Nov 11, 2014

திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா மீண்டு வந்தமைக்காக நேர்த்திக்கடன் செலுத்தும் வகையிலும், ஜெயலலிதா மீண்டும் தமிழக மதல்வராக வேண்டியும், எம்.எஸ்., நகரில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள், நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட செயலாளரும்,வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சு.குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் எம்.மணி, எம்.கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணியம், ஸ்டீபன் ராஜ் மற்றும் முருகசாமி, கலைமகள் கோபால்சாமி,கணேஷ், கனகராஜ், ரங்கசாமி, விஜயகுமார், சபரிஷ்வரன், அமுதா வேலுமணி உள்ளிட்ட கவுன்சிலர்கள்  ரத்தினகுமார், பாபு, யுவராஜ் சரவணன், அசோக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முடிவில் அனைவருக்கும் அன்னதானம் நடந்தது.