Nov 11, 2014

திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா மீண்டு வந்தமைக்காக நேர்த்திக்கடன் செலுத்தும் வகையிலும்

 மீண்டும் அவர் தமிழக முதல்வராக பொறுபேற்க வேண்டியும், காங்கயம் அருகில் உள்ள சிவன்மலை முருகன் கோவிலில் மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில், காங்கயம் எம்.எல்.ஏ., என்.எஸ்.என்.நடராஜன், மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன், தொழிற்சங்க செயலாளர் எம்கண்ணப்பன் ஆகியோர் தங்கத்தேர் இழுத்து சாமி தரிசனம் செய்தனர். காங்கயம்  நகர் மன்றத்தலைவர் வெங்கு என்கிற மணிமாறன், மாநகர நிர்வாகிகள் ஜ.ஆர்.ஜான்,வி.ராதாகிருஷ்ணன், கருவம்பாளையம் மணி, மார்க்கெட் சக்திவேல், மண்டலத்தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், கண்ணபிரான், சடையப்பன், கலைமகள் கோபால்சாமி உள்ளிட்ட கவுன்சிலர்கள் ஆகியோர் உள்பட் பலர் கலந்து கொண்டனர்.