Oct 12, 2014

பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் மடத்துக்குளம் ஒன்றியக் கழகம் சார்பில் மண்சோறு சாப்பிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றது.

அண்ணா தி.மு.கழக பொதுச் செயலாளரும், மக்கள் முதலவருமான புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கில் இருந்து விடுதலையைக வேண்டியும், அவர் பூர்ண நலம் பெற்று மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்கவும் சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயரான், சண்முகவேலு எம்.எல்.ஏ.ஆகியோர் பழனி கோவிலில் தங்க தேர் இழுத்தனர். 
அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளரும், மக்கள் முதல்வருமான புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது சுமத்தபட்ட பொய் வழக்குகளிலிருந்து விடுதலையாக வேண்டி தமிழகத்திலுள்ள அனைத்து பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் அண்ணா தி.மு.க.வினர் சிறப்புப் பிரார்த்தனைகளும், பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடத்தி வருகின்றனர்.இதனை முன்னிட்டு, பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் மடத்துக்குளம் ஒன்றியக் கழகம் சார்பில் திருப்பூர் புறநகர் மாவட்டச்செயலாளரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.சண்முகவேலு ஆகியோர் தலைமையில் ஒன்றியசெயலாளர் அண்ணாத்துரை, அரசு வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், எஸ்.ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் அருள்மிகு பாலதண்டாயுதபாணிக்கு தங்கத் தேர் வடம் பிடித்தும், பாலபிசேகம், சந்தனக்காப்பு செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மேலும் மடத்துக்குளம் ஒன்றிய ஜெயலலிதா பேரவைச்செயலாளர் எஸ்.பி.சிவலிங்கம், குமரலிங்கம் பேரூராட்சித்தலைவர் சிவக்குமார், பேரூர்கழகச் செயலாளர் கே.ஏ.வரதராஜ் ஆகியோர் முன்னிலையிலும் மண்சோறு சாப்பிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றது. 
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணைச்செயலாளர் எம்.ஏ.சுப்பிரமணியம், மடத்துக்குளம் பேரூராட்சித் தலைவர் எஸ்.பழனிச்சாமி, துணைத் தலைவர் ஜி.கே.தண்டபாணி, வீராச்சாமி, கொழுமம் ஊராட்சி மன்றத்தலைவர் இந்திராணி, நீலம்பூர் செல்வராஜ், கவுன்சிலர் குணா, கே.கே.ரவி, கணியூர் பேரூராட்சி துணைத்தலைவர் கணியூர் காஜாமைதீன் மற்றும் அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Oct 11, 2014

மக்கள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது சுமத்தப்பட்ட பொய் வழக்கில் இருந்து மீண்டு வர வேண்டி..எம்.எஸ்.எம்.ஆனந்தன் சிறப்பு வழிபாடு

திருப்பூர் வடக்கு ஒன்றிய அண்ணா தி.மு.,கழகம் சார்பில் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழி காட்டுதலின் பேரில் மக்கள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது சுமத்தப்பட்ட பொய் வழக்கில் இருந்து மீண்டு வர வேண்டி ஒன்றிய கழக செயலாளரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான கே.என்.விஜயகுமார் தலைமையில், ஒன்றியகுழுபெருந்தலைவரும், கல்விக்குழு தலைவருமான ஆர்.சாமிநாதன், ஒன்றிய கழக அவைத்தலைவரும், மாநகராட்சி கல்விக்குழு தலைவருமான வி.பட்டுலிங்கம், ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளரும், மாநகராட்சி சுகாதாரக்குழு தலைவருமான பூலுவபட்டி எம்.பாலு ஆகியோர்  முன்னிலையில் பெருமாநல்லூர் அருள்மிகு கொண்டத்து காளியம்மம்ன் திருக்கோவிலில்,   சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான எஸ்.எம்.பழனிச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் காளிபாளையம் பொன்னுலிங்கம், பொங்குபாளையம் மூர்த்தி, தொரவலூர் பானு பழனிசாமி, சண்முகம்,வள்ளிபுரம் ஸ்ரீதேவி பழனிச்சாமி, ஈட்டி வீரம்பாளையம் செல்வகுமார், சரவணன், பொங்குபாளையம் துணை தலைவர் கருப்புசாமி,ஒன்றிய பாசறை செயலளார் சந்திரசேகர், வேலுமணி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர்கள் எவரெடிதுரை, சுலக்ஷ்னா, பொடரப்ப கவுண்டர், குமாரவடி வடிவேல், மாணிக்கம், சிதம்பரம்,ஊராட்சி கழக செயலாளர்கள் குருசாமி, வடிவேல், முருகேசன், தங்கராஜ், குமாரசாமி, ராமசாமி, செல்வராஜ்,ஒன்றிய விவசாய அணி செயலாளர் முத்துரத்தினம், பெருமாநல்லூர் விசைத்தறி கூட்டுறவு சங்க தலைவர் ராமசாமி, செயலாளர் துரைசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் சித்ரா பெரியசாமி, கிருத்திகா ரத்தினசாமி, அண்ணா தொழிற்சங்க ஒன்றிய தலைவர் சுப்பிரமணி, கிளை செயலாளர்கள் வேலுசாமி,மாணிக்கம் மற்றும் எம்.சி.மணி, எம்.எஸ்.விஜயகுமார் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தமிழக மக்களுக்கு எண்ணிலடங்கா நலத்திட்டங்களை வழங்கி, தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி நல்லாட்சி புரிந்து வந்துள்ள ஜெயலலிதா தன் மீது தொடுக்கப்பட்ட வழக்கை சட்டரீதியாக சந்தித்து விரைவில் வெற்றி காண்பார் என்பது உறுதி...சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ.


ஒரு கட்சித் தலைவரோ, உயர்ந்த பதவி வகிப்பவரோ ஒரு வழக்கில் குற்றவாளியாக கருதப்பட்டு தண்டனை பெறும்போது அவரது இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், அபிமானிகளும் உணர்ச்சிவசப்படுதல் என்பது இயல்பு. இந்தியா முழுவதும் இத்தகைய உணர்ச்சி வெளிப்பாடுகள் பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு தலைவர்கள் கைதானபோதும், தண்டனைக்கு உள்ளானபோதும் நிகழ்ந்துள்ளன. முன்பு ஒரு முறை தி.மு.க. தலைவரும், பொதுச் செயலாளரும் கைது செய்யப்பட்டபோது திருச்சியில் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன. முத்தரசநல்லூரில் குண்டு வெடித்து ஒருவர் பலியான சம்பவங்களும் உண்டு.
தமிழகத்தில் அமைதி நிலவுகிறபோது சட்டம் ஒழுங்கு முற்றிலும் சிதைந்துவிட்டது. அமைதி இழந்துவிட்டது என்று எதிர்க்கட்சித்தலைவர்கள் புலம்பி குற்றம்சாட்டுவது வியப்பாக உள்ளது. ஏனென்றால் இப்படிக் குற்றம் கூறுபவர்கள் முன்பு கைது செய்யப்பட்டபோது திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளை மக்கள் மறந்துவிடவில்லை.
கடந்த 2011 சட்டமன்ற தேர்தலிலும் 2014 நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ள ஜெயலலிதாவை தேர்தல் களத்தில் சந்தித்து படுதோல்வி அடைந்தவர்கள், மக்கள் அவர்களுக்கு எதிராக அளித்த தீர்ப்பை மறந்துவிட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக பேசி வருகிறார்கள்.
உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல் மூலம் பல லட்சம் கோடிகள் ஊழல் செய்து தி.மு.க. மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராஜா, தன் மகள் கனிமொழி எம்.பி. ஆகிய இருவரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததையும், இன்னும் 2ஜி வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருவதையும் மறந்துவிட்டு பேசிக் கொண்டிருக்கிறார். தி.மு.க. தலைவர், தி.மு.க. முன்னாள் அமைச்சர்களும், முக்கிய பதவி வகித்தவர்களும் தியாகிகளைப்போல தூய வாழ்க்கை வாழ்ந்தது போன்று தி.மு.க. தலைவர், கருத்து வெளியிட்டிருப்பது மிக மிக வேடிக்கையாக உள்ளது. அதைவிடப் பெரிய வேடிக்கை ‘‘ஊழலின் நிழல் கூட தி.மு.க. மீது படுவதை கலைஞர் விரும்ப மாட்டார்’’ என்ற டாக்டர் ராமதாசின் சமீபத்திய அறிக்கைதான்.
தமிழகத்திற்கு வன்முறை கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியது யார் என்பதை இந்த நாடே அறியும். சட்டம் ஒழுங்கு காவல்துறையின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்து வருகிற நிலையில் சட்டம் ஒழுங்கை மேற்கோள் காட்டி மாநில சுயாட்சி பற்றி முழங்கியவர்கள், இன்று மாநில நிர்வாகத்தைக் கவனிக்க மத்திய அரசை அழைக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் மக்கள் மன்றம் தகுந்த பதிலளிக்கக் காத்துக் கொண்டிருக்கிறது. ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்கும் காவிரி பிரச்சினைக்கும், முல்லைப் பெரியார் பிரச்சினைக்கும், மத்திய அரசை அழைக்காதவர்கள், அண்ணா தி.மு.க. அரசைக் கவிழ்க்க மத்திய அரசை அழைக்கிறார்கள். முதலில் 355 சட்டப்பிரிவை கொண்டு வாருங்கள் என்று கருத்துத் தெரிவித்துள்ளார் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர். அடுத்து 356 தானாக வராதா என்ற ஆசையில் பலர் இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் படங்களை அகற்ற வேண்டும் என்று அறிக்கை மேல் அறிக்கை வெளியிடுகிறார்கள். ஆனால் கோடானுகோடி தமிழ மக்களின் இதயங்களில் நிரந்தரமாக இடம்பெற்றிருக்கிறாரே அதை உங்களால் அகற்ற முடியுமா?
அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நல்லதொரு தீர்ப்பு கிடைக்கப் பெற்று சோதனைகளை வென்று புது எழுச்சியோடு திரும்ப வருவார். அதுவரைக்கும் அனைவரும் அமைதி காப்போம். மக்களைத் தூண்டிவிடுகிற எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளுக்கு இடம் தராமல் அவற்றை முறியடிப்போம்.
இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.

அம்மா தாக்கல் செய்ய வேண்டிய மனுக்களை, அவர்களுடைய வழக்கறிஞர்கள் குழு கவனித்துக் கொள்ளும் என்பதையும், அம்மாவின் அனுமதியின்றி எவ்வித மனுக்களையும், யாரும் நீதிமன்றங்களில் தாக்கல் செய்ய வேண்டாம்.அண்ணா தி.மு.க. தலைமை நிலையச் செயலாளரும், அமைச்சருமான பழனியப்பன்

ஜெயலலிதாவை தமிழ்நாட்டிற்கு மாற்ற வேண்டும் என்றும், அவர் தொடர்ந்து பதவி வகிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக, கர்னாடக உயர்நீதிமன்றங்களில் சிலர் மனு தாக்கல் செய்திருப்பதற்குஅண்ணா தி.மு.க. தலைமை நிலையச் செயலாளரும், அமைச்சருமான பழனியப்பன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீதிபதிகளிடையே ஜெயலலிதா மீது தவறான எண்ணம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக எதிரிகள் செய்யும் சதிச்செயல் இது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அண்ணா தி.மு.க. தலைமை நிலையச் செயலாளரும், உயர் கல்வித் துறை அமைச்சருமான பி. பழனியப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாடு முதலமைச்சராக  அம்மா  தொடர்ந்து பதவி வகிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்திலும், பெங்களூர் சிறையில் இருக்கும்  அம்மாவை தமிழ்நாட்டிற்கு மாற்ற வேண்டும் என்று கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, செய்திகள் நாளிதழ்களில் வெளி வந்துள்ளன.
கண்டனம்
இந்த மனுக்களை யாரோ வேண்டுமென்றே விஷமத்தனமாக, தீய எண்ணத்துடன் தாக்கல் செய்துள்ளனர் என்றும், இதற்கும்  அம்மாவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்வதோடு, இதற்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
அம்மா ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், நீதிபதிகளிடையே  அம்மா  மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக எதிரிகள் செய்யும் சதிச் செயல் இது என்பதை எடுத்துக் கூற கடமைப்பட்டு இருக்கிறேன்.
மேலும்,  அம்மா  தாக்கல் செய்ய வேண்டிய மனுக்களை, அவர்களுடைய வழக்கறிஞர்கள் குழு கவனித்துக் கொள்ளும் என்பதையும்,  அம்மாவின் அனுமதியின்றி எவ்வித மனுக்களையும், யாரும் நீதிமன்றங்களில் தாக்கல் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு பி. பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழக்குகளிலிருந்து விடுதலையாக வேண்டி ஒன்றிய ஜெயலலிதா பேரவை சார்பில் மடத்துக்குளம் தொகுதி எம்.எல்.ஏ.,சி.சண்முகவேலு தலைமையில், மண்சோறு சாப்பிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தொகுதியில், பிரசித்தி பெற்ற கொழுமம் அருள்மிகு தாண்டேஸ்வரர், அருள்மிகு கரிவரதராஜப்பெருமாள் அருள்மிகு நடராஜர் ஆகிய கோவில்களில் மக்களை முதல்வர் ஜெயலலிதா வழக்குகளிலிருந்து விடுதலையாக வேண்டி ஒன்றிய ஜெயலலிதா பேரவை சார்பில் மடத்துக்குளம் தொகுதி எம்.எல்.ஏ.,சி.சண்முகவேலு தலைமையிலும், ஒன்றிய பேரவைச் செயலாளர் எஸ்.பி.சிவலிங்கம், ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை, அரசு வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், எஸ்.ராஜ்குமார், குமரலிங்கம் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார், பேரூர்கழகச் செயலாளர் கே.ஏ.வரதராஜ் ஆகியோர் முன்னிலையில் மண்சோறு சாப்பிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் எம்.ஏ.சுப்பிரமணியம், மடத்துக்குளம் பேரூராட்சித் தலைவர் எஸ்.பழனிச்சாமி, துணைத் தலைவர் ஜி.கே.தண்டபாணி, கொழுமம் ஊராட்சி மன்றத் தலைவர் இந்திராணி, நீலம்பூர் செல்வராஜ், கே.கே.ரவி, கணியூர் காஜாமைதீன்  உள்ளிட்ட அண்ணா தி.மு.க.நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


திருப்பூர் மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் தலைமையில் சிறப்பு பூஜை



திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து விடுதலையாக வேண்டியும்,பொய்வழக்கில் இருந்து மீண்டு வரவும், மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் போலீஸ் லைன் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் பால் குடம் மற்றும் பூவோடு எடுத்தும் நிறைவேற்றுவதாக வேண்டியும், பிரார்த்தனை செய்தும் மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி, மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான்,வி.ராதாகிருஷ்ணன், கருவம்பளையம் மணி, கண்ணப்பன்,அன்பகம் திருப்பதி, மார்கெட் சக்திவேல், வளர்மதி தாமோதரன், சபரீஷ்வரன், மணிகண்டன், ராஜ்குமார், நீதிராஜன், மகளிர் அணி நிர்வாகிகள் கோமதி சம்பத், ருக்குமணி ஆகியோர்கள் உள்பட அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Oct 10, 2014

AIADMK HQ Secretary Mr. Palaniappan Arikai - 10th Oct 2014




சுப்ரீம் கோர்ட்டில் இன்று அல்லது செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது ஜெயலலிதா ஜாமீன் மனு!

சுப்ரீம் கோர்ட்டில் இன்று அல்லது செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது ஜெயலலிதா ஜாமீன் மனு!

உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது இன்று அல்லது செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூர் தனிநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த 27-ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன், ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைதண்டனையும், தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜெயலலிதாவும் மற்ற 3 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். ஜாமீன் - மேல்முறையீடு மனு ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதுதவிர மேல் முறையீடு தொடர்பாகவும், தனிநீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும், தங்கள் சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்று கோரியும் தனித்தனியாக 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதி ரத்னகலா கடந்த 29-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விடுமுறைகால நீதிபதி ரத்தினகலா முன்னிலையில் கடந்த 30-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் இல்லாமல் மனுவை விசாரிக்க முடியாது என்று கூறி நீதிபதி ரத்தினகலா விசாரணையை தள்ளிவைத்தார். ஒத்திவைப்பு இதைத்தொடர்ந்து ஜெயலலிதா தரப்பில் இந்த மனுவை அவசர அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என்று கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்றத்தின் வழக்கமான அமர்வுக்கு மாற்றி கடந்த 1-ந் தேதி நீதிபதி ரத்தினகலா உத்தரவிட்டார். ஜாமீன் தள்ளுபடி அதன்படி, தசரா விடுமுறைக்கு பின் 7-ந் தேதி கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரா முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஒன்றாக தாக்கல் செய்தது காரணம் இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதாவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்காமல் போனதற்கு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்ததுதான் ஒருவேளை காரணமாக இருக்கலாம் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். ஜெயலலிதா மட்டும் சுப்ரீம் கோர்ட்டில்.. முதலில் ஜெயலலிதா மட்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்து இருந்தால், வயது, உடல் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் கிடைத்து இருக்கக்கூடும் என்றும், அதன்பிறகு மற்ற 3 பேரும் ஒவ்வொருவராக மனு தாக்கல் செய்து ஜாமீன் பெற்று இருக்கலாம் என்றும் கருதப்பட்டது. இதனால் நேற்று ஜெயலலிதா சார்பில் மட்டும் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. என்ன காரணங்கள்? வழக்கறிஞர் ஜெய் கிஷோர் என்பவர் பெயரில் தாக்கல் செய்யப்பட்ட சுமார் ஆயிரம் பக்கங்கள் கொண்ட அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பெண் என்பதால்.. நான் ஒரு பெண்மணி. 66 வயதான எனக்கு உடல் ரீதியாக பல்வேறு உபாதைகள் உள்ளன. இந்த குறிப்பிட்ட வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்றதால் எனக்கு உயர் ரத்த அழுத்த நோய், சர்க்கரை வியாதி மற்றும் மூச்சுத் திணறல் போன்ற கடுமையான பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளன. நான் முதல்-அமைச்சராக இருந்த போது இந்த வழக்கு தொடர்பாக அதிகார துஷ்பிரயோகம் எதுவும் செய்யவில்லை. மேல்முறையீட்டு மனு தனிநீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனை மற்றும் அபராதத்தையும் எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து உள்ளேன். இந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை, தனிநீதிமன்றம் தண்டனையாக விதித்துள்ள 4 ஆண்டுகளுக்கு அதிகமாகவும் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. சாதாரண தண்டனை மேலும் என்னுடைய ஜாமீன் மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்குவது குறித்து உச்சநீதிமன்றம் வகுத்துள்ள பல்வேறு வரையறைகளை கருத்தில் கொள்ளாமல் மனுவை நிராகரித்து இருக்கிறது. எனக்கு விதிக்கப்பட்டு இருப்பது கடுங்காவல் சிறை தண்டனை அல்ல; சாதாரண தண்டனைதான். இதற்கு ஜாமீன் வழங்குவதில் உள்ள நடைமுறைகளை உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ள தவறிவிட்டது. கருணை அடிப்படையில்.. எனவே, நான் 66 வயதான பெண் என்பதையும், உடல் ரீதியாக எனக்கு உள்ள பல்வேறு உபாதைகளையும் கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. விசாரணை? உச்சநீதிமன்ற பதிவாளரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜெயலலிதாவின் இந்த ஜாமீன் மனு, இன்று தலைமை நீதிபதி அமர்வில் பரிசீலனைக்காக முன்வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இன்று? இதனை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், இந்த மனுவின் மீதான விசாரணை இன்று அல்லது செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

கோவையில் ஓர் தமிழனின் கேள்வி.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில்
அபாண்டா பழிவாங்க பட்டாரா.......?
கர்நாடக அரசை காவிரி .ஒக்கேxனக்கல்
பிரச்சனையில் எதிர்த்ததால்
பழிவாங்கப்பட்டாரா .............?
அல்லது பிரதமர் பதவிக்கு ஆசை பட்டதால்
தமது அரசுக்கு போட்டியாகவந்துவிடுவாரோ
பிற்காலத்தில் அரசுக்கு தலைவலி
கொடுபாரோ என்று பா.ஜ க வால்
பழிவாங்க பாட்டாரா..........?
அந்நாளில் மோடி அமெரிக்க போன
மர்மம் என்ன .......?

செல்வி ஜெயலலிதா அவர்கள் 18 ஆண்டுகளுக்கு முன்
குற்றப்பத்திரிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் குற்றங்களில்
ஈடுபட்டாரா இல்லையா என்பது பற்றி அல்ல இந்த இடுகை.

அவர் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் சந்தேகத்திற்கிடமின்றி
நிரூபிக்கப்பட்டு விட்டனவா இல்லையா என்பது பற்றியும் அல்ல
இந்த இடுகை. இந்த விஷயங்களை எல்லாம் தாண்டி -

அவர் மீது தண்டனை விதிக்கப்பட்ட விதமும்,
அதன் பிறகு அவருக்கு நடக்கும் நிகழ்வுகளும் -
பற்றியே இங்கு விவாதம்.

சுப்ரமணிய குன்ஹா என்கிற ஒருமித்த சக்தி ஒன்றைப்பற்றி,
நேற்றைய செய்தி ஒன்றின் மூலம் தெரிய வருகிறது.

ஏதோ ஒரு கோர்ட்டில் பதிவாளராக ( கவனிக்கவும் -
நீதிபதியாக அல்ல பதிவாளராக ) பணி செய்துகொண்டிருந்தவர்
10 மாதங்களுக்கு முன்னர் இந்த வழக்கை ‘எப்படியாவது’ விரைவில்
முடிக்க வேண்டும் என்கிற உத்திரவுடன் (?) அனுப்பப்படுகிறார்.
அதன் பிறகு வழக்கு புதிய வேகத்துடன்,
வித்தியாசமான அணுகுமுறையுடன் முன்னேறுகிறது – முடிகிறது….!!!

பொதுவாக, கிரிமினல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்படுவது
குறித்து – சுப்ரீம் கோர்ட் சில நடைமுறைகளை அறிவித்திருக்கிறது.

வழக்கு விசாரணகள் முடிந்த பிறகு, ஒரு நாள் குறித்து,
குற்றம் சாட்டப்பட்டவரை நேரடியாக கோர்ட்டுக்கு வரவழைத்து -
அவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்கள் எவ்வித சந்தேகத்திற்கும்
இடமின்றி நிரூபிக்கப்பட்டு விட்டன என்றும், அந்த கோர்ட்
அவரை “குற்றவாளி” என்று தீர்மானிப்பதாகவும் அறிவித்து விட்டு,

தீர்ப்பு கூற மற்றொரு நாளைக் குறித்து, தனக்கு விதிக்கப்படும்
தண்டனை பற்றி குற்றவாளி ஏதேனும் கூற விரும்பினால், கூறலாம் -
கோர்ட் அதை அனுமதிக்கிறது என்று கூற வேண்டும்.
பின்னர் குற்றவாளி தண்டனை பற்றிய தனது வேண்டுகோளை
முன்வைக்கலாம். அதன் பின்னர் அடுத்த நாளில், அல்லது
குறிப்பிடப்படும்` வேறோரு நாளில் தண்டனையை அறிவிக்க வேண்டும்.
இது தான் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ள நடைமுறை.

இந்த வழக்கில் இந்த நடைமுறை சுத்தமாக மீறப்பட்டுள்ளது.
காலை 10 மணிக்கு கோர்ட்டுக்கு வரவழைக்கப்பட்டவர் மாலை
5.30 மணி வரை அங்கேயே தங்க வைக்கப்பட்டு, அதன் பின்னர்
அன்றே – தண்டனையை நிறைவேற்றும் சடங்கு முடிகிறது.

அதாவது சனிக்கிழமை முகூர்த்தம் குறித்து,
(மறுநாள் ஞாயிறு – அப்பீலுக்குப் போக முடியாது – அதன் பிறகும்
ஒருவாரம் தொடர்ச்சியாக தசரா விடுமுறை) நேரடியாக
சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

ஒரு மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் -
முதலமைச்சராக கோர்ட்டுக்கு வருபவர்,
தண்டனை விதிக்கப்பட்டு நேரடியாக
சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறார் என்றால் -
தனது அரசியல் சட்ட பொறுப்புக்களை பின் ஒப்படைக்க
கால அவகாசம் கொடுக்க வேண்டாமா ? நாள் கணக்கில்
இல்லாவிடிலும் குறைந்த பட்சம் ஒரு 2 மணி நேரமாவது
தன் சகாக்களிடம் மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்ய
அனுமதியளிக்க வேண்டாமா …?

தண்டனையை விதித்த பிறகு, நீங்கள் மாற்று ஏற்பாடு செய்து
கொள்ளவும், உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெறவும் வசதியாக
உங்களுக்கு ஒரு வார காலம் அவகாசம் கொடுக்கப்படுகிறது -
என்று சொல்லி இருந்தால் – கோர்ட்டின் பாரபட்சமின்மையை
புரிந்து கொள்ள முடியும் …? இந்த அணுகுமுறை இல்லாமல்
போனது ஏன் …? சட்டத்தில் இதற்கு நிச்சயம் இடம் இருக்கிறது -
ஆனால் ஆணை இடுபவர் மனதில் இல்லாமல் போனது ஏன் ….?

சரி – சிறைக்குச் சென்ற பிறகும் ஏன் இத்தனை கெடுபிடிகள்…?
முதலமைச்சர் பொறுப்பில் இருந்தவரை நேரடியாக காராக்கிருகத்துக்கு
கொண்டு வந்து விட்டார்கள் – அவர் பார்த்துக்கொண்டு வந்த
பல பொறுப்புகள் பாதியில் இருக்கும். அதனை முழுமையாகச்
செய்ய ஆலோசனை பெற ஒரு மாநிலத்தின் தலைமைச்செயலாளர்
வந்தால், அவரை பார்க்க அனுமதிக்க மறுத்தது ஏன் …?
ஒரு நாள் முழுவதும், கிட்டத்தட்ட 7 மணி நேரம், ஒரு மாநிலத்தின்
தலைமைச்செயலரையும், ஆலோசகரையும் – சிறை வாசலில்
நிற்கவைத்து திருப்பி அனுப்பி – அவமதித்தது ஏன் …?

சரி – மறுநாள் ஜாமீனுக்கு பெட்டிஷன் கொடுத்தால், அதற்கடுத்த நாள்
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சொல்லி விட்டு,
மறுநாள் விசாரணைக்கு வந்தால் – மீண்டும் அடுத்த வாரம் தான்
விசாரணை என்று சொன்னது என்ன காரணத்தால்….?

அரசாங்க வக்கீலுக்கு உரிய நேரத்தில் அனுமதி உத்தரவு கொடுக்காதது
ஏன்…? இது கவனக்குறைவா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா….?
தனியாக ஒருவக்கீல் நியமிக்கப்படாத நேரங்களில்,

கோர்ட்டில் வழக்கமாகச் செயல்படும்
state govt.standing counsel தானாகவே இந்த வழக்கிலும் சேர்த்துக்கொள்ளப்
படுவது தான் மரபு. இல்லையென்றால், அட்வகேட் ஜெனரலுக்கு
தகவல் போகும். உரிய நேரத்தில் யாராவது ஒரு அரசு வக்கீல்
அனுப்பப்படுவார்…அது இங்கே நடக்காதது ஏன் …?

மீண்டும பதிவாளரைப் பார்த்து விசேஷ அனுமதி கோரி,
அரசு வக்கீலுக்கும் ஆணை வந்து, கோர்ட் கூடினால் -
வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலே -
அடுத்த வாரம் ரெகுலர் கோர்ட் விசாரிக்கும் என்று சொல்லிவிட்டு
போய்க்கொண்டே இருக்கிறார்……

முக்கியமான வழக்கு – ரெகுலர் கோர்ட் தான் விசாரிக்க வேண்டும்
என்பது கோர்ட்டுக்கு வரும் முன்பு தெரியாதா ?
அல்லது பதிவாளருக்குத்தான் தெரியாதா ?
முன்னதாகவே தலைமை நீதிபதியிடம் கலந்து ஆலோசனை
செய்திருக்க மாட்டார்களா ..?
ஏன் எல்லாரையும் வரவழைத்து அவமானப்படுத்த வேண்டும் …?
ஏன் டென்ஷனை, பரபரப்பை அதிகரிக்க வேண்டும்….?

எல்லாருக்கும் இன்று வெளியே வந்து விடுவார் என்கிற எதிர்பார்ப்பை
உண்டுபண்ணி விட்டு, பின்னர் மீண்டும் தள்ளிப் போடுவதன்
பின்னணி என்ன ….? வேறு எங்கிருந்தாவது உத்திரவு எதாவது
எதிர்பார்க்கப்படுகிறதா …?

இப்படி மாற்றி, மாற்றி இழுத்தடித்தால் – ஏற்கெனவே
கொதித்துப்போயிருக்கும் கட்சித்தொண்டர்களிடம் இது டென்ஷனை
அதிகரிக்காதா ? அல்லது வன்முறையைத் தூண்ட வேண்டும்
என்பது தான் உத்தேசமா…?

இரண்டு மாநிலங்களுக்கிடையே ஏற்கெனவே ஏகப்பட்ட
பிரச்சினைகள். காவிரி நீர் சம்பந்தமாக தகராறுகள்….
கோர்ட் வழக்குகள். கர்நாடகா அரசுக்கு தமிழ்நாட்டின் மீதும்,
சிறையில் இருக்கும் செல்வி ஜெயலலிதா மீதும் ஏகப்பட்ட
காழ்ப்புணர்ச்சி….
இந்த நிலையில் – உணர்வுகளுடன் விளையாடும் இத்தகைய
செயல்கள் இயல்பானவை தானா ?

கர்னாடகா அரசில் அதிகாரத்தில் இருக்கும்
காங்கிரஸ் கட்சிக்கு வெறுப்பு….
காங்கிரஸ் தலைமைக்கு சொல்லோணா வெறுப்பு …
சு.சு.வின் மறைமுக சித்து வேலைகள் தொடர்கின்றன….
இத்தனையையும் வாய் திறவாமல் வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்கிறது பாஜக தலைமை …

காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை,
கச்சத்தீவு பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை
என்று மாறி மாறி தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் -
அம்மா போனால் – திண்ணை நமக்குத்தான் என்று
ஆவலுடன் காத்துக் கிடக்கிறது தமிழக பாஜக.

இவர்கள் அத்தனை பேரும், தனித்தனியாகவும்,
கூட்டாகச் சேர்ந்தும் செய்வது -
‘அப்பட்டமான பழிவாங்கல்’ அல்லாமல் வேறென்ன…..???