Nov 14, 2014

பிரான்ஸ் எம்.ஜி.ஆர். விழாவில், மக்களின் முதல்வர் ஜெயலலிதா தபால் தலை வெளியீடு


பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள செயின்ட் தெனிஸ் என்ற இடத்தில் ஆண்டு தோறும் எம்.ஜி.ஆர். விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா, கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. விழாவில், நடிகர் அசோகனின் மகனான திரைப்பட நடிகர் வின்சென்ட் அசோகன், ‘இதயக் கனி’ மாத இதழ் ஆசிரியர் எஸ்.விஜயன் அகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

விழாவில், பிரான்ஸ் நாட்டின் அனுமதி பெற்று, இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் தபால் தலையை செயின்ட் தெனிஸ் துணை மேயர் பொதில் ஹமுதி வெளியிட நடிகர் வின்சென்ட் அசோகன் பெற்றுக் கொண்டார். இதே போன்று, தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தபால் தலையை மற்றொரு துணை மேயர் சிலிமான் ஏபல்லா வெளியிட எஸ்.விஜயன் பெற்றுக் கொண்டார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி, பாரிஸ் நகரில் எம்.ஜி.ஆர். சிலை திறக்க வேண்டும் என்ற அறிவிப்பு இந்த விழாவில் வெளியிடப்பட்டுள்ளது. விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கவிதை அரங்கம், இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், பிரான்ஸ் மற்றும் அண்டை நாடுகளில் இருந்து ஏராளமான எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை தலைவர் முருகு பத்மநாபன் செய்திருந்தார்.

மக்களின் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி சென்னையில் 2 நாட்கள் மாநாடு


சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அடுத்த ஆண்டு (2015) மே 23, 24 தேதிகளில் உலக முதலீட்டாளர்களின் மாநாடு நடைபெறுகிறது.
மக்களின் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி இந்த மாநாடு சென்னையில் 2 நாட்கள் நடைபெறுகிறது.
அந்நிய நேரடி முதலீடுகளை வரவேற்கும் மாநிலங்களில் தமிழ்நாடு 3–வது இடத்தில் உள்ளது. ஜெயலலிதா அறிவித்த ‘தொலைநோக்கு திட்டம் 2023’ தொழில் கொள்கையில் காணப்பட்டுள்ள முற்போக்கு அம்சங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டில் அந்நிய முதலீட்டை பெருமளவுக்கு ஈர்க்கும் வகையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வர்த்தகம் மற்றும் சந்தை வர்த்தக கொள்கையால், பொருளாதார மேம்பாட்டில் நாட்டிலேயே தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.
கடந்த 1992-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தொழிற்கொள்கையால் மாநிலத்தில் போர்டு, ஹூண்டாய் போன்ற சர்வதேச மோட்டார் நிறுவனங்கள் மட்டுமின்றி டிவிஎஸ், அசோக் லேலண்ட் உள்ளிட்ட உள்ளூர் நிறுவனங்களும் தமிழகத்தில் உற்பத்தி நிலையங்களை தொடங்கியதன் காரணமாக, சர்வதேச அளவில் மோட்டார் வாகன உற்பத்தியில் தமிழகம் முக்கிய இடம் பிடித்திருக்கிறது.
மின்னணு உற்பத்தியில்
பெரும் புரட்சி
இதேபோல், கடந்த 2003-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தொழிற்கொள்கையால் மின்னணு உற்பத்தியில் பெரும் புரட்சி ஏற்பட்டது. இதனால் மோட்டோ–ரோலா, பாக்ஸ்கான், பிளக்ஸ்டிரானிக்ஸ், டெல், சாம்சங் போன்ற பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழிற்சாலைகள் அமைத்ததோடு, தற்போது மின்னணு பொருள் ஏற்றுமதியில் தமிழகம் நாட்டிலேயே பெரும் பங்கு வகிக்கிறது, இதேபோல், ஜவுளி, தோல் மற்றும் மோட்டார் வாகனங்கள் ஏற்றுமதியிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது.
பொருளாதார வளர்ச்சி
22% அதிகரிப்பு
தொழில்மயமாக்கப்பட்ட 3 மாநிலங்களில் முதலிடம் வகிக்கும் தமிழகம், சர்வதேச அளவில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இதனை மேம்படுத்தும் வகையில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ம் தேதி, தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023 என்ற மாபெரும் திட்டத்தை அறிமுகப்படுத்தியதால், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 22 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், 217 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி மக்களின் முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய தமிழ்நாடு தொழிற்கொள்கை 2014-ன் மூலம் மிகப்பெரிய அளவில் தொழில்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் மாறியிருப்பதோடு, தானியங்கி, உதிரிபாகங்கள் தயாரிப்பு, உயிரி தொழில்நுட்பம் ஆகியவற்றில் பெரும் வளர்ச்சி கண்டிருப்பதாகவும், தொழில்துறையில் மின்தங்கிய தென்மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு சலுகைகளால் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அபரிமிதமான தொழிலாளர்கள், தொழில் தொடங்கிட ஏற்ற சூழ்நிலை ஆகியவற்றின் காரணமாக முன்னேற்றம் கண்டுவரும் தமிழகத்தில், சர்வதேச மூதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் அடுத்த ஆண்டு மே மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சென்னையில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவிருக்கிறது.
அபரிமிதமான தொழிலாளர்கள்,
தொழிலுக்கு ஏற்ற சூழ்நிலை
மின்னணு, உதிரி பொருட்கள், ஜவுளி, வேளாண் மற்றும் உணவுப் பதப்படுத்துதல், தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் மருந்து பொருட்கள், மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள், ரசாயனம், பெட்ரோ கெமிக்கல், பொறியியல் மற்றும் சாலைகள், சிறுதுறைமுகங்கள் மேம்பாடு, தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், மரபுசாரா எரிசக்தி முகமைகள் ஆகியவற்றில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு இந்த மாநாடு வகை செய்யும்.
ஜப்பான், அமெரிக்கா,
பிரான்ஸ், ஜெர்மனி
தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வம் உள்ள முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. முன்னதாக இதுதொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் நிகழ்ச்சி நடைபெறும்.
ஜெட்ரோ, யுஎஸ்ஐபிசி அமைப்புகள் இந்த மாநாட்டுக்கு ஜெட்ரோ (ஜப்பான் எக்ஸ்டர்னல் டிரேட் ஆர்கனைசேஷன்), யுஎஸ்ஐபிசி (யுஎஸ் – இண்டியா பிசினஸ் கவுன்சில்) தோக்ரா (கொரியா டிரேட் இன்வெஸ்ட்மெண்ட் ப்ரமோஷன் ஏஜென்சி) ஆகிய அமைப்புகள் தமிழக அரசுடன் பங்குதாராக (பார்ட்னர்) இணைந்து செயல்படும்.
மேலும் சிஐஐ, எப்ஐ, சிசிஐ, அஸ்சோசாம், எம்சிசிஐ ஆகிய முக்கிய தொழில்துறை சங்கங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தங்களை செய்து கொள்ளவும் உத்தேசித்துள்ளது.
பிரைஸ் பாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனம் (பியுசி) இந்த மாநாட்டுக்கு ‘அறிவுசார் பங்குதாரர்’ (நாலெட்ஜ் பார்ட்னர்) ஆக செயல்பட தேர்வு செய்யப்பட்டள்ளது.
மேலும் இந்த மாநாடு நடைபெறுவதற்கு தமிழ்நாடு தொழிற்துறை வழிகாட்டு ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு மையம் (கைடன்ஸ் பீரோ) மாநாட்டுக்கு செயலாளராக (செகரட்டேரியில்) செயல்படும்.
உற்பத்திக்கு உலகளவில் உன்னத இடம் தமிழகம்
உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொழிற்துறையில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் உற்பத்தித்துறையில் சர்வதேச அளவில் உன்னத இடத்தை தமிழ்நாட்டுக்கு உருவாக்கிக் கொடுக்கும் தமிழ்நாடு முன்னோடி என்பதை நிரூபிக்கும்.
இத்தகைய மாநாடுகள் மூலம் அமைதி, முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெறும்.
தமிழக அரசு இனறு வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Nov 12, 2014

மதுரை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக– திமுக மோதல்

மதுரை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக– திமுக மோதல்
மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் ராஜன் செல்லப்பா தலைமையில் இன்று நடைபெற்றது. மாநகராட்சி கமிஷனர் கதிரவன், துணை மேயர் திரவியம், மண்டல தலைவர்கள் ராஜபாண்டியன், சாலைமுத்து, ஜெயவேல் மற்றும் அ.தி.மு.க., தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியவுடன் மேயர் ராஜன் செல்லப்பா அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும். மதுரை மாநகராட்சியில் 11 அம்மா உணவகங்களை திறந்த மக்களின் முதல்வர் அம்மாவுக்கு கோடான கோடி நன்றி போன்ற தீர்மானங்களை வாசித்தார்.
அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். அதனை தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்களை செய்ததாக தி.மு.க. தலைவர் கருணாநிதியை கண்டித்து மேயர் ராஜன்செல்லப்பா தீர்மானங்களை வாசித்தார். அப்போது அங்கிருந்த தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து சபையில் இருந்து வெளியேறிய தி.மு.க. கவுன்சிலர்கள் சிறிது நேரம் கோஷமிட்டு மீண்டும் அவைக்கு வந்தனர்.
மாநகராட்சி கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:–
ராஜபாண்டியன், மேற்கு மண்டலத் தலைவர்:– மதுரையில் பல்வேறு இடங்களில் கொசுத் தொல்லைகள் அதிகமாக உள்ளது. இந்நாட்டு மன்னர்கள் போல கொசுக்கள் வலம் வருகின்றன. மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டும். மீன் மார்க்கெட்டை விராட்டி பத்துக்கு மாற்றியதை வரவேற்கிறேன். ஆரப்பாளையம் முதல் அருள்தாஸ்புரம் வரை தரைப்பாலம் அமைப்பதற்கு மாநகராட்சிக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆரப்பாளையம் பஸ் நிலையம், டி.பி.ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வைகை ஆற்றில் கோச்சடை, ஆரப்பாளையம், குருவிக்காரன்சாலை ஆகிய இடங்களில் தடுப்பனைகள் அமைத்து நகர் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மண்டலங்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள திட்டப்பணிகளை மண்டல அலுவலக உதவி கமிஷனர்களே செய்யும் வகையில் அதிகாரம் வழங்க வேண்டும்.
ஜெயவேல், வடக்கு மண்டலத்தலைவர்:– வடக்கு மண்டல பகுதியில் குடிநீர் பிரச்சினை அதிகரித்து உள்ளது. இதற்கு உரிய தீர்வு காண வேண்டும். மேலும் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்தால் போதும்.
மேயர்:– இது குறித்து உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
சாலைமுத்து, தெற்கு மண்டலத்தலைவர்:– மதுரை மாநகராட்சியில் குடிநீர் பிரச்சினையை போக்கும் வகையில் மக்களின் முதல்வர் அம்மா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும் பல்வேறு திட்டங்களை நகர மக்களுக்கு அம்மா வழங்கி உள்ளார். ஆனால் தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது குடும்பத்தினருக்காக ஆட்சி நடத்தினார். மதுரையில் இருந்த மு.க.அழகிரி சட்டத்தை தன் கையில் எடுத்து அராஜகம் செய்தார்.
அப்போது அவையில் இருந்த தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு அ.தி.மு.க. கவுன்சிலர்களும் எழுந்து பேசினர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. உடனே மேயர் ராஜன்செல்லப்பா குறுக்கிட்டு அமைதி காக்கும்படி கவுன்சிலர்களை கேட்டுக் கொண்டார். ஆனாலும் தொடர்ந்து கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அப்போது பேசிய மேயர் தி.மு.க. கவுன்சிலர்கள் அழகிரிக்கு எதிராக பேசியதால் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்களே? நீங்கள் கருணாநிதி தலைமையிலான தி.மு.க.வா, அல்லது அழகிரி தலைமையிலான தி.மு.க.வா என்பதை விளக்க வேண்டும் என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் மீண்டும் வெளிநடப்பு செய்தனர்.
வழக்கமாக ஒவ்வொரு மாநகராட்சி கூட்டத்திலும் கறுப்பு சட்டை அணிந்து வந்த தி.மு.க. கவுன்சிலர்கள் இன்றைய கூட்டத்தில் வெள்ளைச்சட்டை அணிந்து வந்தனர். மேற்கு மண்டலத் தலைவர் ராஜபாண்டியன் கறுப்பு சட்டை அணிந்து கொண்டு கூட்டத்தில் கலந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில், மக்களின் முதல்வர் அம்மா, முதல்வராக இல்லாததால் அ.தி.மு.க.வினருக்கு கறுப்பு நாள், அதை உணர்த்தும் வகையில் கறுப்பு சட்டை அணிந்துள்ளேன் என்றார்

Nov 11, 2014

திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா மீண்டு வந்தமைக்காக நேர்த்திக்கடன் செலுத்தும் வகையிலும், ஜெயலலிதா மீண்டும் தமிழக மதல்வராக வேண்டியும், எம்.எஸ்., நகரில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள், நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட செயலாளரும்,வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சு.குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் எம்.மணி, எம்.கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணியம், ஸ்டீபன் ராஜ் மற்றும் முருகசாமி, கலைமகள் கோபால்சாமி,கணேஷ், கனகராஜ், ரங்கசாமி, விஜயகுமார், சபரிஷ்வரன், அமுதா வேலுமணி உள்ளிட்ட கவுன்சிலர்கள்  ரத்தினகுமார், பாபு, யுவராஜ் சரவணன், அசோக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முடிவில் அனைவருக்கும் அன்னதானம் நடந்தது.

திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில் பரிவார மூர்த்திகள் ஆலயங்கள் அமைக்கப்பட்டு வருகின்ற டிசம்பர் 1-ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது

இதையொட்டி பரிவார மூர்த்திகளுக்கு ஜலாதி வாசம் செய்யும் நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், ஹயக்கிரீவர், தன்வந்திரி மற்றும் 7 ஆழ்வார்கள் உள்ளிட்ட சாமி சிலைகள் தண்ணீர் தொட்டியில் விடப்பட்டு ஜலாதி வாசம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன், நகரமைப்பு குழுதலைவர் அன்பகம் திருப்பதி,கவுன்சிலர் கண்ணப்பன்,  கூட்டுறவு சங்க தலைவர்கள் எம்.மணி,மார்க்கெட் சக்திவேல்,  அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியம், திருப்பணி குழுவினர் கிளாசிக் சிவராமன், டாக்டர் தங்கவேலு, சவுமீஸ் நடராசன், கிரீட்டிங்க்ஸ் ராஜேந்திரன், செயல் அலுவலர் சிவகாமசூரியன், உதவி ஆணையர் ஆனந்த், தலைமை குருக்கள் கோவிந்தராஜ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா மீண்டு வந்தமைக்காக நேர்த்திக்கடன் செலுத்தும் வகையிலும்

 மீண்டும் அவர் தமிழக முதல்வராக பொறுபேற்க வேண்டியும், காங்கயம் அருகில் உள்ள சிவன்மலை முருகன் கோவிலில் மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில், காங்கயம் எம்.எல்.ஏ., என்.எஸ்.என்.நடராஜன், மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன், தொழிற்சங்க செயலாளர் எம்கண்ணப்பன் ஆகியோர் தங்கத்தேர் இழுத்து சாமி தரிசனம் செய்தனர். காங்கயம்  நகர் மன்றத்தலைவர் வெங்கு என்கிற மணிமாறன், மாநகர நிர்வாகிகள் ஜ.ஆர்.ஜான்,வி.ராதாகிருஷ்ணன், கருவம்பாளையம் மணி, மார்க்கெட் சக்திவேல், மண்டலத்தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், கண்ணபிரான், சடையப்பன், கலைமகள் கோபால்சாமி உள்ளிட்ட கவுன்சிலர்கள் ஆகியோர் உள்பட் பலர் கலந்து கொண்டனர். 

தமிழக மக்கள் சுகாதாரமாக வாழ ரூ.8 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கிஅரசு மருத்துவமனைகளில் அனைத்து சிகிச்சைகளும் பெற வழி வகை செய்தவர் ஜெயலலிதா என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கூறினார்.

தமிழக அரசின் சுகாதார துறை மற்றும் திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில், திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு  மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எம்.சண்முகம், திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன், ரோட்டரி சங்க தலைவர் ரத்தினசாமி ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.விழாவில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துணவு வழங்கி பேசியதாவது:-
வடக்கு ரோட்டரி சங்கத்தின் சார்பில் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துணவு வழங்கும் திட்டத்தை திருப்பூரில்  வைத்திருக்கிறார்கள். இது ஒரு முன் மாதிரியான திட்டமாகும். இந்த திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும்  துவக்கப்படும்.மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தன்னுடைய ஆட்சிக்காலத்தில்தான், தமிழக மக்கள் சுகாதாரமாக வாழ வேண்டும் என்பதற்காக சுகாதார திட்டங்களுக்காக ரூ.8 ஆயிரம் கோடி  நிதி ஒதுக்கி, அரசு மருத்துவமனைகளிலே அனைத்து சிகிச்சைகளும் கிடைக்க வழிவகை செய்துள்ளார்.காச நோய் தொற்று நோய் அல்ல.உரிய சிகிச்சைகளை மேற்கொண்டால் அந்த நோய் குணமாகும். 
நோயாளிகள் நல்ல சத்துணவு சாப்பிட வேண்டும்,பாதுகாப்பாக  இருக்க வேண்டும் என்பதற்காக தான் இன்றைக்கு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் சுகாதரத்துக்காக பல்வேறு மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இதனுடன் ஒரு வருடம் தொடர்ச்சியாக ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுகிறது. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த திட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அரசின் மூலமாக இந்த நோயால் பாதிக்கப்பட்ட 400 பேர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.மேலும் சுகாதார நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில்,இணை இயக்குனர் டாக்டர்.கேசவன், துணை இயக்குனர் டாக்டர்.ரகுபதி, மருத்துவ அறிவியல் துறை துணை இயக்குனர் பொன்னுசாமி, மாநகராட்சி மண்டல தலைவர்கள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், கிருத்திகா  சோமசுந்தரம், நிலைக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி, பூலுவபட்டி பாலு, ரோட்டரி நிர்வாகிகள் சிறீதரன், முத்துசாமி, மாமன்ற உறுப்பினர்கள் கவுன்சிலர்கள் கே.செல்வம், எம்.கண்ணப்பன், சண்முகசுந்தரம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், மருத்துவத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.தமிழக அரசின் சுகாதார துறை மற்றும் திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில், திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கும் விழாவில் வனத்துறை .எம்.எஸ்.எம்.ஆனந்தன் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துணவு வழங்கினார்.அருகில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆகியோர் உள்ளனர்.
 

திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டையை அடுத்துள்ள திருமூர்த்தி நகர்

தென்னை வளர்ச்சி விதை நாற்று பண்ணையில் சட்டமன்றதுணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அரசு கேபிள் டி.வி.நிறுவனத்தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சி.சண்முகவேல் எம்.எல்.ஏ.,சி.மகேந்திரன் எம்.பி.ஆகியோர் தென்னை கன்றுகளை நடவு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் உடுமலை நகரமன்ற துணைத்தலைவர் எம்.கண்ணாயிரம்,விவசாய சங்க நிர்வாகிகள் ஜெயமணி, ராம்குமார், கள அலுவலர் தீப்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் அருகே உள்ள பொங்கலூர் அரசு விதைப்பண்ணையில் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூர்  மாவட்டம், பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஒன்றியம் தேவணம்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு விதைப்பண்ணை 39 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.இந்த பண்ணையில் தேசிய வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.51.5லட்சம் செலவில் 1.5 மெட்ரிக் டன் திறனுடைய புதிய விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.மேலும் ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளாளவு கொண்ட கிடங்கு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மூன்றரை லட்சம் லிட்டர் கொள்ளாளவு தரைமட்ட தண்ணீர் தொட்டியில் 1500 மீன் குஞ்சுகள் வளர்க்க விடப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் 7ஏக்கர் நிலப்பரப்பில் மக்காசோளம் மற்றும் சோளம் பயிரிட விதைகள் விதைக்க தயார் நிலையில் உள்ளது. நீண்ட காலமாக பயன்பாடு இன்றி இருந்த இப்பண்ணையை  தமிழக முதலவராக ஜெயலலிதா 3வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றதும் கடந்த ஆண்டு முதல் செயல்பட துவங்கி ரூ.1,96,712 லாபம் ஈட்டியுள்ளது. இப்பண்ணைய வேளாண்மை துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்தார்.அப்போது இப்பண்ணையில் தமிழக வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் சின்னவெங்காயம் ஆராய்ச்சி மையம்,தென்னை நாற்றுப்பண்ணை அமைக்க உத்தரவிட்டார். பின்னர் பண்ணையில் தென்னங்கன்று நட்டார். பொங்கலூர் அரசு விதைப்பண்ணையை சீரமைப்பு செய்து லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் மற்றும் வேளாண்மை துறையினரை பாராட்டினார். 
இந்த ஆய்வின் போது வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட  கலெக்டர் ஜி.கோவிந்தராஜன்,மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம்,பொங்கலூர் ஒன்றிய தலைவர் எஸ்.சிவாச்சலம், மாவட்ட வருவாய் அலுவலர் பாரிவேல்,பல்லடம் வட்டாட்சியர் அம்சவேணி,வேளாண்மை துறை இணை இயக்குநர் சந்தானகிருஷ்ணன்,  துணை இயக்குநர்கள் அல்தாப், மகேந்திரன், பொங்கலூர் வேளாண்மை அலுவலர் வசந்தாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் மக்காசோளம் வெட்டும் இயந்திரம் அதிக அளவில் ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று வேளாண்மை துறை அமைச்சரிடம் மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம் கோரிக்கை விடுத்தார்.அது பற்றி பரிசிலனை செய்வதாக  வேளாண்மை துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி உறுதி அளித்தார்.திருப்பூர் அருகே உள்ள பொங்கலூர் தேவணம்பாளையத்தில் உள்ள அரசு விதைப்பண்ணை அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் ஆய்வு செய்தனர். உடன் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் உள்ளார்.