தடுக்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்ட 51 நபர்கள் 
முழுமையாக குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படடுள்ளனர். மருத்துவர்கள் செவிலியர்கள்
துப்புரவுப்பணியாளர்கள் ஒருங்கிணைந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர். தற்போது 
திருச்சி மாவட்டத்தை சார்ந்த 11 நபர்கள் அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த 9 நபர்களும் பெரம்பலூர்
மாவட்டத்தைச்சார்ந்த 13 நபர்களுக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தைச்சார்ந்த 2 நபரும் கரூர்
மாவட்டத்தினை சார்ந்த 1 நபரும் ஆக கூடுதல் 36 நபர்கள் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். அனைத்து 
நபர்களும் நலமுடன் உள்ளனர். மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சை முறையால் நோய் தொற்று 
ஏற்பட்டுள்ளவர்கள் முழுமையாக குணமடைந்துள்ளனர். தமிழக அரசு சார்பாகவும் மாவட்ட 
நிர்வாகத்தின் சார்பாகவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் 
கொள்கிறேன்
 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்யும் 390 
பணியாளர்களுக்கு 20 நாட்களுக்கு தேவையான தலா 10 கிலோ அரிசி 1கிலோ துவரம் பருப்பு
1கிலோ பச்சைப்பயிறு 1 கிலோ உளுந்தம் பருப்பு1 கிலோ பாசிப்பருப்பு 1கிலோ கோதுமை மாவு1 
கிலோ சர்க்கரை போன்ற ரூ.1250 மதிப்பீட்டில் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை 390 
துப்புரவு பணியாளர்களுக்கு மொத்தம்  487500 மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அத்தியாவசிய பொருட்கள் ஊரக வளர்ச்சி பொறியியல் துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது. 
 பொதுமக்கள் அனைவரும் வெளியில் செல்லும் போது முககவசம் அணிய வேண்டும் கைகளை 
கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் சேர்ப்பு கொண்டு கைகளை கழுவவேண்டும்
சமூகஇடைவெளியை கடைபிடிக்க வேண்டும் இவ்வாறு கடைபிடித்தால் நோய் தொற்றில் இருந்து 
நம்மைநாம் பாதுகாத்துக் கொள்ள முடியும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்
தெரிவித்துள்ளார் 
 இதனை தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா வைரஸ் நோய்பரிசோதனை 
செய்யும் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு இன்று(08.05.2020) 
நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
 இந்நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர்.அனிதா இணை இயக்குநர்
(மருத்துவம்மற்றும் ஊரகநலப்பணி) டாக்டர்.லெட்சுமி துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) 
டாக்டர்.சுப்ரமணி மருந்து கண்காணிப்பாளர் டாக்டர்.ஏகநாதன் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நகர்நல 
அலுவலர் ஜெகநாதன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர் ஊரக 
வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ் ஊரக வளர்ச்சி பொறியியல்துறை
உதவிப பொறியாளர் வடமலைக்குமார் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் உடன் உள்ளனர்.

Apr 4, 2020

திருச்சியில் 17 நபர்களுக்கு கொரோனா நோய் உறுதி மாவட்ட ஆட்சியர் பேட்டி

திருச்சி ஏப் 04

திருச்சியில் 17 நபர்களுக்கு கொரனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

திருச்சியில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

தற்போது மருத்துவக்
கல்லூரி
மருத்துவமனையில்
125 நபர்கள்
சேர்க்கப்பட்டுள்ளனர்
இவர்களில் 5நபர்கள் வெளி மாவட்டத்தினை சார்ந்தவர்கள்
(ஈரோடு -1 , கரூர்
திருச்சி மாவட்டத்தினை சார்ந்தவர்கள் 120 நபர்களும், தஞ்சாவூர் - 1 நபரும்)
மேற்குறிப்பிட்ட 120 நபர்களின் இருப்பிடங்களை சுற்றியுள்ள 50 பகுதிகளில்
இதுவரை 25,586 குடியிருப்புகளில் 469 மருத்துவக்குழுவினர் வீடு வீடாக ஆய்வு செய்து
நபர்களை பரிசோதனை செய்துள்ளனர்.
எந்த ஒரு நபருக்கும் கொரோனா
வைரஸ் நோய் அறிகுறி எதுவுமில்லை
ஏற்கனவே கொரோனா வைரஸ் நோய் தாக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 1 நபருக்கும்,
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 நபர்களுக்கும்
உறுதி செய்யப்பட்டு மேற்கண்ட 3
நபர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல் நிலை சீராக நல்ல
நிலையில் உள்ளது.
இதுவரை 221
நபர்களுக்கு பரிசோதனை
செய்யப்பட்டதில் (மேற்கண்ட
3.
நபர்களை தவிர) இதர 217நபர்களுக்கு  இரத்த மாதிரி பரிசோதனையில் 
கொரோனா வைரஸ் நோய் இல்லை என
தெரியவந்துள்ளது.
தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள 120 நபர்களுக்கு இரத்த மாதிரி பரிசோதனை
முடிவு வரவேண்டும். இவர்களில் 
53நபர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் இரத்த
மாதிரி பரிசோதனை அறிக்கை முடிவு இன்று பெறப்பட்டு 
17நபர்களுக்கு கொரோனா
வைரஸ் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதர 36 நபர்களுக்கு கொரோனா
வைரஸ் நோய் தொற்று இல்லையென அறிக்கை
வரப்பெற்றுள்ளது.
இருப்பினும்
இவர்கள்
அனைவரும் மேலும் 14நாட்கள்
மருத்துவமனையில்
சிகிச்சைப்பெற்று
இறுதியாக பரிசோதனை செய்த
பின்னர்
மருத்துவமனையில்
இருந்து
விடுவிக்கப்படுவார்கள்.
மேற்கண்ட 53
நபர்களை தவிர மீதமுள்ள 67
நபர்களின் பரிசோதனை 
நடவடிக்கையில் (Under Processing) உள்ளது என்றார்.
மேலும் தடுப்பு முன்னெச்சரிக்கையாக வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் 
இருந்த வந்த 3,045 பேர் விடுகளில் தனிமைபடுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் நல்ல நிலையில் உள்ளனர் என தெரிவித்தார்

Feb 16, 2020

திருச்சியில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி

திருச்சி

திருச்சியில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை அமைச்சர்கள் இன்று  தொடங்கி வைத்தனர்..

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அவர்களின் சிறிய திட்டத்தின் கீழ் துவக்கப்பட்ட பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான போட்டிகள் கடந்த 10 ஆண்டுகளாக 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.


அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் 2019- 2020 ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கூடைப்பந்து,கைப்பந்து, வளைகோல் பந்து, கபடி, இறகுபந்து, டென்னிஸ் ஜூடோ, குத்துச்சண்டை, நீச்சல் மற்றும் தடகள போட்டிகள் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது..

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர்  போட்டியை துவக்கி  வைத்தனர்.

மேலும் இப்போட்டிகளில் தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள அரசு செலவில் அழைத்து செல்லப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..