Oct 12, 2014

பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் மடத்துக்குளம் ஒன்றியக் கழகம் சார்பில் மண்சோறு சாப்பிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றது.

அண்ணா தி.மு.கழக பொதுச் செயலாளரும், மக்கள் முதலவருமான புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கில் இருந்து விடுதலையைக வேண்டியும், அவர் பூர்ண நலம் பெற்று மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்கவும் சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயரான், சண்முகவேலு எம்.எல்.ஏ.ஆகியோர் பழனி கோவிலில் தங்க தேர் இழுத்தனர். 
அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளரும், மக்கள் முதல்வருமான புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது சுமத்தபட்ட பொய் வழக்குகளிலிருந்து விடுதலையாக வேண்டி தமிழகத்திலுள்ள அனைத்து பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் அண்ணா தி.மு.க.வினர் சிறப்புப் பிரார்த்தனைகளும், பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடத்தி வருகின்றனர்.இதனை முன்னிட்டு, பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் மடத்துக்குளம் ஒன்றியக் கழகம் சார்பில் திருப்பூர் புறநகர் மாவட்டச்செயலாளரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.சண்முகவேலு ஆகியோர் தலைமையில் ஒன்றியசெயலாளர் அண்ணாத்துரை, அரசு வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், எஸ்.ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் அருள்மிகு பாலதண்டாயுதபாணிக்கு தங்கத் தேர் வடம் பிடித்தும், பாலபிசேகம், சந்தனக்காப்பு செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மேலும் மடத்துக்குளம் ஒன்றிய ஜெயலலிதா பேரவைச்செயலாளர் எஸ்.பி.சிவலிங்கம், குமரலிங்கம் பேரூராட்சித்தலைவர் சிவக்குமார், பேரூர்கழகச் செயலாளர் கே.ஏ.வரதராஜ் ஆகியோர் முன்னிலையிலும் மண்சோறு சாப்பிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றது. 
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணைச்செயலாளர் எம்.ஏ.சுப்பிரமணியம், மடத்துக்குளம் பேரூராட்சித் தலைவர் எஸ்.பழனிச்சாமி, துணைத் தலைவர் ஜி.கே.தண்டபாணி, வீராச்சாமி, கொழுமம் ஊராட்சி மன்றத்தலைவர் இந்திராணி, நீலம்பூர் செல்வராஜ், கவுன்சிலர் குணா, கே.கே.ரவி, கணியூர் பேரூராட்சி துணைத்தலைவர் கணியூர் காஜாமைதீன் மற்றும் அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.